*மனவலிமை யாருக்கு அதிகம் இருக்கும்?*
எந்த சூழ்நிலையிலும் தைரியத்தை இழக்காமல் *தன்னம்பிக்கையோடு செயல்படுபவர் யார்?*
ஜாதகத்தில் தன்னம்பிக்கையை பற்றி எதை வைத்து அறிந்து கொள்வது?
*எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பர்*
இந்த பழமொழியில் *சிரசு முக்கியம்* என்பதால் *ஜாதகத்தில் லக்னமே பிரதானம் ஆகும்.*
லக்னம் தான் சிரசு என்று அறியப்படுகிறது.
லக்னம் பிரதானம்.
லக்னம், லக்னாதிபதியே ஒரு ஜாதகத்தின் ஆணிவேராகும். இந்த இரண்டும் எந்த நிலையிலும் கிடவே கூடாது.
ஆத்ம பலத்தையும் மனோபலத்தையும் கொடுக்கக்கூடிய தந்தை என்று சொல்லக்கூடிய சூரியனும், மனோபலத்தை அளிக்கக்கூடிய தாயாகிய சந்திரனும் ஒரு ஜாதகத்தில் நன்னிலையில் அமையப் பெற்றிருக்க வேண்டும், அவர்கள் எவ்வகையிலும் கெடக்கூடாது.
அவ்வாறு இருக்கும் ஜாதகர்களுக்கு அற்புதமான மனோதிடம், தன்னம்பிக்கை இருக்கும்.
மூன்றாம் இடம் என்று சொல்லக்கூடிய உபஜெய ஸ்தானமாகிய வெற்றி ஸ்தானம் தைரிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய நிலையும் அதன் அதிபதியும் நன்நிலையில் இருப்பின் எந்த சூழ்நிலையிலும் ஜாதகர் வாழ்வில் எதையும் எதிர்கொண்டு வெல்லும் ஆற்றலை பெற்றவர் ஆவார்.
மனோ தைரியத்தோடு சிறப்பாக அவர்கள் செயல்படுவர். தன்னம்பிக்கையே காரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
No comments:
Post a Comment