Wednesday, August 23, 2023

*உச்சம் பெற்ற கிரகங்களால் ஜாதகனுக்கு என்ன கிடைக்கும்?*

 24-8-2023


 *உச்சம் பெற்ற கிரகங்களால் ஜாதகனுக்கு என்ன கிடைக்கும்?* 


கீழே உள்ள அனைத்தும் பொதுப் பலன்கள். அதை மனதில் கொள்க. உங்கள் ஜாதகத்தோடு இணைத்துப் பார்த்துக் குழம்ப வேண்டாம்.


1. ஜாதகத்தில் சூரியன் உச்சம் பெற்று இருந்தால் செல்வந்தர். மேன்மையான குணம் உடையவர். வீரம் மிக்கவர்.


2.சந்திரன் உச்சம் பெற்று இருந்தால் நல்ல உணவு, உடை, ஆபர்ணங்களை உடையவராக இருப்பார்.


3.செவ்வாய் உச்சம் பெற்று இருந்தால், பகட்டானவராக, வீரம் மிக்கவராக, வேறு ஊரில் வசிப்பவராக இருப்பார்.


4. புதன் உச்சம் பெற்று இருந்தால் அறிவாற்றல் மிக்கவராக இருப்பார்.


5.குரு உச்சம் பெற்று இருந்தால், கல்வி, புகழ், செல்வம் உடையவராக இருப்பார்.


6. சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தால் இயல், இசை, நாடகம், நடனம் போன்ற கலைகளில் ஆர்வமும், தேர்ச்சியும் உடையவராக இருப்பார்.


7. சனி உச்சம் பெற்று இருந்தால், அரசியலில் தலைமை பதவியும்,  அரசு கெளரவ பதவியும், தொழிலாளர்கள் தலைவராகவும் இருப்பார். மேலும் நாட்டில் விளையும் பொருட்கள் மற்றும் தொழிலாளர்களால் நன்மை பெறுபவராகவும் இருப்பார்.


என்றும் அன்புடன்

No comments:

Post a Comment