Thursday, July 20, 2023


 **சர்வ மங்கலங்களும் தரும் மாவிளக்கு வழிபாடு**!


மாவிளக்கு வழிபாடு என்பது இந்து சமயத்தில் அம்மன் வழிபாடு முறைகளில் ஒன்று


.பண்டிகை காலத்தில் மாக்கோலம் இடுதல், மாவிளக்கு ஏற்றுதல் போன்ற வழக்கங்கள் வழிபாட்டில் இருந்து வந்ததுள்ளது..


இன்றும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி தங்கள் கோரிக்கைகளை அம்பாளிடம் முறையிடுகின்றன


அம்பாளும் தன்னை நாடி வரும் பக்தர் களுக்கு சகல செல்வங்களையும் தந்து அருள்பாவிக்கிறாள்.


நோய்கள் தீர மாரியம்மன்,காளி போன்ற தெய்வங்களுக்கு மாவிளக்கு ஏற்றி நோத்திக் கடன் செய்வர்.ஆறு,குளம் உள்ள ஊர்களில் இருக்கும் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது இரட்டிப்பு பலனைத் தரும்.


இடித்தெடுத்த பச்சரிசி,வெல்லம்,ஏலக்காய் போன்ற கலவையை விளக்கு வடிவில் செய்து தீபம் ஏற்றுவதே மாவிளக்கு ஆகும்.


மாவிளக்கு தத்துவம்


காணும் இடங்களெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பேரொளி வடிவான இறைத்துவத்தையே மாவிளக்கு உணர்த்துகிறது.


அரிசி[அன்னம்] பிராணமயம்.அன்னம் பிரம்ம ஸ்வரூபமேயாகும்.உலகிலுள்ள உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது அன்னமே.


வெல்லத்தின் குணம் மதுரம்.அதாவது இனிமை. மதுரமான அம்பிகை மதுரமானவள்.ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் மதுரமான அம்பிகையே உறைகிறாள்.


அக்னி பகவான் நெய்யில் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம்.நெய்யை வார்தே ஹோமங்கள் வளர்க்கிறோ ம்.ஹோமங்கள் மூலம் நாம் சமர்ப்பிக்கும் பொருட்க ளை அக்னியே உரிய தேவதைகளிடம் சேர்க்கிறார்.


அக்னி பகவானின் சக்தி நெய்யில் அடங்கியுள்ளது. மாவிளக்கில் ஜோதியாக நின்று ஒளிரும் ஜோதி ஸ்வரூபமாக அம்பிகை நம் இல்லங்கள் தோறும் அருள்புரிவதற்காகவேமாவிளக்கு ஏற்றுகிறோம்.


நம்மையே விளக்காகவும்,மனதை நெய்யாகவும், அன்பை தீபமாகவும் அர்ப்பணிக்கும் ஒரு அபூர்வ வழிபாடு இது.அம்மன் கோவிலில் மட்டுமல்லாமல் அவரவர் குலதெய்வத்திற்கு ஆண்டுக்கு 1 முறையா வது செய்ய வேண்டும்.


வீட்டில் மாவிளக்கு போடுதல்!


பெரும்பாலான வீடுகளில் ஆடி,தை வெள்ளிக்கிழமை களில் மாவிளக்கு போடுவதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள்.


புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு வீடுகளில் மாவிளக்கு போடுவதும் உண்டு.கோவில்க ளில் பக்தர்கள் ஒரு குழுவாக சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தினத்தில் அம்பிகைக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.


மாவிளக்கு செய்வது எப்படி


1.மாவிளக்கு ஒரு கிலோ அரிசி என்றால் அதனை களைந்து விட்டு ஒரு துணியில் பரப்பி விட்டு காயவைக்கவும். லேசான ஈரப்பதத்துடன் இருக்கும் போது மிக்ஸி அல்லது மிஷினில் கொடுத்து அரைத்து சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.


மாவு அரைக்கும் போது நான்கு, ஐந்து ஏலக்காயை சேர்த்து அரைக்கவும். ஒரு கிலோ அரிசிக்கு முக்கால் கிலோ வெல்லம், வெல்லத்தை துருவி அல்லது தூள் துளாக நுணுக்கி அரைத்த அரிசி மாவுடன் கலந்து வைக்கவும்.


அதில் சிறிதளவு பால் ஊற்றி கொள்ளலாம். பின்னர் அதனை நன்றாக பிசறி விட்டு உருண்டையாக உருட்டவும். உருண்டை பிடிக்க வராவிட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து உருட்டலாம்.  ஒரளவு பெரிய உருண்டையாக தான் உருட்டுவார்கள்.


உருண்டையின் மேல் எலுமிச்சை பழத்தை அழுத்தினால் சிறிது குழிப்போல அச்சு பதியும். குழியின் ஓரத்தில்  குங்குமம் பொட்டு வைத்து நெய் விளக்கு கேற்றி வைக்கவும்.


விளக்குப்  முன்பு கோலம் போட்டு ஒரு வாழை இலை விரிக்கவும். வெள்ளியில் பேசின் மாதிரி ஏதாவது பாத்திரம் இருந்தால் (இல்லைனா,இலையில்) அதில் இந்த மாவை கைகளினாலே உருண்டையாக திரட்டவும்.


நான்குபுரமும் சந்தனம், குங்குமம் பொட்டு வக்கவும். நடுவில் ஒரு பெரிய கிண்ணம் அளவுக்கு ஒரு குழி பண்ணி அது நிறைய நெய் ஊற்றவும். நாலு பக்கமும் திரியின் நுனி வரும்படி போடவும்.


அப்படி இல்லைனா பஞ்சு ஒரு நெல்லிக்காய் அளவு உருட்டி நுனியில் கூர்ப்பாக திரித்து நெய்யின் நடுவில் வத்து நல்ல நேரம் பார்த்து விளக்கு ஏற்றவும் குறைந்தது 2 மணி நேரங்களாவது மாவிளக்கு எரியனும்.


அந்த நேரம் நீங்கள் விளக்கு முன்பு உக்காந்து ஸ்லோகங்களோ பாராயணங்களோ சொல்லிண்டு இருக்கலாம். வெத்திலை பாக்கு, பழம் தேன்காய் உடைத்து நைவேத்யம் செய்யனும். மாவிளக்கு எல்லாருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம்.


வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment