Saturday, December 23, 2023

ஜாதகமும் மாட்டுவண்டியும்


 ஒரு ஜாதகத்தை இரட்டை மாடு பூட்டிய வண்டியுடன் ஒப்பிட்டு பார்த்தால் நலமே


இலக்கினம் என்பது வண்டியின் முன்பகுதியாகும்,


ஏழாம் வீடு வண்டியின் முன்பகுதியுடன் இணைந்த சுமை தாங்கும் பார் ஆகும்,


நான்கு,பத்து வீடுகள் வண்டியின் சக்கரங்கள்,


ஐந்து,ஒன்பது வண்டி மாடுகள்,


ஆறு,எட்டு என்பது வண்டிமாட்டை பிணைக்கும் மூக்கானாங்கயிறுகள்,


இரண்டு,பதினொன்று வண்டியின் கடையாணிகள்,


மூன்றாம் இடம் வண்டி ஓட்டுபவன்,


பனிரெண்டாமிடம் வண்டியின் சுமைகள் ஆகும்,


     ஆதாரம்:பராசரசித்தாந்தத்தில் குருமூர்த்தி பத்ததி

Wednesday, November 1, 2023

Thursday, October 12, 2023

ஜோதிட தகவல்

 



*சனி+செவ்வாய் சேர்க்கை,* 


 *சனி +சூரியன் சேர்க்கை,* 


*சனி+ ராகு சேர்க்கை*  *பெற்று, சுபத் தொடர்பே இல்லாத நிலையில், ஆதிபத்திய சிறப்பு இல்லாத அமைப்பில், *சனி, தசை நடத்த ஆரம்பித்தால்,*  


சனி திசையின் சுய புத்தியான, சனி புத்தி முடிவதற்குள்ளேயே,  ஜாதகரை பிழிந்து,சக்கையாக்கி துவைத்து எடுத்துக் காயப்போட்டு விடுகிறது* .

Monday, October 9, 2023


 

*மனவலிமை யாருக்கு அதிகம் இருக்கும்?*

 *மனவலிமை யாருக்கு அதிகம் இருக்கும்?*



எந்த சூழ்நிலையிலும் தைரியத்தை இழக்காமல் *தன்னம்பிக்கையோடு செயல்படுபவர் யார்?* 


ஜாதகத்தில் தன்னம்பிக்கையை பற்றி எதை வைத்து அறிந்து கொள்வது?

 *எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பர்* 

இந்த பழமொழியில் *சிரசு முக்கியம்* என்பதால் *ஜாதகத்தில் லக்னமே பிரதானம் ஆகும்.* 

லக்னம் தான் சிரசு என்று அறியப்படுகிறது.

லக்னம் பிரதானம்.

லக்னம், லக்னாதிபதியே ஒரு ஜாதகத்தின் ஆணிவேராகும். இந்த இரண்டும் எந்த நிலையிலும் கிடவே கூடாது.

 ஆத்ம பலத்தையும் மனோபலத்தையும் கொடுக்கக்கூடிய தந்தை என்று சொல்லக்கூடிய சூரியனும், மனோபலத்தை அளிக்கக்கூடிய தாயாகிய சந்திரனும் ஒரு ஜாதகத்தில் நன்னிலையில் அமையப் பெற்றிருக்க வேண்டும், அவர்கள் எவ்வகையிலும் கெடக்கூடாது.




 அவ்வாறு இருக்கும் ஜாதகர்களுக்கு அற்புதமான மனோதிடம், தன்னம்பிக்கை இருக்கும்.

 மூன்றாம் இடம் என்று சொல்லக்கூடிய உபஜெய ஸ்தானமாகிய வெற்றி ஸ்தானம் தைரிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய நிலையும் அதன் அதிபதியும் நன்நிலையில் இருப்பின் எந்த சூழ்நிலையிலும் ஜாதகர் வாழ்வில் எதையும் எதிர்கொண்டு வெல்லும் ஆற்றலை பெற்றவர் ஆவார்.

 மனோ தைரியத்தோடு சிறப்பாக  அவர்கள் செயல்படுவர். தன்னம்பிக்கையே காரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

Wednesday, September 27, 2023

தமிழ் மாதப் பெயர்கள் எப்படி வந்தன?

 *ஸ்ரீ குரு தட்சணாமூர்த்தி   தரிசனம்*!!




தட்சிணாமூர்த்தி துதி


குரவே ஸர்வ லோகாநாம் 

பிஷஜே பவ ரோகிணாம்

நிதயே ஸர்வ வித்யாநாம் 

ஸ்ரீதட்சிணாமூர்த்தயே நமஹ ! ,


பொருள் : 

அனைத்து உலகங்களுக்கும் குருவாக இருப்பவர்; பிறப்பு- இறப்பு என்னும் கடலைக் கடந்திட மருந்தானவரும்  ஞானம் அளிப்பவருமாகிய ஶ்ரீ தட்சிணாமூர்த்தியை வணங்குகிறேன் !


தமிழ் மாதப் பெயர்கள் எப்படி வந்தன?


காஞ்சி மஹா பெரியவாள் உரையிலிருந்து....

ஆங்கில மாதம் என்றால் அது ஜனவரி ,பிப்ரவரி என துவங்குகின்றன. தமிழ் மாஸம் என்பது சித்திரை, வைகாசி எனத் துவங்குகின்றன. இதற்கான பெயர் காரணத்தை இனி காண்போம்.பெரும்பாலும் ஒரு மாதத்தில் பௌர்ணமி அன்று எந்த நக்ஷத்திரமோ அதுவே அந்த மாஸத்தின் பெயராக இருக்கும் அனேகமாக அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும், விழாவாகவும் இருக்கும்.


1. சித்திரை மாஸம்

சித்திரை மாஸத்தில் சித்ரா நக்ஷத்திரத்தன்றுதான் பௌர்ணமி வரும் அதனால் சித்திரை மாஸம் என்றானது


2. வைகாசி மாஸம்

விசாக சம்மந்தமான வைசாகம்.விசாக நக்ஷத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாசம் தான் வைசாகி. மதுரை என்பது மருதை என திரிவது போல் சமஸ்கிருத வைசாகி தமிழில் வைகாசி ஆயிற்று.


3. ஆனி மாஸம்

அனுஷ நக்ஷத்திர சம்மந்தமானது ஆனுஷீ. அந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற மாஸம் ஆனுஷீமாஸம். தமிழில் ஷ என்ற எழுத்து உதிர்ந்து ஆனி என்றாயிற்று.


4. ஆடி மாஸம்

ஆஷாட நக்ஷத்திரத்தில் பூர்வ ஆஷாடம்,உத்தர ஆஷாடம் என்று இரண்டு. பூர்வம் என்றால் முன்,உத்தரம் என்றால் பின். பூர்வ/உத்தர ஆஷாடம் என்பதில் உள்ள அந்த ர்வ என்ற கூட்டெழுத்து சிதைந்தும்.ஷ உதிர்ந்தும் தமிழில் பூராடம் உத்திராடம் என்கிறோம். இந்த இரு நக்ஷத்திரங்களில் ஒன்றில் பௌர்ணமி வரும் மாதம் ஆஷாடி. இதில் ஷா உதிர்ந்து ஆடி ஆயிற்று.


5. ஆவணி மாஸம்

ச்ராவணம் என்பது ச்ரவண நக்ஷத்திரத்தை குறிக்கும். முதலில் உள்ள ச்ர அப்படியே தமிழில் drop ஆகி வணத்தை ஓணம் என்கிறோம். அது மஹாவிஷ்னுவின் நக்ஷத்திரமாதலால் திரு என்ற மரியாதை சொல்லை சேர்த்து திருவோணம் என்கிறோம். அனேகமாக பௌர்ணமி ச்ராவண நக்ஷத்திரத்தில் வருவதால் ச்ராவணி எனப்படும். இதில் சமஸ்கிருதத்திற்கே உரிய ச்,ர என்ற கூட்டெழுத்து drop ஆகி ஆவணி மாதமாயிற்று.


6. புரட்டாசி மாஸம்

ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு. பூர்வ ப்ரோஷ்டபதம் தான் தமிழில் பூரட்டாதி ஆயிற்று. அஷ்ட என்பது அட்ட என திரிந்தது. உத்திர ப்ரோஷ்டபதம் என்பது உத்திரட்டாதி ஆயிற்று. இந்த நக்ஷத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் ப்ரோஷ்டபதி என்பது திரிந்து புரட்டாசி ஆயிற்று.


7. ஐப்பசி மாஸம்

ஆச்வயுஜம்,அச்வினி என்பதை அச்வதி என்கிறோம். அதிலே பௌர்ணமி வருகிற ஆச்வயுஜீ அல்லது ஆச்வினீ தான் திரிந்து ஐப்பசி ஆயிற்று.


8. கார்த்திகை மாஸம்

க்ருத்திகை நக்ஷத்திரம் தான் கார்த்திகை. இந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் அது கார்த்திகை மாதமாயிற்று.


9. மார்கழி மாஸம்

மிருகசீர்ஷம் என்பது மார்கசீர்ஷி என்றாயிற்று. இதில் பெரும்பாலும் பௌர்ணமி வரும் மாதம் மார்கசீர்ஷி என்றாயிற்று.அதில் சீர்ஷி என்பது மறுவி மார்கழி என்றாயிற்று.


10. தை மாஸம்

புஷ்யம் தான் தமிழில் பூசம் .புஷ்ய சம்மந்தமானது பௌஷ்யம். புஷ்யத்திற்கு திஷ்யம் என்றும் பெயர்.பௌர்ணமி திஷ்யத்திலே வரும் மாதம் தைஷ்யம்.அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய் தை என்றாயிற்று.


11. மாசி மாஸம்

மக நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் மாகி என்றாயிற்று. இதில் கி என்பது சி யாக மருவி மாசி ஆயிற்று.


12. பங்குனி மாஸம்

பூர்வ பல்குனியை பூரம் என்றும் உத்தர பல்குனியை உத்திரம் என்கிறோம். இந்த இரு நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் பல்குனி எனப்படும். அதில் ல எழுத்து மருவி பங்குனி ஆயிற்று.


இப்படி சம்ஸ்கிருத வார்த்தைகளே மருவி தமிழ் மாதப்பெயர்களாக அமைந்துள்ளன.


*ஸ்ரீ குரு அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்..!*


*சௌஜன்யம்..!*

*அன்யோன்யம் .. !!* 

*ஆத்மார்த்தம்..!*

*தெய்வீகம்..!.. பேரின்பம் ...!!*

Monday, September 25, 2023

ஆருடமும்) *ஓரையின் மகத்துவமும்*

 *நிகழ்வும்*(ஆருடமும்)

*ஓரையின் மகத்துவமும்*




இந்த வீடியோ 14/08/2021 அன்று வெளியானது.அப்போது வகுப்பறையில் பயிற்சிக்காக ஆய்வுக்கு கொடுக்கப்பட்டது.


தற்போது இன்று 25 செப்டம்பர் 2023 மதியம் 2 30 மணிக்கு நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.


இதனை ஏற்கனவே நான் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது சொல்லக்கூடிய விஷயம் ஆச்சரியமான ஒன்று.


அது என்னவெனில் ஒரு இறந்தவர்கள் ஜாதகத்தை நாம் பார்க்கும் போது பரிசீலிக்கும் போது அந்த வேலையில் என்ன நிகழ்வுகள் கிரகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அதன்படி பார்த்தால் இறந்தவர்கள் ஜாதகத்தை பார்க்கும் போது அந்த நேரம் *எமகண்டமாக* இருக்கும். 


அடுத்தது ஜாதகருடைய *லக்ன அதிபதி நீசமாக இருப்பார்.*


 அடுத்ததாக கோச்சாரத்தில் *சந்திரன் மாந்தியை தொடர்பு கொள்வார்*


இதுதான் விதி.


அந்த வகையில் பார்க்கும்போது இங்கே வீடியோ பார்த்துக் கொண்டிருந்த போது இன்று திங்கட்கிழமை.

மதியம் 2:30 மணி *அப்போது எமகண்டம் இல்லை.* 


இன்றைய தின கோட்சாரத்தில் *சந்திரன் மாந்தியை தொடர்பு கொண்டு இருக்கிறது.*


 *லக்னம் மகரம்* 


 *லக்னாதிபதி சனி லக்னத்திற்கு மாரக ஸ்தானத்தில் 2ஆமிடத்தில்*



இவை அனைத்துக்கும் மேலாக 2.00 மணிமுதல் 3.00 மணி வரையிலும் *சனி ஓரை* செயல்பட்டுக் கொண்டிருந்தது.


சனி ஓரை சனியின் தீயப்பலனை பலன்களையும் ஆயுள், தொழில், வேலை பற்றிய விஷயங்களையும் வெளிபடுத்துபவர்.


எனவே அந்த நேரத்தில் சனியின் ஆதிக்கம் மற்றும் அதன் காரகங்கள் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டது என்பதைக் காண முடிந்தது. 

அன்றைய தினம் கோட்சார நிலை




ஆக ஜோதிட விதிகள் நடைமுறையில் எவ்வாறு இணைந்து செயல்படுகிறது என்பது ஆச்சரியமளிக்கக் கூடியதாகவே உள்ளன.


 *ஆருடமும் ஓரையும்* எவ்வளவு பின்னி பிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.



Wednesday, August 23, 2023

*உச்சம் பெற்ற கிரகங்களால் ஜாதகனுக்கு என்ன கிடைக்கும்?*

 24-8-2023


 *உச்சம் பெற்ற கிரகங்களால் ஜாதகனுக்கு என்ன கிடைக்கும்?* 


கீழே உள்ள அனைத்தும் பொதுப் பலன்கள். அதை மனதில் கொள்க. உங்கள் ஜாதகத்தோடு இணைத்துப் பார்த்துக் குழம்ப வேண்டாம்.


1. ஜாதகத்தில் சூரியன் உச்சம் பெற்று இருந்தால் செல்வந்தர். மேன்மையான குணம் உடையவர். வீரம் மிக்கவர்.


2.சந்திரன் உச்சம் பெற்று இருந்தால் நல்ல உணவு, உடை, ஆபர்ணங்களை உடையவராக இருப்பார்.


3.செவ்வாய் உச்சம் பெற்று இருந்தால், பகட்டானவராக, வீரம் மிக்கவராக, வேறு ஊரில் வசிப்பவராக இருப்பார்.


4. புதன் உச்சம் பெற்று இருந்தால் அறிவாற்றல் மிக்கவராக இருப்பார்.


5.குரு உச்சம் பெற்று இருந்தால், கல்வி, புகழ், செல்வம் உடையவராக இருப்பார்.


6. சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தால் இயல், இசை, நாடகம், நடனம் போன்ற கலைகளில் ஆர்வமும், தேர்ச்சியும் உடையவராக இருப்பார்.


7. சனி உச்சம் பெற்று இருந்தால், அரசியலில் தலைமை பதவியும்,  அரசு கெளரவ பதவியும், தொழிலாளர்கள் தலைவராகவும் இருப்பார். மேலும் நாட்டில் விளையும் பொருட்கள் மற்றும் தொழிலாளர்களால் நன்மை பெறுபவராகவும் இருப்பார்.


என்றும் அன்புடன்

நிலவில் இந்தியா உதயம் 23/08/2023 புதன் கிழமை




 Chandrayan-3 successfully landed on moon. Congratulations and salute to the real heroes of our nation.



Thursday, August 17, 2023

*ரதி மன்மதன் யார்?*

 *ரதி மன்மதன் யார்?* 



எந்த ஒரு ஜாதகத்திலும் ஏழாம் பாவகமும் ,ஏழாம் பாவகத்து அதிபதியும் கெடாமல் இருந்து , உங்களுடைய லக்னத்திற்கு, திரிகோண லக்னமாக, மனைவி லக்னம் அமைந்து, சுக்கிரன் கெடாமல் நல்ல நிலையில் இருந்தால், *80 வயதிலும், 20 வயது இளைஞனை போல் காதல்  தன் துணை மீது இருக்கும்.* 


 சுக்கிரன், ஜாதகத்தில் நல்ல நிலையில், கெடாமல் இருந்தாலே, காதல் ரசம்  ஊற்றெடுக்கும்.

Wednesday, August 16, 2023

யோகங்கள் _ ருச்சகா யோகம்!




Astrology யோகங்கள்

ருச்சகா யோகம்!

Ruchaga Yogam

----------------------------------

செவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.

செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் 

உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின்

கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.

------------------------------------------------------

அகராதி பேர்வழி (புத்தி சிகாமணி!:)


”சார், செவ்வாய் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?”

“இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!”

-------------------------------------------------------

என்ன பலன்?


ஜாதகன் துணிச்சலானவன்.எதிலும் வெற்றி காண்பவன். சிலர் இரக்கமில்லாமல் அரக்க குணமுடையவர்களாகவும் இருப்பார்கள்

----------------------------

அன்புடன்


Tuesday, August 15, 2023

*கிரக பரிகாரம்* புதன்


 *கிரக பரிகாரம்* 


 ஜாதகத்தில் ஒரு கிரகம் பலவீனமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். உதாரணத்திற்கு ஒருவருக்கு *படிப்பு* சரியாக வரவில்லை.


 ஜாதகத்தில் *புதன்* பலவீனமாக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். புதனின் காரகத்துவமான *பச்சைப்பயிறு* பாயாசம் வைத்து ஜாதகருக்கு அடிக்கடி கொடுக்க வேண்டும். 


நெற்றியில் ஒரு பச்சை பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். 


பச்சை ஆடைகளை உடுத்த வேண்டும். ரொம்பவும் பலவீனமாக இருந்தால் மேற்கண்டவற்றோடு புதனின் தசா ஆண்டுகளான 17.


 ஜாதகர் ஒரு குதிரைக்கு 17 வாரங்கள் புதன்கிழமை புதன் ஓரையில் அந்தக் குதிரை விரும்பி சாப்பிடும் பொருளை ஜாதகர் தன் கை தொட்டு கொடுக்க வேண்டும். 


இதுவே அந்த கிரகத்தைப் பலப்படுத்த பரிகாரம். இதேபோல் மற்ற கிரகங்களுக்கும் அதனை பலப்படுத்த அதன் காரகத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களை புதனுக்கு கூறியது போல செய்ய வேண்டும்.

பாதபூஜை




 🕉 

*எதற்காக பாதபூஜை?*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


*பாதபூஜை*

*செய்யும்போது ஒருவரின் அனைத்து பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


*அஸ்வ மேத யாகத்திற்கு ஒப்பானதாக கருதப்படுகிறது*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


*பித்ரு தோஷம் விலகும் என்பது ஐதீகமாகும்*

🔰🔰🔰🔰🔰🔰🔰


*மேலும், பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்ய பரிபூரண ஆசி கிட்டும்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

*யாருக்கு பாதபூஜை*

*பாத பூஜையானது பெற்றோர்கள், பெற்றோர் ஸ்தானத்தில் உள்ளவர்கள், குருக்கள், மகான்கள் ஆகியோருக்கு செய்யும் புண்ணிய செயலாகும்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

*வணங்கும் முறையில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று கூறுவார்கள்*

*அந்த வரிசையில் பெற்றோர்களுக்கு முதலில் பாதபூஜை செய்வது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

*இன்றும் சிலர் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்வதை சம்பிரதாயமாக கொண்டுள்ளனர்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


*பாதபூஜை செய்வது எப்படி*

*பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி, ஆடி பௌர்ணமி (குரு பூர்ணிமா) போன்றவை பாத பூஜை செய்ய உகந்த நாட்களாக கூறப்படுகிறது*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

*பாதபூஜை* *பெறுபவரின்* *கால்களை ஒரு* *தாம்பாளத்தில் வைத்து, மஞ்சள் நீரால் கால்களை கழுவி சந்தனம், குங்குமமிட்டு தூய பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

*பின்னர், தீபங்களால் ஆராதனை மீண்டும் சந்தனம், குங்குமம் வைத்து புஷ்பங்களால் ஆராதிக்க வேண்டும்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

*அவர்களின் கால் அபிஷேக நீரை தலையில் தெளித்து கொண்டு எஞ்சிய நீரை யார் காலடியும் படாத ஓரிடத்தில் ஊற்றி விடுவது நல்லது*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

*பாதபூஜை பெறுபவர்* *மனமானது தூய* *உள்ளத்துடன் கடவுளின் நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


*முக்கிய குறிப்பு : நீங்கள் பாத பூஜை செய்பவரை கடவுளுக்கு நிகராக நினைக்கும் பட்சத்தில் பாத பூஜை செய்யலாம். அவ்வாறில்லையெனில், பாதபூஜை செய்வதைத் தவிர்ப்பது நல்லது*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

Saturday, August 12, 2023

*ஜோதிடப் பார்வை* புதிர் முடிச்சும்* *முடிச்சவிழப்பும்*

 


12/08, 1:04 pm *ஜோதிடப் பார்வை* 

*மாத்தி யோசி*

*துப்பு துலக்குதல்* 


 *புதிர் முடிச்சும்*

*முடிச்சவிழப்பும்* 


 *நிகழ்வு* 

இரவு வேளை

ஒரு காட்டின் வழியே தாய் ஒருத்தி மிகுந்த பதற்றத்துடன் பயணம் செய்து கொண்டிருக்கிறாள். அவருக்கு கிடைத்த செய்தி அப்படி.

 *தனது மகன் பலமாக தாக்கப்பட்டு இரத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதுதான் செய்தி*


தாயின் மனம் தனது மகனை எப்படியாவது காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற நிலையில் பரிதவிப்பு.


உடன் வந்தாரோ அறிமுகம் இல்லாதவர். தான் வழிமாறி அழைத்து செல்லப்படுவதாக உணர்கிறார்.


மனம் பரபரப்பு அடைகிறது.எப்படியோ அவரிடமிருந்து தப்பித்துக் கொண்டு திக்கு தெரியாமல் ஓடுகிறார்.


நடுநிசி. 

அந்த இருட்டில் வனப்பகுதியில் மிகவும் பயம் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வழி அறியாது மிக விரைவாக ஓடுகிறார்.


அடிபட்டு கிடக்கும் மகனை எப்படி அடைவது?

தனக்கு ஏற்பட்ட ஆபத்தான நிலையிலிருந்து எப்படி தப்பிப்பது? என்ற சிந்தனையோடு ஓடுகிறார்.


ஆனால் சில நிமிடங்களில் முகமறியா நபர்களால் சூழப்பட்டு கொடூரமான முறையில் கத்தியால்  தாக்கப்பட்டு  அவர்  கொலை செய்யப்படுகிறார்.இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போகிறார். 


மறுநாள்

அந்த பெண்மணி  ஏதோ கொடிய வனவிலங்கால் தாக்கப்பட்டு இறந்து போனார் என்று வெளியுலகுக்கு தெரிவிக்கப்பட்டது.


: *ஜோதிட பார்வை*

 *மாத்தி யோசி*


*துப்பு துலக்குதல்* 

 *முடிச்சு அவிழ்ப்பு* 


விதி மதி கதி


 *விதி* 

கொடுப்பினை நாம் வாங்கி வந்த வரம் 

 *கதி*

 நாம் அடையவிருக்கும் பலன்(நல்ல/தீய)

 *மதி*

 நிகழ்வில் சிக்கிக்கொள்ளல்/தப்பித்துக் கொள்ளல்.



*ஜோதிட பார்வை* என்ன சொல்கிறது?

என்று *மாத்தி யோசிப்போமா?*


*துப்பு துலக்குதல்* 

 *முடிச்சு அவிழ்ப்பு* 


 *காட்டுப்பிரதேசம்*

 சிம்ம ராசி சூரியன் 


 *முகமறியா நபர்கள்/திருடர்கள்* ராகு/கேது


 *கத்தியால்/ஆயுதத்தால் தாக்குதல்*  செவ்வாய் சனி சேர்க்கை/பார்வை


 *நடுநிசி /இருட்டில்* சனி ராகு 


 *தவறான தகவல்* புதன் ராகு


 *பயணம், மனப்பதற்றம் பயம் கொள்ளல்*  பலமிழந்த சந்திரன் 


 *பாதை மாறுதல்/தவறுதல்* 

சுபர்களின் பார்வை இல்லாமல் போதல்.


இப்போது இவற்றை இணைத்துப் பாருங்கள்.

புரிந்து இருக்குமே!


 *புதிருக்கு முடிச்சு அவிழ்ந்ததா?*


       ............ மீண்டும் ஒரு புதிரில்


            ....... *தொடரும் புதிர


*ஆசான் உரை*

 *ஜம்பு மகரிஷி வாக்கியம்* 


8க்குரியவன்+செவ்வாய் இணைந்து 6 அல்லது 12ஆம் வீட்டில் இருந்தால் விரோதிகள்/கொடியவர்களது ஆயுதத்தால் மரணம் சம்பவிக்கும்.

8க்குரியவன் இராகு /கேதுவுடன் இணந்து 6/8 ஆமிடத்தில் இருந்தால் ஜாதகனின் ஆயுள் திருடர்களின் தாக்குதலினால் முடியும்.

உபய ராசிகளில் ஒன்று எட்டாம் இடமாக அமைய அந்த எட்டுக்குடையவன் சனியோடு இணைவு பெற்று சர ராசியில் அமர்ந்து இருந்தால் நெருக்கமான வனப்பிரதேசங்களில் ஜாதகனின் வாழ்நாள் முடிவடையும்.

[

Friday, August 11, 2023

சவாலே சமாளி




 *ஜோதிட பார்வை*

*மாத்தி யோசி* 


*பிரச்சினைகளை சவால்களாக மாற்றுங்கள்! வெற்றி காணலாம்!* 


“எனக்கு ஒரு பிரச்சினை..”என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்...பிரச்சினை என்று சொன்னாலே  கவலையும் , பயமும் கட்டாயம் வரும்....

"எனக்கு ஒரு சவால் “என்று சொல்லிப் பாருங்கள் ...தைரியமும் ,தன்னம்பிக்கையும் தானாகவே வரும்..”


ஆம்..நிஜம்தானே..!


“காவல்காரன்” என்று ஒரு  படம்.. எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட பின் எம்.ஜி.ஆர்.நடித்த படம்.... ஷூட்டிங் ஆரம்பமானது..


வசனம் பேசி நடித்தபோது , எம்.ஜி.ஆரின் குரலில் குறை தெரிந்தது..முன்னர் பேசியது போல் தெளிவாகப்  பேச முடியவில்லை..


“பொருத்தமான குரல் உடையவர்களைக் கொண்டு டப்பிங்  கொடுத்து இந்தப் பிரச்சினையை சரி செய்து விடலாம் ” என்று சிலர் யோசனை சொல்லியிருக்கிறார்கள்...


ஆனால், எம்.ஜி.ஆர். இதை ஏற்க மறுத்து விட்டாராம்... “இது பிரச்சினை இல்லை..எனக்கு ஏற்பட்டிருக்கும் சவால்...

நானே என் சொந்தக் குரலில் பேசுகிறேன். மக்கள் ஏற்றுக் கொண்டால்  தொடர்ந்து நடிக்கிறேன். ஒருவேளை என் குரலை ஏற்றுக் கொள்ளாவிட்டால்  , சினிமாவில் நடிப்பதையே விட்டு விடுகிறேன்” என்று சவால் விட்டுக் கூறி , அதன்படியே, எம்.ஜி.ஆர். சொந்தக் குரலில் பேசினார்...


பலத்த எதிர்பார்ப்போடு வந்தான் காவல்காரன்...


படத்தின்   சில இடங்களில்  எம்.ஜி.ஆரின் குரல் தெளிவாக இல்லாவிட்டாலும், ரசிகர்கள் அதைப் பெரிய பிரச்சினை ஆக்காமல் ஏற்றுக் கொண்டார்கள்..!.


“காவல்காரன்” ...சூப்பர்ஹிட்..!!.


"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி

மக்களின் மனதில் நிற்பவர் யார்

மாபெரும் வீரர் மானம் காப்போர்

சரித்திரம் தனிலே நிற்கின்றார்"


ஆம்...பிரச்சினைகள் என்று நினைப்பவர்கள் ,பின்தங்கி விடுகிறார்கள்...!!!

சவால்களை சந்திப்பவர்களே சரித்திரம் தன்னிலே நிற்கின்றார்கள் ...!!!


சந்திக்கத் தயாராவோம்..சவால்களை!


படித்ததில் பிடித்தது

அன்புடன்


 *ஜோதிடப் பார்வை*

 *மாத்தி யோசி* 


 *பிரச்சனை/சவால் 6ஆமிடம்* 


 *சவாலை தைரியமாக எதிர்கொள்ளல் 3ஆமிடம்* 


 *தன்னம்பிக்கை/மனோதிடம் 5ஆமிடம்* 


லக்னாதிபதி வலுவாய் இருக்கும் பட்சத்தில் 

துணிந்து  எந்தவொரு செயலையும் துணிச்சலாக காரியம் ஆற்றுபவர்க்கு வெற்றி நிச்சயம்

என்பதற்கு ஒரு உதாரணம் இது.

Monday, August 7, 2023

யோகங்கள்* *பத்ரா யோகம்*

 *யோகங்கள்* 

 *பத்ரா யோகம்* 





 *புதன்* - புதனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.


புதன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கன்னிராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.


 *இதற்கு என்ன பலன்?* 


ஜாதகன் அதி புத்திசாலியாக இருப்பான்.

அறிவுஜீவியாக இருப்பான். அறிவு ஊற்றெடுக்கும்!

அதிகம் கற்றவனாக இருப்பான்.கல்வியில் அல்லது சொந்த அனுபவத்தில்!

வேறு அமைப்புக்களால் முறையான கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைக்காமல் போயிருந்தாலும் தனது சொந்த முயற்சியால் பல புத்தகங்களையும் கற்றுத் தேறியிருப்பான்.

செல்வந்தனாக இருப்பான். அல்லது தன் முயற்சியால் செல்வத்தைத் தேடிப் பிடிப்பான்.

-------------------------------------------------

 *அகராதி பேர்வழி* 


”சார், புதன் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?”


“இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!”

-------------------------------------------------


அன்புடன்,

ஆசிரியர்.

- : கன்னிகாதானம் : -

 - : கன்னிகாதானம் : - 




( இந்த கால ஆண்- பெண்பிள்ளைகள் சிலர் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி)



பிரமிப்பூட்டும் இரகசியம். வயிற்றுப் பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள்.


நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு.

ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்!


திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்கிறார்கள்!


இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி.


'தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம்,

மம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண.என்று அந்த மந்திரம் நீள்கிறது.

அதாவது, கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக இந்த கன்னிகாதானம் என்று அழைக்கப்படுகிற மகாதானத்தைச் செய்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.

உன் வம்சவிருத்திக்காக எம் குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு 🙏🙏தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப்பெரியது என்று சாஸ்திரம் போற்றுகிறது.


ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும்.

ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது என்றால்பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன் என சிலாகிக்கிறார்கள் சான்றோர்கள்!


ஆக, பெண்பிள்ளையைப் பெற்றவன், இருபத்தியோரு தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என சாஸ்திரம் சொல்கிறது... 


மகளை பெற்ற என் நண்பர்களுக்கு சமர்ப்பணம்....



Thursday, July 27, 2023

ஆடி மாதத்தில் சுப காரியங்களை தள்ளி வைப்பது ஏன்? *

 *ஆடி மாதத்தில் சுப காரியங்களை தள்ளி வைப்பது ஏன்?  என்பது பற்றிய பகிர்வுகள்*



ஆடி மாதத்தில் ஆன்மிக ரீதியாக விசேஷங்கள் கொண்டாட்டங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. ஆனால் அதே சமயம் ஆடி மாதத்தில் சுப காரியங்களைத் தள்ளி வைக்கும் பழக்கமும் இருந்து வருகிறது. ஏன் இந்த முரண்பாடு? அதற்கான காரணங்களை சாஸ்திர ரீதியாக பார்க்கலாம்.


 “பூலோகம் செழிப்பாக இருந்து, இயங்குவதற்குக் காரணமே சூரியனின் ஒளிக்கதிர்கள்தான். சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியில் விழும் நேரத்திலிருந்துதான் நாள் துவங்குகிறது என்பதை நாம் கணக்கில் கொண்டுள்ளோம். இந்த ஒரு நாளிலேயே “உஷக்காலம்’ என்று கூறப்படும் காலைப் பொழுது ஆரம்பம். அதாவது சூரிய உதயம் முதல் பகல் பன்னிரண்டு மணி வரை “பூர்வாங்கம்’ எனப்படும். பன்னிரண்டு மணிக்கு மேல் (உச்சிப் பொழுது முதல்) சூரியன் மறையும் கணக்கு.


“பூர்வாங்கம்’ என்பது ஏற்றத்தைக் குறிக்கும். “அபராணம்’ என்பது இறக்கத்தைக் குறிக்கும். இதேபோலத்தான், ஒரு வருடத்தில், தை மாதப் பிறப்பு முதல் ஆனி மாத முடிவு வரை “உத்தராயணம்’ என்றும், ஆடிமாதப் பிறப்பு முதல் மார்கழி மாத முடிவு வரை “தட்சிணாயனம்’ என்றும் கூறப்படுகிறது. சூரியனின் சக்தியானது உத்தராயணத்தில் “பாசிடிவ் சார்ஜ்’ஜினைத் தருகிறது. தாமதகுணமான “நெகடிவ் சார்ஜி’ னை தட்சிணாயனத்தில் கொடுக்கிறது.


இது ஆடி மாதப் பிறப்பிலிருந்து தொடங்குகிறது. ஆடி மாதம் அந்தக் காலத்தில் மிக முக்கியமான மாதமாகக் கருதப்பட்டது. ஏனென்றால் அந்நாட்களில் விவசாயத்தை நம்பித்தான் ஜீவனம் நடந்து கொண்டிருந்தது. “ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று பழமொழியே உண்டு. ஆடியில் விதை விதைத்தல், விவசாயம் செய்தல், துணி நெய்தல், குடிசைத் தொழில் செய்தல், போன்ற வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ளும் முக்கியமான ஆதார வேலைகளில் ஈடுபடுவார்கள்.


ஆடியில் பூர்வாங்க வேலைகளைச் செய்தால் தான் ஒருவருக்கு, பயிர் அறுவடை கார்த்திகை மற்றும் தை மாதத்தில் உண்டாகும். அந்தச் சமயத்தில்தான் கையில் பணமும் வர வாய்ப்பு இருக்கும். அதனால் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண வைபவங்களுக்குப் பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருந்து வந்தது. ஆடி மாதம் விவசாயத்திற்காக செலவு செய்யும் காலமாக இருந்ததால் அந்தச் சமயத்தில் வேறு செலவுகள் செய்யப் பணம் இருக்காது.


அதனால்தான் வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெறாமல் இருந்ததே ஒழிய, ஆடியில் திருமணங்கள் செய்யக் கூடாது என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை. ஆடி மாதம் முழுவதுமே விசேஷம் தான். ஒரு வருடத்தை போக சம்பிரதாயம், யோக சம்பிரதாயம் என இரண்டாகப் பிரிப்பர். போக சம்பிரதாயம் என்பது தை மாதம் முதல் ஆனி வரை உள்ள காலம்.


யோக சம்பிரதாயம் என்பது ஆடி முதல் மார்கழி வரை. போக சம்பிரதாயக் காலத்தில் கல்யாணம், விருந்து, விசேஷங்கள் என்று மகிழ்ச்சியாக இருக்கும் காலம். யோக சம்பிரதாயம் என்பது தபஸ், யாகம், யக்ஞம், பூஜைகள், பிரார்த்தனைகள் செய்யக்கூடிய காலம். யோக காலத்தில் முதல் மாதம் ஆடி என்பதால் தெய்வீகப் பண்டிகைகள் அதிகம்.


 ஆடி பிறப்பு, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப் பவுர்ணமி, ஆடித்தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப்பூரம் என்று மாதம் முழுவதுமே விசேஷமாக உள்ளது. ஆடி மாதத்தில் சந்திரன் சொந்ந வீட்டில் இருக்கிறார்.


 அந்த சொந்த க்ஷேத்திரத்தில், சூரியனுடன் சம்பந்தம் ஏற்படும் பொழுது, அதற்கு விசேஷம் அதிகம் உண்டு. இந்த ஆடி மாதத்தில் பகவத் தியானம் மிகவும் முக்கியமானது. ஆடி மாதம் முழுவதும் ஒரு பொழுது விரதம் இருந்து பகவானை பூஜித்து தியானித்து வந்தால் சகல சம்பத்துகளும் சேரும்.

யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் உள்ள தெய்வீக ரகசியம்

 🐘🐘🐘 யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் உள்ள தெய்வீக ரகசியம் என்ன?...



தினமும் மூலிகை தாவரங்களை மட்டும் உண்டு மிருகங்களில் பலமுள்ளதாக திகழும் உயிரினம் யானை! மகத்தான தெய்வீக அம்சங்கள் பொருந்தியது.


உலகில் வாழும் உயிரினங்களில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிக்கும் தன்மை யானைக்கு மட்டுமே உண்டு.


மனிதர்களாகிய நமக்கு கூட தினமும் 24 நிமிடங்களுக்கு ஒருமுறை நம்முடைய சுவாசமும் ஒரு நாசித் துவாரத்திலிருந்து இன்னொரு நாசி துவாரத்தில்  மாறிக்கொண்டே இருக்கும்.


சுவாசத்தை கட்டுப்படுத்தும் மற்றும் முறைப்படுத்தும் ஆன்மீக முயற்சிகளுக்கு சரகலை என்று பெயர்.


பிராணயாமம், வாசியோகம் போன்றவைகளும்  நமது சுவாசத்தை தெய்வீகத் தன்மைக்கு  முன்னேற்றம் அடைய வைக்கும் ஆன்மீக பயிற்சி முறைகளாகும்.


வாசியோகம் அல்லது பிராணாயாமத்தில் குறிப்பிட்ட நிலையை எட்டியவர்கள் எப்போதும் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும்  சுவாசிக்கும் திறமையை பெற்றுவிடுவார்கள். இதற்கு சுழுமுனை வாசி யோகம் என்று பெயர்.


இயற்கையாகவே சுழுமுனை வாசியோகம் உள்ள யானை அதன் தும்பிக்கையை நம் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்வதால் நமக்கு மகாலட்சுமியின் ஆசிர்வாதம் கிடைக்கிறது என்பதுதான் இதன் பின்னணியில் உள்ள தெய்வீக ரகசியம்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Monday, July 24, 2023

பஞ்ச பாத்திரம்

 'பஞ்ச பத்ர பாத்திரம்'



இல்லங்களில் பூஜையின் 

பொது ' பஞ்ச பாத்திரம் ' என்ற 

பாத்திரத்தை பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம்.


அதன் இயற் பெயர் 

'பஞ்ச பத்ர பாத்திரம்' 

என்பதாகும்.


அதாவது ஐவகை 

பத்திரங்களை(இலைகள்) 

நீரில் இட்டு, 

அந்நீரை குறிப்பிட்ட ஒரு 

பாத்திரத்தில் விட்டு, 

“உத்திரிணி “ என்ற சிறு 

கரண்டியால் நீரை எடுத்து 

பூஜைக்குப் பயன்படுத்துவதால் அப்பெயர்.


துளசி, 

அருகு, 

வேம்பு, 

வில்வம், 

வன்னி 

ஆகிய 5 இலைகளே பஞ்ச 

பத்திரங்கள்.

இந்த பத்திரங்களும் நீரும் 

விடப்படும் பாத்திரம் 

'பஞ்ச பத்ர பாத்திரம்'.


இதுவே காலப்போக்கில் மருவி 

“பஞ்ச பாத்திரம் “ என்றானது.


இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை. 


இந்த ஐந்து இலைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

Thursday, July 20, 2023


 **சர்வ மங்கலங்களும் தரும் மாவிளக்கு வழிபாடு**!


மாவிளக்கு வழிபாடு என்பது இந்து சமயத்தில் அம்மன் வழிபாடு முறைகளில் ஒன்று


.பண்டிகை காலத்தில் மாக்கோலம் இடுதல், மாவிளக்கு ஏற்றுதல் போன்ற வழக்கங்கள் வழிபாட்டில் இருந்து வந்ததுள்ளது..


இன்றும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி தங்கள் கோரிக்கைகளை அம்பாளிடம் முறையிடுகின்றன


அம்பாளும் தன்னை நாடி வரும் பக்தர் களுக்கு சகல செல்வங்களையும் தந்து அருள்பாவிக்கிறாள்.


நோய்கள் தீர மாரியம்மன்,காளி போன்ற தெய்வங்களுக்கு மாவிளக்கு ஏற்றி நோத்திக் கடன் செய்வர்.ஆறு,குளம் உள்ள ஊர்களில் இருக்கும் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது இரட்டிப்பு பலனைத் தரும்.


இடித்தெடுத்த பச்சரிசி,வெல்லம்,ஏலக்காய் போன்ற கலவையை விளக்கு வடிவில் செய்து தீபம் ஏற்றுவதே மாவிளக்கு ஆகும்.


மாவிளக்கு தத்துவம்


காணும் இடங்களெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பேரொளி வடிவான இறைத்துவத்தையே மாவிளக்கு உணர்த்துகிறது.


அரிசி[அன்னம்] பிராணமயம்.அன்னம் பிரம்ம ஸ்வரூபமேயாகும்.உலகிலுள்ள உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது அன்னமே.


வெல்லத்தின் குணம் மதுரம்.அதாவது இனிமை. மதுரமான அம்பிகை மதுரமானவள்.ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் மதுரமான அம்பிகையே உறைகிறாள்.


அக்னி பகவான் நெய்யில் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம்.நெய்யை வார்தே ஹோமங்கள் வளர்க்கிறோ ம்.ஹோமங்கள் மூலம் நாம் சமர்ப்பிக்கும் பொருட்க ளை அக்னியே உரிய தேவதைகளிடம் சேர்க்கிறார்.


அக்னி பகவானின் சக்தி நெய்யில் அடங்கியுள்ளது. மாவிளக்கில் ஜோதியாக நின்று ஒளிரும் ஜோதி ஸ்வரூபமாக அம்பிகை நம் இல்லங்கள் தோறும் அருள்புரிவதற்காகவேமாவிளக்கு ஏற்றுகிறோம்.


நம்மையே விளக்காகவும்,மனதை நெய்யாகவும், அன்பை தீபமாகவும் அர்ப்பணிக்கும் ஒரு அபூர்வ வழிபாடு இது.அம்மன் கோவிலில் மட்டுமல்லாமல் அவரவர் குலதெய்வத்திற்கு ஆண்டுக்கு 1 முறையா வது செய்ய வேண்டும்.


வீட்டில் மாவிளக்கு போடுதல்!


பெரும்பாலான வீடுகளில் ஆடி,தை வெள்ளிக்கிழமை களில் மாவிளக்கு போடுவதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள்.


புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு வீடுகளில் மாவிளக்கு போடுவதும் உண்டு.கோவில்க ளில் பக்தர்கள் ஒரு குழுவாக சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தினத்தில் அம்பிகைக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.


மாவிளக்கு செய்வது எப்படி


1.மாவிளக்கு ஒரு கிலோ அரிசி என்றால் அதனை களைந்து விட்டு ஒரு துணியில் பரப்பி விட்டு காயவைக்கவும். லேசான ஈரப்பதத்துடன் இருக்கும் போது மிக்ஸி அல்லது மிஷினில் கொடுத்து அரைத்து சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.


மாவு அரைக்கும் போது நான்கு, ஐந்து ஏலக்காயை சேர்த்து அரைக்கவும். ஒரு கிலோ அரிசிக்கு முக்கால் கிலோ வெல்லம், வெல்லத்தை துருவி அல்லது தூள் துளாக நுணுக்கி அரைத்த அரிசி மாவுடன் கலந்து வைக்கவும்.


அதில் சிறிதளவு பால் ஊற்றி கொள்ளலாம். பின்னர் அதனை நன்றாக பிசறி விட்டு உருண்டையாக உருட்டவும். உருண்டை பிடிக்க வராவிட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து உருட்டலாம்.  ஒரளவு பெரிய உருண்டையாக தான் உருட்டுவார்கள்.


உருண்டையின் மேல் எலுமிச்சை பழத்தை அழுத்தினால் சிறிது குழிப்போல அச்சு பதியும். குழியின் ஓரத்தில்  குங்குமம் பொட்டு வைத்து நெய் விளக்கு கேற்றி வைக்கவும்.


விளக்குப்  முன்பு கோலம் போட்டு ஒரு வாழை இலை விரிக்கவும். வெள்ளியில் பேசின் மாதிரி ஏதாவது பாத்திரம் இருந்தால் (இல்லைனா,இலையில்) அதில் இந்த மாவை கைகளினாலே உருண்டையாக திரட்டவும்.


நான்குபுரமும் சந்தனம், குங்குமம் பொட்டு வக்கவும். நடுவில் ஒரு பெரிய கிண்ணம் அளவுக்கு ஒரு குழி பண்ணி அது நிறைய நெய் ஊற்றவும். நாலு பக்கமும் திரியின் நுனி வரும்படி போடவும்.


அப்படி இல்லைனா பஞ்சு ஒரு நெல்லிக்காய் அளவு உருட்டி நுனியில் கூர்ப்பாக திரித்து நெய்யின் நடுவில் வத்து நல்ல நேரம் பார்த்து விளக்கு ஏற்றவும் குறைந்தது 2 மணி நேரங்களாவது மாவிளக்கு எரியனும்.


அந்த நேரம் நீங்கள் விளக்கு முன்பு உக்காந்து ஸ்லோகங்களோ பாராயணங்களோ சொல்லிண்டு இருக்கலாம். வெத்திலை பாக்கு, பழம் தேன்காய் உடைத்து நைவேத்யம் செய்யனும். மாவிளக்கு எல்லாருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம்.


வாழ்க வளமுடன்!

Saturday, July 15, 2023

யார் காதல் மன்னன் ?



 

காதல் மன்னன் யார்?

 

புன்னகை பூக்கும். பூ முகம் மலரும்!!

காதல் கொள்ளும். கவிதை சொல்லும்!!

ஆனந்தம் பொங்கும் அலைபாயும் நெஞ்சம்!!

காதல் மன்னன் யார்?

              

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgw_rSFN1JXtnws1HauIDq9ei9Jiis99JWC61Zgaze7DOSPrnqfP29q_hlJtLusP0Kmi1LRJvFcNUV2wXmScUDmUy1LzLvicdcu0lcqi5cbdy0PheelnDCCz1y2Vz7ztqxh3aSj-ay86w3B/s320/Gemini_Ganesan.jpg

           

 

மலர்ந்த முகமும் வசீகரிக்கும் கண்களும் பார்த்த உடனேயே ஒருவர்  அவர்பால் ஈர்க்கப்படுகிறார் என்றால் எப்படி?

அவரது அமைதியான தோற்றமும், இனிமையான பேச்சும் மேலும் அவரிடம் மனம் செல்கிறது. எதனால்?

ஜாதகரீதியாக தெரிந்துகொள்ள முடியுமா?

முடியும். 

 

ஒருவரது  ஜாதகத்தில் லக்னம் அல்லது லக்னாதிபதி சுக்ரன் வீடுகளான ரிஷபம், துலாமில் அமைந்தாலும்,

எந்த லக்னமாயினும்  லக்னாதிபதியோடு சுக்ரன்  இணைந்திருந்தாலும்,

லக்னாதிபதியை சுக்ரன் பார்த்தாலும்

அந்த ஜாதகர் மேற்சொன்னவாறு இருப்பார். மேலும் மங்கையர் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் காதல் மன்னன் ஆகவும் திகழ்வார். கலாரசிகராகவும் இருப்பார்.

                                      

அவ்வகையில் கலைத்துறையில் சினிமாவில் புகழ்பெற்று விளங்கிய பழம்பெரும் நடிகர் திரு. ஜெமினிகணேசன் அவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாயோடு சுக்ரன் இணைந்திருந்ததாலும், அவர்கள் இருவரும் லக்னத்துக்கு 2ல் அமைந்தாலும், இவருக்கு இனிய பேச்சும்,வசீகரத் தோற்றமும் அமைந்தது.

 

 11ல் இருந்த சனி வலுவாக இருந்ததால் ஜனவசியமும் ஏற்பட்டது. திரையுலகில் சிறந்து விளங்கியதோடு மக்களால் அன்பாக காதல்மன்னன் என்றும் அழைக்கப்பட்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

கே

 

ஜெமினிகணேசன்

         இராசி

சந்

வி

   செ சு                                       

ல சூ

ரா பு

சனி

          

சந்

சு

(பு)

 

 

 

       அம்சம்

 

கே  சூ

சனி

ரா

    செ                                        

 

வி

 

      

                                                                                                                                    

                     

                                                                                                                                

           *******************************************************************************************

 

 

 

திரு. என்.டி.ராமராவ் அவர்களின் ஜாதகம்

 

 

அடுத்து  கலைத்துறையிலும் அரசியலிலும் சிறந்து விளங்கிய பழம்பெரும் நடிகர் திரு. என்.டி.ராமராவ் அவர்களின் ஜாதகம் ஆகும்.

 


 

 

 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEGypVYBJ0HsT6D_jQu2_ZBQV_-v14uGYVjggbUMePSHNwuI5yfnk7EHDkJgIxRoA0WLEoVUjQ_pNQoz-eV9vXK364sBBc3EGKcJ2Vt62GB-oPrVqOE_Y0wRRKIILyEokcOQwYVh6at4EX/s1600/images+%252853%2529.jpg

 

 

 

 

  சந்  வி  

 

சூ பு  கே

 

 

 

 

       அம்சம்

 

சனி

 

சுக்

                                          

செ  ரா

 

 

 

சுக்

சூ பு

செ

கே

 

28/5/1923 திங்கள்

         இராசி

4.45 p.m.   சுவாதி

ரா

                                          

  வி சந்

சனி

 

 

 

 

 











 

 

 

 

இவரது ஜாதகத்தில் சுக்ரன் வீடான துலாமில் லக்னம் அமைந்ததும், லக்னாதிபதி சுக்ரன் 7ஆம் வீட்டில் அமைந்து  லக்னத்தைப் பார்ப்பதும் சிறப்பாகும்.

லக்னத்தில் குருவும், சந்திரனும் அமைந்து  லக்னாதிபதிப் பார்ப்பதும் அருமையான அமைப்பாகும்.

 

லக்னத்தில் குரு அமைந்தது தெய்வத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட ஜாதகம் என்பர். அத்தோடு சந்திரன் இணைவு என்பது சந்திரபிம்பத்தைப் போன்ற முகப்பொலிவையும் தோற்றத்தையும் குறிப்பதாகும்.என்.டி.ராமராவ் அவர்களின் முகத்தோற்றம் ஒப்பனையில் தெய்வீகப்பொலிவைக் காட்டியதற்கு இதுவே காரணம். அதனாலேயே அவர் கிருஷ்ணர் வேடம் தரித்தாலே நிஜகிருஷ்ணராகவே மாறிவிடுகிறார்.

 

கோடானுகோடி மக்களின் உள்ளங்களில் அவர் கிருஷ்ணராகவே வாழ்ந்துகொண்டிருந்தார். மக்களின் மனங்களில் உண்மையில் அவர் காதல்மன்னனாகவே  வாழ்ந்தார்.

 

11மிடத்து ராகுபகவான் அதை செம்மையாக செய்தார். 5லிருந்த கேதுவும் அரச யோகத்தைத் தந்து அரசியலில் வெற்றியைத் தேடித் தந்தார். ஆந்திர அரசின் முதல்வராகவும் விளங்கினார்.

 

***************************************************************************************************

 

உண்மையான காதல் மன்னன் யார்?

 

வேடம் தரித்து நடித்ததாலேயே இவர்கள் இவ்வளவு பேரும் புகழும் பெற்றார்கள் என்றால்……

 

உண்மையான காதல் மன்னன்  யாராவது இருந்திருப்பார் அல்லவா?

 

அவர் யார்?

 

ஆமாம், இருந்தார். அவர்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.             


               



                            

   https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheyzXHgFdp_P1v6yiIOoP3jq9EgWD8aCKerbu-tu2vCKPhftNNespgFOLEuutYCTBjZhdu89SwWGIhJGF6lAk4yDFhPcseIwYvufway3wtVuGpoNO5zKBxmz2kmozf0e05DDzMVKLgIghC/s320/IMG_20180619_164103.JPG

 

 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஜெனனம் ரிப ராசி , 

 

ரிப லக்னத்தில் பிறந்து இருக்கிறார். இதுவும் சுக்ரன் வீடு. 

 

அவர் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்து இருக்கிறார். 

 

லக்னத்திலேயே சந்திரன்.

 

லக்னாதிபதி சுக்கிரன் , 12 - ம் அதிபதி செவ்வாயுடன் இணைந்து மூன்றாம் வீட்டில் இருக்கிறார். மேலும் பாவி ராகுவும் கூடவே நிற்கிறான். 

 

4க்குரியவன் சூரியன் ஆட்சிபலத்தோடு  8ஆம் அதிபதி குருவுடன் சேர்ந்து உள்ளார்.

 

மேலும் பாக்கியாதிபதி சனி பகவான் 7மிடத்திலிருந்து லக்னத்தை பார்ப்பதாலும் லக்னத்தில் சந்திரன் உச்சம் பெற்றதாலும் லக்னாதிபதி சுக்கிரனாக இருப்பதாலும் அழகுக்கு பஞ்சமில்லாமல் தெய்வீக உருவம் பெற்றார். 

 

அதே சமயம் சனியின் பார்வையால் கருத்த மேனியும் லக்னத்தில் சந்திரன் உச்சமாகி இருப்பதால் அமைதியான வசீகரத் தோற்றமும் பெற்றார். 

 

                                   2 - ம் இடத்து அதிபதி புதன் ஐந்தாம் வீட்டில் உச்சம் பெற்றான். ஆகையால் அறிவுக்கு ஒரு குறையும் இல்லை.  என்றும் சிரித்த முகமும் இளமையான தோற்றமும் கொண்டவராக இருந்தார்.

உத்தவரை குருவாக அடைந்து அனைத்து வேதமும் அறிந்தவராக இருந்தார்.  

 

 

 

 

 

    

 சந்

 

 

         இராசி

சுக் ரா செ

கே

சூ வி

                                          

சனி

பு

          

கே

  சந்   

 

 

       அம்சம்

செ

பு

      வி                                      

ரா சனி

சுக்

சூ

 



 

 

 

 

 

 

 

 

 

மேலும் நாலாம் வீட்டில் குரு ஆட்சி பெற்ற சூரியனுடன் இருப்பதால் கல்வியில் மிக சிறப்பாக இருந்தார். 64 ஆயகலைகளையும் அறிந்தவர் என்று பெயர் எடுத்தார்.

கலாரசிகர்.

இசைப்பிரியர்.

2க்குரிய புதன் உச்சம். குழல் ஊதுவதில் விருப்பம்.

அவரது குழல் இசை தெய்வீக கானமாகத் திகழ்ந்தது. அவரது குழல் இசையைக் கேட்ட மனிதர்கள், கோபியர் தேவநிலயை எய்தினார். மனிதர்கள் மட்டுமல்லாது பறவைகளும், விலங்குகளும் கூட அவரது இசைக்கு வசமாயின.

 










https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilClVe5o3qfrKhbf64mNGECKYmKsGxTfCWDNxWQENXSi6mh4Z5CSTNp5clgUbTc-FAO9K1FrhntXpDiY-Pia5PM5ze_erlpiSnZV0rQRIID6JSW7MuTpbdVp175pkhXtN1qM-z9LeM0eKy/s320/img1140201020_1_1.jpg

 

லக்னாதிபதி சுக்கிரனும், மூன்றாம் அதிபதி சந்திரனும், பரிவர்த்தனை ஆகியும் உள்ளனர்.

 

ஏழாம் இடத்தில் சனி , ஏழுக்கு உடைய செவ்வாய் ஆறுக்கு உடைய சுக்கிரனுடன் சேர்ந்து மேலும் பாவி ராகுவுடனும் கூடி மூன்றாம் வீட்டில் நிற்பதாலும். அதனால் அவருக்கு பல மனைவி அமைந்தார்கள்.

 

               https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_lOxpW6dF3po1YVi3xUVX4Fw9SLEElUyosy7Wdsy0ft7ihVIWXfm_Cf4FK-5zYYMNl-SWx4mcQfIo5Lv4ch_JCvII0e2rW4XcE2rxui-vorqLkHVe8uyvJn8dRGvHkJyRCE1-L9RbScGY/s320/3148bb009c927f27aa2677aaaf490bc4_XL+-+Copy.jpg

 

சந்திரனுக்கு ஏழாம் இடத்தில் சனி  இருந்ததாலும் லக்னத்தில் மூன்றாம் அதிபதி சந்திரன் உச்சம் பெற்று இருக்கிறான்.

மூன்றில் செவ்வாய்  நீசமாகி இருக்கிறான். மேலும் வர்கோத்தம் பெற்றும் உள்ளார். ஆனாலும் அந்த வீட்டதிபதி சந்திரன் உச்சமாகியும் உள்ளதால் நீசபங்க இராஜயோகம் ஏற்பட்டு விட்டது.

ஆகவே கிருஷ்ணர் மிகவும் வீர தீர  மிக்கவராகவும் விளங்கினார்.அரசியல்ஞானம் மிக்கவராகவும் இருந்தார். யதுகுலத்திற்கே அரசராகவும் திகழ்ந்தார்.

 

இல்லறத்திலும் அரசியலிலும்,ஆன்மீகத்திலும் மிகச்சிறப்பாக வாழ்ந்த ஒரு தெய்வீகபுருஷர் ஸ்ரீகிருஷ்ணர். 
இவரது ஜெனனம் ஒரு அவதார நோக்கத்தைப் பூர்த்தி செய்தது

 

இந்த நாளில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பற்றி எழுதுவதில் மிக்க மகிழ்ச்சியும் இதை சாத்தியமாக்கிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் என்னுடைய நன்றி. 

 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheWZv_pAXo2fCt-uiZeSky51lhkTceu2xzkG_6TKvx0qTDalslYqFJ4Km8lAAt13uMRD2DZMcQliPHYAaRbjCUcnlLJUZd25AZzsGhkCb5K0R1YsRx5lYrYKs7hVXU6NogdpTahpDu5pb7/s1600/download.jpg

 

 

கிருஷ்ணார்ப்பணம்.