Saturday, August 12, 2023

*ஜோதிடப் பார்வை* புதிர் முடிச்சும்* *முடிச்சவிழப்பும்*

 


12/08, 1:04 pm *ஜோதிடப் பார்வை* 

*மாத்தி யோசி*

*துப்பு துலக்குதல்* 


 *புதிர் முடிச்சும்*

*முடிச்சவிழப்பும்* 


 *நிகழ்வு* 

இரவு வேளை

ஒரு காட்டின் வழியே தாய் ஒருத்தி மிகுந்த பதற்றத்துடன் பயணம் செய்து கொண்டிருக்கிறாள். அவருக்கு கிடைத்த செய்தி அப்படி.

 *தனது மகன் பலமாக தாக்கப்பட்டு இரத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதுதான் செய்தி*


தாயின் மனம் தனது மகனை எப்படியாவது காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற நிலையில் பரிதவிப்பு.


உடன் வந்தாரோ அறிமுகம் இல்லாதவர். தான் வழிமாறி அழைத்து செல்லப்படுவதாக உணர்கிறார்.


மனம் பரபரப்பு அடைகிறது.எப்படியோ அவரிடமிருந்து தப்பித்துக் கொண்டு திக்கு தெரியாமல் ஓடுகிறார்.


நடுநிசி. 

அந்த இருட்டில் வனப்பகுதியில் மிகவும் பயம் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வழி அறியாது மிக விரைவாக ஓடுகிறார்.


அடிபட்டு கிடக்கும் மகனை எப்படி அடைவது?

தனக்கு ஏற்பட்ட ஆபத்தான நிலையிலிருந்து எப்படி தப்பிப்பது? என்ற சிந்தனையோடு ஓடுகிறார்.


ஆனால் சில நிமிடங்களில் முகமறியா நபர்களால் சூழப்பட்டு கொடூரமான முறையில் கத்தியால்  தாக்கப்பட்டு  அவர்  கொலை செய்யப்படுகிறார்.இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போகிறார். 


மறுநாள்

அந்த பெண்மணி  ஏதோ கொடிய வனவிலங்கால் தாக்கப்பட்டு இறந்து போனார் என்று வெளியுலகுக்கு தெரிவிக்கப்பட்டது.


: *ஜோதிட பார்வை*

 *மாத்தி யோசி*


*துப்பு துலக்குதல்* 

 *முடிச்சு அவிழ்ப்பு* 


விதி மதி கதி


 *விதி* 

கொடுப்பினை நாம் வாங்கி வந்த வரம் 

 *கதி*

 நாம் அடையவிருக்கும் பலன்(நல்ல/தீய)

 *மதி*

 நிகழ்வில் சிக்கிக்கொள்ளல்/தப்பித்துக் கொள்ளல்.



*ஜோதிட பார்வை* என்ன சொல்கிறது?

என்று *மாத்தி யோசிப்போமா?*


*துப்பு துலக்குதல்* 

 *முடிச்சு அவிழ்ப்பு* 


 *காட்டுப்பிரதேசம்*

 சிம்ம ராசி சூரியன் 


 *முகமறியா நபர்கள்/திருடர்கள்* ராகு/கேது


 *கத்தியால்/ஆயுதத்தால் தாக்குதல்*  செவ்வாய் சனி சேர்க்கை/பார்வை


 *நடுநிசி /இருட்டில்* சனி ராகு 


 *தவறான தகவல்* புதன் ராகு


 *பயணம், மனப்பதற்றம் பயம் கொள்ளல்*  பலமிழந்த சந்திரன் 


 *பாதை மாறுதல்/தவறுதல்* 

சுபர்களின் பார்வை இல்லாமல் போதல்.


இப்போது இவற்றை இணைத்துப் பாருங்கள்.

புரிந்து இருக்குமே!


 *புதிருக்கு முடிச்சு அவிழ்ந்ததா?*


       ............ மீண்டும் ஒரு புதிரில்


            ....... *தொடரும் புதிர


*ஆசான் உரை*

 *ஜம்பு மகரிஷி வாக்கியம்* 


8க்குரியவன்+செவ்வாய் இணைந்து 6 அல்லது 12ஆம் வீட்டில் இருந்தால் விரோதிகள்/கொடியவர்களது ஆயுதத்தால் மரணம் சம்பவிக்கும்.

8க்குரியவன் இராகு /கேதுவுடன் இணந்து 6/8 ஆமிடத்தில் இருந்தால் ஜாதகனின் ஆயுள் திருடர்களின் தாக்குதலினால் முடியும்.

உபய ராசிகளில் ஒன்று எட்டாம் இடமாக அமைய அந்த எட்டுக்குடையவன் சனியோடு இணைவு பெற்று சர ராசியில் அமர்ந்து இருந்தால் நெருக்கமான வனப்பிரதேசங்களில் ஜாதகனின் வாழ்நாள் முடிவடையும்.

[

No comments:

Post a Comment