விக்கிரமாதித்தன் கதைகள் - 27
முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1
விக்கிரமாதித்தன் நாடாறு மாதம், காடாறு மாதம் ஆளத் தொடங்கிய கதை - 2
காளிதேவி சிரித்தாள்.
"இதைத்தான் கேட்பாய் என எதிர்பார்த்தேன்! நீயும் உன் அண்ணனும் ஒருவருக்கொருவர் எப்படி விட்டுக்கொடுத்து வாழ்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்! உனக்காக அவனும் அவனுக்காக நீயும் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள்! அண்ணன் தம்பி எப்படி வாழவேண்டும் என்பதை இவ்வுலகுக்கு எடுத்துக்காட்டவே, இந்தப் பரிசோதனையை இருவருக்கும் வைத்தேன்.
உன் அண்ணனின் தலையை அவனுடலுடன் பொருத்தி, இந்தக் கும்பதீர்த்தத்தைத் தெளி. பிழைத்தெழுவான்."
பட்டி ஓடோடிப்போய் அண்ணனை உயிர்ப்பித்தான். விழித்தெழுந்த விக்கிரமாதித்தன், நடந்ததை வினவினான்.
"ஆனால், பட்டி! தேவேந்திரன் எனக்கு ஆயிரம் ஆண்டுகள் அந்த சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆளும் வரத்தைத் தந்தான். நீயோ இரண்டாயிரம் ஆண்டுகள் இங்கு வாழ்வாய். இருவரின் ஆயுளும் சமமாக இல்லையே! என்ன செய்வது?"
"அண்ணா, வருந்தாதீர்கள். உங்களை ஆயுளை நீட்டுவதற்கு ஒரு யோசனை சொல்கிறேன். சிம்மாசனத்திலிருந்து ஆயிரம் ஆண்டுகள் ஆளும் வரத்தைத்தானே தந்தார் தேவேந்திரன்? தாங்கள் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆறு மாதங்கள் ஆளுங்கள். அடுத்த ஆறு மாதங்கள் காடுகளில் சுற்றி வாருங்கள். இப்படிச் செய்வதால் தேவேந்திரன் அளித்த வரத்தின்படி ஆயிரம் ஆண்டுகள் வாழ்வீர்கள்! அதே சமயம் நாம் இருவரும் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழவும் செய்யலாம்."
இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர். பட்டியுடன் துணையுடன் விக்கிரமாதித்தன் ஒரு நல்லநாளில் அந்த நவரத்தின சிம்மாசனம் ஏறி அரசாட்சி செய்யத் தொடங்கினான்.
சிம்மாசனத்தின் முதலில் நிற்கும் வினோதரஞ்சிதப் பதுமை, போஜராஜனிடம், "மன்னனே! விக்கிரமாதித்தனின் தொடக்க காலக் கதைகளை உன்னிடம் இப்போது சொல்லியிருக்கிறேன். இதற்குப் பிறகும் விக்கிரமாதித்தனைப் போன்ற பராக்கிரமும் தீரமும் உனக்கு இருக்கிறது என்று நம்புகிறாயா? அப்படி நம்பிக்கை இருந்தால் மேலே ஏறத் தொடங்கு!"
பதுமை மௌனமாகவிட்டது.
அதுவரை கதை கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் முகூர்த்த வேளை தவறிவிட்டதை உணர்ந்தனர். போஜராஜனுக்கு சிம்மாசனத்தில் ஏறி அமர விருப்பமின்றி அந்தப்புரத்துக்குச் சென்றான்.
*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*
மறுநாள், மறுபடி நல்ல நேரத்தில் போஜராஜன் நவரத்தின சிம்மாசனத்தில் ஏறத் தொடங்கினான். முதற்படியைக் கடந்தான். இரண்டாம் படியில் கால் வைத்தான்.
அந்தப் படியில் நின்றிருந்த மதனாபிஷேகவல்லி என்ற பதுமை போஜராஜனைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தது.
"போஜமன்னா! நில்லுங்கள்! விக்கிரமாதித்த மஹாராஜனைப் போன்ற தீரமும் வல்லமையும் உங்களுக்கு இருந்தால் இந்த சிம்மாசனத்தில் துணிவுடன் ஏறுங்கள்."
"விக்கிரமாதித்தனிடம் நீ கண்ட தீரத்தையும் வல்லமையையும் எனக்குச் சொல்வாயா?" போஜராஜன் கேட்டான்.
"கேளுங்கள் போஜராஜரே!"
முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1
விக்கிரமாதித்தன் நாடாறு மாதம், காடாறு மாதம் ஆளத் தொடங்கிய கதை - 2
காளிதேவி சிரித்தாள்.
"இதைத்தான் கேட்பாய் என எதிர்பார்த்தேன்! நீயும் உன் அண்ணனும் ஒருவருக்கொருவர் எப்படி விட்டுக்கொடுத்து வாழ்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்! உனக்காக அவனும் அவனுக்காக நீயும் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள்! அண்ணன் தம்பி எப்படி வாழவேண்டும் என்பதை இவ்வுலகுக்கு எடுத்துக்காட்டவே, இந்தப் பரிசோதனையை இருவருக்கும் வைத்தேன்.
உன் அண்ணனின் தலையை அவனுடலுடன் பொருத்தி, இந்தக் கும்பதீர்த்தத்தைத் தெளி. பிழைத்தெழுவான்."
பட்டி ஓடோடிப்போய் அண்ணனை உயிர்ப்பித்தான். விழித்தெழுந்த விக்கிரமாதித்தன், நடந்ததை வினவினான்.
"ஆனால், பட்டி! தேவேந்திரன் எனக்கு ஆயிரம் ஆண்டுகள் அந்த சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆளும் வரத்தைத் தந்தான். நீயோ இரண்டாயிரம் ஆண்டுகள் இங்கு வாழ்வாய். இருவரின் ஆயுளும் சமமாக இல்லையே! என்ன செய்வது?"
"அண்ணா, வருந்தாதீர்கள். உங்களை ஆயுளை நீட்டுவதற்கு ஒரு யோசனை சொல்கிறேன். சிம்மாசனத்திலிருந்து ஆயிரம் ஆண்டுகள் ஆளும் வரத்தைத்தானே தந்தார் தேவேந்திரன்? தாங்கள் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆறு மாதங்கள் ஆளுங்கள். அடுத்த ஆறு மாதங்கள் காடுகளில் சுற்றி வாருங்கள். இப்படிச் செய்வதால் தேவேந்திரன் அளித்த வரத்தின்படி ஆயிரம் ஆண்டுகள் வாழ்வீர்கள்! அதே சமயம் நாம் இருவரும் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழவும் செய்யலாம்."
இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர். பட்டியுடன் துணையுடன் விக்கிரமாதித்தன் ஒரு நல்லநாளில் அந்த நவரத்தின சிம்மாசனம் ஏறி அரசாட்சி செய்யத் தொடங்கினான்.
சிம்மாசனத்தின் முதலில் நிற்கும் வினோதரஞ்சிதப் பதுமை, போஜராஜனிடம், "மன்னனே! விக்கிரமாதித்தனின் தொடக்க காலக் கதைகளை உன்னிடம் இப்போது சொல்லியிருக்கிறேன். இதற்குப் பிறகும் விக்கிரமாதித்தனைப் போன்ற பராக்கிரமும் தீரமும் உனக்கு இருக்கிறது என்று நம்புகிறாயா? அப்படி நம்பிக்கை இருந்தால் மேலே ஏறத் தொடங்கு!"
பதுமை மௌனமாகவிட்டது.
அதுவரை கதை கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் முகூர்த்த வேளை தவறிவிட்டதை உணர்ந்தனர். போஜராஜனுக்கு சிம்மாசனத்தில் ஏறி அமர விருப்பமின்றி அந்தப்புரத்துக்குச் சென்றான்.
*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*
மறுநாள், மறுபடி நல்ல நேரத்தில் போஜராஜன் நவரத்தின சிம்மாசனத்தில் ஏறத் தொடங்கினான். முதற்படியைக் கடந்தான். இரண்டாம் படியில் கால் வைத்தான்.
அந்தப் படியில் நின்றிருந்த மதனாபிஷேகவல்லி என்ற பதுமை போஜராஜனைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தது.
"போஜமன்னா! நில்லுங்கள்! விக்கிரமாதித்த மஹாராஜனைப் போன்ற தீரமும் வல்லமையும் உங்களுக்கு இருந்தால் இந்த சிம்மாசனத்தில் துணிவுடன் ஏறுங்கள்."
"விக்கிரமாதித்தனிடம் நீ கண்ட தீரத்தையும் வல்லமையையும் எனக்குச் சொல்வாயா?" போஜராஜன் கேட்டான்.
"கேளுங்கள் போஜராஜரே!"
No comments:
Post a Comment