*விக்கிரமாதித்தன் கதைகள் - 19*
*முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1*
*பத்ருஹரி தன் மணிமுடி துறந்த கதை - 4*
“நான் அந்தப் பழத்தை உண்ணவில்லை. என் பிரிய மனைவி அனங்கசேனைக்குக் கொடுத்துவிட்டேன்.”
“மன்னா, உங்கள் மனைவியார் அப்பழத்தை உண்டார்களா என்று வினவுங்கள்.”
அனங்கசேனை வந்தாள்.
“அன்பே! நான் கேட்கும் கேள்விக்கு உண்மையைத் தவிர வேறு எதனையும் பேசாதே. நான் கொடுத்த பழத்தை உண்டாயா?
“அது வந்து…”
“இழுக்காதே உண்மையைச் சொல்!” பத்ருஹரி அதட்டினான்.
“உண்மையைச் சொன்னால் என்னை மன்னிப்பேன் என்று வாக்குறுதி கொடுங்கள்! பிறகு சொல்கிறேன்.”
“வாக்குறுதி தந்தேன். என்ன செய்தாய் அந்தப் பழத்தை என்ன செய்தாய்?” மன்னன் பொறுமை இழந்து கத்தினான்.
உண்மையைச் சொல்லிவிடுவது உத்தமம் என்று தோன்றியது அனங்கசேனைக்கு. தன் அந்தரங்க அசிங்கத்தைச் சொன்னாள்.
“அரண்மனையின் குதிரைப் பாகனிடம் கொடுத்துவிட்டேன்..”
“என்ன! வெட்கம் கெட்டவள்!” பத்ருஹரிக்கு உண்மை புரிந்தது. காமத்தின் பிடியில் சிக்கித் தவித்தவளின் நிலை புரிந்தது.
பத்ருஹரி அடுத்து குதிரைக்காரனை விசாரித்தான்.
அடுத்தடுத்து அந்தப் பழம் பயணம் செய்த அசிங்கம் மன்னன்முன் அரங்கேறியது.
அனங்கசேனையிடமிருந்து குதிரைக்காரன்; குதிரைக்காரனிடமிருந்து வேலைக்காரி; வேலைக்காரியிடமிருந்து இடையன்; இடையனிடமிருந்து, சாணம் அள்ளுபவள், பழம் பயணித்த பாதை.
பத்ருஹரி மனம் வெறுத்துப்போனான். அரசரின் மனைவி தனது இச்சைக்காக குதிரைக்காரனிடம் மோகம் கொண்டாள். அழகும் இளமையும் என்னதான் மனத்தைக் கவர்ந்தாலும் அவற்றின்மீது ஒருவன் கொள்ளும் பிரேமை அர்த்தமில்லாமல் போகும். மன்மதன் நினைப்பதே சமூக ஒழுங்குகளைத் தாண்டியும் நிகழ்கிறது. கட்டிய மனைவி என்றாலும் அவளது மனத்தை அறியமுடியாது என்பதே உண்மை.
தாவிச் செல்லும் குரங்கு, மேகங்களின் இடிமுழக்கம், பெண்களின் மன ஆழம், திருமகள் தரும் செல்வம் ஆகியவற்றை யாரே அறிய இயலும்! இவற்றை சாதாரண மனிதனால் எப்படி உணரமுடியும்!
அலைபாயும் மனத்தை உடையவளைக் கட்டி ஆள்வதைவிட வனவிலங்கினை வேட்டையாடுதல் எளிது. வானத்தில் பறக்கும் பறவையைப் பிடித்தல் எளிது. கடலின் ஆழத்தில் நீந்தும் மீனைப் பிடித்தல் எளிது.
மன்மதனைப் போன்ற அழகுள்ள கணவன் கிடைத்தும் மற்றொரு ஆடவனை விரும்பிய பெண்கள் உலகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர். ஆயகலைகளில் வல்லவனாயிருந்தாலும் ஒரு பெண் நினைத்தால் ஏமாற்றிவிட முடிகிறது.
குடும்ப வாழ்க்கையைவிட துறவறமே மேலானது. இவளுக்குத் தண்டனை வழங்குவதால் எனக்கு ஒன்றும் கிடைத்துவிடப் போவதில்லை.
இன்று என் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்தேன். இதுவல்ல எனக்கான பாதை! என் மனம் பரந்த உலக நாட்டம் இழந்து இறையை நாடுகிறது. இனி நாடாளும் மன்னனாக இருக்க எனக்குத் தகுதி கிடையாது.
பலவாறு சிந்தித்த பத்ருஹரி அரசன், தனது ஆட்சி அதிகாரத்தைத் தன் தம்பி விக்கிரமாதித்தனிடம் ஒப்படைத்தான். அரசபதவியைத் துறந்து, துறவுக்கோலம் பூண்டு காட்டிற்குச்சென்றான்.
பத்ருஹரியின் அபரிமித மோக நாட்டமே அவனைத் துறவை நோக்கித் தள்ளிவிட்டது. மோகத்தின் பாதை அவனைத் துறவை நோக்கித் தள்ளிவிட்டது.
அடுத்து விக்கிரமாதித்தன்…!
*முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1*
*பத்ருஹரி தன் மணிமுடி துறந்த கதை - 4*
“நான் அந்தப் பழத்தை உண்ணவில்லை. என் பிரிய மனைவி அனங்கசேனைக்குக் கொடுத்துவிட்டேன்.”
“மன்னா, உங்கள் மனைவியார் அப்பழத்தை உண்டார்களா என்று வினவுங்கள்.”
அனங்கசேனை வந்தாள்.
“அன்பே! நான் கேட்கும் கேள்விக்கு உண்மையைத் தவிர வேறு எதனையும் பேசாதே. நான் கொடுத்த பழத்தை உண்டாயா?
“அது வந்து…”
“இழுக்காதே உண்மையைச் சொல்!” பத்ருஹரி அதட்டினான்.
“உண்மையைச் சொன்னால் என்னை மன்னிப்பேன் என்று வாக்குறுதி கொடுங்கள்! பிறகு சொல்கிறேன்.”
“வாக்குறுதி தந்தேன். என்ன செய்தாய் அந்தப் பழத்தை என்ன செய்தாய்?” மன்னன் பொறுமை இழந்து கத்தினான்.
உண்மையைச் சொல்லிவிடுவது உத்தமம் என்று தோன்றியது அனங்கசேனைக்கு. தன் அந்தரங்க அசிங்கத்தைச் சொன்னாள்.
“அரண்மனையின் குதிரைப் பாகனிடம் கொடுத்துவிட்டேன்..”
“என்ன! வெட்கம் கெட்டவள்!” பத்ருஹரிக்கு உண்மை புரிந்தது. காமத்தின் பிடியில் சிக்கித் தவித்தவளின் நிலை புரிந்தது.
பத்ருஹரி அடுத்து குதிரைக்காரனை விசாரித்தான்.
அடுத்தடுத்து அந்தப் பழம் பயணம் செய்த அசிங்கம் மன்னன்முன் அரங்கேறியது.
அனங்கசேனையிடமிருந்து குதிரைக்காரன்; குதிரைக்காரனிடமிருந்து வேலைக்காரி; வேலைக்காரியிடமிருந்து இடையன்; இடையனிடமிருந்து, சாணம் அள்ளுபவள், பழம் பயணித்த பாதை.
பத்ருஹரி மனம் வெறுத்துப்போனான். அரசரின் மனைவி தனது இச்சைக்காக குதிரைக்காரனிடம் மோகம் கொண்டாள். அழகும் இளமையும் என்னதான் மனத்தைக் கவர்ந்தாலும் அவற்றின்மீது ஒருவன் கொள்ளும் பிரேமை அர்த்தமில்லாமல் போகும். மன்மதன் நினைப்பதே சமூக ஒழுங்குகளைத் தாண்டியும் நிகழ்கிறது. கட்டிய மனைவி என்றாலும் அவளது மனத்தை அறியமுடியாது என்பதே உண்மை.
தாவிச் செல்லும் குரங்கு, மேகங்களின் இடிமுழக்கம், பெண்களின் மன ஆழம், திருமகள் தரும் செல்வம் ஆகியவற்றை யாரே அறிய இயலும்! இவற்றை சாதாரண மனிதனால் எப்படி உணரமுடியும்!
அலைபாயும் மனத்தை உடையவளைக் கட்டி ஆள்வதைவிட வனவிலங்கினை வேட்டையாடுதல் எளிது. வானத்தில் பறக்கும் பறவையைப் பிடித்தல் எளிது. கடலின் ஆழத்தில் நீந்தும் மீனைப் பிடித்தல் எளிது.
மன்மதனைப் போன்ற அழகுள்ள கணவன் கிடைத்தும் மற்றொரு ஆடவனை விரும்பிய பெண்கள் உலகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர். ஆயகலைகளில் வல்லவனாயிருந்தாலும் ஒரு பெண் நினைத்தால் ஏமாற்றிவிட முடிகிறது.
குடும்ப வாழ்க்கையைவிட துறவறமே மேலானது. இவளுக்குத் தண்டனை வழங்குவதால் எனக்கு ஒன்றும் கிடைத்துவிடப் போவதில்லை.
இன்று என் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்தேன். இதுவல்ல எனக்கான பாதை! என் மனம் பரந்த உலக நாட்டம் இழந்து இறையை நாடுகிறது. இனி நாடாளும் மன்னனாக இருக்க எனக்குத் தகுதி கிடையாது.
பலவாறு சிந்தித்த பத்ருஹரி அரசன், தனது ஆட்சி அதிகாரத்தைத் தன் தம்பி விக்கிரமாதித்தனிடம் ஒப்படைத்தான். அரசபதவியைத் துறந்து, துறவுக்கோலம் பூண்டு காட்டிற்குச்சென்றான்.
பத்ருஹரியின் அபரிமித மோக நாட்டமே அவனைத் துறவை நோக்கித் தள்ளிவிட்டது. மோகத்தின் பாதை அவனைத் துறவை நோக்கித் தள்ளிவிட்டது.
அடுத்து விக்கிரமாதித்தன்…!
No comments:
Post a Comment