Monday, June 27, 2016

27-06-2016 திங்கள் நீண்ட ஆயுள், நீடித்த புகழ்-மகிழ்ச்சி தரும் யோகம்!

வணக்கம்.
ஹரி ஓம்!
    மெய்யன்பர்களே! இந்த தளத்திலே தினம் ஒரு தகவல் என்ற தலைப்பிலே 
இன்று நாம் பேச உள்ள விஷயம்.
 நீண்ட ஆயுள், நீடித்த புகழ்-மகிழ்ச்சி தரும் யோகம்!

   

 6-க்குரியவன் நீசமாக வேண்டும்.
10-க்குரியவன் உச்சம் பெற வேண்டும்.
அப்படியிருப்பின்  ஜாதகன் நீண்டநாள் வாழ்வான்.
நோய்நொடியில்லாமல் வாழ்வான்.
வெற்றிகளையும், புகழையும் பெறுவான்.
மகிழ்ச்சியோடு வாழ்வான்.
   

இந்நாள் சுபநாளாக அமையட்டும்!
 நமஸ்காரம்.
 மீண்டும் சந்திப்போம்.






Friday, June 24, 2016

24-06-2016 வெள்ளி வீட்டி ல் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக நிலைத்திட!

வணக்கம்.
ஹரி ஓம்!
    மெய்யன்பர்களே! இந்த தளத்திலே தினம் ஒரு தகவல் என்ற தலைப்பிலே  நாம் ஆன்மீக மற்றும் ஜோதிட சம்பந்தமான  விஷயங்களைப் பற்றி பேச உள்ளோம்.
இன்று நாம் பேச உள்ள விஷயம்.
வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக நிலைத்திட!


   
திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா விஷ்ணுவின் காலை மகா லட்சுமி தாயார் பிடித்து விடுவதாக பல்வேறு கோவில்களில் சிற்பங்கள் மற்றும் உருவப் படங்களைப் பார்த்திருப்போம். மகாவிஷ்ணுவும், லட்சுமி தேவியும் தம்பதி சமேதரராக இருப்பதால் இதை நாம் பெரிதாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இதில் மாபெரும் ஒரு உண்மையை நமது முன்னோர் மறைத்து வைத்திருக்கிறார்கள். அதாவது கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் குடும்பத்தில் சொத்து பத்து சேரும் என்ற உண்மையை மறைத்து வைத்துள்ளனர். கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்..  ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு கீழ் வருகின்றது. அதே சமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர் ஜோதிட ரீதியாக வகுத்துவைத்துள்ளனர்.
   
ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டிருப்பதால், இந்த பகுதியில் பெண் என்ற சுக்கிரனின் கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும். எனவேதான் செல்வத்திற்கு அதிபதிகளான லட்சுமி தேவி மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள், ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் நமது முன்னோர்கள். கால மாற்றத்தால் ஆண் ஆதிக்கம், பெண் அடிமைத்தனம் போன்ற பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகளால் இம்முறைக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால் உன்னதமான இந்த நிகழ்வு தற்போது மறைந்து விட்டது வேதனைதான்.
 
ஆனாலும் தம்பதியரின் அன்பு அன்யோன்னியத்திற்கும், செல்வ வளமைக்கும்
இதை பின்பற்றினால் நன்மை நமக்கு தானே!


இந்நாள் சுபநாளாக அமையட்டும்!
 நமஸ்காரம்.
 மீண்டும் சந்திப்போம்.



Thursday, June 23, 2016

தினம் ஒரு தகவல் 23-06-2016 வியாழன் இரண்டு அப்பாக்கள்

வணக்கம்.
ஹரி ஓம்!

    மெய்யன்பர்களே! இந்த தளத்திலே தினம் ஒரு தகவல் என்ற தலைப்பிலே  நாம் ஆன்மீக மற்றும் ஜோதிட சம்பந்தமான  விஷயங்களைப் பற்றி பேச உள்ளோம்.

இன்று நாம் பேச உள்ள விஷயம்.
இரண்டு அப்பாக்கள்
ஜோதிடத்தில் சம்பந்தப்படுகிற கிரகங்களில் இரண்டு அப்பாக்களும், இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். பொதுவாக சூரியன், சனி என்ற அப்பா-மகனிடையே ஒற்றுமை இல்லை. அதே போல மற்றொரு அப்பா- மகனாகிய சந்திரன், புதனிடையே ஒற்றுமை இல்லை.
ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் ஒற்றுமையைக் காட்டுகிறார்கள். கோச்சாரத்தில் அப்பா- மகனிடையே பேதைக் ஏற்படுவதில்லை.

     எனவே சந்திரன், புதன் சம்பந்தமே பொதுவில் நல்லதல்ல.குறிப்பாக எட்டாம் வீட்டில் இருவரும் சேர்ந்து இருப்பது ஜாதகனின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தையும், பரம்பரை மூதாதையர்களின் சொத்திற்கு அழிவையும் தேடித் தந்துவிடுகிறது என்று ப்ருகு முனிவர் கூறுகிறார்.

நமஸ்காரம். 
நாளை சந்திப்போம் 

Friday, June 17, 2016

தினம் ஒரு தகவல் 17-06-2016 வெள்ளி

வணக்கம்.ஹரி ஓம்!
    மெய்யன்பர்களே! இந்த தளத்திலே தினம் ஒரு தகவல் என்ற தலைப்பிலே  நாம் ஆன்மீக மற்றும் ஜோதிட சம்பந்தமான  விஷயங்களைப் பற்றி பேச உள்ளோம்.
மனித வாழ்வில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளினால் ஏற்படும் தாக்கங்களுக்கு (நன்மை,தீமை அல்லது சாதக பாதகங்கள்) உரிய தீர்வை ரிஷிகள்,சித்தர்கள், யோகிகள் மனித குலத்திற்கு சாஸ்திரங்கள் மூலம் தெரிவித்துள்ளதை இங்கு எடுத்து உரைக்கிறோம். குற்றம்,குறை இருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.
இன்று நாம் பேச உள்ள விஷயம்
ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷி
 வியாச மகரிஷியின் அருந்தவப் புதல்வர் ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷி ஆவார்.கிளி முகம் கொண்டவர். கர்ப்பத்திலேயே ஞானத்துடன் பிறந்த சுகருக்கு,தந்தை வியாச மகரிஷியின் ஆசிர்வாதத்தால் ஞானமும், அறிவும் முழுமைபெற்றன. எவரும் கற்றுத் தரமாலேயே இயல்பாகவே வேதங்களையும்,சாஸ்திரங்களையும் அறிந்து கொண்டவர். உலக ஆசைகள் ஏதுமின்றி, பிரம்மஞானியாக விளங்கினார்.
    பஞ்சபாண்டவர்களில் அருச்சுனின் பேரனான பரிட்சித்து மகாராஜா,தவத்திலிருந்த முனிவரை அவமதித்தால், முனிவரின் மகன் கொடுத்தசாபத்தினால் இறந்து போக, அவரது மகன் ஜனமேஜெயன் தன் தந்தையின் அகால மரணத்திற்கு பரிகாரம் செய்ய, அங்கு   வந்த
ஸ்ரீ சுகப்பிரம்மர், பாகவதத்தை எடுத்துரைத்தார். ஜனமேஜெயன் மனக்குழப்பத்தையும் நீக்கி,பரிட்சித்து மகாராஜாவுக்கும் அனுகிரகம் செய்ய, மன்னன் வைகுந்தமடைந்தான். அத்தகைய பெருமையை கொண்ட பாகவதம் சுகப்பிரம்ம ரிஷியால் உலகிற்கு கிடைத்தது
ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷியின் ஜெயந்தி உற்சவம் ஆனி மாதம் திருவோணம் நட்சத்திரம் அன்று வருகிற 23-06-2016 யன்று உலகின் பல இடங்களிலும் கொண்டாடப்படுகிறது.


ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷி காயத்திரி
ஓம் வேததாத் மஹாய வித்மஹே!
வியாச புத்ராய தீமஹி,
தந்நோ சுகர் ப்ரசோதயாத்!
இந்நாள் சுபநாளாக அமையட்டும்!
 நமஸ்காரம்.
 நாளை சந்திப்போம்.
  அன்பர்கள் தங்களது கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் இந்த தளத்திலும், முக நூலிலும் பகிர்ந்து கொள்ளலாம்.
முக நூல் முகவரி:




   

Thursday, June 16, 2016

தினம் ஒரு தகவல் 16-06-2016 வியாழன்

வணக்கம்.
ஹரி ஓம்!
    மெய்யன்பர்களே! இந்த தளத்திலே தினம் ஒரு தகவல் என்ற தலைப்பிலே  நாம் ஆன்மீக மற்றும் ஜோதிட சம்பந்தமான  விஷயங்களைப் பற்றி பேச உள்ளோம்.
இன்று நாம் பேச உள்ள விஷயம்.
 மஹாபாக்யவதி யோகம்
ஒரு பெண் துதியை, திருதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசிஎன்னும் இவைகளில் ஏதாவது ஒரு திதியிலும்,சுக்ரவாரத்திலும், பூரம், அவிட்டம்,ரோகிணி இவைகளில் ஏதாவது ஒரு நட்சத்திரலும்,சுபமானமிதுனம்,கன்னி முதலிய லக்னத்தில் பிறந்தாளானால் அவள் பிறந்ததுமுதல் ஆயுள்வரை மஹாபாக்யவதியாக விளங்குவாள்.

 அது பற்றி அன்பர்கள் தங்களது கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் இந்த தளத்திலும், முக நூலிலும் பகிர்ந்து கொள்ளலாம்.
முக நூல் முகவரி:
இந்நாள் சுபநாளாக அமையட்டும்!
 நமஸ்காரம்.
 நாளை சந்திப்போம்.


Wednesday, June 15, 2016

தினம் ஒரு தகவல் 15-06-2016 புதன்

வணக்கம்.ஹரி ஓம்!
    மெய்யன்பர்களே! இந்த தளத்திலே தினம் ஒரு தகவல் என்ற தலைப்பிலே  நாம் ஆன்மீக மற்றும் ஜோதிட சம்பந்தமான  விஷயங்களைப் பற்றி பேச உள்ளோம்.
    இன்று நாம் பேச உள்ள விஷயம்.
 புதன் கிரகமும் அதன் அம்சங்களும்
  

 
இன்று ஒன்பது கோள்களில் வித்யா காரகன் என்ற அழைக்கப்படுகிற புதன் பகவானைப் பற்றிப் பார்ப்போம்.
கிரகம்      : புதன்
ஜாதி       :வைசியன்
வடிவம்    : நெடியர்  
குணம்     : சுபர்     
லிங்கம்    : அலி    
பாஷை    : தமிழ்,சமஸ்கிருதம்,ஜோதிஷம்
சுவை     : உப்பு,
நிறம்      : பச்சை
உலோகம்  : பித்தளை
ரத்தினம்   : பச்சை
வாகனம்   : குதிரை
வஸ்திரம்  : பச்சைப் பட்டு
புஷ்பம்    : வெண்காந்தள்
சமித்து    : நாயுருவி
தானியம்  : பச்சைப் பயிறு
திக்கு     : வடகிழக்கு
தேவதை  : மகாவிஷ்ணு
ராசி      :  மிதுனம்,கன்னி
பிணி     : வாதம்
ஸ்ரீ புதன் காயத்திரி
ஓம் கஜத் வஜாய வித்மஹே!
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்

புதனின் ஆசிகள்  நமக்கு. கிடைக்கட்டும்
நமஸ்காரம்.  மீண்டும்
நாளை சந்திப்போம்……
இது பற்றி அன்பர்கள் தங்களது கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் இந்த தளத்திலும், முக நூலிலும் பகிர்ந்து கொள்ளலாம்.
முக நூல் முகவரி:


Tuesday, June 14, 2016

தினம் ஒரு தகவல் 12-06-2016 ஞாயிறு

வணக்கம்.ஹரி ஓம்!
    மெய்யன்பர்களே! இந்த தளத்திலே தினம் ஒரு தகவல் என்ற தலைப்பிலே  நாம் ஆன்மீக மற்றும் ஜோதிட சம்பந்தமான  விஷயங்களைப் பற்றி பேச உள்ளோம்.
    இன்று நாம் பேச உள்ள விஷயம்.
  சூரிய கிரகமும் அதன் அம்சங்களும்
   

இன்று ஒன்பது கோள்களில் ஞாயிறு  என்ற அழைக்கப்படுகிற சூரிய  பகவானைப் பற்றிப் பார்ப்போம்.
கிரகம்      : சூரியன்
ஜாதி       :க்ஷத்திரியர்
வடிவம்    : சமன்  
குணம்     : அசுபர்     
லிங்கம்    : ஆண்    
பாஷை    :,தெலுங்கு, சமஸ்கிருதம்
சுவை     :,கார்ப்பு
நிறம்      : சிவப்பு 
உலோகம்  : தாமிரம்
ரத்தினம்   : மாணிக்கம்
வாகனம்   : மயில்,தேர்
வஸ்திரம்  :  சிவப்பு துணி
புஷ்பம்    : செந்தாமரை
சமித்து    : எருக்கு
தானியம்  : கோதுமை
திக்கு     : கிழக்கு
தேவதை  : சிவன்
ராசி      :  சிம்மம்
பிணி     : வாதம்
ஸ்ரீ சூரிய காயத்திரி
ஓம் அஸ்வத் வஜாய வித்மஹே!
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூரிய ப்ரசோதயாத்

சூரியனின் ஆசிகள் நமக்கு. கிடைக்கட்டும்
நமஸ்காரம்.  மீண்டும்
நாளை சந்திப்போம்……
இது பற்றி அன்பர்கள் தங்களது கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் இந்த தளத்திலும், முக நூலிலும் பகிர்ந்து கொள்ளலாம்.
முக நூல் முகவரி:


தினம் ஒரு தகவல் 14-06-2016 செவ்வாய்

வணக்கம்.ஹரி ஓம்!
    மெய்யன்பர்களே! இந்த தளத்திலே தினம் ஒரு தகவல் என்ற தலைப்பிலே  நாம் ஆன்மீக மற்றும் ஜோதிட சம்பந்தமான  விஷயங்களைப் பற்றி பேச உள்ளோம்.
    இன்று நாம் பேச உள்ள விஷயம்.
 செவ்வாய் கிரகமும் அதன் அம்சங்களும்



   

இன்று ஒன்பது கோள்களில் மங்களன் (அங்காரகன்) என்ற அழைக்கப்படுகிற செவ்வாய் பகவானைப் பற்றிப் பார்ப்போம்.
கிரகம்      : செவ்வாய்
ஜாதி       :க்ஷத்திரியர்
வடிவம்    : குள்ளர்  
குணம்     : அசுபர்     
லிங்கம்    : ஆண்    
பாஷை    : தமிழ்,தெலுங்கு, மஹாரட்டியம்
சுவை     : உறைப்பு,கார்ப்பு
நிறம்      : சிவப்பு 
உலோகம்  : செம்பு
ரத்தினம்   : பவளம்
வாகனம்   : அன்னம், ஆடு 
வஸ்திரம்  :  சிவப்பு துணி
புஷ்பம்    : செண்பகம்
சமித்து    : கருங்காலி
தானியம்  : துவரை
திக்கு     : தெற்கு
தேவதை  : சுப்பிரமணியர்
ராசி      :  மேஷம், விருச்சிகம்
பிணி     : பித்தம்
ஸ்ரீ அங்காரகன் காயத்திரி
ஓம் வீரத் வஜாய வித்மஹே!
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளம ப்ரசோதயாத்

செவ்வாயின் ஆசிகள் நமக்கு. கிடைக்கட்டும்
நமஸ்காரம்.  மீண்டும்
நாளை சந்திப்போம்……
இது பற்றி அன்பர்கள் தங்களது கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் இந்த தளத்திலும், முக நூலிலும் பகிர்ந்து கொள்ளலாம்.
முக நூல் முகவரி: