Tuesday, December 31, 2019

புத்தாண்டு செய்தி 01/01/2020 புதன்

சித்திரையும் சித்தர்களும்

தமிழ் நாட்டைப் பொறுத்தமட்டும், சித்திரை தொடங்கியே வருடம் கணக்கிடப்பட்டு வந்துள்ளது. இதற்கு சித்தர்கள் எழுதியுள்ள நாடி ஜோதிடக் குறிப்புகளே சாட்சி. நாடி ஜோதிடத்தில் நாள், நட்சத்திரம், மாதப் பெயர்களை மறைவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அப்படிப்பட்ட குறிப்புகளில் சித்திரையை ‘முதல் மாதம்’ என்றும், பங்குனியைக் ‘கடை மாதம்’ என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதேபோல சித்திரையில் சூரியன் சஞ்சரிக்கும் மேஷ ராசியைத் ‘தலை’ என்றும், ‘தலை ராசி’ என்றும் சொல்லியுள்ள குறிப்புகள் உள்ளன. ஒரிடத்திலும் தை மாதத்தைத் தலை ராசி என்றோ, தலை மாதம் அல்லது முதல் மாதம் என்றோ சொல்லவில்லை. இடைக்காட்டுச் சித்தர் அவர்கள் மாத பலன்ளையும், வருட பலன்களையும் எழுதி வைத்துள்ளார். அவற்றை இன்றுவரை நாம் பின் பற்றி வருகிறோம். அவரும் சித்திரை தொடங்கியே வருடத்தைக் கணக்கிட்டுள்ளார். சித்தர்களுக்குத் தெரியாததா நமக்குத் தெரிந்து விட்டது? அவர்கள் கொடுத்துள்ள வழி முறையிலிருந்து நாம் பிறழலாமா?

உயிரினம் வளர்வதற்குக் காரணமான பல முக்கிய அவதாரங்களும் சித்திரையில்தான் நடந்தன என்பது சித்திரையின் சிறப்பை மேலும் உறுதி செய்கிறது.


சதுர் மஹாயுகம் ஆரம்பித்தது சித்திரை முதல் தேதியன்று என்று பார்த்தோம்.
சித்திரையின் வளர்பிறை துவிதியையில் கிருத யுகம் பிறந்தது.
சித்திரையின் வளர்பிறைப் பஞ்சமியில் கூர்ம கல்பம் பிறந்தது.
சித்திரையின் வளர்பிறை சப்தமியில் கங்கை நதி பிறந்தது.
சித்திரையின் வளர்பிறை திரயோதசியில் மத்ஸ்ய அவதாரம் நடந்தது.
சித்திரையின் தேய்பிறைப் பஞ்சமியில் வராஹ அவதாரம் நடந்தது.

அஸ்வினியில் தொடங்கும் சித்திரை.
சித்திரைக்கு உள்ள மற்றொரு முக்கியச் சிறப்பு, அஸ்வினி நட்சத்திரத்தில் அது ஆரம்பிக்கிறது. அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையர் இந்த நட்சத்திரத்தின் அதிபதிகள் ஆவர்.

அவர்களைக் குதிரைகளாகக் கொண்டு ஒற்றைச் சக்கரத்தேரில் சூரியன் வான் மண்டலத்தில் பவனி வருகிறான் என்று ரிக் வேத மந்திரங்கள் தெரிவிக்கின்றன. அஸ்வினி நட்சத்திரத்துக்கு மருத்துவர் என்ற சிறப்புப் பெயர் உண்டு. அஸ்வினி நட்சத்திரத்துக்கு அதிபதியான அஸ்வினி தேவர்கள், தேவ மருத்துவர்கள் எனப்படுகிறார்கள். நம்முடைய பிறந்த நாளை நாம் பிறந்த நட்சத்திரத்தின் போது கொண்டாடுவது போல புத்தாண்டுப் பிறப்பை சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் இருக்கும்போது கொண்டாடுவதால், அந்த அஸ்வினி தேவர்களது அருளால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சூரியன் பல பிறந்த நாள்களைப் பெறுகிறது.

இதன் முக்கியத்துவதைச் சொல்லும் ரிக் வேத ஸ்லோகம் ஒன்றுள்ளது. ‘சூரியன் அஸ்வினியில் புறப்பட்டபோது இருந்தது போல, எல்லா தெய்வங்களும் எங்களுக்கு ஆயுளைக் கொடுக்கட்டும்’ என்கிறது அந்த ஸ்லோகம். அஸ்வினியில் சூரியன் பிறந்ததால் பல கோடி வருடங்கள் சூரியன் சென்று கொண்டு இருக்கின்றான். அப்படிப்பட்ட இயல்பை உடைய ஒரு நாளை, அதன் தாத்பரியம் பார்க்காமல் தூக்கி எறிவது சரியல்ல.

சித்திரையும் மேஷ ராசியும்.
சித்திரை வருடப்பிறப்புசித்திரை மாதத்தில் இருக்கும் மேஷ ராசிக்கும் சிறப்புண்டு. மேஷம் என்றால் ஆடு என்று பொருள். அந்த ராசியின் அமைப்பு ஒரு ஆட்டின் தலையைப் போல இருக்கவே அதை ஆடு என்றும், ஆட்டின் தலை என்றும் தமிழில் வழங்கி வந்திருக்கிறார்கள்.

சங்கத் தமிழ் நூலான நெடுநல் வாடையில், ஆடு-தலையாகக் கொண்டு சூரியன் வானத்தில் ஊர்ந்து செல்கிறான் என்று சொல்லப்பட்டுள்ளது. சோதிடப்படி, சூரியக் கடவுளுக்கு முக்கியமான க்ஷேத்ரம் ஆடுதுறை என்னும் ஊர் ஆகும், ஆடு ராசியான மேஷத்திலிருந்து பயணத்தைத் தொடங்குவதாலும், அந்த ராசியில் உச்சமடைவதாலும், சூரியனுக்கு விசேஷமான இடத்துக்கு, அதை உணர்த்தும்படி ஆடுதுறை என்ற பெயர் வந்துள்ளது.
ஆடுதுறைக்கு மருத்துவக்குடி என்று மற்றொரு பெயர் உண்டு. ஆடு ராசியான மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரம் தொடங்கி வருடம் ஆரம்பிப்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டுள்ளது.

வருடத்தின் முக்கியத்துவம்
வருடம் என்பது உத்தராயணம் என்னும் சூரியனது வட திசைப் பயணத்தில் ஆரம்பிக்க வேண்டும். அதனால் உத்தராயணம் ஆரம்பிக்கும் தை மாதத்தில் வருடப் பிறப்பு கொண்டாடுவதே சரி என்று சிலர் சொல்லலாம். அது சரியல்ல. வருடம் என்பதன் அர்த்ததை நாம் தெரிந்து கொண்டால் இந்த சந்தேகங்கள் வராது. தமிழ் நிகண்டுகளில் வருடம் என்பதற்கு ஒப்பான பிற சொற்கள் இருக்கின்றன. அவை வர்ச்சரம், அயனம், ஆண்டு என்பன.

வர்ச்சரம்  (வத்சரம்) என்று சொன்னால் அது ருதுக்களக் கொண்டது. வசந்த காலம், கோடைக் காலம் என்று மொத்தம் ஆறு பருவங்களைக் கொண்டது. ருதுக்களைப் பற்றி பேச வரும் போது வர்ச்சரம் என்பார்கள். அது வசந்த ருதுவில் ஆரம்பிக்கிறது. அது குறிப்பிட்ட ஒரு தினத்தில் ஆரம்பிக்காது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் அது மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் ருதுக்களது அடிப்படையில் நாம் ஒன்றும் செய்வதில்லை.

அயனம் என்று சொன்னால் அது உத்தராயணம், தட்சிணாயனம் என்னும் இரண்டு அயனங்களைக் கொண்டது. அயனங்கள் அடிப்படையிலும் நாம் செயல்களைச் செய்வதில்லை. தை மாதத்தில் உத்தராயணம் ஆரம்பிக்கிறது. அந்தநாளில் உத்த்ராயண ஹோமம் செய்தார்கள். இப்பொழுதெல்லாம் அது வழக்கத்தில் இல்லை. மேலும் உத்தராயணாம் என்பது மிகச் சரியாக தை முதல் நாளான்று ஆரம்பிப்பதில்லை.

வருடம் என்று சொன்னால் அது மாதங்களைக் கொண்டது. இந்த மாதத்தில் இதைச் செய்யலாம் என்று வழக்கத்தில் நாம் பல விசேஷங்களைச் செய்கிறோம். அதனால் நம் வாழ்க்கையில் வருடத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது. இந்த மாதங்கள் குறிப்பிட்ட நாளில் ஆரம்பிக்கின்றன. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், சூரியன் குறிப்பிட்ட பாகையில் நுழையும் நேரத்தைக் கணக்கிட முடியும். அதனால் மாதமும், வருடமும், குறிப்பிட்ட நாளில் ஆரம்பிக்கவே பல செயல்பாடுகளைக் குறிக்க இது உபயோகமாக இருக்கிறது. இதன் காரணாமாகவே சித்திரையில் தொடங்கும் வருடக் கணக்கை நாம் பின்பற்றுகிறோம்.

சித்திரையின் சிறப்புகள்
சித்திரையில் வருடப் பிறப்பு அமைத்ததன் பிற காரணங்களைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

· சித்திரையில் வரும் மேஷ ராசி தொடங்கி கால புருஷன்இயங்குகிறான். மக்கள் வாழ்க்கை, பிறப்பு, இறப்பு என எல்லாவற்றையும் இயக்குகிறவன் இந்தக் கால புருஷன் ஆவான். மக்களை ஆள்வதால் வருடத்துக்கு “ஆண்டு” என்று பெயர். 12 மாதங்களும் அந்த கால புருஷனின் உடல் உறுப்புகளாகச் சித்தரிக்கப்படுகின்றன. மனிதனைப் பீடிக்கும் நோய் நொடி போன்றவை எல்லாம் அந்தந்த மாதத்தில் அந்தந்த உறுப்புகளில் ஏற்படுகிறது. வெயில் அதிகமான சித்திரையில் அவனது தலை இருக்கிறது. வெயில் காரணமாக வரும் தலை வலி, மயக்கம் போன்றவை பீடிக்கும் மாதம் அது. தை மாதம் என்பது கால புருஷனது கால் முட்டியாகும். தை மாதக் குளிரில் மூட்டு நோய், முட்டி வலி போன்றவை அதிகரிக்கும். மேலும், தலையிலிருந்துதான் வருடம் ஆரம்பிக்க வேண்டும். தை மாதத்தில் வருடப் பிறப்பென்றால், முட்டியிலிருந்து ஆரம்பிக்கும். அது சரியல்ல.

கிரக அவஸ்தைகள் என்று ஜோதிடத்தில் உண்டு. ஒரு ராசியில் இருக்கும் 30 பாகைகளை 5 பாகங்களாகப் பகுப்பார்கள். ஒரு ராசியின் 0 பாகம் ஆரம்பித்து பாலன், குமாரன், இளைஞன், முதியவன், மரணம் என்று ராசியைச் சமமாகப் பகுப்பார்கள். ஒரு கிரகம் அவற்றுள் எங்கு இருக்கிறதோ அதைப் பொறுத்து அந்தக் கிரகம் பலனைக் கொடுக்கும். முதியவன், மரணம் போன்ற பாகைகளில் அது நல்ல பலனைக் கொடுக்காது. இந்த முறை ஆண் ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் முதலிய ராசிகளுக்குப் பொருந்தும். மீதி ராசிகளான பெண் ராசிகளில் தலைகீழாகப் பலன்கள் தரும்.. அதாவது மரணம் தொடங்கி, பாலன் வரை பலன்கள் தரும். சித்திரை மாதம் ஆண் ராசியில் வருகிறது. அதன் 0 பாகையில் சூரியன் நுழையும் போது பாலன் என்றாகி மேலும் மேலும் வளர்ச்சியைக் கொடுக்கும். ஆனால் தை மாதம் பெண் ராசியான மகர ராசியாகும். அங்கு சூரியன் நுழையும் போது மரணகண்டத்தில் ஆரம்பிக்கும். மேலும் தையின் முதல் மூன்று நாட்கள் ‘கரி நாட்களக’ இருப்பதாலும், தையில் வருடப் பிறப்பு ஆரம்பிப்பது உசிதமல்ல.

· தை மாதம் துவங்கும் மகர ராசியில், சூரியன் நுழையும்போது இருக்கும் கரணம், ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. “கரணாத் காரிய சித்தி” என்பார்கள். அப்பொழுது இருக்கும் கரணத்தின் அடிப்படையில், எடுத்த காரியம் நடக்குமா என்று மட்டுமே கணிக்க முடியும். ஆனால் சித்திரை மாதம் மேஷ ராசியில் சூரியன் நுழையும் நேரம் ‘ஜக லக்னம்’ எனப்படுகிறது. உலகத்தின் லக்னம் என்பது பொருள். உலக நடப்புகளை அதைக் கொண்டுதான் சொல்ல முடியும். சாதாரண மக்களுக்குப் பிறந்த லக்னமும், சந்திர லக்னமும் முக்கியம். அது போல உலகத்துக்குச் சூரிய லக்னம் முக்கியம். அதைக் கொண்டு ஒரு நாட்டுக்குப் பலன் சொல்ல முடியும்.

‘நவ நாயகர்கள்’ என்று ஒரு ‘மந்திரி சபையே’ சித்திரை வருஷப் பிறப்பின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. அதனால் பஞ்சாங்கம் படிப்பது வருஷப்பிறப்பின் முக்கிய அம்சமாகும். சித்திரை வருஷப் பிறப்பில் பஞ்சாங்கம் படிக்காமல், தை மாதப் பிறப்பின் போது எப்படிப் பஞ்சாங்கம் படிக்க முடியும்?

சித்திரை வருஷப் பிறப்பைப் பொறுத்தே, நாடு, மக்கள், பிற உயிரினங்கள், விலை வாசி, விவசாயம், செல்வப் பெருக்கு என்று எல்லாவற்றையும் கணிக்க முடியும். முற்காலத்தில் ராஜாக்கள் சித்திரை வருஷப் பிறப்பின் போது பயபக்தியுடன் கடவுளை வழிபட்டு, பஞ்சாங்கப் பலனைக் கேட்டார்கள். அந்தப் பலன்களின் அடிப்படையில், நாடு நலம் பெற என்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பார்கள்.

அனைவருக்கும் இனிய  புத்தாண்டு வாழ்த்துக்கள்.
விக்கிரமாதித்தன் கதைகள் - 27

முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1

விக்கிரமாதித்தன் நாடாறு மாதம், காடாறு மாதம் ஆளத் தொடங்கிய கதை - 2
காளிதேவி சிரித்தாள்.
"இதைத்தான் கேட்பாய் என எதிர்பார்த்தேன்! நீயும் உன் அண்ணனும் ஒருவருக்கொருவர் எப்படி விட்டுக்கொடுத்து வாழ்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்! உனக்காக அவனும் அவனுக்காக நீயும் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள்! அண்ணன் தம்பி எப்படி வாழவேண்டும் என்பதை இவ்வுலகுக்கு எடுத்துக்காட்டவே, இந்தப் பரிசோதனையை இருவருக்கும் வைத்தேன்.

உன் அண்ணனின் தலையை அவனுடலுடன் பொருத்தி, இந்தக் கும்பதீர்த்தத்தைத் தெளி. பிழைத்தெழுவான்."
பட்டி ஓடோடிப்போய் அண்ணனை உயிர்ப்பித்தான். விழித்தெழுந்த விக்கிரமாதித்தன், நடந்ததை வினவினான்.

"ஆனால், பட்டி! தேவேந்திரன் எனக்கு ஆயிரம் ஆண்டுகள் அந்த சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆளும் வரத்தைத் தந்தான். நீயோ இரண்டாயிரம் ஆண்டுகள் இங்கு வாழ்வாய். இருவரின் ஆயுளும் சமமாக இல்லையே! என்ன செய்வது?"

"அண்ணா, வருந்தாதீர்கள். உங்களை ஆயுளை நீட்டுவதற்கு ஒரு யோசனை சொல்கிறேன். சிம்மாசனத்திலிருந்து ஆயிரம் ஆண்டுகள் ஆளும் வரத்தைத்தானே தந்தார் தேவேந்திரன்? தாங்கள் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆறு மாதங்கள் ஆளுங்கள். அடுத்த ஆறு மாதங்கள் காடுகளில் சுற்றி வாருங்கள். இப்படிச் செய்வதால் தேவேந்திரன் அளித்த வரத்தின்படி ஆயிரம் ஆண்டுகள் வாழ்வீர்கள்! அதே சமயம் நாம் இருவரும் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழவும் செய்யலாம்."
இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர். பட்டியுடன் துணையுடன் விக்கிரமாதித்தன் ஒரு நல்லநாளில் அந்த நவரத்தின சிம்மாசனம் ஏறி அரசாட்சி செய்யத் தொடங்கினான்.
சிம்மாசனத்தின் முதலில் நிற்கும் வினோதரஞ்சிதப் பதுமை, போஜராஜனிடம், "மன்னனே! விக்கிரமாதித்தனின் தொடக்க காலக் கதைகளை உன்னிடம் இப்போது சொல்லியிருக்கிறேன். இதற்குப் பிறகும் விக்கிரமாதித்தனைப் போன்ற பராக்கிரமும் தீரமும் உனக்கு இருக்கிறது என்று நம்புகிறாயா? அப்படி நம்பிக்கை இருந்தால் மேலே ஏறத் தொடங்கு!"
பதுமை மௌனமாகவிட்டது.
அதுவரை கதை கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் முகூர்த்த வேளை தவறிவிட்டதை உணர்ந்தனர். போஜராஜனுக்கு சிம்மாசனத்தில் ஏறி அமர விருப்பமின்றி அந்தப்புரத்துக்குச் சென்றான்.

*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*

மறுநாள், மறுபடி நல்ல நேரத்தில் போஜராஜன் நவரத்தின சிம்மாசனத்தில் ஏறத் தொடங்கினான். முதற்படியைக் கடந்தான். இரண்டாம் படியில் கால் வைத்தான்.
அந்தப் படியில் நின்றிருந்த மதனாபிஷேகவல்லி என்ற பதுமை போஜராஜனைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தது.

"போஜமன்னா! நில்லுங்கள்! விக்கிரமாதித்த மஹாராஜனைப் போன்ற தீரமும் வல்லமையும் உங்களுக்கு இருந்தால் இந்த சிம்மாசனத்தில் துணிவுடன் ஏறுங்கள்."

"விக்கிரமாதித்தனிடம் நீ கண்ட தீரத்தையும் வல்லமையையும் எனக்குச் சொல்வாயா?" போஜராஜன் கேட்டான்.

"கேளுங்கள் போஜராஜரே!"

Friday, December 27, 2019

விக்கிரமாதித்தன் கதைகள் - 27

முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1

விக்கிரமாதித்தன் நாடாறு மாதம், காடாறு மாதம் ஆளத் தொடங்கிய கதை - 2
காளிதேவி சிரித்தாள்.
"இதைத்தான் கேட்பாய் என எதிர்பார்த்தேன்! நீயும் உன் அண்ணனும் ஒருவருக்கொருவர் எப்படி விட்டுக்கொடுத்து வாழ்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்! உனக்காக அவனும் அவனுக்காக நீயும் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள்! அண்ணன் தம்பி எப்படி வாழவேண்டும் என்பதை இவ்வுலகுக்கு எடுத்துக்காட்டவே, இந்தப் பரிசோதனையை இருவருக்கும் வைத்தேன்.

உன் அண்ணனின் தலையை அவனுடலுடன் பொருத்தி, இந்தக் கும்பதீர்த்தத்தைத் தெளி. பிழைத்தெழுவான்."
பட்டி ஓடோடிப்போய் அண்ணனை உயிர்ப்பித்தான். விழித்தெழுந்த விக்கிரமாதித்தன், நடந்ததை வினவினான்.

"ஆனால், பட்டி! தேவேந்திரன் எனக்கு ஆயிரம் ஆண்டுகள் அந்த சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆளும் வரத்தைத் தந்தான். நீயோ இரண்டாயிரம் ஆண்டுகள் இங்கு வாழ்வாய். இருவரின் ஆயுளும் சமமாக இல்லையே! என்ன செய்வது?"

"அண்ணா, வருந்தாதீர்கள். உங்களை ஆயுளை நீட்டுவதற்கு ஒரு யோசனை சொல்கிறேன். சிம்மாசனத்திலிருந்து ஆயிரம் ஆண்டுகள் ஆளும் வரத்தைத்தானே தந்தார் தேவேந்திரன்? தாங்கள் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆறு மாதங்கள் ஆளுங்கள். அடுத்த ஆறு மாதங்கள் காடுகளில் சுற்றி வாருங்கள். இப்படிச் செய்வதால் தேவேந்திரன் அளித்த வரத்தின்படி ஆயிரம் ஆண்டுகள் வாழ்வீர்கள்! அதே சமயம் நாம் இருவரும் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழவும் செய்யலாம்."
இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர். பட்டியுடன் துணையுடன் விக்கிரமாதித்தன் ஒரு நல்லநாளில் அந்த நவரத்தின சிம்மாசனம் ஏறி அரசாட்சி செய்யத் தொடங்கினான்.
சிம்மாசனத்தின் முதலில் நிற்கும் வினோதரஞ்சிதப் பதுமை, போஜராஜனிடம், "மன்னனே! விக்கிரமாதித்தனின் தொடக்க காலக் கதைகளை உன்னிடம் இப்போது சொல்லியிருக்கிறேன். இதற்குப் பிறகும் விக்கிரமாதித்தனைப் போன்ற பராக்கிரமும் தீரமும் உனக்கு இருக்கிறது என்று நம்புகிறாயா? அப்படி நம்பிக்கை இருந்தால் மேலே ஏறத் தொடங்கு!"
பதுமை மௌனமாகவிட்டது.
அதுவரை கதை கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் முகூர்த்த வேளை தவறிவிட்டதை உணர்ந்தனர். போஜராஜனுக்கு சிம்மாசனத்தில் ஏறி அமர விருப்பமின்றி அந்தப்புரத்துக்குச் சென்றான்.

*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*

மறுநாள், மறுபடி நல்ல நேரத்தில் போஜராஜன் நவரத்தின சிம்மாசனத்தில் ஏறத் தொடங்கினான். முதற்படியைக் கடந்தான். இரண்டாம் படியில் கால் வைத்தான்.
அந்தப் படியில் நின்றிருந்த மதனாபிஷேகவல்லி என்ற பதுமை போஜராஜனைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தது.

"போஜமன்னா! நில்லுங்கள்! விக்கிரமாதித்த மஹாராஜனைப் போன்ற தீரமும் வல்லமையும் உங்களுக்கு இருந்தால் இந்த சிம்மாசனத்தில் துணிவுடன் ஏறுங்கள்."

"விக்கிரமாதித்தனிடம் நீ கண்ட தீரத்தையும் வல்லமையையும் எனக்குச் சொல்வாயா?" போஜராஜன் கேட்டான்.

"கேளுங்கள் போஜராஜரே!"

Thursday, December 26, 2019

உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.

அதனால் வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்

உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.

எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.

எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.

எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.

மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.

மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.

நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்

#முதுமை என்று எதுவும் இல்லை.

நோய் என்று எதுவும் இல்லை.

#இயலாமை என்று எதுவுமில்லை.

எல்லாம் உங்கள் மனதிலும், அதன் #நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.

#சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.

#நான்... #நான்... #நான்...

#நான்  #சம்பாதித்தேன்,

#நான் #காப்பாற்றினேன்,

#நான் தான் வீடு கட்டினேன்,

#நான் தான் #உதவி செய்தேன்,

#நான் உதவி செய்யலேனா? அவர் என்ன ஆகுறது!

#நான்  #பெரியவன்,

#நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன்,

#நான் நான் நான் நான்* என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!

#நான் தான் என் #இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

#நான் தான் என் #மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

#நான் தான் என் இரண்டு #கிட்னியையும் இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

#நான் தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா??

#நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?

இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..

ஆகையால் "நான்" என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள்.

#உலகைப்பற்றிக்கவலைப்படாதே ஏனெனில் அது இறைவனுக்குரியது.

உணவைப்பற்றி கவலைப்படாதே !அது இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.

எதிர்காலம் குறித்தும் கவலைப்படாதே! அதுவும் இறைவனின் கரத்தில் தான் உள்ளது. எல்லாவற்றையும் வழங்கிய இறைவனுக்கு இணை வைக்காதே! அதற்கு கூலி நிரந்தர நரகப் படுகுழி எத்தனை கோடி வருடங்கள் ஆனாலும் வெளியேற முடியாது

உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே. தாழ்வுமனப்பான்மை வரும்

உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே! தலைக்கனம் வரும்.

#உன்னை_யாரோடும்_ஒப்பிடாமல் நீ நீயாக இரு . தன்னம்பிக்கை    வரும்.

Wednesday, December 25, 2019

நாளை கிரகண நிகழ்வும் ஜோதிடமும்...

நாளை ஏற்பட போகும் கிரகனம் காலை 8 மணி முதல் 11.30 வரை, குருவின் வீட்டில் நடக்கும் இந்த கிரகணம், அம்சத்தில் குரு உச்சம் பெறும்போது நடைபெறுகிறது, அவர் கேதுவின் சாரத்தில் அமர்ந்து கேதுவை சுபத்துவம் செய்கிறார், ஆகவே இது ஜோதிடம் கர்ப்பவர்கள் ஜோதிடம் தொழில் முறையாக கொண்டவர்கள், சிவ நாமத்தை 108 முறை கிரகணம் ஆரம்பிக்கும் போது ஜெபித்துவிட்டு, ஜோதிடம் பாருங்கள் அல்லது மூல நூல்களை படியுங்கள், இது பல புரியாத விஷயங்களையும் புரியவைக்கும் ஏனெனில் ராகு சுய சாரத்தில் நின்று கேதுவை பார்க்கிறார், மேலும் குரு இணைவு மேலும் புதனும் கேது சாரம், மனோகாரகன் சந்தரனும் கேது சாரம் மேலும் சூரியனும் கேதுவின் சாரமே, இதில் குருவின் சுபத்துவத்தை கேதுவே முழுதாக ஈர்ப்பார் ஏனெனில் நிழல் கிரகத்தின் குணமே இது தான், ஆகவே மறைபொருள் ஞானம் அல்லது மாந்திரீகம் இவை சாதிக்க நல்ல நேரம், திதி அமாவாசை(ராகுவின் திதி) ஆகவே ஜோதிடம் பயில்வது அல்லது இதுவரை பலன் பிடிப்படாத ஜாதகத்தை அலசுவது இப்படி பட்ட காரியங்களை செய்தால், இது மறைபொருள் ஆராய்ச்சியில் சேரும், ஆகவே ஒரு சிறந்த தெளிவு கிடைக்கும், மேலும் தெய்வத்தின் அருளும் தொழிலுக்கு கிடைக்கும்...

மற்றவர்களுக்கு...

அவரவர் குல தெய்வ வழிப்பாடு அல்லது சிவ நாம ஜபம் செய்யலாம், வெளியில் செல்பவர்கள் இந்த கிரகண வேளையில் ஒரே இடத்தில் இருப்பது நன்மை, வாகனம் ஓட்டுவது தவிர்க்கவும், உணவு அருந்த கூடாது கிரகணம் விட்ட பிறகு மஞ்சள் தண்ணீர் தெளித்து கொண்டு உணவு அருந்தலாம், மேலும் குளிப்பது நன்மை, கிரகண வேளையை தெய்வ வழிபாடு, அல்லது விஞ்ஞான ஆராய்ச்சி, ஜோதிட ஆராய்ச்சி ஏன் சுய ஜாதக ஆராய்ச்சி, அல்லது ஜோதிடரிடம் பலன் கேட்க்கலாம், ஏனெனில் கேது கர்மா முழு செயல்பாட்டில் அதுவும் அவரின் சாரநாதன் சுக்கிரன் சனியின் வீட்டில், சனியோ கேதுவுடன் குரு வீட்டில், ஆகவே உங்கள் கர்மா வழிவிட்டால் உங்கள் ஜாதகத்தை ஆராயுங்கள்....

ஜோதிடர்கள்/ எல்லோரும் கேதுவின் மூல மந்திரம்: ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரோம் நமஹ.. உபயோகிக்கலாம் நன்மையே கேதுவின் தாக்கம் குறையும்..

Tuesday, December 24, 2019

விக்கிரமாதித்தன் கதைகள் - 24

முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1

விக்கிரமாதித்தன் சிம்மாசனம் அடைந்த கதை - 3

போட்டி நாளன்று யாருமறியாமல் இரண்டு பூச்செண்டுகளை உருவாக்கினான் விக்கிரமாதித்தன். ஒவ்வொரு பூச்செண்டிலும்  சில வண்டுகளையும் வைத்து அந்தப் பூச்செண்டுகளைக் கட்டினான்.

தேவர்களின் சபையில் ஆடுவதற்கு ஆயத்தமாக ரம்பையும் ஊர்வசியும் நின்றிருந்தனர். தேவேந்திரன் நடுநாயகமாக அமர்ந்திருந்தான். மற்ற தேவர்களும் அங்கே அவர்களுக்கென்று உள்ள ஆசனங்களில் அமர்ந்திருந்தனர். விக்கிரமாதித்தனை வரவேற்றான் இந்திரன். விக்கிரமாதித்தனும் அவனுக்கு வணக்கத்தைக் கூறினான். விக்கிரமாதித்தன் அந்த அப்ஸர கன்னிகளிடம் ஆளுக்கு ஒன்றைக் கொடுத்து, “நீங்கள் இருவரும் இப்பூச்செண்டுகளையும் கையில் வைத்துக்கொண்டு நடனமாடினால் சிறப்பாக இருக்கும்!” என்றான்.

ஆர்வத்துடன் அவர்கள் இருவரும் பூச்செண்டு வாங்கிக்கொண்டு நாட்டியமாடத் தொடங்கினர்.

இருவரும் பாடகர்களுடனும் தாள வாத்தியங்களுடனும் நளினமாக ஆடிக்கொண்டிருந்தனர். இருவருள் ரம்பை சற்றே உணர்வுவயப்பட்டவளாய் பூச்செண்டை அழுத்தினாள். உள்ளிருந்த வண்டு அழுத்தம் தாளாமல் வெளிவந்து அவளைக் கடித்தன. பூச்செண்டை உதறி வீசிவிட்டாள்! அதனால் அவளது நடனத்தில் தாளம் தவறியது. ஆனாலும் அவளது அனுபவத்தால் அதனைச் சமாளித்து ஆடலானாள். ஊர்வசி அந்தப் பூச்செண்டை மென்மையாகப் பிடித்திருந்ததால் அவளது ஆட்டத்தில் எந்தவிதத் தடுமாற்றமும் ஏற்படவில்லை.

இவற்றை தேவர்கள் யாரும் அறிந்துகொள்ளவில்லை. விக்கிரமாதித்தன் உன்னிப்பாக கவனித்து அறிந்தான்.

நடனம் முடிந்தது. விக்கிரமாதித்தன் எழுந்தான். தன் தீர்ப்பைச் சொன்னன்.

“ஊர்வசிதான் நடனப் போட்டியில் வென்றாள். அவளது நடனமே சிறந்தது.”

அனைவரும் விக்கிரமாதித்தனை ஆச்சரியத்துடன் பார்த்தனர். நம்மால் அனுமானிக்க முடியாததை மானுடன் எவ்வாறு அறிந்தான் என்ற வியப்பு!

இந்திரன் ஆரவம் மேலிடக் கேட்டான்.

“விக்கிரமாதித்தா எப்படி ஊர்வசிதான் வென்றதாகத் தீர்மானித்தா?”

விக்கிரமாதித்தன் இந்திரனைப் பார்த்து முறுவலித்தான். நடன மங்கையரிடம், “ உக்ன்கள் பூச்செண்டுகளை என்னிடம் தாருங்கள்” என்றான்.

ஊர்வசி கையில் வைத்திருந்த பூச்செண்டைக் கொடுத்தாள். ரம்பை வீசி எறிந்த இடத்தைத் தேடிக்கொண்டிருந்தாள்.
“எங்கே வீசி எறிந்தோம்?”

விக்கிரமாதித்தன் சொன்னான்,”பூச்செண்டைத் தேடவேண்டாம். விட்டுவிடுங்கள்.”

“தேவேந்திரா. பூச்செண்டிற்குள் வண்டுகளை வைத்திருந்தேன். அப்பூச்செண்டை மென்மையாகப் பிடித்திருந்ததால், ஊர்வசியை வண்டுகள் கொட்டவில்லை. அவளும் லயம் தப்பாமல் ஆடினாள். ரம்பையோ உணர்ச்சிவசப்பட்டுப் பூச்செண்டை அழுத்தினாள். வண்டுகள் வெளிப்பட்டு அவளைக் கடித்துவிட்டன. அவளது நடனத்தில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டது. எனவே ஊர்வசிதான் வென்றவள்”

விக்கிரமாதித்தன் விளக்கினான்.

தேவேந்திரன் மேலும் கேட்டான், “ விக்கிரமாதித்தா, இருவரும் நடனக் கலையில் சிறந்த தேர்ச்சி உடையவர்கள். ஊர்வசி மென்மையாகப் பிடித்திருந்தாள் என்பதை வைத்து நீ சொல்லும் முடிவு எப்படிச் சரியாக இருக்கும்? ரம்பையை வண்டு கடித்தது நடனம் தொடங்கி  இரண்டு நாழிகை நேரம் கழித்துத்தான். முதல் இரண்டு நாழிகை நேரத்தில் இருவரது நடனத்தை ஒப்பிட்டுக் கூறு.” என்றான்.



Sunday, December 22, 2019

விக்கிரமாதித்தன் கதைகள் - 23

முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1

விக்கிரமாதித்தன் சிம்மாசனம் அடைந்த கதை - 2

இந்திரன் நிம்மதியாக அடைந்தான். தன் தேர்ப் பாகன் மாதலியை அழைத்தான். பூலோகம் சென்று விக்கிரமாதித்தனை அழைத்து வரப் பணித்தான்.

மாதலி தயங்கினான்.

"தேவர்களாலும் முடியாததை ஒரு மானுட னால் முடியுமா."

"மாதலி தயங்காதே. தேவர்களை விட மனிதர்கள் நேர்மையானவர்களே. விக்கிரமாதித்தன் மிகுந்த சாதுர்யம் உடையவன்." நாரதர் சொன்னார்.

உடனே தேரேறி மாதலி பூலோகத்துக்குப் பறந்து வந்தான். உஜ்ஜயினி நகருள் வந்து அரண்மனையை அடைந்தான். அனுமதி பெற்று உள்ளே நுழைந்தான். விக்கிரமாதித்தனையும் மற்றவர்களையும் வணங்கிவிட்டுத் தான் யார் என்பதைச் சொன்னான். பிறகு தான் வந்த விவரத்தைக் கூறத் தொடங்கினான்.

"அரசே! இந்திர சபையில் ரம்பைக்கும் ஊர்வசிக்கும் நாட்டியப் போட்டி நடைபெற்றது. இருவருள் யார் நடனக் கலையில் சிறந்தவர் என்பதற்கான போட்டி அது. நடுவர்களாகச் சிறந்த தேவலோகக் கலைஞர்கள் இருந்தும் போட்டியில் வென்றவரைத் தீர்மானிக்க முடியவில்லை. தேவரிஷி நாரதர் தங்களைப் பற்றிக் கூறினார். தாங்கள் ஒருவரால்தாம் நடனத்தில் சிறந்தவரைத் தீர்மானிக்க இயலும் என்று கூறினார். தங்கள் வரவுக்காக இந்திராதி Gதவர்கள் காத்திருக்கின்றனர். வரவியலுமா?"

தம்பியும் அமைச்சருமான பட்டியும் தேவலோகத்தில் புகழை நிலை நாட்டி, தேவேந்திரனின் நட்பைப் பெறுதல் சிறந்தது. என்று கூறினான்.

விக்கிரமாதித்தன் காளிதேவியைக் கண்டு வணங்கி விட்டு மாதலியுடன் தேவலோகத் தலைநகர் அமராவதிக்குச் சென்றான்.

தேவேந்திரன் அவனை வரவேற்றுத் தக்க மரியாதை செய்தான்.

தேவ கன்னிகையர் இருவரும் அவைக்கு வந்தனர். முதலில் ரம்பை நடனமாடினாள். அவளது அழகிலும் நடனத் திறமையிலும் அனைவரும் மயங்கினர்.

மறுநாள் ஊர்வசியின் நடனம் நடைபெற்றது. அதுவும் கொள்ளை அழகு. இரண்டு பேரின் நடனங்களையும் இரசித்த விக்கிரமாதித்தன், தேவேந்திரனிடம், "இந்திர தேவா, நாளை ரம்பா, ஊர்வசி இருவரும் சேர்ந்தாற்போல நடனமாடட்டும். அந்த நடனப் போட்டியில் யார் சிறந்தவர் எனத் தீர்மானிக்கிறேன்" என்றான்.

மறுநாள் போட்டி நடனம்...

இன்னும் வரும்....

பிரம்மஹத்தி தோஷம் யாருக்கு? 22/12/2019 ஞாயிறு

...பிரம்மஹத்தியை எளிதாக நினைக்காதீர்கள்....

###########################

தோஷத்தில் பெரிய தோஷமே பிரம்மஹத்தி தான்..
எவருக்கும் எளிதில்  இந்த தோஷம் இருக்காது..
மீறி இருந்தால் அவனுக்கு வாழ்க்கையே இருக்காது..

சனி+ குரு சேர்க்கை
சனி குரு சப்தம பார்வை சனி குரு திரிகோண பார்வை
எப்படி  சனி குருவை நீசத்துடன் பார்த்தாலும் பிடித்தது பிரம்மஹத்தி என்று பொருள்..

இராமருக்கு பிரம்மஹத்தி பிடித்ததால் தான் திருவிடைமருதூர் வந்து சிவனை வணங்கினார்.
திருவிடைமருதூர் ஜோதி மகாலிங்கம் தான் ஒரே எளிய தீர்வு..

ஆனால் அந்த சிவனுக்கே பிரம்மஹத்தி பிடித்து தான்  மேல்மலையனூர் அங்காளம்மன் உருவானது..

மும்மூர்த்திகளில் பிரம்மனுக்கு பெரிய கோயிலோ மக்கள் வணங்குவதோ இல்லை ஆனால் பிரம்மன் சாபம் தான் பிரம்மஹத்தி..
பரிகாரம் செய்தாலும் ஆண்டவன் கருணை இருந்தால் தான் இந்த தோஷம் போகும்..

பிரம்ம சாபத்திற்கு அவ்வுளவு வலிமை..

படைக்கும் மூர்த்தியான பிரம்மனுக்கு அழிக்கும் நாளையும் அவனே தீர்மானிக்கிறான்..பிரம்மன் படைத்த உயிரை நாம் இடையில் கொல்வதாலேயே நம்மை பிரம்ம சாபம் பிரம்மஹத்தியாக பிடித்து உயிரோடு கொல்லும் என்பது தான் இந்த தோஷத்தின் தன்மை..

எதற்கு இந்த பதிவு என்றால் எவருகெல்லாம் பிரம்மஹத்தி வரும் என்று ஆராய்ந்தால் பணத்தீமிரில் ஆடும் மனிதர்களுக்கு தான் முக்கியமாக பிரம்மஹத்தி எங்கோ எந்த சூழலிலோ பிறவியிலோ பிடித்தே தீரும்...

ஏழையை ஏமாற்றி அவன் சொத்தை அடைதல்

பெண்ணை கற்பழித்து கொல்லுதல்

ஐந்தறிவு ஐீவனை கொல்லுதல்

பிராமணர் சாபம் அடைதல்

நல்ல பாம்பை கொன்று எரித்தல்

துடிக்க துடிக்க எந்த உயிரை கொன்றாலும்

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பிறரை அழித்தல்

பொய் சத்தியம் பெரியவர்களுக்கு அவர்களது ஆன்மாவிற்கு செய்தாலோ பிரம்மஹத்தி பிடித்தே தீரும்..

இந்த தோஷம் எல்லாம் வந்தால் வாழ்நாளே இருண்ட காலமாகவே மாறிடும்...

பிரம்மஹத்தியால் வரும் பாதிப்புகள்..

தொழில் வேலை கடைசி வரை பாதிப்பு..

மனநிம்மதி கடைசி வரை இல்லாமை

மன உளைச்சல்

தகுதி இல்லாதவர்களிடம் செய்யாத தவறுக்கு தலைகுனிவு

தொடர்ந்து எதாவது நோய் உடலில் வந்து துன்புறுத்துவது..

இனம் புரியாத பயம்.

எதிர்காலம் என்னவாகும் என்ற புரியாத இருள் சூழ்ந்த கவலை

தூக்கமின்மை

புத்தி பேதலிப்பு..

மனநிலை பாதித்தல்

உயிரை கொல்வதற்கு தண்டனையாக உயிரோடு கொல்லுதல் என்பது தான் பிரம்மஹத்தி தோஷம்..


நன்றி,

Saturday, December 21, 2019

விக்கிரமாதித்தன் கதைகள் - 22

முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1

விக்கிரமாதித்தன் சிம்மாசனம் அடைந்த கதை - 1

விக்கிரமாதித்தன் ஆளும் உஜ்ஜயினி மாகாளி பட்டணம் கலைகளின் சங்கமமாகியது. அவன் புகழ் எல்லா இடங்களிலும் பரவி அனைவரும் புகழும் அரசனான். அவனது புகழ் தேவலோகத்தையும் விட்டு வைக்கவில்லை. சங்கீதம், நடனம், ஓவியம் என்று பல கலைகளிலும் வல்லவனாக இருந்தான்.

ஒரு சமயம் தேவலோக இந்திர சபையில் தேவ கன்னியர் நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தனர். அனைவருள்ளும் ரம்பையும் ஊர்வசியும் தமது திறமையால் இந்திராதி தேவர்களைக் கவர்ந்தனர். நடன நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரையும் கேட்டு இந்திரன் பாராட்டினான்.
"என்னை விடச் சிறந்தவள் இங்கு யாருளர்?" என்றாள் ஊர்வசி.

"நடனக்கலையில் முழுத் தேர்ச்சி அடைந்திருப்பவள் நானே!" என்றாள் ரம்பா.

வார்த்தைகள் சிறிது சிறிதாக தடித்தன. இந்திரன் இந்த இருவருள் யார் சிறந்தவர் என்ற விவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க நினைத்தான்.

"நடன அப்சரஸ்களே! நாளை உங்கள் இருவருக்கும் நடனப் போட்டி வைக்கிறேன். அதில் வெற்றி பெறுபவருக்கு தேவலோக பாரிஜாத மாலையை அணிவித்துப் பாராட்டுவேன்." என்று இருவரையும் அனுப்பினான் இந்திரன்.

மறுநாள் தேவ சபையில் நடனக் கலை விற்பன்னர்களும் வல்லுநர்களும் அமர்ந்திருந்தனர். தேவரிஷி நாரதரும் அந்த சபையில் வீற்றிருந்தார். முதலில் ரம்பையும் ஊர்வசியும் தனித்தனியாக நடனமாடினர். இருவரது நடனமும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. யாராலும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ரம்பையும் ஊர்வசியையும் சேர்ந்து நடனமாடச் செய்தனர். அப்போதும் யாராலும் முடிவு செய்ய இயலவில்லை.

நாரதர் எழுந்திருந்தார்.

"இந்திரா, இங்குள்ள அனைவரும் முயன்றும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. இருவரது நடனமும் அவ்வளவு சிறப்பாக இருந்தது. ரம்பை, ஊர்வசி இருவருள் சிறந்த வரைத் தேர்ந்தெடுக்க இங்குள்ளோரால் முடியாது! பூலோகத்தில் உஜ்ஜயினி மாகாளி நகரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆளும் விக்கிரமாதித்தனே தகுதியானவன். சகல சாஸ்திர விற்பன்னன். குறிப்பாக நடனக் கலையில் சிறந்தவன். அவனை இங்கு வரவழைக்க ஏற்பாடு செய்." என்றார்.

*ஹரிகுமார்*

Tuesday, December 17, 2019

விக்கிரமாதித்தன் கதைகள் - 20

முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1

விக்கிரமாதித்தன் கன்னியாபுரிக்குத் தலைநகர் அமைத்த கதை - 1

அண்ணன் பத்ருஹரி துறவறம் பூண்டு கானகம் சென்று விட்டான். அடுத்த தம்பி விக்கிரமாதித்தன் கன்னியாபுரி அரசனானான்.
தன் நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் தானம் செய்தான். அனைவரிடமும் இனிமையாகப் பேசினான். அரசாங்க அலுவலர்கள் அனைவரிடமும் இனிமையாகவும் கண்ணியமாகவும் பேசி அனைவரின் ஒத்துழைப்பையும் பெற்றான்.

அவனுடைய தம்பி பட்டி, அந்நாட்டின் முதல் அமைச்சராக இருந்தான். ஒரு நாள் அவனை அழைத்து, “ நம் நாடு எல்லையளவில் மிகச்சிறியது. எனக்கு ஓர் ஆசை உண்டு. பரந்த இவ்வுலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் நம் பெயர் புகழப்படவேண்டும். ஒரு காத தூரம் நீளமும் ஒருகாத தூரம் அகலமும் கொண்ட தலைநகரம் நமக்கு வேண்டும். அந்நகரில் ஓர் ஆறு பாயவேண்டும். அதன் கரையில் கோவில் இருக்கவேண்டும். அப்படித் தலைநகரம் அமைக்கத் தகுதியான இடம் பார்த்து வரவேண்டும்.நீ அந்தக் காரியத்தைச் செய்வாய்.”

“ஆகட்டும் அண்ணா.” பட்டி புறப்பட்டான்.

பல இடங்கள் அலைந்து திரிந்தான். வசனகிரி என்ற மலையடிவாரத்துக்கு வந்தான். மலையின் அடிவாரத்தில் குணவதி என்னும் ஆறு ஓடிகொண்டிருந்தது. அதன் கரையில் பரந்த இடம் காணப்பட்டது. விக்கிரமாதித்தன் கேட்டாற்போல் அதன் நீள அகலங்கள் ஒரு காத தூரம் கொண்டு அமைந்திருந்தது. மனித நடமாட்டம் இல்லாத இடம்.. சிறியதொரு தடாகமும் அதன் கரையில் பத்திரகாளி அம்மன் கோவில் காணப்பட்டது. அந்தத் தடாகத்தின் கரையில் உள்ள ஆலமரத்தின் கிளையில் ஏழு உரிகள் சக்கர வளையத்தில் காணப்பட்டன. அந்தத் தடாகத்தின் நடுவில் கூர்மையான வேல் ஒன்று நடப்பட்டிருந்தது.

பட்டி அதன் காரணத்தை அறிய ஆவலுற்றான். அந்தத் தடாகத்தில் இறங்கிக் களைப்புத் தீரக் குளித்தான். குளித்தபின் பக்தி சிரத்தையுடன் கோவிலுக்குள் நுழைந்தான். பத்திர காளி அம்மனின் முன்னால் உள்ள ஒரு குத்துக்கல்லில் எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் படித்தான்…

Wednesday, December 11, 2019

*விக்கிரமாதித்தன் கதைகள் - 17*

*முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1*

*பத்ருஹரி தன் மணிமுடி துறந்த கதை - 2*

அந்தணன் ஆனந்தத்துடன் வீட்டுக்கு வந்து முறையாகப் பூஜை செய்து அந்தப் பழத்தைப் புசிக்க ஆயத்தமானான். கனியை எடுத்த அந்தணனுக்குத் திடீரென்று வேறொரு எண்ணம் தோன்றியது.

“அடுத்தவேளை உணவுக்கேக் கஷ்டப்படும் நான் இந்த மாதுளங்கனியை உண்டு என்ன பயன்? அரசனுக்குக் கொடுத்தாலாவது நாட்டுக்குப் பயன் விளையும். என்னுடைய குலத்தொழில் யாசகம் கேட்டுப் பிறரிடம் அண்டி வாழ்வது. நான் இருந்து  என்ன சாதிக்கப்போகிறேன்?

கிடைத்ததையெல்லாம் உண்டு காகம் உயிர் வாழ்வதுபோல வாழ்வதால் என்ன பயன்?

புகழும் சிறப்பும் மாண்பும் உடையவர்கள் வாழும் வாழ்க்கையே மேன்மையுடையது. பிறருக்காக வாழ்பவனே உண்மையில் வாழ்பவனாவான். தனக்காக வாழ்பவன் கீழானவன். பிறரது இன்பத்தில் தன் இன்பத்தைக் கொள்பவனே உயர்ந்தவன். புவிக்குக் கீழிருக்கும் அக்னி தன் பசையைப் போக்கக் கடல்நீரைக் குடிக்கிறது. மேகம் கடுங்கோடையில் புவியின் வெப்பத்தைத் தணிக்க மழையாகப் பொழிகிறது.
குடிகளின் தலைவன் மன்னன் ஆவான். எனவே இந்த நாட்டு மன்னனான பத்ருஹரிக்கே இந்தக் கனியைத் தருவேன்.

அதிகநாள் உயிரோடு இருந்து இந்நாட்டினைப் பரிபாலிக்கவேண்டியது அவனே. பத்ருஹரியே இளமையாக இருக்கத் தகுதி உடையவன்.”

அந்தணன் பத்ருஹரியிடம் கனியைத் தர நிச்சயித்தான்.

மன்னனை நேரில் சந்தித்தான்.

“அரசனே! உன்னை தெய்வங்கள் காக்கட்டும். எங்கும் கிடைக்காத அபூர்வக் கனியை உனக்காகக் கொண்டு வந்துள்ளேன். பூமாதேவியின் அருளால் கிடைத்த கனியாகும். இக்கனியைப் புசிப்பவர்கள் இளமையுடன் நீண்ட நாள் வாழ்வர். இதை உனக்குத் தரத் தீர்மானித்தேன்.”

மன்னன் மகிழ்ச்சி அடைந்தான். அந்தணனுக்கு வேண்டுமளவுக்குப் பொன்னும் பொருளும் நிலமும் கொடுத்து அனுப்பினான். பத்ருஹரி குளித்துமுடித்துப் பூஜை செய்து அந்தக் கனியைப் புசிக்க உட்கார்ந்தான்.
அவனுக்குள் மாற்று யோசனை ஓட ஆரம்பித்தது.

“நான் மட்டும் அமரத்தன்மையுடன் இருந்து எனக்கு மகிழ்ச்சி வராது. இதைப் புசிக்கத் தகுந்தவர் நான் அல்ல! என் மனைவி அனங்கசேனை!”
விக்கிரமாதித்தன் கதைகள் - 18

*முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1*

*பத்ருஹரி தன் மணிமுடி துறந்த கதை - 3*

பத்ருஹரி உடனடியாக அந்தப் பழத்தை எடுத்துக்கொண்டு அனங்கசேனையைப் பார்க்கச் சென்றான்.

“அன்புக் காதலி அனங்கசேனை! இந்தப் பழத்தைப் பார்த்தாயா? ஓர் அந்தணன் எனக்குக் கொடுத்தது. நீண்ட இளமையைத் தரவல்லது. அந்தணன் எனக்குக் கொடுத்ததை நான் உனக்குத் தருகிறேன். இதை நீ உண்பாயாக.”

அனங்கசேனை அப்பழத்தை ஆசையோடு வாங்கிக் கொடுத்தாள். ஆனால் அவள் சாப்பிடவில்லை.

அனங்கசேனைக்கு ஒரு ஆசைநாயகன் இருந்தான்! அவன் அந்த அரண்மனைக் குதிரைகளைப் பராமரிக்கும் குதிரைப் பாகன்! அந்தக் குதிரைப் பாகனிடம் கொடுத்தாள். மாதுளங்கனியின் அபூர்வத் தன்மையை அவனிடம் விளக்கினாள். அவனை உண்ணச் சொன்னாள்.
குதிரைப் பாகன், அரசனின் மனைவியிடம் அன்புகொண்டவனாக நடித்துக்கொண்டிருந்தான். ஆனால் அவனுக்கு உண்மையில் அரண்மனையின் வேலைக்காரியின்மீதே பிரியம் இருந்தது.

காமம் என்னும் மோகத்தின் பாதையை யாராலும் புரிந்துகொள்ளமுடியாது. எல்லோரையும் ஆட்டுவிக்கக்கூடியது. உயர்ந்த குடும்பத்திற்கு மருமகளான அனங்கசேனை, சாதாரண குதிரைப் பாகனிடம் சோரம் போனது விசித்திரம். ஆனால் அவளது மென்மையும் இரசனையும் குதிரைப்பாகனைக் கவரவில்லை! குதிரைப் பாகனைக் கவர்ந்தவள் வேலைக்காரிதான்.

வேலைக்காரியை யாருக்கும் தெரியாமல் சந்தித்து அந்தப் பழத்தைக் கொடுத்து விவரத்தை வேறுமாதிரியாகச் சொன்னான்.

“இந்தப் பழத்தை சாப்பிடுபவர்கள் நீண்ட நாள் இளமையுடன் இருப்பார்களாம். ஒருவர் என்னிடம் கொண்டுவந்து கொடுத்தார்.”

வேலைக்காரி பழத்தை ஆசையுடன் வாங்கிக்கொண்டாள். ஆனால் அவளும் அதை உண்ணவில்லை. அவளுக்கும் ஓர் ஆசைநாயகன் இருந்தான். அரண்மனைப் பசுக்களை மேய்க்கும் இடையன். அவன் அப்பழத்தைப் பெற்றுக்கொண்டு அவனது ஆசைநாயகிக்குக் கொடுத்தான். அவள் அந்த மாட்டுக் கொட்டிலைப் பெருக்கிக் கூட்டிச் சுத்தம் செய்யும் வேலைக்காரி. தான் கொண்டுவந்திருந்த சாணிக்கூடையில் அந்தப் பழத்தைப் போட்டுக்கொண்டு கிளம்பிச் சென்றாள்.

வீதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரில் அரசன் பத்ருஹரி குதிரையில் பரிவாரங்களுடன் வந்துகொண்டிருந்தான். எதிரில் சாணிக்கூடையில் மின்னும் பழத்தைப் பார்த்துவிட்டான். ஆனால் அது அனங்கசேனையிடம் கொடுத்த பழமாக இருக்கும் என்று அவன் கருதவில்லை. அதைப் போன்ற இன்னொரு பழம் என்று நினைத்தான்.

“அந்தப் பழத்தை அனங்கசேனை உண்ணட்டும். நான் இதை உண்டு நீண்ட இளமையுடன் வாழ்வேன்.”

“பெண்ணே! இந்தப் பழத்தை என்னிடம் கொடு. உனக்கு வேண்டியன தருகிறேன்.”

உண்மையில் அவளுக்கு அந்தப் பழத்தின் மகிமை எதுவும் தெரியாது. இடையன் காதலுடன் தந்த பழம் என்று நினைத்தாள். மன்னன் கேட்டவுடன் கொடுத்துவிட்டாள்.

பழத்துடன் அரண்மனைக்கு வந்தவன், அந்தணனை அழைத்துவரச் செய்தான்.

“அந்தணரே, பூமாதேவியின் அருளால் ஒரு பழத்தைத்தான் பெற்றீர்கள்? அப்படியிருக்க, அதைப் போன்றே இன்னொரு பழத்தை ஒரு வேலைக்காரப் பெண்ணிடமிருந்து பெற்றேன். அது எவ்வாறு நிகழ்ந்திருக்கக்கூடும்?”
“மன்னா! அந்தப் பழம் இவ்வுலகில் ஒன்றேதான் உள்ளது. அரசன் என்பவன் நாட்டின் தலைவன் மட்டுமல்ல. குடிமக்களுக்குத் தெய்வம் போன்றவன். மக்களுக்குச் சமமாக நீதி வழங்குபவன். அவனிடம் பொய் சொல்லக்கூடாது. நான் சொன்ன செய்தி சத்தியம்!”

“அதே போன்ற மின்னும் பழத்தை அந்த வேலைக்காரப் பெண்ணுக்கு எப்படிக் கிடைத்தது?” மன்னன் யோசித்தான்.

அந்தணன் கேட்டான்,” அரசனே, நான் உங்களிடம் கொடுத்த  பழம் எங்கே? நீங்கள் உண்டீர்களா?”
*விக்கிரமாதித்தன் கதைகள் - 19*

*முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1*

*பத்ருஹரி தன் மணிமுடி துறந்த கதை - 4*

“நான் அந்தப் பழத்தை உண்ணவில்லை. என் பிரிய மனைவி அனங்கசேனைக்குக் கொடுத்துவிட்டேன்.”

“மன்னா, உங்கள் மனைவியார் அப்பழத்தை உண்டார்களா என்று வினவுங்கள்.”

அனங்கசேனை வந்தாள்.

“அன்பே! நான் கேட்கும் கேள்விக்கு உண்மையைத் தவிர வேறு எதனையும் பேசாதே. நான் கொடுத்த பழத்தை உண்டாயா?

“அது வந்து…”

“இழுக்காதே உண்மையைச் சொல்!” பத்ருஹரி அதட்டினான்.

“உண்மையைச் சொன்னால் என்னை மன்னிப்பேன் என்று வாக்குறுதி கொடுங்கள்! பிறகு சொல்கிறேன்.”

“வாக்குறுதி தந்தேன். என்ன செய்தாய் அந்தப் பழத்தை என்ன செய்தாய்?” மன்னன் பொறுமை இழந்து கத்தினான்.

உண்மையைச் சொல்லிவிடுவது உத்தமம் என்று தோன்றியது அனங்கசேனைக்கு. தன் அந்தரங்க அசிங்கத்தைச் சொன்னாள்.

“அரண்மனையின் குதிரைப் பாகனிடம் கொடுத்துவிட்டேன்..”
“என்ன! வெட்கம் கெட்டவள்!” பத்ருஹரிக்கு உண்மை புரிந்தது. காமத்தின் பிடியில் சிக்கித் தவித்தவளின் நிலை புரிந்தது.

பத்ருஹரி அடுத்து குதிரைக்காரனை விசாரித்தான்.

அடுத்தடுத்து அந்தப் பழம் பயணம் செய்த அசிங்கம் மன்னன்முன் அரங்கேறியது.

அனங்கசேனையிடமிருந்து குதிரைக்காரன்; குதிரைக்காரனிடமிருந்து வேலைக்காரி; வேலைக்காரியிடமிருந்து இடையன்; இடையனிடமிருந்து, சாணம் அள்ளுபவள், பழம் பயணித்த பாதை.

பத்ருஹரி மனம் வெறுத்துப்போனான். அரசரின் மனைவி தனது இச்சைக்காக குதிரைக்காரனிடம் மோகம் கொண்டாள். அழகும் இளமையும் என்னதான் மனத்தைக் கவர்ந்தாலும் அவற்றின்மீது ஒருவன் கொள்ளும் பிரேமை அர்த்தமில்லாமல் போகும். மன்மதன் நினைப்பதே சமூக ஒழுங்குகளைத் தாண்டியும் நிகழ்கிறது. கட்டிய மனைவி என்றாலும் அவளது மனத்தை அறியமுடியாது என்பதே உண்மை.

தாவிச் செல்லும் குரங்கு, மேகங்களின் இடிமுழக்கம், பெண்களின் மன ஆழம், திருமகள் தரும் செல்வம் ஆகியவற்றை யாரே அறிய இயலும்! இவற்றை சாதாரண மனிதனால் எப்படி உணரமுடியும்!

அலைபாயும் மனத்தை உடையவளைக் கட்டி ஆள்வதைவிட வனவிலங்கினை வேட்டையாடுதல் எளிது. வானத்தில் பறக்கும் பறவையைப் பிடித்தல் எளிது. கடலின் ஆழத்தில் நீந்தும் மீனைப் பிடித்தல் எளிது.

மன்மதனைப் போன்ற அழகுள்ள கணவன் கிடைத்தும் மற்றொரு ஆடவனை விரும்பிய பெண்கள் உலகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர். ஆயகலைகளில் வல்லவனாயிருந்தாலும் ஒரு பெண் நினைத்தால் ஏமாற்றிவிட முடிகிறது.

குடும்ப வாழ்க்கையைவிட துறவறமே மேலானது. இவளுக்குத் தண்டனை வழங்குவதால் எனக்கு ஒன்றும் கிடைத்துவிடப் போவதில்லை.

இன்று என் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்தேன். இதுவல்ல எனக்கான பாதை! என் மனம் பரந்த உலக நாட்டம் இழந்து இறையை நாடுகிறது. இனி நாடாளும் மன்னனாக இருக்க எனக்குத் தகுதி கிடையாது.

பலவாறு சிந்தித்த பத்ருஹரி அரசன், தனது ஆட்சி அதிகாரத்தைத் தன்  தம்பி விக்கிரமாதித்தனிடம் ஒப்படைத்தான். அரசபதவியைத் துறந்து, துறவுக்கோலம் பூண்டு காட்டிற்குச்சென்றான்.

பத்ருஹரியின் அபரிமித மோக நாட்டமே அவனைத் துறவை நோக்கித் தள்ளிவிட்டது. மோகத்தின் பாதை அவனைத் துறவை நோக்கித் தள்ளிவிட்டது.

அடுத்து விக்கிரமாதித்தன்…!

Thursday, December 5, 2019

*விக்கிரமாதித்தன் கதைகள் - 16*

*முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1*

*சந்திரவர்ணன் கதை - 4*

சந்திரவரணன் சிறந்த முறையில் அரசாண்டு முதுமைக் காலத்தை அடைந்தான். அவனது கடைசிக் காலத்தை அடைந்தான். இறுதி நேரத்தில் அவனது நான்கு பிள்ளைகளும் அவனைச் சுற்றி நின்றிருந்தனர். பத்ருஹரியைப் பார்த்துக் கவலையுடன் அழுதான். தந்தையைப் போலவே சாஸ்திரம் அறிந்த பத்ருஹரி,” கவலைகொள்ளாதீர்கள் தந்தையே! எனக்குத் திருமணம் நடந்து என்மூலம் உங்கள் சந்ததி விருத்தியானால் உங்களுக்கு நற்கதி கிட்டாது  என்றுதானே அச்சப்படுகிறீர்கள்? என் மனைவிமூலம் உங்களுக்குச் சந்ததி உருவாகாது என்று வாக்களிக்கிறேன்.” என்றான்.

பிறகு மற்ற பிள்ளைகளிடம், “ மகன்களே, பத்ருஹரியின் அம்மா தாசியினத்தைச் சேர்ந்தவள். அவளால்தான் உங்கள் தாய்களை மனைவிகளானார்கள். பத்ருஹரியையே எனக்குப் பிறகு அரசனாக நியமிக்கிறேன். அவனுக்கு உறுதுணையாகா நீங்கள் மூவரும் இருக்கவேண்டும்.” என்று கூறினான்.

சந்திரவர்ணனின் மறைவுக்குப் பின் பத்ருஹரி அரசனான்.

சந்திரவர்ணனின் அந்தணகுல மனைவியான கல்யாணியின் மகனான வல்லபரிஷி எல்லோரையும்விட மூத்தவன். அவன் மூவரையும் வாழ்த்திவிட்டு அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு காட்டுக்குச் சென்றான். அங்கு இறைவனை நோக்கித் தவம் செய்து தன் பிறவிக் கடனைக் கழிக்கலானன்.

உலகத்தின்மீது பற்றை ஒருவன் வெறுத்தாலும், அதை ஒருவன் அனுபவித்தால் மட்டுமே தீரும்; சேரக்கூடாத பெண்ணைச் சேர்ந்தாலும் மதச் சடங்குகள் அவளுக்குப் பிறந்த வாரிசு அரியணை ஏறத் தடை செய்யும் என்பவற்றை சந்திரவர்ணனின் வாழ்வு இவ்வுலகுக்கு எடுத்துக்காட்டியது. அரசனானவன் தன் வாரிசுகள்மீது கவனம் கொள்ளாமல் மக்கள்மீதே கவனம் கொள்ளவேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தியது பத்ருஹரி அரியணை ஏறிய விதம். அந்தணனுக்கு அரசாளும் உரிமை இருந்தாலும் அவன் தவம் இயற்றுவதே சிறப்பு என்பதை வல்லபரிஷி காட்டிற்குச் சென்று தவம் இயற்றியது காட்டியது.

முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1

*பத்ருஹரி தன் மணிமுடி துறந்த கதை - 1*

பத்ருஹரி அரசன் மிகச் சிறந்த மன்னனாக விளங்கினான். கன்னியாபுரி நகரம் அவனது ஆட்சியில் பொன்பொலிந்து விளங்கிற்று. அவனது இரு தம்பிகளான விக்கிரமாதித்தனும் பட்டியும் அவன் மனமறிந்து உறுதுணையாக இருந்தனர். கலைமனம் கொண்ட அரசன் பத்ருஹரிக்குப் பெண்ணாசையும் அதிகமிருந்தது. 360 அழகிய பெண்களைத் திருமணம் செய்துகொண்டு உல்லாச வாழ்க்கையை வாழலானன். எவ்வாறாயினும் தனது தந்தைக்குக் கொடுத்தவாறு தனக்கு வாரிசு மட்டும் உண்டாகாத்வாறு பார்த்துக்கொண்டான்.

அவனுடைய அந்தப்புர நாயகியருள் அரம்பையைப் போன்ற அழகுடன் உள்ள அனங்கசேனையே அவனுக்கு மிகவும் பிரியமானவள். அவளையே பட்டத்து அரசியாக்கினான்.

இவ்வாறு நாள்கள் கழிகையில் அவனது நகரத்தில் வாழ்ந்து வந்த வயதான அந்தணன் ஒருவன் பூமாதேவியை நோக்கித் தவம் புரிந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த பூமாதேவி அந்தணனுக்குக் காட்சி அளித்தாள். வேண்டும் வரத்தையும் கேட்டாள்.

“தாயே! எனக்கு இளமை வரம் வேண்டும். இளமை கிடைத்தால் எனக்கு வேண்டியவற்றை நானே பெற்றுக்கொள்ள முடியும்.”

பூமாதேவி மாதுளங்கனியொன்றை அவனிடம் கொடுத்தாள்.

“இந்தப் பழத்தை உண்டால் நீ விரும்பிய இளமை கிடைக்கும்.”

Tuesday, December 3, 2019

*விக்கிரமாதித்தன் கதைகள் - 15*

*முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1*

சந்திரவர்ணன் கதை - 3

கன்னியாபுரி நகரத்து அரண்மனையில் அரசர் வீற்றிருந்தார். சந்திரவர்ணனும் அலங்காரவல்லியும் தாங்கள் வந்த விவரத்தைக் கூறினர்.

அரசனுடைய புரோகிதர் இதற்கு விடை அளித்தார்.
"அந்தண குலத்தைச் சேர்ந்தவன் வேறு வர்ணத்தைச் சேர்ந்தவளை மணக்க வேண்டும் எனில், ஒரே முகூர்த்தத்தில் நான்கு வர்ணத்தைச் சேர்ந்த பெண்களையும் மணக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது."

சந்திர வர்ணன் யோசித்தான். ஒருத்தியை மணக்கவே வழியில்லை! நான்கு குலப் பெண்களுக்கு எங்கே போவது?

சந்திரவர்ணனின் கல்வியையும் வித்தையையும் அரசன் தகுந்த ஆச்சாரியர்களைக் கொண்டு சோதித்துத் திருப்தியடைந்தான்.

பின் அவையோர் நடுவில் அரசன் சொன்னான்.
"புரோகிதரே, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. என்னைப் பொருத்தவரையில் சந்திர வர்ணனின் தோற்றத்திலும் திறமையிலும் பூரண திருப்தி இருக்கிறது. இவனுக்கு நாலுவகைப் பெண்களையும் திருமணம் செய்விக்கலாம் எனக் கருதுகிறேன். எனது மகள் சித்திரரேகையையும் உங்களுடைய மகள் கல்யாணியையும் திருமணம் செய்து வைக்கலாம்."

"வைசிய குலப் பெண்?"

"இதோ நம் அரண்மனையில் வீற்றிருக்கும் சோமசேகரச் செட்டியாரின் மகள் கோமளாங்கியையும் இவனுக்குத் திருமணம் செய்விக்கலாம்."

எல்லோருக்கும் மன்னர் சொன்னதில் மகிழ்ச்சி அடைந்தனர்.

சந்திரவர்ணன் நல்லதொரு முகூர்த்த நேரத்தில் தாசி அலங்கார வல்லியுடன் மற்ற மூவருடன் திருமணம் செய்து கொண்டான்.

இவர்கள் அனைவரும் அரண்மனையில் சுகவாழ்வு வாழ்ந்து வந்தனர். இவர்கள் அனைவருக்கும் குழந்தைகள் பிறந்தன. புரோகிதரின் மகளுக்கு வல்லவரிஷி என்ற மகன் பிறந்தான். மன்னர் மகளுக்கு விக்கிரமாதித்தன் என்ற மகன் பிறந்தான். வைசியரின் மகளுக்கு பட்டி என்ற மகன் பிறந்தான். அலங்காரவல்லிக்கு பத்ருஹரி என்ற மகன் பிறந்தான்.

நான்கு புதல்வர்களும் வளர்ந்து வரும் வேளையில், ஆண் வாரிசு இன்றி கன்னியாபுரி அரசன் இறந்தான். மருமகனான சந்திரவர்ணன் பட்டம் சூட்டிக் கொண்டு அரசனான்.

Monday, December 2, 2019

274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு 3/12/2019 செவ்வாய்

நண்பர்களே !

274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன்.
காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது.
எண் - கோயில் - இருப்பிடம் - போன்
சென்னை மாவட்டம்
01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் - பாடி - 044 - 2654 0706.
02. மாசிலாமணீஸ்வரர் - வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ., - 044 - 2637 6151.
03. கபாலீஸ்வரர் - மயிலாப்பூர் - 044 - 2464 1670.
04. மருந்தீஸ்வரர் - திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை - 044 - 2441 0477.
காஞ்சிபுரம் மாவட்டம்
05. ஏகாம்பரநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 044 - 2722 2084.
06. திருமேற்றளீஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 98653 55572, 99945 85006.
07. ஓணகாந்தேஸ்வரர் - ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சுப்பேட்டை - 98944 43108.
08. கச்சி அனேகதங்காவதேஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.மீ., - 044-2722 2084.
09. சத்யநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., - 044 - 2723 2327, 2722 1664.
10. திருமாகறலீஸ்வரர் - திருமாகறல், காஞ்சிபுரத்திலிருந்து கீழ்ரோடு வழியாக 16 கி.மீ. - 94435 96619.
11. தெய்வநாயகேஸ்வரர் - எலுமியன்கோட்டூர். காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ., - 044 - 2769 2412, 94448 65714.
12. வேதபுரீஸ்வரர் - திருவேற்காடு. சென்னை கோயம்பேட்டிலிருந்து பூந்தமல்லி வழியில் 10 கி.மீ - 044-2627 2430, 2627 2487.
13. கச்சபேஸ்வரர் - திருக்கச்சூர். செங்கல்பட்டில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் வழியாக 12 கி.மீ., - 044 - 2746 4325, 93811 86389.
14. ஞானபுரீஸ்வரர் - திருவடிசூலம். செங்கல்பட்டில் இருந்து 9 கி.மீ., - 044 - 2742 0485, 94445 23890.
15. வேதகிரீஸ்வரர் - திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டிலிருந்து 17 கி.மீ., - 044 - 2744 7139, 94428 11149.
16. ஆட்சிபுரீஸ்வரர் - அச்சிறுபாக்கம். செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. (மேல்மருவத்தூர் அருகில்) - 044 - 2752 3019, 98423 09534.
திருவள்ளூர் மாவட்டம்
17. திரிபுராந்தகர் - கூவம், திருவள்ளூரில் இருந்து 17 கி.மீ., - 94432 53325.
18. வடாரண்யேஸ்வரர் - திருவாலங்காடு. திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் வழியில் 16 கி.மீ.,.
19. வாசீஸ்வரர் - திருப்பாசூர். திருவள்ளூரில் இருந்து 5 கி.மீ., - 98944 86890.
20. ஊன்றீஸ்வரர் - பூண்டி. திருவள்ளூரில் இருந்து 12 கி.மீ., - 044 - 2763 9725,
21. சிவாநந்தீஸ்வரர் - திருக்கண்டலம். சென்னை - பெரியபாளையம் சாலையில் 40 கி.மீ., - 044 - 2762 9144, 99412 22814.
22. ஆதிபுரீஸ்வரர் - திருவொற்றியூர். - 044 - 2573 3703.
வேலூர் மாவட்டம்
23. வில்வநாதேஸ்வரர் - திருவல்லம். வேலூர்- ராணிப்பேட்டை வழியில் 16 கி.மீ., - 0416-223 6088.
24. மணிகண்டீஸ்வரர் - திருமால்பூர். காஞ்சிபுரத்திலிருந்து 22 கி.மீ., - 04177 - 248 220, 93454 49339.
25. ஜலநாதீஸ்வரர் - தக்கோலம். வேலூரில் இருந்து 80 கி.மீ., - 04177 - 246 427.
திருவண்ணாமலை மாவட்டம்
26. அண்ணாமலையார் - திருவண்ணாமலை. - 04175 - 252 438.
27. வாலீஸ்வரர் - குரங்கணில்முட்டம். காஞ்சிபுரம்- வந்தவாசி ரோட்டில் உள்ள தூசி வழியாக 10 கி.மீ., - 99432 95467.
28. வேதபுரீஸ்வரர் - செய்யாறு. திருவண்ணாமலையிலிருந்து 105 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ., - 04182 - 224 387.
29. - தாளபுரீஸ்வரர் - திருப்பனங்காடு.காஞ்சிபுரத்தில் இருந்து 16 கி.மீ., - 044 - 2431 2807, 98435 68742.
கடலூர் மாவட்டம்
30. திருமூலநாதர் - சிதம்பரம். (நடராஜர் கோயில்) - 94439 86996.
31. பாசுபதேஸ்வரர் - திருவேட்களம். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம். - 98420 08291, 98433 88552.
32. உச்சிநாதர் - சிவபுரி.சிதம்பரம்- கவரப்பட்டு வழியில் 3 கி.மீ., - 98426 24580.
33. பால்வண்ணநாதர் - திருக்கழிப்பாலை, சிதம்பரம்- கவரப்பட்டு (பைரவர் கோயில்)வழியில் 3 கி.மீ., - 98426 24580.
34. பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் - ஓமாம்புலியூர். சிதம்பரத்தில் இருந்து 3 கி.மீ. - 04144 - 264 845.
35. பதஞ்சலீஸ்வரர் - கானாட்டம்புலியூர், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., - 04144 - 208 508, 93457 78863.
36. சவுந்தர்யேஸ்வரர் - திருநாரையூர்.சிதம்பரம்- காட்டுமன்னார் கோயில் வழியில் 18 கி.மீ., - 94425 71039, 94439 06219.
37. அமிர்தகடேஸ்வரர் - மேலக்கடம்பூர். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., - 93456 56982.
38. தீர்த்தபுரீஸ்வரர் - திருவட்டத்துறை.விருத்தாசலத்தில் இருந்து 22கி.மீ., - 04143 - 246 467.
39. பிரளயகாலேஸ்வரர் - பெண்ணாடம். விருத்தாசலத்திலிருந்து 18 கி.மீ., திட்டக்குடியிலிருந்து 12 கி.மீ., - 04143 - 222 788, 98425 64768.
40. நர்த்தன வல்லபேஸ்வரர் - திருக்கூடலையாற்றூர்.சிதம்பரத்திலிருந்து சேத்தியாதோப்பு வழியாக 20 கி.மீ., - 04144 - 208 704.
41. திருக்குமாரசாமி - ராஜேந்திர பட்டினம். விருத்தாசலம் (சுவேதாரண்யேஸ்வரர்) - ஜெயங்கொண்டம் ரோட்டில் 12 கி.மீ., - 04143 - 243 533, 93606 37784.
42. சிவக்கொழுந்தீஸ்வரர் - தீர்த்தனகிரி. கடலூரில் இருந்து 18 கி.மீ. - 94434 34024.
43. மங்களபுரீஸ்வரர் - திருச்சோபுரம். கடலூர்- சிதம்பரம் ரோட்டி<ல் 13 கி.மீ., ஆலப்பாக்கம், இங்கு பிரியும் ரோட்டில் 2கி.மீ., - 94425 85845.
44. வீரட்டானேஸ்வரர் - திருவதிகை. கடலூரில் இருந்து 24 கி.மீ., தூரத்திலுள்ள பண்ருட்டி நகர எல்லை - 98419 62089.
45. விருத்தகிரீஸ்வரர் - விருத்தாச்சலம். சென்னை - மதுரை ரோட்டில் உளுந்தூர் பேட்டையிலிருந்து தெற்கே 23 கி.மீ., - 04143 - 230 203.
46. சிஷ்டகுருநாதேஸ்வரர் - திருத்தளூர். கடலூரில் இருந்து பண்ருட்டி வழியாக 32 கி.மீ., - 04142 - 248 498, 94448 07393.
47. வாமனபுரீஸ்வரர் - திருமாணிக்குழி. கடலூரிலிருந்து பாலூர் வழியாக 15 கி.மீ., - 04142 - 224 328.
48. பாடலீஸ்வரர் - திருப்பாதிரிபுலியூர். கடலூர் நகருக்குள், - 04142 - 236 728.
விழுப்புரம் மாவட்டம்
49. பக்தஜனேஸ்வரர் - திருநாவலூர். பண்ருட்டி-உளுந்தூர் பேட்டை வழியில் 12 கி.மீ., - 94861 50804, 04149 - 224 391.
50. சொர்ணகடேஸ்வரர் - நெய்வணை. உளுந்தூர்பேட்டையில் இருந்து 15 கி.மீ., - 04149 - 291 786, 94862 82952.
51. வீரட்டேஸ்வரர் - கீழையூர். (திருக்கோவிலூர் அருகில்) விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., - 93456 60711.
52. அதுல்யநாதேஸ்வரர் - அறகண்டநல்லூர். விழுப்புரத்திலிருந்து 35 கி.மீ., - 99651 44849.
53. மருந்தீசர் - டி. இடையாறு. விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., - 04146 - 216 045, 94424 23919.
54. கிருபாபுரீஸ்வரர் - திருவெண்ணெய்நல்லூர். விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ., - 93456 60711.
55. சிவலோகநாதர் - கிராமம். விழுப்புரத்திலிருந்து அரசூர் வழி 14 கி.மீ. - 04146 - 206 700.
56. பனங்காட்டீஸ்வரர் - பனையபுரம். விழுப்புரத்திலிருந்து 12 கி.மீ., - 99420 56781.
57. அபிராமேஸ்வரர் - திருவாமத்தூர். விழுப்புரம் -செஞ்சி ரோட்டில் 6 கி.மீ., - 04146 - 223 379, 98430 66252.
58. சந்திரமவுலீஸ்வரர் - திருவக்கரை. திண்டிவனத்திலிருந்து 22 கி.மீ., - 0413 - 268 8949.
59. அரசலீஸ்வரர் - ஒழிந்தியாம்பட்டு. புதுச்சேரி- திண்டிவனம்- வழியில் 13 கி.மீ., 04147 - 235 472.
60. மகாகாளேஸ்வரர் - இரும்பை. புதுச்சேரி - திண்டிவனம் வழியில் 12 கி.மீ., - 0413 - 268 8943, 98435 26601.
நாமக்கல் மாவட்டம்
61. அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு. நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ., - 04288 - 255 925, 93642 29181.
ஈரோடு மாவட்டம்
62. சங்கமேஸ்வரர் - பவானி. ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., - 04256 - 230 192, 98432 48588.
63. மகுடேஸ்வரர், - கொடுமுடி,ஈரோடு - கரூர் ரோட்டில் 47 கி.மீ., - 04204 - 222 375.
திருப்பூர் மாவட்டம்
64. அவிநாசி ஈஸ்வரர் - அவிநாசி. திருப்பூர்-கோவை ரோட்டில் 13 கி.மீ., - 04296 - 273 113, 94431 39503.
65. திருமுருகநாதர் - திருமுருகன்பூண்டி. திருப்பூர்- கோவை ரோட்டில் 8 கி.மீ., கோவையில் இருந்து 43 கி.மீ., - 04296 - 273 507.
திருச்சி மாவட்டம்
66. சத்தியவாகீஸ்வரர் - அன்பில். திருச்சியிலிருந்து 30 கி.மீ., - 0431 - 254 4927.
67. ஆம்ரவனேஸ்வரர் - மாந்துறை. திருச்சியிலிருந்து லால்குடி வழி 15 கி.மீ., - 99427 40062, 94866 40260.
68. ஆதிமூலேஸ்வரர் - திருப்பாற்றுறை.திருச்சியில் இருந்து திருவானைக்காவல் வழி கல்லணைரோட்டில் 13 கி.மீ. - 0431 - 246 0455.
69. ஜம்புகேஸ்வரர் - திருவானைக்காவல். திருச்சியில் இருந்து 8 கி.மீ., - 0431 - 223 0257.
70. ஞீலிவனேஸ்வரர் - திருப்பைஞ்ஞீலி. திருச்சியில் இருந்து 23 கி.மீ., - 0431 - 256 0813.
71. மாற்றுரைவரதர் - திருவாசி. திருச்சி- சேலம் ரோட்டில் 13 கி.மீ., - 94436 - 92138.
72. மரகதாசலேஸ்வரர் - ஈங்கோய்மலை.திருச்சியில் இருந்து முசிறி வழியாக 50 கி.மீ., - 04326 - 262 744, 94439 50031.
73. பராய்த்துறைநாதர் - திருப்பராய்த்துறை. திருச்சி- கரூர் ரோட்டில்15 கி.மீ. - 99408 43571.
74. உஜ்ஜீவநாதர் - உய்யக்கொண்டான் திருமலை. திருச்சி - வயலூர் வழியில் 7 கி.மீ., - 94431 50332, 94436 50493.
75. பஞ்சவர்ணேஸ்வரர் - உறையூர்.திருச்சி கடைவீதி பஸ் ஸ்டாப் அருகில் - 0431 - 276 8546, 94439 19091.
76. தாயுமானவர் - திருச்சி. மலைக்கோட்டை - 0431 - 270 4621, 271 0484.
77. எறும்பீஸ்வரர் - திருவெறும்பூர்.திருச்சி- தஞ்சாவூர் ரோட்டில் 10 கி.மீ. - 98429 57568.
78. திருநெடுங்களநாதர் - திருநெடுங்குளம். திருச்சி-துவாக்குடியிலிருந்து 3 கி.மீ. - 0431 - 252 0126.
அரியலூர் மாவட்டம்
79. வைத்தியநாதசுவாமி - திருமழபாடி. அரியலூரிலிருந்து 28 கி.மீ., - 04329 -292 890, 97862 05278.
80. ஆலந்துறையார் - கீழப்பழுவூர். அரியலூர்- தஞ்சாவூர் வழியில் 12 கி.மீ. - 99438 82368.
கரூர் மாவட்டம்
81. ரத்தினகிரீஸ்வரர் - அய்யர் மலை. கரூரில் இருந்து குளித்தலை வழியாக 40 கி.மீ., - 04323 - 245 522.
82. கடம்பவனேஸ்வரர் - குளித்தலை. கரூரில் இருந்து 35 கி.மீ., - 04323 - 225 228
83. கல்யாண விகிர்தீஸ்வரர் - வெஞ்சமாங்கூடலூர்.கரூரிலிருந்து ஆறுரோடு பிரிவு வழியாக 21 கி.மீ., - 04324 - 262 010, 99435 27792.
84. பசுபதீஸ்வரர் - கரூர் - 04324 - 262 010.
புதுக்கோட்டை மாவட்டம்
85. விருத்தபுரீஸ்வரர் - அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ., - 04371 - 239 212
தஞ்சாவூர் மாவட்டம்
86. பசுபதீஸ்வரர் - பந்தநல்லூர்.கும்பகோணம்- சென்னை ரோட்டில் 30 கி.மீ., - 98657 78045. 0435 - 2450 595.
87. அக்னீஸ்வரர் - கஞ்சனூர். கும்பகோணம்- மயிலாடுதுறை - 0435 - 247 3737.
88. கோடீஸ்வரர் - திருக்கோடிக்காவல்.கும்பகோணத்திலிருந்து 18 கி.மீ., - 94866 70043.
89. பிராணநாதேஸ்வரர் - திருமங்கலக்குடி. கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ., (சூரியனார்கோவில் அருகில்) - 0435 - 247 0480.
90. அருணஜடேஸ்வரர் - திருப்பனந்தாள். கும்பகோணம்- சென்னை ரோட்டில் 15 கி.மீ., - 94431 16322, 0435 - 245 6047.
91. பாலுகந்தநாதர் - திருவாய்பாடி. கும்பகோணம்-சென்னை வழியில் 18 கி.மீ., - 94421 67104.
92. சத்தியகிரீஸ்வரர் - சேங்கனூர். கும்பகோணம்-சென்னை ரோட்டில் 16 கி.மீ., (திருப்பனந்தாள் அருகில்) - 93459 82373, 0435 - 2457 459.
93. யோகநந்தீஸ்வரர் - திருவிசநல்லூர். கும்பகோணம்- சூரியனார்கோவில் ரோடு (வேப்பத்தூர் வழி)8 கி.மீ.,. - 0435 - 200 0679, 94447 47142.
94. கற்கடேஸ்வரர் - திருந்துதேவன்குடி. கும்பகோணம் - சூரியனார்கோவில் வழியில் 11 கி.மீ., - 99940 15871, 0435 - 200 0240.
95. கோடீஸ்வரர் - கொட்டையூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 5 கி.மீ., - 0435 - 245 4421.
96. எழுத்தறிநாதர் - இன்னம்பூர்.கும்பகோணம்- சுவாமிமலை ரோட்டில் புளியஞ்சேரியிலிருந்து 2 கி.மீ., - 96558 64958, 0435 - 200 0157.
97. சாட்சி நாதேஸ்வரர் - திருப்புறம்பியம்.கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. (இன்னம்பூர் அருகில்) - 94446 26632, 0435 - 245 9519.
98. விஜயநாதேஸ்வரர் - திருவிஜயமங்கை. கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ., (திருவைகாவூர் அருகில்) - 0435 - 294 1912, 94435 86453.
99. வில்வ வனேஸ்வரர் - திருவைகாவூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 17 கி.மீ., - 94435 86453, 96552 61510.
100. தயாநிதீஸ்வரர் - வடகுரங்காடுதுறை. கும்பகோணம் - திருவையாறு ரோட்டில் 20 கி.மீ. - 04374 - 240 491, 244 191.
101. ஆபத்சகாயர் - திருப்பழனம். தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., தூரத்திலுள்ள திருவையாறு அருகில் - 04362 - 326 668.
102. ஐயாறப்பர் - திருவையாறு. தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., - 0436 - 2260 332.
103. நெய்யாடியப்பர் - தில்லைஸ்தானம். திருவையாறிலிருந்து 2 கி.மீ., - 04362 - 260 553.
104. வியாக்ரபுரீஸ்வரர் - திருப்பெரும்புலியூர். திருவையாறிலிருந்து தில்லைஸ்தானம் வழியே 5 கி.மீ. - 94434 47826, 94427 29856.
105. செம்மேனிநாதர் - திருக்கானூர்(விஷ்ணம்பேட்டை). திருவையாறில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வழியே 30 கி.மீ., - 04362 - 320 067, 93450 09344.
106. அக்னீஸ்வரர் - திருக்காட்டுப்பள்ளி.திருவையாறிலிருந்து 25 கி.மீ., - 94423 47433.
107. ஆத்மநாதேஸ்வரர் - திருவாலம் பொழில். தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 17 கி.மீ., - 04365 - 284 573.
108. புஷ்பவனேஸ்வரர் - தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 20 கி.மீ., - 94865 76529.
109. பிரம்மசிரகண்டீசுவரர் - கண்டியூர். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு வழியாக 20 கி.மீ., - 04362 - 261 100, 262 222.
110. சோற்றுத்துறை நாதர் - தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 19 கி.மீ., - 99438 84377.
111. வேதபுரீஸ்வரர் - திருவேதிக்குடி. தஞ்சாவூரில் இருந்து கண்டியூர் வழியாக 14 கி.மீ., - 93451 04187, 04362 - 262 334.
112. பசுபதீஸ்வரர் - பசுபதிகோயில். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., - 97914 82102.
113. வசிஷ்டேஸ்வரர் - தென்குடித்திட்டை. தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ., - 04362 - 252 858.
114. கரவாகேஸ்வரர் - கரப்பள்ளி (அய்யம்பேட்டை). தஞ்சாவூர் - கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ.,
115. முல்லைவனநாதர் - திருக்கருகாவூர். தஞ்சாவூரில் இருந்து 22 கி.மீ., - 04374 - 273 502, 273 423.
116. பாலைவனேஸ்வரர் - பாபநாசம். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 12 கி.மீ., - 94435 24410.
117. கல்யாண சுந்தரேஸ்வரர் - நல்லூர் (வாழைப்பழக்கடை) தஞ்சாவூரில் (பஞ்சவர்ணேஸ்வரர்) இருந்து பாபநாசம் வழியாக 15 கி.மீ., - 93631 41676.
118. பசுபதீஸ்வரர் - ஆவூர் (கோவந்தகுடி).கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் வழியாக 15 கி.மீ., - 94863 03484.
119. சிவக்கொழுந்தீசர் - திருச்சத்திமுற்றம். பட்டீஸ்வரத்திலிருந்து 6 கி.மீ., - 94436 78575, 04374 - 267 237.
120. பட்டீஸ்வரர் - பட்டீஸ்வரம், கும்பகோணத்தில் இருந்து 2 கி.மீ., - 0435 - 241 6976.
121. சோமநாதர் - கீழபழையாறை வடதளி.கும்பகோணம் - ஆவூர் ரோட்டிலுள்ள முழையூர் அருகில் - 98945 69543.
122. திருவலஞ்சுழிநாதர் - திருவலஞ்சுழி.சுவாமிமலையில் இருந்து 1கி.மீ., - 0435 - 245 4421, 245 4026.
123. கும்பேஸ்வரர் - கும்பகோணம். - 0435 - 242 0276.
124. நாகேஸ்வரர் - கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலுக்கு கிழக்கே - 0435 - 243 0386.
125. சோமேஸ்வரர் - கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலை அடுத்துள்ள பொற்றாமரைக்குளக் கரை - 0435 - 243 0349.
126. நாகநாதர் - திருநாகேஸ்வரம். கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ., - 94434 89839, 0435 - 246 3354,
127. மகாலிங்க சுவாமி - திருவிடைமருதூர். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 9 கி.மீ., 0435 - 246 0660.
128. ஆபத்சகாயேஸ்வரர் - ஆடுதுறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 14 கி.மீ., - 94434 63119, 94424 25809.
129. நீலகண்டேஸ்வரர் - திருநீலக்குடி. கும்பகோணம் - காரைக்கால் ரோட்டில் 15 கி.மீ., - 94428 61634. 0435 - 246 0660.
130. கோழம்பநாதர் - திருக்குளம்பியம். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் திருவாவடுதுறையிலிருந்து 5 கி.மீ., - 04364 - 232 055, 232 005.
131. சிவானந்தேஸ்வரர் - திருப்பந்துறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் (எரவாஞ்சேரி வழி) 12 கி.மீ., - 94436 50826, 0435 - 244 8138.
132. சித்தநாதேஸ்வரர் - திருநறையூர் (நாச்சியார்கோவில்).கும்பகோணம்- திருவாரூர் ரோட்டில் 10 கி.மீ., - 0435 - 246 7343, 246 7219.
133. படிக்காசுநாதர் - அழகாபுத்தூர். கும்பகோணம்- திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., - 99431 78294, 0435 - 246 6939.
134. அமிர்தகடேஸ்வரர் - சாக்கோட்டை. கும்பகோணம்-மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., - 98653 06840, 0435 - 241 4453.
135. சிவகுருநாதசுவாமி - சிவபுரம். கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. சாக்கோட்டையில் இருந்து 2 கி.மீ., - 98653 06840.
136. சற்குணலிங்கேஸ்வரர் - கருக்குடி (மருதாநல்லூர்).கும்பகோணம் - மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., - 99435 23852
137. சாரபரமேஸ்வரர் - திருச்சேறை. கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ.,
138. ஞானபரமேஸ்வரர் - திருமெய்ஞானம் (நாலூர் திருமயானம்). கும்பகோணத்தில் இருந்து திருச்சேறை வழியாக 17 கி.மீ., - 94439 59839.
139. ஆபத்சகாயேஸ்வரர் - ஆலங்குடி. திருவாரூர்-(குரு ஸ்தலம்) மன்னார்குடி ரோட்டில் 30 கி.மீ., - 04374 - 269 407.
140. பாஸ்கரேஸ்வரர் - பரிதியப்பர்கோவில். தஞ்சாவூர் -பட்டுக்கோட்டை ரோட்டில் 17 கி.மீ. (உளூர் அருகில்) - 0437 - 256 910.
திருவாரூர் மாவட்டம்
141. தியாகராஜர் - திருவாரூர். - 04366 - 242 343.
142. அசலேஸ்வரர் - திருவாரூர். தியாகராஜர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் - 04366 - 242 343.
143. தூவாய் நாதர் - திருவாரூர். தியாகராஜர் கோயில் கீழரத வீதி - 99425 40479, 04366 - 240 646.
144. பதஞ்சலி மனோகரர் - விளமல். திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., - 98947 81778, 94894 79896.
145. கரவீரநாதர் - கரைவீரம். திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 8 கி.மீ. தூரத்திலுள்ள வடகண்டம் பஸ் ஸ்டாப் - 04366 - 241 978.
146. வீரட்டானேஸ்வரர் - திருவிற்குடி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் தங்கலாஞ்சேரி அருகில். - 94439 21146.
147. வர்த்தமானீஸ்வரர் - திருப்புகலூர். திருவாரூரில் இருந்து சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ., - 94431 13025, 04366 - 292 300.
148. ராமநாதசுவாமி - திருக்கண்ணபுரம். திருவாரூரில் இருந்து 26 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) - 94431 13025, 04366 - 292 300.
149. கணபதீஸ்வரர் - திருச்செங்காட்டங்குடி. திருவாரூரில் இருந்து 29 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) - 94431 13025, 04366 - 270 278.
150. கேடிலியப்பர் - கீழ்வேளூர். திருவாரூர்- நாகப்பட்டினம் ரோட்டில் 35 கி.மீ. - 04366 - 276 733.
151. தேவபுரீஸ்வரர் - தேவூர். நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி வழியில் 18 கி.மீ., - 94862 78810, 04366 - 276 113.
152. திருநேத்திரநாதர் - திருப்பள்ளி முக்கூடல். திருவாரூரிலிருந்து பள்ளிவாரமங்கலம் வழியாக 6 கி.மீ., - 98658 44677, 04366 - 244 714.
153. பசுபதீஸ்வரர் - திருக்கொண்டீஸ்வரம். திருவாரூரில் இருந்து நன்னிலம் வழியாக 18 கி.மீ., - 04366 - 228 033.
154. சவுந்தரேஸ்வரர் - திருப்பனையூர். திருவாரூரில் இருந்து ஆண்டிப்பந்தல் வழியாக 12 கி.மீ., - 04366 - 237 007.
155. ஐராவதீஸ்வரர் - திருக்கொட்டாரம். கும்பகோணம் (நெடுங்காடு வழி) - காரைக்கால் ரோட்டிலுள்ள வேளங்குடி. - 04368 - 261 447.
156. பிரம்மபுரீஸ்வரர் - அம்பர் (அம்பல்). மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 6 கி.மீ., - 04366 - 238 973.
157. மகாகாளநாதர் - திருமாகாளம். கும்பகோணம்-காரைக்கால் ரோடு. - 94427 66818, 04366 - 291 457.
158. மேகநாதசுவாமி - திருமீயச்சூர். மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., - 94448 36526, 04366 - 239 170.
159. சகல புவனேஸ்வரர் - திருமீயச்சூர் இளங்கோயில், மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., - 94448 36526, 04366 - 239 170.
160. முக்தீஸ்வரர் - செதலபதி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 5 கி.மீ., - 04366 - 238 818, 239 700, 94427 14055.
161. வெண்ணிகரும்பேஸ்வரர் - கோயில்வெண்ணி.திருவாரூரிலிருந்து 26 கி.மீ., - 98422 94416.
162. சேஷபுரீஸ்வரர் - திருப்பாம்புரம்.கும்பகோணம்-காரைக்கால் வழியில் 20 கி.மீ. தூரத்திலுள்ள கற்கத்தியில் இருந்து 3 கி.மீ. - 94439 43665, 0435 - 246 9555.
163. சூஷ்மபுரீஸ்வரர் - செருகுடி.கும்பகோணம்-காரைக்கால் இருந்து 3 கி.மீ. (பூந்தோட்டம் வழி) கடகம்பாடியில் இருந்து 3 கி. மீ. - 04366 - 291 646.
164. அபிமுக்தீஸ்வரர் - மணக்கால் அய்யம்பேட்டை,திருவாரூர்- கும்பகோணம் ரோட்டில் 10 கி.மீ.,
165. நர்த்தனபுரீஸ்வரர் - திருத்தலையாலங்காடு. திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., - 94435 00235, 04366 - 269 235.
166. கோணேஸ்வரர் - குடவாசல்.திருவாரூரில் இருந்து 23 கி.மீ., கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ., - 94439 59839.
167. சொர்ணபுரீஸ்வரர் - ஆண்டான்கோவில்.கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழி 13 கி.மீ., - 04374 - 265 130.
168. பாதாளேஸ்வரர் - அரித்துவாரமங்கலம், கும்பகோணம் - அம்மாபேட்டை வழியில் 20 கி.மீ., - 94421 75441, 04374 - 264 586
169. சாட்சிநாதர் - அவளிவணல்லூர்.கும்பகோணத்தில் இருந்து அம்மாப்பேட்டை வழியாக 26 கி.மீ., - 04374 - 275 441.
170. வீழிநாதேஸ்வரர் - திருவீழிமிழலை. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 7 கி.மீ., - 04366 - 273 050, 94439 24825148.
171. சதுரங்க வல்லபநாதர் - பூவனூர்.திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி ரோட்டில். - 94423 99273.
172. நாகநாதர் - பாமணி.மன்னார்குடியிலிருந்து 2 கி.மீ., - 93606 85073.
173. பாரிஜாதவனேஸ்வரர் - திருக்களர்.மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 21 கி.மீ., - 04367 - 279 374.
174. பொன்வைத்த நாதர் - சித்தாய்மூர். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 20 கி.மீ. (ஆலத்தம்பாடி அருகில்) - 94427 67565.
175. மந்திரபுரீஸ்வரர் - கோவிலூர். மன்னார்குடி-முத்துப்பேட்டை ரோட்டில் 32 கி.மீ., - 99420 39494, 04369 - 262 014.
176. சற்குணநாதர் - இடும்பாவனம். திருத்துறைப்பூண்டி-புதுச்சேரி ரோட்டில் 10கி.மீ. (தொண்டியக்காடு வழி) - 04369 - 240 349.
177. கற்பக நாதர் - கற்பகநாதர்குளம். திருத்துறைப்பூண்டி -புதுச்சேரி ரோட்டில் 12 கி.மீ., (தொண்டியக்காடு வழி) - 04369 - 240 632.
178. நீள்நெறிநாதர் (ஸ்திரபுத்தீஸ்வரர்) - தண்டலச்சேரி. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியில் 23 கி.மீ., - 98658 44677.
179. கொழுந்தீஸ்வரர் - கோட்டூர்.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., - 97861 51763, 04367 - 279 781.
180. வண்டுறைநாதர் - திருவண்டுதுறை.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 11 கி.மீ., சேரிவடிவாய்க்கால் அருகில் - 04367 - 294 640.
181. வில்வாரண்யேஸ்வரர் - திருக்கொள்ளம்புதூர் கும்பகோணம் -கொரடாச்சேரி வழியில் 25 கி.மீ., செல்லூர் அருகில் - 04366 - 262 239.
182. ஜகதீஸ்வரர் - ஓகைப்பேரையூர்.திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (லட்சுமாங்குடி வழி) - 04367 - 237 692.
183. அக்னீஸ்வரர் - திருக்கொள்ளிக்காடு. திருவாரூரிலிருந்து 28 கி.மீ. கச்சனத்திலிருந்து 8 கி.மீ., - 04369 - 237 454.
184. நெல்லிவனநாதர் - திருநெல்லிக்காவல்.திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் 18 கி.மீ., - 04369 - 237 507, 237 438.
185. வெள்ளிமலைநாதர் - திருத்தங்கூர்.திருவாரூர்- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 12 கி.மீ., - 94443 54461, 04369 - 237 454.
186. கண்ணாயிரநாதர் - திருக்காரவாசல்.திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் 14 கி.மீ., - 94424 03391, 04366 - 247 824.
187. நடுதறியப்பர் - கண்ணாப்பூர், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் மாவூரிலிருந்து 7 கி.மீ., - 94424 59978, 04365 - 204 144.
188. கைச்சினநாதர் - கச்சனம்.திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., - 94865 33293
189. ரத்தினபுரீஸ்வரர் - திருநாட்டியத்தான்குடி.திருவாரூர்- வடபாதிமங்கலம் ரோட்டில் 15 கி.மீ., (மாவூர் வழி) - 94438 06496, 04367 - 237 707.
190. அக்னிபுரீஸ்வரர் - வன்னியூர்(அன்னூர்). கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 24 கி.மீ., - 0435 - 244 9578
191. சற்குணேஸ்வரர் - கருவேலி. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ., தூரத்திலுள்ள கூந்தலூர் - 94429 32942, 04366 - 273 900
192. மதுவனேஸ்வரர் - நன்னிலம்.திருவாரூர்-மயிலாடுதுறை ரோட்டில் 16 கி.மீ., - 94426 82346, 99432 09771
193. வாஞ்சிநாதேஸ்வரர் - ஸ்ரீவாஞ்சியம். கும்பகோணம்- நாகபட்டினம் வழியில் 27 கி.மீ. அச்சுதமங்கலம் ஸ்டாப் - 94424 03926, 04366 - 228 305
194. மனத்துணைநாதர் - திருவலிவலம். திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (வழி கச்சனம்) - 04366 - 205 636
195. கோளிலிநாதர் - திருக்குவளை. திருத்துறைபூண்டி - எட்டுக்குடி ரோட்டில் 13 கி.மீ.(வழி கச்சனம்) - 04366 - 245 412
196. வாய்மூர்நாதர் - திருவாய்மூர்.திருவாரூர்- வேதாரண்யம் ரோட்டில் 25 கி.மீ., - 97862 44876
நாகப்பட்டினம் மாவட்டம்
197. சிவலோகத்தியாகர் - ஆச்சாள்புரம். சிதம்பரத்தில் இருந்து 12 கி.மீ., - 04364 - 278 272.
198. திருமேனியழகர் - மகேந்திரப்பள்ளி. சீர்காழியில் இருந்து கொள்ளிடம் வழி 22 கி.மீ., - 04364 - 292 309.
199. முல்லைவனநாதர் - திருமுல்லைவாசல். சீர்காழியிலிருந்து 12 கி.மீ., - 94865 24626.
200. சுந்தரேஸ்வரர் - அன்னப்பன்பேட்டை. சீர்காழியில் இருந்து கீழமூவர்கரை ரோட்டில் 16 கி.மீ., - 93605 77673, 97879 29799.
201. சாயாவனேஸ்வரர் - சாயாவனம். சீர்காழி- பூம்புகார் வழியில் 20 கி.மீ., - 04364 - 260 151
202. பல்லவனேஸ்வரர் - பூம்புகார். சீர்காழியில் இருந்து 19 கி.மீ., - 94437 19193.
203. சுவேதாரண்யேஸ்வரர் - திருவெண்காடு.சீர்காழி-பூம்புகார் வழியில் (புதன் ஸ்தலம்) 15 கி.மீ., - 04364 - 256 424
204. ஆரண்யேஸ்வரர் - திருக்காட்டுப்பள்ளி. சீர்காழியில் இருந்து 15 கி.மீ., திருவெண்காட்டிலிருந்து 1 கி.மீ., - 94439 85770, 04364 - 256 273.
205. வெள்ளடைநாதர் - திருக்குருகாவூர். சீர்காழியில் இருந்து 5 கி.மீ., - 92456 12705.
206. சட்டைநாதர் - சீர்காழி.சிதம்பரத்தில் இருந்து 19 கி.மீ., - 04364 - 270 235.
207. சப்தபுரீஸ்வரர் - திருக்கோலக்கா. சீர்காழியிலிருந்து 2 கி.மீ., - 04364 - 274 175.
208. வைத்தியநாதர் - வைத்தீஸ்வரன்கோவில்.மயிலாடுதுறை -சீர்காழி வழியில் 18கி.மீ., - 04364 - 279 423.
209. கண்ணாயிரமுடையார் - குறுமாணக்குடி. மயிலாடுதுறை- வைத்தீஸ்வரன் கோவில் வழியில் கதிராமங்கலத்தில் இருந்து 3 கி.மீ. - 94422 58085
210. கடைமுடிநாதர் - கீழையூர். மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ., - 94427 79580, 04364 - 283 261,
211. மகாலட்சுமிபுரீஸ்வரர் - திருநின்றியூர். மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ., - 94861 41430.
212. சிவலோகநாதர் - திருப்புன்கூர்.மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ., - 94867 17634.
213. சோமநாதர் - நீடூர். மயிலாடுதுறையில் இருந்து 5 கி.மீ., - 99436 68084, 04364 - 250 424,
214. ஆபத்சகாயேஸ்வரர் - பொன்னூர். மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ., - 04364 250 758.
215. கல்யாண சுந்தரேஸ்வரர் - திருவேள்விக்குடி. மயிலாடுதுறை அருகிலுள்ள குத்தாலத்திலிருந்து 2 கி.மீ., - 04364 - 235 462.
216. ஐராவதேஸ்வரர் - மேலத்திருமணஞ்சேரி.குத்தாலத்தில் இருந்து 6 கி.மீ., - 04364 - 235 487.
217. உத்வாகநாதர் - திருமணஞ்சேரி.கும்பகோணத்தில் இருந்து 27 கி.மீ., - 04364 - 235 002.
218. வீரட்டேஸ்வரர் - கொருக்கை.மயிலாடுதுறை- கொண்டல் ரோட்டில் 3 கி.மீ.
219. குற்றம் பொறுத்தநாதர் - தலைஞாயிறு.வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து மணல் மேடு வழியில் 8 கி.மீ. - 04364 - 258 833.
220. குந்தளேஸ்வரர் - திருக்குரக்கா.மயிலாடுதுறையில்இருந்து 13 கி.மீ., - 04364 - 258 785.
221. மாணிக்கவண்ணர் - திருவாளப்புத்தூர்.மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மீ.- 98425 38954, 04364 - 254 879.
222. திருநீலகண்டேஸ்வரர் - இலுப்பைபட்டு.மயிலாடுதுறையில் இருந்து 10 கி.மீ., (மணல்மேடு அருகில்) - 92456 19738.
223. வைகல்நாதர் - திருவைகல்.கும்பகோணம்-காரைக்கால்ரோட்டில் 18 கி.மீ. தூரத்திலுள்ள பழிஞ்சநல்லூர் அருகில் - 0435 - 246 5616.
224. உமாமகேஸ்வரர் - கோனேரிராஜபுரம்.கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள எஸ். புதூர் அருகில் - 0435 - 244 9830, 244 9800.
225. கோமுக்தீஸ்வரர் - திருவாவடுதுறை.மயிலாடுதுறை - கும்பகோணம் வழியில் 16 கி.மீ., - 04364 - 232 055.
226. உத்தவேதீஸ்வரர் - குத்தாலம். மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ., - 04364 - 235 225
227. வேதபுரீஸ்வரர் - தேரழுந்தூர். மயிலாடுதுறை- கும்பகோணம் வழியில் 10 கி.மீ., - 04364 - 237 650.
228. மாயூரநாதர் - மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., - 04364 - 222 345
229. உச்சிரவனேஸ்வரர் - திருவிளநகர்.மயிலாடுதுறை-செம்பொனார்கோவில் வழியில் 7 கி.மீ., - 04364 - 282 129.
230. வீரட்டேஸ்வரர் - கீழப்பரசலூர்(திருப்பறியலூர்). மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ., - 04364- 205 555.
231. சுவர்ணபுரீஸ்வரர்- செம்பொனார்கோவில்.மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரோட்டில் 8 கி.மீ., - 99437 97974.
232. நற்றுணையப்பர் - புஞ்சை.மயிலாடுதுறை-பூம்புகார் வழியில் 10 கி.மீ. - 04364 - 283 188
233. வலம்புர நாதர் - மேலப்பெரும்பள்ளம்.பூம்புகாரிலிருந்து 7 கி.மீ., - 04364 - 200 890, 200 685.
234. சங்காரண்யேஸ்வரர் - தலைச்சங்காடு. மயிலாடுதுறையிலிருந்து 22 கி.மீ. - 04364 - 280 757.
235. தான்தோன்றியப்பர் - ஆக்கூர்.மயிலாடுதுறை- நாகப்பட்டினம் வழியில் 16 கி.மீ., - 98658 09768, 97877 09742.
236. அமிர்தகடேஸ்வரர் - (அபிராமியம்மன் கோயில்).திருக்கடையூர் மயிலாடுதுறை-நாகப்பட்டினம் ரோட்டில், 26 கி.மீ., - 04364 - 287 429.
237. பிரம்மபுரீஸ்வரர் - திருமயானம். திருக்கடையூர் அபிராமி கோயிலில் இருந்து 1 கி.மீ., - 94420 12133, 04364 - 287 429.
238. சரண்யபுரீஸ்வரர் - திருப்புகலூர். நாகப்பட்டினம் - திருவாரூர் ரோட்டில் 22 கி.மீ., - 94431 13025, 04366-237 198.
239. திருப்பயற்றுநாதர் - திருப்பயத்தங்குடி. திருவாரூர்- திருமருகல் வழியில் 10 கி.மீ., - 98658 44677, 04366- 272 423.
240. ரத்தினகிரீசுவரர் - திருமருகல். நாகப்பட்டினத்தில் இருந்து 20 கி.மீ., - 04366- 270 823.
241. அயவந்தீஸ்வரர் - சீயாத்தமங்கை. நாகப்பட்டினம்- திருமருகல் ரோடு(நாகூர் வழி) - 04366-270 073.
242. காயாரோகணேஸ்வரர் - நாகப்பட்டினம். பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., - 98945 01319, 04365- 242 844.
243. நவநீதேஸ்வரர் - சிக்கல். நாகப்பட்டினத்திலிருந்து 4 கி.மீ., - 04365- 245 452, 245 350.
244. திருமறைக்காடர் - வேதாரண்யம். நாகபட்டினத்திலிருந்து 63 கி.மீ., - 04369- 250 238
245. அகஸ்தீஸ்வரர் - அகஸ்தியன்பள்ளி.வேதாரண்யம்- கோடியக்கரை வழியில் 2 கி.மீ., - 04369- 250 012
246. கோடிக்குழகர் - கோடியக்கரை.வேதாரண்யத்திலிருந்து 9 கி.மீ., - 04369- 272 470
மதுரை மாவட்டம்
247. மீனாட்சி சுந்தரேஸ்வரர் - மதுரை - 0452-234 9868.
248. திருவாப்புடையார் - செல்லூர். மதுரை கோரிப்பாளையம் அருகில் - 0452- 234 9868.
249. சத்தியகிரீஸ்வரர் - திருப்பரங்குன்றம்(முருகன் கோயில்)மதுரையில் இருந்து 7 கி.மீ., - 0452- 248 2248.
250. ஏடகநாதேஸ்வரர் - திருவேடகம். மதுரை- சோழவந்தான் ரோட்டில் 17 கி.மீ. - 04543-259 311.
ராமநாதபுரம் மாவட்டம்
251. ராமநாதசுவாமி - ராமேஸ்வரம். மதுரையில் இருந்து 200 கி.மீ., - 04573 - 221 223.
252. ஆதிரத்தினேஸ்வரர் - திருவாடானை. மதுரை- தொண்டி வழியில் 100 கி.மீ., - 04561 - 254 533.
சிவகங்கை மாவட்டம்
253. கொடுங்குன்றநாதர் - பிரான்மலை.மதுரை- பொன்னமராவதி வழியில் 65 கி.மீ., - 94431 91300, 04577- 246 170.
254. திருத்தளி நாதர் - திருப்புத்தூர். மதுரை-தஞ்சாவூர் வழியில் 70 கி.மீ. - 94420 47593.
255. சொர்ணகாளீஸ்வரர் - காளையார் கோவில்.மதுரை- தொண்டி வழியில் 70 கி.மீ., - 94862 12371, 04575- 232 516.
256. புஷ்பவனேஸ்வரர் - திருப்புவனம். மதுரை-ராமேஸ்வரம் ரோட்டில் 18 கி.மீ., - 04575- 265 082, 265 084.
விருதுநகர் மாவட்டம்
257. திருமேனிநாதர் - திருச்சுழி. மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழி 35 கி.மீ., - 04566 - 282 644.
திருநெல்வேலி மாவட்டம்
258. நெல்லையப்பர் - திருநெல்வேலி. மதுரையிலிருந்து 152 கி.மீ., - 0462 - 233 9910.
259. குற்றாலநாதர் - குற்றாலம். மதுரையிலிருந்து 155 கி.மீ., 04633 - 283 138, 210 138.
புதுச்சேரி
260. தர்ப்பாரண்யேஸ்வரர் - திருநள்ளாறு. மயிலாடுதுறையிலிருந்து 33 கி.மீ., - 04368 - 236 530, 236 504.
261. சுந்தரேஸ்வரர் - திருவேட்டக்குடி.காரைக்கால் - பொறையார் வழியில் 6 கி.மீ. - 98940 51753, 04368 - 265 693.
262. பார்வதீஸ்வரர் - திருத்தெளிச்சேரி. காரைக்கால் பஸ்ஸ்டாண்ட் பின்புறம் - 04368 - 221 009.
263. யாழ்மூரிநாதர் - தருமபுரம்.காரைக்காலில் இருந்து 4 கி.மீ. - 04368 - 226 616.
264. வடுகீஸ்வரர் - திருவண்டார்கோயில். புதுச்சேரியிலிருந்து 20 கி.மீ., - 99941 90417.
கேரளா
265. மகாதேவர் - திருவஞ்சிக்குளம்.திருச்சூரிலிருந்து 38 கி.மீ., - 0480 - 281 2061
கர்நாடகா
266. மல்லிகார்ஜுனர் - ஸ்ரீசைலம்.சென்னையில் இருந்து ஓங்கோல், ஓங்கோலில் இருந்து 80 கி.மீ., - 08524 - 288 881.
ஆந்திரா
267. மகாபலேஸ்வரர் - திருக்கோகர்ணம்.மங்களூருவிலிருந்து உடுப்பி வழி 230 கி.மீ., - 08386 - 256 167, 257 167
268. காளத்தியப்பர் - காளஹஸ்தி, திருப்பதியில் இருந்து 30 கி.மீ., - 08578 - 222 240.
உத்தரகண்ட்
269. அருள்மன்ன நாயகர் - கவுரிகுண்ட் (அநேகதங்காவதம்) ரிஷிகேஷிலிருந்து 84 கி.மீ.,
270. கேதாரநாதர் - கேதர்நாத். ஹரித்துவாரிலிருந்து 253 கி.மீ.,
நேபாளம்
271. நீலாச்சல நாதர் - இந்திரநீல பருப்பதம். காட்மாண்டு
திபெத்
272. கைலாயநாதர் - கைலாஷ்(இமயமலை)
இலங்கை
273. திருக்கேதீச்வரர் - மாதோட்ட நகரம், தலைமன்னார்.
274. கோணேஸ்வரர் - திரிகோணமலை.
பிறசேர்க்கை கோயில்கள் தேவார பாடல் பெற்ற தலங்கள் 274 ஆக இருந்தது.
சமீபத்திய ஆய்வின்படி, மேலும் இரண்டு கோயில்கள் பாடல் பெற்ற தலங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.
275. அகஸ்தீஸ்வரர் - கிளியனூர். திண்டிவனம்- புதுச்சேரி வழியில் 18 கி.மீ., - 94427 86709.
276. புண்ணியகோடியப்பர் - திருவிடைவாசல். தஞ்சாவூர்-திருவாரூர் ரோட்டில் (கொரடாச்சேரி வழி) நண்பர்களே !

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகள் தந்துள்ளேன்.
காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் இது.
கோயில் - இருப்பிடம் - போன் நம்பர் அனைத்தும் உள்ளது.
நன்றி: உலக வள்ளுவர் குலம் ஸ்ரீ

Sunday, December 1, 2019

*விக்கிரமாதித்தன் கதைகள் - 14*

*முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1*

*சந்திரவர்ணன் கதை - 2*

கன்னியாபுரி என்ற நகரத்தை அடைந்த சந்திரவர்ணன் வழிநடைக் களைப்பும் ஆறு மாதமாக உணவு உண்ணாத இளைப்பும் சேர்ந்து கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. அந்நகரின் ஏதோவொரு தெருவில் ஒரு வீட்டின் திண்ணையில் படுத்துவிட்டான். மயங்கிவிட்டான் என்றே சொல்லவேண்டும்.

அது தாசி ஒருத்தியின் வீடு. அலங்காரவல்லி என்பது அவள் பெயர். பெயருக்கேற்ற அழகி. சந்திர வர்ணன் வந்தபோது அவள் வீட்டின் கதவைச் சாத்திவிட்டுக் கோவில் பணிக்குச் சென்றிருந்தாள். இரவு தன் தோழியருடன் வீடு திரும்பினாள்.

அந்தணன் ஒருவன் தன் இல்லத் திண்ணையில் பேச்சுமூச்சின்றிப் படுத்திருப்பதைப் பார்த்தாள். அவனைத் தொட்டு எழுப்பினாள். அசைவு இல்லாமல் கிடந்தான். அருகில் உள்ள வைத்தியரை வரச் செய்தாள்.

வந்தவர் அவனைச் சோதித்து விட்டுச் சொன்னார்.

"இந்த அந்தணன் நெடு நாள்களாக உணவும் உறக்கமும் இல்லாமல் இருந்திருக்கிறான். எனவேதான் இவ்வாறு கிடக்கிறான்."

"வைத்தியரே! இவரைக் குணமாக்க என்ன செய்ய வேண்டும்?"

"மூன்று நாள்களுக்கு மூன்று வேளையும் அவனுக்கு அரிசிக் கஞ்சியை வாய் வழியே சிறிது சிறிதாக விட்டு உண்ணச் செய்ய வேண்டும். பிழைத்துவிடுவான்."

அலங்கரவல்லி திண்ணையில் கிடந்தவனை உள்ளே தூக்கிவரச் செய்தாள். வைத்தியர் சொன்னபடி அவன் வாயைத் திறந்து சிறிது சிறிதாகக் கஞ்சியைக் குடிக்கச் செய்தாள்.

சந்திரவர்ணன் சரியாக மூன்று நாள்களுக்குப் பிறகு கண் விழித்தான். அவன் முன்பு ஓர் அழகி நின்றிருந்தாள்.

"பெண்ணே, நீ யார்? நான் எவ்வாறு இங்கு வந்தேன்? எத்தனை நாள்களாக இவ்வாறு உள்ளேன்?"

அலங்காரவல்லி  தன்னைப் பற்றியும் அவனை மூன்று தினங்களாகப் பராமரிப்பதைப் பற்றியும் கூறினாள்.

தான் தாசி வீட்டில் இருப்பதை அறிந்து வெளியே வர முயன்றான். அலங்காரவல்லி அவனைத் தடுத்தாள்.

"அன்பரே, மூன்று நாள்களாக உமக்குப் பணிவிடை செய்துவருகிறேன். அருகிலிருந்து உம்மைக் கவனித்து வந்ததில் எனக்கு உங்களிடம் காதல் வந்து விட்டது. என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்." என்றாள்.

" அலங்காரவல்லி, அந்தணன் ஒருவன் தாசி குலத்தில் பிறந்தவளை எவ்வாறு மணக்க இயலும்? என்னைக் காப்பாற்றியதற்கு என்னால் நன்றி மட்டுமே கூற இயலும். "

"சுவாமி, இவ்விதம் சொல்லாதீர்கள். நீங்கள் இன்றி நானில்லை. நான் தாசி குலத்தைச் சேர்ந்தவள் என்பதைத் தவிர வேறு தடையேதும் உள்ளதா உங்களுக்கு?"

"இல்லை."

" வாருங்கள். அரண்மனைக்குச் செல்வோம். அங்கு இருக்கும் அரசனின் புரோகிதர் நல்ல தீர்ப்பு ஒன்றைச் சொல்வார்."

சந்திரவர்ணன் அதற்கு உடன்பட்டான். இருவரும் அரண்மனைக்குச் சென்றனர்.