*விக்கிரமாதித்தன் கதைகள் – 10*
*நீதிவாக்கியர் போஜராஜனுக்குச் சொன்ன பஹுசுருதன் கதை - 7*
மகிழ்ச்சி அடைந்த நந்த மன்னன் தன் மகன் ஜெயபாலனை அழைத்துக் கொண்டு அமைச்சர் வீட்டுக்கு வந்தான். பஹூ சுருதன் அவர்களை வரவேற்று பெரியதொரு அறையில் அமரச் செய்தார். மன்னன் மகனுடன் உள்ளே வந்து உட்கார்ந்தான். ஜெயபாலன் உட்காராமல் "ஸஸேமிரா, ஸஸேமிரா" என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவர்களுக்கு முன் பாதி அறையை மறைத்த வண்ணம் திரைச் சீலை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. மன்னனால் திரையின் பின் உள்ளவரைப் பார்க்க முடியவில்லை.
அங்கு மறைவாக சாரதா நந்தனர் உட்கார்ந்திருந்தார். ஜெயபாலனின் பெஸேமிரா புலம்பலைக் கேட்டதும் ஸ என்று தொடங்கும் ஒரு வடமொழிக் கவிதையைச் சொன்னார்.
ஸத்துவ குணமுடையவனை ஏமாற்றுவதில் அறிவு எதுவும் உண்டா? தூங்கும் ஒருவனைக் கொல்வதா வீரம்? - என்பதே அக் கவிதையின் பொருள்.
இதைக் கேட்டவுடன் இளவரசன் ஸ என்னும் எழுத்தை விடுத்து ஸேமிரா, ஸேமிரா என்று புலம்பத் தொடங்கினான்.
இராஜகுரு இப்போது ஸே என்னும் எழுத்தில் தொடங்கும் வடமொழிக் கவிதையைச் சொன்னார். அதன் பொருளையும் விளக்கலானார்.
"கங்கையில் அனைத்துப் பாவங்களும் போகும். ஆனால் நண்பனுக்குக் கெடுதல் செய்வதால் ஏற்பட்ட பாவம் போவதில்லை."
இரண்டாவது கவிதையின் பொருளைக் கேட்ட பின் இளவரசன், ஸே என்னும் எழுத்தையும் விடுத்து, மிரா, மிரா என்று புலம்பத் தொடங்கினான்.
*நீதிவாக்கியர் போஜராஜனுக்குச் சொன்ன பஹுசுருதன் கதை - 7*
மகிழ்ச்சி அடைந்த நந்த மன்னன் தன் மகன் ஜெயபாலனை அழைத்துக் கொண்டு அமைச்சர் வீட்டுக்கு வந்தான். பஹூ சுருதன் அவர்களை வரவேற்று பெரியதொரு அறையில் அமரச் செய்தார். மன்னன் மகனுடன் உள்ளே வந்து உட்கார்ந்தான். ஜெயபாலன் உட்காராமல் "ஸஸேமிரா, ஸஸேமிரா" என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவர்களுக்கு முன் பாதி அறையை மறைத்த வண்ணம் திரைச் சீலை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. மன்னனால் திரையின் பின் உள்ளவரைப் பார்க்க முடியவில்லை.
அங்கு மறைவாக சாரதா நந்தனர் உட்கார்ந்திருந்தார். ஜெயபாலனின் பெஸேமிரா புலம்பலைக் கேட்டதும் ஸ என்று தொடங்கும் ஒரு வடமொழிக் கவிதையைச் சொன்னார்.
ஸத்துவ குணமுடையவனை ஏமாற்றுவதில் அறிவு எதுவும் உண்டா? தூங்கும் ஒருவனைக் கொல்வதா வீரம்? - என்பதே அக் கவிதையின் பொருள்.
இதைக் கேட்டவுடன் இளவரசன் ஸ என்னும் எழுத்தை விடுத்து ஸேமிரா, ஸேமிரா என்று புலம்பத் தொடங்கினான்.
இராஜகுரு இப்போது ஸே என்னும் எழுத்தில் தொடங்கும் வடமொழிக் கவிதையைச் சொன்னார். அதன் பொருளையும் விளக்கலானார்.
"கங்கையில் அனைத்துப் பாவங்களும் போகும். ஆனால் நண்பனுக்குக் கெடுதல் செய்வதால் ஏற்பட்ட பாவம் போவதில்லை."
இரண்டாவது கவிதையின் பொருளைக் கேட்ட பின் இளவரசன், ஸே என்னும் எழுத்தையும் விடுத்து, மிரா, மிரா என்று புலம்பத் தொடங்கினான்.
No comments:
Post a Comment