*விக்கிரமாதித்தன் கதைகள் - 8*
*நீதிவாக்கியர் போஜராஜனுக்குச் சொன்ன பஹூசுருதன் கதை - 5*
" அடைக்கலமானவனைக் கைவிடுதல் பாவமான செயல். அடைக்கலமானவருக்குக் கெடுதல் செய்பவன் நரகத்தில் துன்பப்படுவது நிச்சயம். எனவே இந்தப் பாவத்தை நான் செய்ய மாட்டேன்." என்று கரடி பதில் சொன்னது.
நடுயிரவில் இளவரசன் ஜெயபாலன் உறக்கம் கலைந்து விழித்தான். கரடி அவனிடம், "நன்றாகத் தூங்கினாயா?" என்றது.
"ம்" என்றான் கீழே உள்ள புலியைப் பார்த்துக்கொண்டே.
"இப்போது நான் சிறிது நேரம் தூங்குகிறேன். நீ விழிப்புடன் இரு." என்றது.
கரடி நன்கு தூங்கியபின் புலி இளவரசனிடம் பேச்சுக் கொடுத்தது.
"மனிதனே! இந்தக் கரடியை நம்பாதே. வயிறு முட்ட அது உண்டு விட்டதால் அது உன்னை ஒன்றும் செய்யவில்லை. நாளை நீதான் அதற்கு உணவு. கரடியின் புத்தி தடுமாற்றம் உடையது. அதை நம்பி நீயும் நடந்து கொள்கிறாய். கரடியை என்னிடம் உருட்டித் தள்ளு. அதை அடித்துச் சாப்பிட்டு என் பசியை ஆற்றிக் கொள்கிறேன். சீக்கிரம் தள்ளி விடு."
“புலி சொல்வதில் உண்மை இருக்குமோ?”
சற்றும் யோசிக்காமல் கரடியைத் தள்ளி விட்டான் ஜெயபாலன்.
ஆனால், கரடி கீழே விழும்போதே விழித்துக் கொண்டது. குறுக்கிட்ட கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்கியது. பின் லாகவமாக மறுபடி மேலேறி வந்தது.
"நன்றி கெட்ட மனிதனே! உன்னை நான் பாதுகாத்ததற்கு இதுதான் பலனா?"
பயந்து நடுங்கினான் ஜெயபாலன்.
"பயப்படாதே! நான் உன்னை ஒன்றும் செய்யப்போவதில்லை. ஆனால் நீ செய்த பாவத்தின் பலனை அனுபவிக்கவேண்டும். உன் நினைவுகள் யாவும் அழிந்து "ஸஸேமிரா" என்ற சொல்லை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லியவாறு அலையப் போகிறாய்."
விடிந்துவிட்டது.
புலி அந்த இடத்தை விட்டு நழுவியது.
சாபமிட்ட கரடியும் அந்த இடத்தை விட்டு இறங்கிப் போய்விட்டது. பைத்தியமாகிவிட்ட இளவரசனோ, ‘ஸஸேமிரா, ஸஸேமிரா’ என்று சொல்லிக் கொண்டே அங்கேயே சுற்றத் தொடங்கினான்.
வேட்டைக்குச் சென்ற அனைவரும் திரும்பிய பின்பும் மகன் வராததை எண்ணிக் கவலை கொண்டான் நந்தமன்னன். அமைச்சர் பஹுசுருதனை அழைத்தான்.
*நீதிவாக்கியர் போஜராஜனுக்குச் சொன்ன பஹூசுருதன் கதை - 5*
" அடைக்கலமானவனைக் கைவிடுதல் பாவமான செயல். அடைக்கலமானவருக்குக் கெடுதல் செய்பவன் நரகத்தில் துன்பப்படுவது நிச்சயம். எனவே இந்தப் பாவத்தை நான் செய்ய மாட்டேன்." என்று கரடி பதில் சொன்னது.
நடுயிரவில் இளவரசன் ஜெயபாலன் உறக்கம் கலைந்து விழித்தான். கரடி அவனிடம், "நன்றாகத் தூங்கினாயா?" என்றது.
"ம்" என்றான் கீழே உள்ள புலியைப் பார்த்துக்கொண்டே.
"இப்போது நான் சிறிது நேரம் தூங்குகிறேன். நீ விழிப்புடன் இரு." என்றது.
கரடி நன்கு தூங்கியபின் புலி இளவரசனிடம் பேச்சுக் கொடுத்தது.
"மனிதனே! இந்தக் கரடியை நம்பாதே. வயிறு முட்ட அது உண்டு விட்டதால் அது உன்னை ஒன்றும் செய்யவில்லை. நாளை நீதான் அதற்கு உணவு. கரடியின் புத்தி தடுமாற்றம் உடையது. அதை நம்பி நீயும் நடந்து கொள்கிறாய். கரடியை என்னிடம் உருட்டித் தள்ளு. அதை அடித்துச் சாப்பிட்டு என் பசியை ஆற்றிக் கொள்கிறேன். சீக்கிரம் தள்ளி விடு."
“புலி சொல்வதில் உண்மை இருக்குமோ?”
சற்றும் யோசிக்காமல் கரடியைத் தள்ளி விட்டான் ஜெயபாலன்.
ஆனால், கரடி கீழே விழும்போதே விழித்துக் கொண்டது. குறுக்கிட்ட கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்கியது. பின் லாகவமாக மறுபடி மேலேறி வந்தது.
"நன்றி கெட்ட மனிதனே! உன்னை நான் பாதுகாத்ததற்கு இதுதான் பலனா?"
பயந்து நடுங்கினான் ஜெயபாலன்.
"பயப்படாதே! நான் உன்னை ஒன்றும் செய்யப்போவதில்லை. ஆனால் நீ செய்த பாவத்தின் பலனை அனுபவிக்கவேண்டும். உன் நினைவுகள் யாவும் அழிந்து "ஸஸேமிரா" என்ற சொல்லை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லியவாறு அலையப் போகிறாய்."
விடிந்துவிட்டது.
புலி அந்த இடத்தை விட்டு நழுவியது.
சாபமிட்ட கரடியும் அந்த இடத்தை விட்டு இறங்கிப் போய்விட்டது. பைத்தியமாகிவிட்ட இளவரசனோ, ‘ஸஸேமிரா, ஸஸேமிரா’ என்று சொல்லிக் கொண்டே அங்கேயே சுற்றத் தொடங்கினான்.
வேட்டைக்குச் சென்ற அனைவரும் திரும்பிய பின்பும் மகன் வராததை எண்ணிக் கவலை கொண்டான் நந்தமன்னன். அமைச்சர் பஹுசுருதனை அழைத்தான்.
No comments:
Post a Comment