*விக்கிரமாதித்தன் கதைகள் - 17*
*முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1*
*பத்ருஹரி தன் மணிமுடி துறந்த கதை - 2*
அந்தணன் ஆனந்தத்துடன் வீட்டுக்கு வந்து முறையாகப் பூஜை செய்து அந்தப் பழத்தைப் புசிக்க ஆயத்தமானான். கனியை எடுத்த அந்தணனுக்குத் திடீரென்று வேறொரு எண்ணம் தோன்றியது.
“அடுத்தவேளை உணவுக்கேக் கஷ்டப்படும் நான் இந்த மாதுளங்கனியை உண்டு என்ன பயன்? அரசனுக்குக் கொடுத்தாலாவது நாட்டுக்குப் பயன் விளையும். என்னுடைய குலத்தொழில் யாசகம் கேட்டுப் பிறரிடம் அண்டி வாழ்வது. நான் இருந்து என்ன சாதிக்கப்போகிறேன்?
கிடைத்ததையெல்லாம் உண்டு காகம் உயிர் வாழ்வதுபோல வாழ்வதால் என்ன பயன்?
புகழும் சிறப்பும் மாண்பும் உடையவர்கள் வாழும் வாழ்க்கையே மேன்மையுடையது. பிறருக்காக வாழ்பவனே உண்மையில் வாழ்பவனாவான். தனக்காக வாழ்பவன் கீழானவன். பிறரது இன்பத்தில் தன் இன்பத்தைக் கொள்பவனே உயர்ந்தவன். புவிக்குக் கீழிருக்கும் அக்னி தன் பசையைப் போக்கக் கடல்நீரைக் குடிக்கிறது. மேகம் கடுங்கோடையில் புவியின் வெப்பத்தைத் தணிக்க மழையாகப் பொழிகிறது.
குடிகளின் தலைவன் மன்னன் ஆவான். எனவே இந்த நாட்டு மன்னனான பத்ருஹரிக்கே இந்தக் கனியைத் தருவேன்.
அதிகநாள் உயிரோடு இருந்து இந்நாட்டினைப் பரிபாலிக்கவேண்டியது அவனே. பத்ருஹரியே இளமையாக இருக்கத் தகுதி உடையவன்.”
அந்தணன் பத்ருஹரியிடம் கனியைத் தர நிச்சயித்தான்.
மன்னனை நேரில் சந்தித்தான்.
“அரசனே! உன்னை தெய்வங்கள் காக்கட்டும். எங்கும் கிடைக்காத அபூர்வக் கனியை உனக்காகக் கொண்டு வந்துள்ளேன். பூமாதேவியின் அருளால் கிடைத்த கனியாகும். இக்கனியைப் புசிப்பவர்கள் இளமையுடன் நீண்ட நாள் வாழ்வர். இதை உனக்குத் தரத் தீர்மானித்தேன்.”
மன்னன் மகிழ்ச்சி அடைந்தான். அந்தணனுக்கு வேண்டுமளவுக்குப் பொன்னும் பொருளும் நிலமும் கொடுத்து அனுப்பினான். பத்ருஹரி குளித்துமுடித்துப் பூஜை செய்து அந்தக் கனியைப் புசிக்க உட்கார்ந்தான்.
அவனுக்குள் மாற்று யோசனை ஓட ஆரம்பித்தது.
“நான் மட்டும் அமரத்தன்மையுடன் இருந்து எனக்கு மகிழ்ச்சி வராது. இதைப் புசிக்கத் தகுந்தவர் நான் அல்ல! என் மனைவி அனங்கசேனை!”
*முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1*
*பத்ருஹரி தன் மணிமுடி துறந்த கதை - 2*
அந்தணன் ஆனந்தத்துடன் வீட்டுக்கு வந்து முறையாகப் பூஜை செய்து அந்தப் பழத்தைப் புசிக்க ஆயத்தமானான். கனியை எடுத்த அந்தணனுக்குத் திடீரென்று வேறொரு எண்ணம் தோன்றியது.
“அடுத்தவேளை உணவுக்கேக் கஷ்டப்படும் நான் இந்த மாதுளங்கனியை உண்டு என்ன பயன்? அரசனுக்குக் கொடுத்தாலாவது நாட்டுக்குப் பயன் விளையும். என்னுடைய குலத்தொழில் யாசகம் கேட்டுப் பிறரிடம் அண்டி வாழ்வது. நான் இருந்து என்ன சாதிக்கப்போகிறேன்?
கிடைத்ததையெல்லாம் உண்டு காகம் உயிர் வாழ்வதுபோல வாழ்வதால் என்ன பயன்?
புகழும் சிறப்பும் மாண்பும் உடையவர்கள் வாழும் வாழ்க்கையே மேன்மையுடையது. பிறருக்காக வாழ்பவனே உண்மையில் வாழ்பவனாவான். தனக்காக வாழ்பவன் கீழானவன். பிறரது இன்பத்தில் தன் இன்பத்தைக் கொள்பவனே உயர்ந்தவன். புவிக்குக் கீழிருக்கும் அக்னி தன் பசையைப் போக்கக் கடல்நீரைக் குடிக்கிறது. மேகம் கடுங்கோடையில் புவியின் வெப்பத்தைத் தணிக்க மழையாகப் பொழிகிறது.
குடிகளின் தலைவன் மன்னன் ஆவான். எனவே இந்த நாட்டு மன்னனான பத்ருஹரிக்கே இந்தக் கனியைத் தருவேன்.
அதிகநாள் உயிரோடு இருந்து இந்நாட்டினைப் பரிபாலிக்கவேண்டியது அவனே. பத்ருஹரியே இளமையாக இருக்கத் தகுதி உடையவன்.”
அந்தணன் பத்ருஹரியிடம் கனியைத் தர நிச்சயித்தான்.
மன்னனை நேரில் சந்தித்தான்.
“அரசனே! உன்னை தெய்வங்கள் காக்கட்டும். எங்கும் கிடைக்காத அபூர்வக் கனியை உனக்காகக் கொண்டு வந்துள்ளேன். பூமாதேவியின் அருளால் கிடைத்த கனியாகும். இக்கனியைப் புசிப்பவர்கள் இளமையுடன் நீண்ட நாள் வாழ்வர். இதை உனக்குத் தரத் தீர்மானித்தேன்.”
மன்னன் மகிழ்ச்சி அடைந்தான். அந்தணனுக்கு வேண்டுமளவுக்குப் பொன்னும் பொருளும் நிலமும் கொடுத்து அனுப்பினான். பத்ருஹரி குளித்துமுடித்துப் பூஜை செய்து அந்தக் கனியைப் புசிக்க உட்கார்ந்தான்.
அவனுக்குள் மாற்று யோசனை ஓட ஆரம்பித்தது.
“நான் மட்டும் அமரத்தன்மையுடன் இருந்து எனக்கு மகிழ்ச்சி வராது. இதைப் புசிக்கத் தகுந்தவர் நான் அல்ல! என் மனைவி அனங்கசேனை!”
No comments:
Post a Comment