Sunday, December 22, 2019

விக்கிரமாதித்தன் கதைகள் - 23

முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1

விக்கிரமாதித்தன் சிம்மாசனம் அடைந்த கதை - 2

இந்திரன் நிம்மதியாக அடைந்தான். தன் தேர்ப் பாகன் மாதலியை அழைத்தான். பூலோகம் சென்று விக்கிரமாதித்தனை அழைத்து வரப் பணித்தான்.

மாதலி தயங்கினான்.

"தேவர்களாலும் முடியாததை ஒரு மானுட னால் முடியுமா."

"மாதலி தயங்காதே. தேவர்களை விட மனிதர்கள் நேர்மையானவர்களே. விக்கிரமாதித்தன் மிகுந்த சாதுர்யம் உடையவன்." நாரதர் சொன்னார்.

உடனே தேரேறி மாதலி பூலோகத்துக்குப் பறந்து வந்தான். உஜ்ஜயினி நகருள் வந்து அரண்மனையை அடைந்தான். அனுமதி பெற்று உள்ளே நுழைந்தான். விக்கிரமாதித்தனையும் மற்றவர்களையும் வணங்கிவிட்டுத் தான் யார் என்பதைச் சொன்னான். பிறகு தான் வந்த விவரத்தைக் கூறத் தொடங்கினான்.

"அரசே! இந்திர சபையில் ரம்பைக்கும் ஊர்வசிக்கும் நாட்டியப் போட்டி நடைபெற்றது. இருவருள் யார் நடனக் கலையில் சிறந்தவர் என்பதற்கான போட்டி அது. நடுவர்களாகச் சிறந்த தேவலோகக் கலைஞர்கள் இருந்தும் போட்டியில் வென்றவரைத் தீர்மானிக்க முடியவில்லை. தேவரிஷி நாரதர் தங்களைப் பற்றிக் கூறினார். தாங்கள் ஒருவரால்தாம் நடனத்தில் சிறந்தவரைத் தீர்மானிக்க இயலும் என்று கூறினார். தங்கள் வரவுக்காக இந்திராதி Gதவர்கள் காத்திருக்கின்றனர். வரவியலுமா?"

தம்பியும் அமைச்சருமான பட்டியும் தேவலோகத்தில் புகழை நிலை நாட்டி, தேவேந்திரனின் நட்பைப் பெறுதல் சிறந்தது. என்று கூறினான்.

விக்கிரமாதித்தன் காளிதேவியைக் கண்டு வணங்கி விட்டு மாதலியுடன் தேவலோகத் தலைநகர் அமராவதிக்குச் சென்றான்.

தேவேந்திரன் அவனை வரவேற்றுத் தக்க மரியாதை செய்தான்.

தேவ கன்னிகையர் இருவரும் அவைக்கு வந்தனர். முதலில் ரம்பை நடனமாடினாள். அவளது அழகிலும் நடனத் திறமையிலும் அனைவரும் மயங்கினர்.

மறுநாள் ஊர்வசியின் நடனம் நடைபெற்றது. அதுவும் கொள்ளை அழகு. இரண்டு பேரின் நடனங்களையும் இரசித்த விக்கிரமாதித்தன், தேவேந்திரனிடம், "இந்திர தேவா, நாளை ரம்பா, ஊர்வசி இருவரும் சேர்ந்தாற்போல நடனமாடட்டும். அந்த நடனப் போட்டியில் யார் சிறந்தவர் எனத் தீர்மானிக்கிறேன்" என்றான்.

மறுநாள் போட்டி நடனம்...

இன்னும் வரும்....

No comments:

Post a Comment