*விக்கிரமாதித்தன் கதைகள் - 4*
உயர்ந்த எண்ணங்களை உருவாக்கும் இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்தால் உலகெங்கும் புகழ் பெறலாம்.. இவ்வாறு மகிழ்வுடன் சிந்தித்தான். பணியாள்கள் அதை அந்த இடத்திலிருந்து அரண்மனைக்கு எடுத்துச் செல்ல முயன்றார்கள். அசைக்க முடியவில்லை. போஜராஜன் தன் அமைச்சர் நீதி வாக்கியரிடம் ஆலோசனை செய்தான்.
"அரசே! இது புராண கால அரசர் பயன்படுத்திய சிம்மாசனம் போல் தோன்றுகிறது. வேதியர்களைக் கொண்டு முறைப்படி பூஜைகள் செய்து எடுக்க முயல்வோம்." என்றார்.
அமைச்சரின் யோசனை பலித்தது. சிம்மாசனத்தைத் தூக்க முடிந்தது. நீதி வாக்கியருக்கு நன்றி சொன்னான்.
"மாபெரும் அறிவாளியாக இருந்தாலும் பிறருடைய யோசனைகளைக் கேட்கவில்லையெனில் வீணில் அழிவான். தாங்கள் யோசனைகளைக் கேட்கும் சுபாவம் உடையவர். எனவே உங்களுக்குச் சாதமாகவே அனைத்தும் நிகழ்கின்றன." என்றான்.
போஜன், "வரும் துன்பங்களை ஆய்ந்து அரசனை நெறிப்படுத்துபவனே சிறந்த அமைச்சர்." என்றான்.
"அரசன் அறிவிற் சிறந்த பெரியோர்களை அருகில் வைத்திருக்கவேண்டும். அவர்கள் கூறும் அறிவுரைகளின்படி நடக்க வேண்டும். நந்த மன்னன் தனது அமைச்சர் பஹூசுருதன் உதவியுடன் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட்டதை அறிவீரா மன்னா? "என்றார்.
போஜமன்னனும் கதை கேட்க ஆவலானான்.
*நீதிவாக்கியர் போஜ மன்னனுக்குச் சொன்ன பஹுசுருதன் கதை - 1*
விசாலை நகரின் அரசன் நந்தன். அவனது அழகான மனைவி பானுமதி. திறமையுள்ள மகன் ஜெயபாலன்.
வயதுக்கு வந்த மகன் இருந்தாலும், மனைவி பானுமதி மேல் அடங்காத மோகம் கொண்டவனாய் இருந்தான். , அமைச்சர் பஹுசுருதன் சொன்னாலும் உணரவில்லை. அரசவைக்கு வரும்போது கூட மனைவியுடன் வருவதும் அவளுடன் கொஞ்சி மகிழ்வதும் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது.
வளர்ந்த மகனை வைத்துக்கொண்டு அரசர் அடிக்கும் கூத்தைப் பார்க்கச் சகிக்காமல், அமைச்சர் பஹுசுருதன் ஒரு நாள் மன்னன் நந்தனுடன் தனியாக இருந்தபோது பேசலானார்..
“மோகத்தில் உள்ளவனின் கண் மறைப்பினால் சுற்றிலும் நடப்பதை அறியாமல் இருக்கிறான். கலைகளில் சிறப்பானவர்களையும் மோகமானது வீழ்த்துகிறது. அவனது குடும்பமும் கெடுகிறது.
உங்களுடைய மோக சல்லாபத்தை அரசவை வரை அரங்கேற்றுவது நியாயமில்லை அரசே. அரசகுலப் பெண்கள் அந்தப்புரத்தில்தான் இருக்கவேண்டுமே தவிர அரசவையில் அல்ல. உங்கள் நோக்கம் கெடுகிறது. எனவே அவளை விட்டுவிட்டு வாருங்கள்.” என்றார்.
“என்ன செய்வது அமைச்சரே! என் மனைவியைப் பார்க்காமல் என்னால் ஒரு கணம் கூட இருக்கமுடியவில்லையே என்ன செய்வேன்!” என்றான்.
“வேண்டுமானால் ஒன்று செய்யலாம். சிறந்த ஓவியன் ஒருவனை வரவழைத்து அரசியைச் சித்திரம் தீட்டச் செய்து அதனை உங்கள் பார்வையில் மட்டும் படும்படி அரசவையில் வைத்துவிடலாம். பிரச்சினை தீரும்.” என்றார், பஹுசுருதன்.
நந்தனும் ஒப்புக்கொண்டான். அரண்மனையின் மிகச் சிறந்த ஓவியனை வரவழைத்தான்.
“மன்னா! அரசியை உங்கள் விருப்பம்போல் அலங்கரித்து ஒருமுறை மட்டும் பார்க்கும்படி எனக்கு அனுமதி அளியுங்கள். அவரை அப்படியே என்னால் வரைய முடியும்.” என்று ஓவியன் பெருமையடித்துக்கொண்டான்.
அரசனும் ஆச்சரியப்பட்டவாறு மனைவியை நன்கு அலங்கரித்து ஓவியனை ஒருமுறை மட்டும் பார்க்கச் செய்தான்.
ஓவியன் அரசி பானுமதியைக் கண்டதும் அவளது உருவத்தை மனத்தில் இருத்திக்கொண்டான். பிறகு ஓரிடத்தில் தனது கருவிகளுடன் அவளைச் சித்திரமாகத் தீட்டத் தொடங்கினான்.
நேரம் கடந்தது. பானுமதி ஓவியமாக உருப்பெற்று உயிர்பெற்றாள். நந்த மன்னன் அந்த ஓவியத்தைக் கண்டு மகிழ்ந்தான்.ஓவியனைப் பாராட்டி வேண்டிய பரிசுகளைத் தந்தான். அந்தச் சமயம் அவனது இராஜகுரு சாரதாநந்தனர் அங்கு வந்தார். அவரும் ஓவியன் வரைந்த ஓவியத்தைப் பார்த்தார்.
அவரிடம் அங்கு நின்றிருந்த ஓவியன், தான் அப்படியே அரசியை வரைந்திருப்பதாகக் கூறிப் பெருமைப்பட்டான்.
ஆனால், இராஜகுரு சாரதாநந்தனரோ அதை மறுத்துச் சிரித்தார். ஓவியனும் அரசனும் மற்றவர்களும் அதனைக் கண்டு திகைப்புற்றனர்.
இராஜகுரு சொன்னார், “ ஓவியனே! நீ சாமுத்திரிகா லட்சணப்படி நீ வரைந்திருந்தாலும், அரசியாரின் முக்கிய அடையாளம் ஒன்றைக் குறிப்பிடவில்லை!” என்றார்.
“குருவே! எதனை நான் மறந்துவிட்டேன் என்பதைத் தெரிவியுங்கள்” என்றான் ஓவியன்.
“அரசியாரின் இடத் தொடையில் எள் அளவு மச்சம் ஒன்று உள்ளது. அதனை உன் தத்ரூப ஓவியத்தில் வெளிப்படுத்தத் தவறினாய்” என்று இராஜகுரு சாரதாநந்தனர் சொன்னார்.
மன்னன் துணுக்குற்றான். தனக்கு இத்தனை நாள்களாகத் தெரியாத விஷயத்தை இராஜகுரு சொல்கிறாரே! உண்மையாக இருக்குமோ! அது உண்மையாக இருந்தால் இவருக்கு எப்படித் தெரிந்தது?
சந்தேககம் கொண்டுத் தன் மனைவியைச் சோதித்தான். இடப் பக்கத் தொடையில் எள்ளளவு மச்சம் இருந்தது! மனைவியின் முகத்தைப் பார்த்தான். அவள் களங்கமற்றவளாகத்தான் தெரிந்தாள். அப்படியெனில் இராஜகுருதான் இராஜதுரோகி. அரண்மனையில் அனைத்து இடங்களிலும் செல்லும் உரிமை படைத்த அவர், மனைவி குளிக்கும்போது மறைந்திருந்து பார்த்திருக்கிறார். வயது மூப்பு அடைந்திருந்தாலும் அடங்காத காமத்தீ அவரது கண்ணை மறைத்தன போலும்!
நந்த மன்னனின் மனத்தில் கோபத்தீ கொழுந்துவிட்டு எரிந்தது!
அமைச்சர் பஹுசுருதனை வரவழைத்தான்.
அவரிடம் நடந்தைக் கூறினான்.
“இராஜகுருவை நான் சந்திக்கக் கூட விரும்பவில்லை. அவருக்கு மரண தண்டனை கொடுத்துவிடுங்கள்!” என்றான்.
உயர்ந்த எண்ணங்களை உருவாக்கும் இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்தால் உலகெங்கும் புகழ் பெறலாம்.. இவ்வாறு மகிழ்வுடன் சிந்தித்தான். பணியாள்கள் அதை அந்த இடத்திலிருந்து அரண்மனைக்கு எடுத்துச் செல்ல முயன்றார்கள். அசைக்க முடியவில்லை. போஜராஜன் தன் அமைச்சர் நீதி வாக்கியரிடம் ஆலோசனை செய்தான்.
"அரசே! இது புராண கால அரசர் பயன்படுத்திய சிம்மாசனம் போல் தோன்றுகிறது. வேதியர்களைக் கொண்டு முறைப்படி பூஜைகள் செய்து எடுக்க முயல்வோம்." என்றார்.
அமைச்சரின் யோசனை பலித்தது. சிம்மாசனத்தைத் தூக்க முடிந்தது. நீதி வாக்கியருக்கு நன்றி சொன்னான்.
"மாபெரும் அறிவாளியாக இருந்தாலும் பிறருடைய யோசனைகளைக் கேட்கவில்லையெனில் வீணில் அழிவான். தாங்கள் யோசனைகளைக் கேட்கும் சுபாவம் உடையவர். எனவே உங்களுக்குச் சாதமாகவே அனைத்தும் நிகழ்கின்றன." என்றான்.
போஜன், "வரும் துன்பங்களை ஆய்ந்து அரசனை நெறிப்படுத்துபவனே சிறந்த அமைச்சர்." என்றான்.
"அரசன் அறிவிற் சிறந்த பெரியோர்களை அருகில் வைத்திருக்கவேண்டும். அவர்கள் கூறும் அறிவுரைகளின்படி நடக்க வேண்டும். நந்த மன்னன் தனது அமைச்சர் பஹூசுருதன் உதவியுடன் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட்டதை அறிவீரா மன்னா? "என்றார்.
போஜமன்னனும் கதை கேட்க ஆவலானான்.
*நீதிவாக்கியர் போஜ மன்னனுக்குச் சொன்ன பஹுசுருதன் கதை - 1*
விசாலை நகரின் அரசன் நந்தன். அவனது அழகான மனைவி பானுமதி. திறமையுள்ள மகன் ஜெயபாலன்.
வயதுக்கு வந்த மகன் இருந்தாலும், மனைவி பானுமதி மேல் அடங்காத மோகம் கொண்டவனாய் இருந்தான். , அமைச்சர் பஹுசுருதன் சொன்னாலும் உணரவில்லை. அரசவைக்கு வரும்போது கூட மனைவியுடன் வருவதும் அவளுடன் கொஞ்சி மகிழ்வதும் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது.
வளர்ந்த மகனை வைத்துக்கொண்டு அரசர் அடிக்கும் கூத்தைப் பார்க்கச் சகிக்காமல், அமைச்சர் பஹுசுருதன் ஒரு நாள் மன்னன் நந்தனுடன் தனியாக இருந்தபோது பேசலானார்..
“மோகத்தில் உள்ளவனின் கண் மறைப்பினால் சுற்றிலும் நடப்பதை அறியாமல் இருக்கிறான். கலைகளில் சிறப்பானவர்களையும் மோகமானது வீழ்த்துகிறது. அவனது குடும்பமும் கெடுகிறது.
உங்களுடைய மோக சல்லாபத்தை அரசவை வரை அரங்கேற்றுவது நியாயமில்லை அரசே. அரசகுலப் பெண்கள் அந்தப்புரத்தில்தான் இருக்கவேண்டுமே தவிர அரசவையில் அல்ல. உங்கள் நோக்கம் கெடுகிறது. எனவே அவளை விட்டுவிட்டு வாருங்கள்.” என்றார்.
“என்ன செய்வது அமைச்சரே! என் மனைவியைப் பார்க்காமல் என்னால் ஒரு கணம் கூட இருக்கமுடியவில்லையே என்ன செய்வேன்!” என்றான்.
“வேண்டுமானால் ஒன்று செய்யலாம். சிறந்த ஓவியன் ஒருவனை வரவழைத்து அரசியைச் சித்திரம் தீட்டச் செய்து அதனை உங்கள் பார்வையில் மட்டும் படும்படி அரசவையில் வைத்துவிடலாம். பிரச்சினை தீரும்.” என்றார், பஹுசுருதன்.
நந்தனும் ஒப்புக்கொண்டான். அரண்மனையின் மிகச் சிறந்த ஓவியனை வரவழைத்தான்.
“மன்னா! அரசியை உங்கள் விருப்பம்போல் அலங்கரித்து ஒருமுறை மட்டும் பார்க்கும்படி எனக்கு அனுமதி அளியுங்கள். அவரை அப்படியே என்னால் வரைய முடியும்.” என்று ஓவியன் பெருமையடித்துக்கொண்டான்.
அரசனும் ஆச்சரியப்பட்டவாறு மனைவியை நன்கு அலங்கரித்து ஓவியனை ஒருமுறை மட்டும் பார்க்கச் செய்தான்.
ஓவியன் அரசி பானுமதியைக் கண்டதும் அவளது உருவத்தை மனத்தில் இருத்திக்கொண்டான். பிறகு ஓரிடத்தில் தனது கருவிகளுடன் அவளைச் சித்திரமாகத் தீட்டத் தொடங்கினான்.
நேரம் கடந்தது. பானுமதி ஓவியமாக உருப்பெற்று உயிர்பெற்றாள். நந்த மன்னன் அந்த ஓவியத்தைக் கண்டு மகிழ்ந்தான்.ஓவியனைப் பாராட்டி வேண்டிய பரிசுகளைத் தந்தான். அந்தச் சமயம் அவனது இராஜகுரு சாரதாநந்தனர் அங்கு வந்தார். அவரும் ஓவியன் வரைந்த ஓவியத்தைப் பார்த்தார்.
அவரிடம் அங்கு நின்றிருந்த ஓவியன், தான் அப்படியே அரசியை வரைந்திருப்பதாகக் கூறிப் பெருமைப்பட்டான்.
ஆனால், இராஜகுரு சாரதாநந்தனரோ அதை மறுத்துச் சிரித்தார். ஓவியனும் அரசனும் மற்றவர்களும் அதனைக் கண்டு திகைப்புற்றனர்.
இராஜகுரு சொன்னார், “ ஓவியனே! நீ சாமுத்திரிகா லட்சணப்படி நீ வரைந்திருந்தாலும், அரசியாரின் முக்கிய அடையாளம் ஒன்றைக் குறிப்பிடவில்லை!” என்றார்.
“குருவே! எதனை நான் மறந்துவிட்டேன் என்பதைத் தெரிவியுங்கள்” என்றான் ஓவியன்.
“அரசியாரின் இடத் தொடையில் எள் அளவு மச்சம் ஒன்று உள்ளது. அதனை உன் தத்ரூப ஓவியத்தில் வெளிப்படுத்தத் தவறினாய்” என்று இராஜகுரு சாரதாநந்தனர் சொன்னார்.
மன்னன் துணுக்குற்றான். தனக்கு இத்தனை நாள்களாகத் தெரியாத விஷயத்தை இராஜகுரு சொல்கிறாரே! உண்மையாக இருக்குமோ! அது உண்மையாக இருந்தால் இவருக்கு எப்படித் தெரிந்தது?
சந்தேககம் கொண்டுத் தன் மனைவியைச் சோதித்தான். இடப் பக்கத் தொடையில் எள்ளளவு மச்சம் இருந்தது! மனைவியின் முகத்தைப் பார்த்தான். அவள் களங்கமற்றவளாகத்தான் தெரிந்தாள். அப்படியெனில் இராஜகுருதான் இராஜதுரோகி. அரண்மனையில் அனைத்து இடங்களிலும் செல்லும் உரிமை படைத்த அவர், மனைவி குளிக்கும்போது மறைந்திருந்து பார்த்திருக்கிறார். வயது மூப்பு அடைந்திருந்தாலும் அடங்காத காமத்தீ அவரது கண்ணை மறைத்தன போலும்!
நந்த மன்னனின் மனத்தில் கோபத்தீ கொழுந்துவிட்டு எரிந்தது!
அமைச்சர் பஹுசுருதனை வரவழைத்தான்.
அவரிடம் நடந்தைக் கூறினான்.
“இராஜகுருவை நான் சந்திக்கக் கூட விரும்பவில்லை. அவருக்கு மரண தண்டனை கொடுத்துவிடுங்கள்!” என்றான்.
No comments:
Post a Comment