வணக்கம்.ஹரி ஓம்!
மெய்யன்பர்களே! இந்த தளத்திலே தினம் ஒரு
தகவல் என்ற தலைப்பிலே நாம் ஆன்மீக மற்றும் ஜோதிட சம்பந்தமான விஷயங்களைப் பற்றி பேச உள்ளோம்.
மனித வாழ்வில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளினால் ஏற்படும் தாக்கங்களுக்கு (நன்மை,தீமை அல்லது சாதக பாதகங்கள்) உரிய தீர்வை ரிஷிகள்,சித்தர்கள், யோகிகள் மனித குலத்திற்கு சாஸ்திரங்கள்
மூலம் தெரிவித்துள்ளதை இங்கு எடுத்து உரைக்கிறோம். குற்றம்,குறை இருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.
இன்று நாம் பேச உள்ள விஷயம்
ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷி
வியாச மகரிஷியின் அருந்தவப் புதல்வர் ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷி ஆவார்.கிளி முகம் கொண்டவர்.
கர்ப்பத்திலேயே ஞானத்துடன் பிறந்த சுகருக்கு,தந்தை வியாச மகரிஷியின் ஆசிர்வாதத்தால் ஞானமும்,
அறிவும் முழுமைபெற்றன. எவரும் கற்றுத் தரமாலேயே இயல்பாகவே வேதங்களையும்,சாஸ்திரங்களையும்
அறிந்து கொண்டவர். உலக ஆசைகள் ஏதுமின்றி, பிரம்மஞானியாக விளங்கினார்.
பஞ்சபாண்டவர்களில் அருச்சுனின் பேரனான பரிட்சித்து
மகாராஜா,தவத்திலிருந்த முனிவரை அவமதித்தால், முனிவரின் மகன் கொடுத்தசாபத்தினால் இறந்து
போக, அவரது மகன் ஜனமேஜெயன் தன் தந்தையின் அகால மரணத்திற்கு பரிகாரம் செய்ய, அங்கு வந்த
ஸ்ரீ சுகப்பிரம்மர், பாகவதத்தை எடுத்துரைத்தார். ஜனமேஜெயன் மனக்குழப்பத்தையும் நீக்கி,பரிட்சித்து
மகாராஜாவுக்கும் அனுகிரகம் செய்ய, மன்னன் வைகுந்தமடைந்தான். அத்தகைய பெருமையை கொண்ட
பாகவதம் சுகப்பிரம்ம ரிஷியால் உலகிற்கு கிடைத்தது
ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷியின் ஜெயந்தி உற்சவம் ஆனி மாதம்
திருவோணம் நட்சத்திரம் அன்று வருகிற 23-06-2016 யன்று உலகின் பல இடங்களிலும் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷி காயத்திரி
ஓம் வேததாத் மஹாய வித்மஹே!
வியாச புத்ராய தீமஹி,
தந்நோ சுகர் ப்ரசோதயாத்!
இந்நாள் சுபநாளாக
அமையட்டும்!
நமஸ்காரம்.
நாளை சந்திப்போம்.
அன்பர்கள் தங்களது கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் இந்த தளத்திலும்,
முக நூலிலும் பகிர்ந்து கொள்ளலாம்.
முக நூல் முகவரி:
No comments:
Post a Comment