Tuesday, December 3, 2019

*விக்கிரமாதித்தன் கதைகள் - 15*

*முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1*

சந்திரவர்ணன் கதை - 3

கன்னியாபுரி நகரத்து அரண்மனையில் அரசர் வீற்றிருந்தார். சந்திரவர்ணனும் அலங்காரவல்லியும் தாங்கள் வந்த விவரத்தைக் கூறினர்.

அரசனுடைய புரோகிதர் இதற்கு விடை அளித்தார்.
"அந்தண குலத்தைச் சேர்ந்தவன் வேறு வர்ணத்தைச் சேர்ந்தவளை மணக்க வேண்டும் எனில், ஒரே முகூர்த்தத்தில் நான்கு வர்ணத்தைச் சேர்ந்த பெண்களையும் மணக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது."

சந்திர வர்ணன் யோசித்தான். ஒருத்தியை மணக்கவே வழியில்லை! நான்கு குலப் பெண்களுக்கு எங்கே போவது?

சந்திரவர்ணனின் கல்வியையும் வித்தையையும் அரசன் தகுந்த ஆச்சாரியர்களைக் கொண்டு சோதித்துத் திருப்தியடைந்தான்.

பின் அவையோர் நடுவில் அரசன் சொன்னான்.
"புரோகிதரே, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. என்னைப் பொருத்தவரையில் சந்திர வர்ணனின் தோற்றத்திலும் திறமையிலும் பூரண திருப்தி இருக்கிறது. இவனுக்கு நாலுவகைப் பெண்களையும் திருமணம் செய்விக்கலாம் எனக் கருதுகிறேன். எனது மகள் சித்திரரேகையையும் உங்களுடைய மகள் கல்யாணியையும் திருமணம் செய்து வைக்கலாம்."

"வைசிய குலப் பெண்?"

"இதோ நம் அரண்மனையில் வீற்றிருக்கும் சோமசேகரச் செட்டியாரின் மகள் கோமளாங்கியையும் இவனுக்குத் திருமணம் செய்விக்கலாம்."

எல்லோருக்கும் மன்னர் சொன்னதில் மகிழ்ச்சி அடைந்தனர்.

சந்திரவர்ணன் நல்லதொரு முகூர்த்த நேரத்தில் தாசி அலங்கார வல்லியுடன் மற்ற மூவருடன் திருமணம் செய்து கொண்டான்.

இவர்கள் அனைவரும் அரண்மனையில் சுகவாழ்வு வாழ்ந்து வந்தனர். இவர்கள் அனைவருக்கும் குழந்தைகள் பிறந்தன. புரோகிதரின் மகளுக்கு வல்லவரிஷி என்ற மகன் பிறந்தான். மன்னர் மகளுக்கு விக்கிரமாதித்தன் என்ற மகன் பிறந்தான். வைசியரின் மகளுக்கு பட்டி என்ற மகன் பிறந்தான். அலங்காரவல்லிக்கு பத்ருஹரி என்ற மகன் பிறந்தான்.

நான்கு புதல்வர்களும் வளர்ந்து வரும் வேளையில், ஆண் வாரிசு இன்றி கன்னியாபுரி அரசன் இறந்தான். மருமகனான சந்திரவர்ணன் பட்டம் சூட்டிக் கொண்டு அரசனான்.

No comments:

Post a Comment