Monday, November 25, 2019

*விக்கிரமாதித்தன் கதைகள் - 12*

*விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தில் உள்ள பதுமைகள் சிரித்த கதை – 2*

" அழகுப் பதுமைகளே! நான் படிகளின் மேலேற முயலும் போது நீங்கள் உயிர் பெற்றுச் சிரித்ததன் காரணம் என்ன?"

போஜ மன்னன் கேட்டான்.

பதுமை ஒன்று சொன்னது, "மகாராஜனே! தீரமும் வீரமும் தைரியமும் கொடையும் தவமும் ஆகியன கொண்டு ஆட்சி செய்த எங்கள் அரசனைப் போல் உனக்கும் சிறந்த குணங்கள் இருப்பின் நீ இந்த சிம்மாசனத்தின் மீது ஏறலாம்."

"பதுமைகளே, நீங்கள் புகழும் குணங்கள் எனக்கு இருப்பதாகக் கருதுகிறேன். என்னை அண்டியவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வழங்கி வருகிறேன்.

சிரித்தது அந்தப் பதுமை… “அரசே! என் பெயர் விநோதரஞ்சிதம்.”

மேலும் சொல்லத் தொடங்கியது!

“அரசனே! மேலும் கேள். நீ செய்திருப்பதை உன் வாயாலேயே கூறுகிறாய்! இதுவே உன் தகிதியின்மையைக் காட்டுகிறது. பிறருடைய குறைகளையும் தன்னுடைய நிறைகளையும் கூறுபவன் நல்ல குணம் வாய்ந்தவன் அல்லன் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒருவனுடைய வயது, சொத்து, வீட்டுச் சுவற்றிலுள்ள பிளவு, ஆற்றல், மருந்து, பெண்களுடன் உள்ள தொடர்பு, கொடை, சுயமதிப்பு, தாழ்ந்த தன்மை ஆகியவற்றை வெளியே சொல்லுதல் ஆகாது என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.”

“உண்மைதான்” என்று ஒத்துக்கொண்டான் போஜராஜன்.

“மாற்றரசர்களெல்லாம் தம்மிடம் கப்பம் கட்டும்படி இந்த தேசத்தை ஆண்ட, இந்திரனை ஒத்த எங்கள் மஹாராஜா அகிலம் போற்றும் விக்கிரமாதித்தரை அறிவாயா? அவருடைய மதியூக அமைச்சர் பார் போற்றும் பட்டியைப் பற்றி அறிவாயா? அவரைப் போன்று செயற்கரிய செய்கை செய்தவர் அன்றோ இந்தச் சிம்மாசனம் ஏற வேண்டும்?”

“வினோதரஞ்சிதப் பதுமையே! முதலாவது படியில் நின்றிருக்கும் நீ மஹாராஜா விக்கிரமாதித்தனின் வரலாற்றைச் சொல்.” என்று பெருவிருப்பமுடன் கேட்டான் போஜராஜன்.

வினோதரஞ்சிதப் பதுமை கூறத் தொடங்கியது….

போஜராஜன் உட்பட அனைவரும் அமர்ந்து கேட்கத் தொடங்கினர்.

No comments:

Post a Comment