Monday, July 24, 2023

பஞ்ச பாத்திரம்

 'பஞ்ச பத்ர பாத்திரம்'



இல்லங்களில் பூஜையின் 

பொது ' பஞ்ச பாத்திரம் ' என்ற 

பாத்திரத்தை பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம்.


அதன் இயற் பெயர் 

'பஞ்ச பத்ர பாத்திரம்' 

என்பதாகும்.


அதாவது ஐவகை 

பத்திரங்களை(இலைகள்) 

நீரில் இட்டு, 

அந்நீரை குறிப்பிட்ட ஒரு 

பாத்திரத்தில் விட்டு, 

“உத்திரிணி “ என்ற சிறு 

கரண்டியால் நீரை எடுத்து 

பூஜைக்குப் பயன்படுத்துவதால் அப்பெயர்.


துளசி, 

அருகு, 

வேம்பு, 

வில்வம், 

வன்னி 

ஆகிய 5 இலைகளே பஞ்ச 

பத்திரங்கள்.

இந்த பத்திரங்களும் நீரும் 

விடப்படும் பாத்திரம் 

'பஞ்ச பத்ர பாத்திரம்'.


இதுவே காலப்போக்கில் மருவி 

“பஞ்ச பாத்திரம் “ என்றானது.


இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை. 


இந்த ஐந்து இலைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment