Friday, August 11, 2023

சவாலே சமாளி




 *ஜோதிட பார்வை*

*மாத்தி யோசி* 


*பிரச்சினைகளை சவால்களாக மாற்றுங்கள்! வெற்றி காணலாம்!* 


“எனக்கு ஒரு பிரச்சினை..”என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்...பிரச்சினை என்று சொன்னாலே  கவலையும் , பயமும் கட்டாயம் வரும்....

"எனக்கு ஒரு சவால் “என்று சொல்லிப் பாருங்கள் ...தைரியமும் ,தன்னம்பிக்கையும் தானாகவே வரும்..”


ஆம்..நிஜம்தானே..!


“காவல்காரன்” என்று ஒரு  படம்.. எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட பின் எம்.ஜி.ஆர்.நடித்த படம்.... ஷூட்டிங் ஆரம்பமானது..


வசனம் பேசி நடித்தபோது , எம்.ஜி.ஆரின் குரலில் குறை தெரிந்தது..முன்னர் பேசியது போல் தெளிவாகப்  பேச முடியவில்லை..


“பொருத்தமான குரல் உடையவர்களைக் கொண்டு டப்பிங்  கொடுத்து இந்தப் பிரச்சினையை சரி செய்து விடலாம் ” என்று சிலர் யோசனை சொல்லியிருக்கிறார்கள்...


ஆனால், எம்.ஜி.ஆர். இதை ஏற்க மறுத்து விட்டாராம்... “இது பிரச்சினை இல்லை..எனக்கு ஏற்பட்டிருக்கும் சவால்...

நானே என் சொந்தக் குரலில் பேசுகிறேன். மக்கள் ஏற்றுக் கொண்டால்  தொடர்ந்து நடிக்கிறேன். ஒருவேளை என் குரலை ஏற்றுக் கொள்ளாவிட்டால்  , சினிமாவில் நடிப்பதையே விட்டு விடுகிறேன்” என்று சவால் விட்டுக் கூறி , அதன்படியே, எம்.ஜி.ஆர். சொந்தக் குரலில் பேசினார்...


பலத்த எதிர்பார்ப்போடு வந்தான் காவல்காரன்...


படத்தின்   சில இடங்களில்  எம்.ஜி.ஆரின் குரல் தெளிவாக இல்லாவிட்டாலும், ரசிகர்கள் அதைப் பெரிய பிரச்சினை ஆக்காமல் ஏற்றுக் கொண்டார்கள்..!.


“காவல்காரன்” ...சூப்பர்ஹிட்..!!.


"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி

மக்களின் மனதில் நிற்பவர் யார்

மாபெரும் வீரர் மானம் காப்போர்

சரித்திரம் தனிலே நிற்கின்றார்"


ஆம்...பிரச்சினைகள் என்று நினைப்பவர்கள் ,பின்தங்கி விடுகிறார்கள்...!!!

சவால்களை சந்திப்பவர்களே சரித்திரம் தன்னிலே நிற்கின்றார்கள் ...!!!


சந்திக்கத் தயாராவோம்..சவால்களை!


படித்ததில் பிடித்தது

அன்புடன்


 *ஜோதிடப் பார்வை*

 *மாத்தி யோசி* 


 *பிரச்சனை/சவால் 6ஆமிடம்* 


 *சவாலை தைரியமாக எதிர்கொள்ளல் 3ஆமிடம்* 


 *தன்னம்பிக்கை/மனோதிடம் 5ஆமிடம்* 


லக்னாதிபதி வலுவாய் இருக்கும் பட்சத்தில் 

துணிந்து  எந்தவொரு செயலையும் துணிச்சலாக காரியம் ஆற்றுபவர்க்கு வெற்றி நிச்சயம்

என்பதற்கு ஒரு உதாரணம் இது.

No comments:

Post a Comment