*நிகழ்வும்*(ஆருடமும்)
*ஓரையின் மகத்துவமும்*
இந்த வீடியோ 14/08/2021 அன்று வெளியானது.அப்போது வகுப்பறையில் பயிற்சிக்காக ஆய்வுக்கு கொடுக்கப்பட்டது.
தற்போது இன்று 25 செப்டம்பர் 2023 மதியம் 2 30 மணிக்கு நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.
இதனை ஏற்கனவே நான் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது சொல்லக்கூடிய விஷயம் ஆச்சரியமான ஒன்று.
அது என்னவெனில் ஒரு இறந்தவர்கள் ஜாதகத்தை நாம் பார்க்கும் போது பரிசீலிக்கும் போது அந்த வேலையில் என்ன நிகழ்வுகள் கிரகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அதன்படி பார்த்தால் இறந்தவர்கள் ஜாதகத்தை பார்க்கும் போது அந்த நேரம் *எமகண்டமாக* இருக்கும்.
அடுத்தது ஜாதகருடைய *லக்ன அதிபதி நீசமாக இருப்பார்.*
அடுத்ததாக கோச்சாரத்தில் *சந்திரன் மாந்தியை தொடர்பு கொள்வார்*
இதுதான் விதி.
அந்த வகையில் பார்க்கும்போது இங்கே வீடியோ பார்த்துக் கொண்டிருந்த போது இன்று திங்கட்கிழமை.
மதியம் 2:30 மணி *அப்போது எமகண்டம் இல்லை.*
இன்றைய தின கோட்சாரத்தில் *சந்திரன் மாந்தியை தொடர்பு கொண்டு இருக்கிறது.*
*லக்னம் மகரம்*
*லக்னாதிபதி சனி லக்னத்திற்கு மாரக ஸ்தானத்தில் 2ஆமிடத்தில்*
இவை அனைத்துக்கும் மேலாக 2.00 மணிமுதல் 3.00 மணி வரையிலும் *சனி ஓரை* செயல்பட்டுக் கொண்டிருந்தது.
சனி ஓரை சனியின் தீயப்பலனை பலன்களையும் ஆயுள், தொழில், வேலை பற்றிய விஷயங்களையும் வெளிபடுத்துபவர்.
எனவே அந்த நேரத்தில் சனியின் ஆதிக்கம் மற்றும் அதன் காரகங்கள் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டது என்பதைக் காண முடிந்தது.
அன்றைய தினம் கோட்சார நிலை
ஆக ஜோதிட விதிகள் நடைமுறையில் எவ்வாறு இணைந்து செயல்படுகிறது என்பது ஆச்சரியமளிக்கக் கூடியதாகவே உள்ளன.
*ஆருடமும் ஓரையும்* எவ்வளவு பின்னி பிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
No comments:
Post a Comment