Sunday, December 22, 2019

பிரம்மஹத்தி தோஷம் யாருக்கு? 22/12/2019 ஞாயிறு

...பிரம்மஹத்தியை எளிதாக நினைக்காதீர்கள்....

###########################

தோஷத்தில் பெரிய தோஷமே பிரம்மஹத்தி தான்..
எவருக்கும் எளிதில்  இந்த தோஷம் இருக்காது..
மீறி இருந்தால் அவனுக்கு வாழ்க்கையே இருக்காது..

சனி+ குரு சேர்க்கை
சனி குரு சப்தம பார்வை சனி குரு திரிகோண பார்வை
எப்படி  சனி குருவை நீசத்துடன் பார்த்தாலும் பிடித்தது பிரம்மஹத்தி என்று பொருள்..

இராமருக்கு பிரம்மஹத்தி பிடித்ததால் தான் திருவிடைமருதூர் வந்து சிவனை வணங்கினார்.
திருவிடைமருதூர் ஜோதி மகாலிங்கம் தான் ஒரே எளிய தீர்வு..

ஆனால் அந்த சிவனுக்கே பிரம்மஹத்தி பிடித்து தான்  மேல்மலையனூர் அங்காளம்மன் உருவானது..

மும்மூர்த்திகளில் பிரம்மனுக்கு பெரிய கோயிலோ மக்கள் வணங்குவதோ இல்லை ஆனால் பிரம்மன் சாபம் தான் பிரம்மஹத்தி..
பரிகாரம் செய்தாலும் ஆண்டவன் கருணை இருந்தால் தான் இந்த தோஷம் போகும்..

பிரம்ம சாபத்திற்கு அவ்வுளவு வலிமை..

படைக்கும் மூர்த்தியான பிரம்மனுக்கு அழிக்கும் நாளையும் அவனே தீர்மானிக்கிறான்..பிரம்மன் படைத்த உயிரை நாம் இடையில் கொல்வதாலேயே நம்மை பிரம்ம சாபம் பிரம்மஹத்தியாக பிடித்து உயிரோடு கொல்லும் என்பது தான் இந்த தோஷத்தின் தன்மை..

எதற்கு இந்த பதிவு என்றால் எவருகெல்லாம் பிரம்மஹத்தி வரும் என்று ஆராய்ந்தால் பணத்தீமிரில் ஆடும் மனிதர்களுக்கு தான் முக்கியமாக பிரம்மஹத்தி எங்கோ எந்த சூழலிலோ பிறவியிலோ பிடித்தே தீரும்...

ஏழையை ஏமாற்றி அவன் சொத்தை அடைதல்

பெண்ணை கற்பழித்து கொல்லுதல்

ஐந்தறிவு ஐீவனை கொல்லுதல்

பிராமணர் சாபம் அடைதல்

நல்ல பாம்பை கொன்று எரித்தல்

துடிக்க துடிக்க எந்த உயிரை கொன்றாலும்

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பிறரை அழித்தல்

பொய் சத்தியம் பெரியவர்களுக்கு அவர்களது ஆன்மாவிற்கு செய்தாலோ பிரம்மஹத்தி பிடித்தே தீரும்..

இந்த தோஷம் எல்லாம் வந்தால் வாழ்நாளே இருண்ட காலமாகவே மாறிடும்...

பிரம்மஹத்தியால் வரும் பாதிப்புகள்..

தொழில் வேலை கடைசி வரை பாதிப்பு..

மனநிம்மதி கடைசி வரை இல்லாமை

மன உளைச்சல்

தகுதி இல்லாதவர்களிடம் செய்யாத தவறுக்கு தலைகுனிவு

தொடர்ந்து எதாவது நோய் உடலில் வந்து துன்புறுத்துவது..

இனம் புரியாத பயம்.

எதிர்காலம் என்னவாகும் என்ற புரியாத இருள் சூழ்ந்த கவலை

தூக்கமின்மை

புத்தி பேதலிப்பு..

மனநிலை பாதித்தல்

உயிரை கொல்வதற்கு தண்டனையாக உயிரோடு கொல்லுதல் என்பது தான் பிரம்மஹத்தி தோஷம்..


நன்றி,

No comments:

Post a Comment