'பஞ்ச பத்ர பாத்திரம்'
இல்லங்களில் பூஜையின்
பொது ' பஞ்ச பாத்திரம் ' என்ற
பாத்திரத்தை பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம்.
அதன் இயற் பெயர்
'பஞ்ச பத்ர பாத்திரம்'
என்பதாகும்.
அதாவது ஐவகை
பத்திரங்களை(இலைகள்)
நீரில் இட்டு,
அந்நீரை குறிப்பிட்ட ஒரு
பாத்திரத்தில் விட்டு,
“உத்திரிணி “ என்ற சிறு
கரண்டியால் நீரை எடுத்து
பூஜைக்குப் பயன்படுத்துவதால் அப்பெயர்.
துளசி,
அருகு,
வேம்பு,
வில்வம்,
வன்னி
ஆகிய 5 இலைகளே பஞ்ச
பத்திரங்கள்.
இந்த பத்திரங்களும் நீரும்
விடப்படும் பாத்திரம்
'பஞ்ச பத்ர பாத்திரம்'.
இதுவே காலப்போக்கில் மருவி
“பஞ்ச பாத்திரம் “ என்றானது.
இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை.
இந்த ஐந்து இலைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment