Wednesday, December 25, 2019

நாளை கிரகண நிகழ்வும் ஜோதிடமும்...

நாளை ஏற்பட போகும் கிரகனம் காலை 8 மணி முதல் 11.30 வரை, குருவின் வீட்டில் நடக்கும் இந்த கிரகணம், அம்சத்தில் குரு உச்சம் பெறும்போது நடைபெறுகிறது, அவர் கேதுவின் சாரத்தில் அமர்ந்து கேதுவை சுபத்துவம் செய்கிறார், ஆகவே இது ஜோதிடம் கர்ப்பவர்கள் ஜோதிடம் தொழில் முறையாக கொண்டவர்கள், சிவ நாமத்தை 108 முறை கிரகணம் ஆரம்பிக்கும் போது ஜெபித்துவிட்டு, ஜோதிடம் பாருங்கள் அல்லது மூல நூல்களை படியுங்கள், இது பல புரியாத விஷயங்களையும் புரியவைக்கும் ஏனெனில் ராகு சுய சாரத்தில் நின்று கேதுவை பார்க்கிறார், மேலும் குரு இணைவு மேலும் புதனும் கேது சாரம், மனோகாரகன் சந்தரனும் கேது சாரம் மேலும் சூரியனும் கேதுவின் சாரமே, இதில் குருவின் சுபத்துவத்தை கேதுவே முழுதாக ஈர்ப்பார் ஏனெனில் நிழல் கிரகத்தின் குணமே இது தான், ஆகவே மறைபொருள் ஞானம் அல்லது மாந்திரீகம் இவை சாதிக்க நல்ல நேரம், திதி அமாவாசை(ராகுவின் திதி) ஆகவே ஜோதிடம் பயில்வது அல்லது இதுவரை பலன் பிடிப்படாத ஜாதகத்தை அலசுவது இப்படி பட்ட காரியங்களை செய்தால், இது மறைபொருள் ஆராய்ச்சியில் சேரும், ஆகவே ஒரு சிறந்த தெளிவு கிடைக்கும், மேலும் தெய்வத்தின் அருளும் தொழிலுக்கு கிடைக்கும்...

மற்றவர்களுக்கு...

அவரவர் குல தெய்வ வழிப்பாடு அல்லது சிவ நாம ஜபம் செய்யலாம், வெளியில் செல்பவர்கள் இந்த கிரகண வேளையில் ஒரே இடத்தில் இருப்பது நன்மை, வாகனம் ஓட்டுவது தவிர்க்கவும், உணவு அருந்த கூடாது கிரகணம் விட்ட பிறகு மஞ்சள் தண்ணீர் தெளித்து கொண்டு உணவு அருந்தலாம், மேலும் குளிப்பது நன்மை, கிரகண வேளையை தெய்வ வழிபாடு, அல்லது விஞ்ஞான ஆராய்ச்சி, ஜோதிட ஆராய்ச்சி ஏன் சுய ஜாதக ஆராய்ச்சி, அல்லது ஜோதிடரிடம் பலன் கேட்க்கலாம், ஏனெனில் கேது கர்மா முழு செயல்பாட்டில் அதுவும் அவரின் சாரநாதன் சுக்கிரன் சனியின் வீட்டில், சனியோ கேதுவுடன் குரு வீட்டில், ஆகவே உங்கள் கர்மா வழிவிட்டால் உங்கள் ஜாதகத்தை ஆராயுங்கள்....

ஜோதிடர்கள்/ எல்லோரும் கேதுவின் மூல மந்திரம்: ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரோம் நமஹ.. உபயோகிக்கலாம் நன்மையே கேதுவின் தாக்கம் குறையும்..

No comments:

Post a Comment