*விக்கிரமாதித்தன் கதைகள் – 11*
*நீதிவாக்கியர் போஜராஜனுக்குச் சொன்ன பஹுசுருதன் கதை – 8*
இராஜகுரு சாரதாநந்தனர் அடுத்த சுலோகத்தைக் கூறத் தொடங்கினார். அது மி என்ற எழுத்தில் தொடங்கும் சுலோகம். மித்திரன் என்று தொடங்குவது. அதன் பொருளையும் விளக்கினார்.
“நட்புக்கு துரோகம் செய்பவன், நன்றி கொன்றவன், நம்பிக்கை வைத்தவர்களுக்கு துரோகம் செய்பவன் இவற்றைச் செய்பவர்கள் வானில் ஆதவனும் நிலவும் இருக்கும்வரையில் நரகத்தில் கிடந்து தவிப்பார்கள்.”
இதைக் கேட்டதுதான் தாமதம்! ஜெயபாலன் தான் சொல்லிக்கொண்டிருந்த மிரா என்னும் சொல்லில் மி-ஐ விட்டுவிட்டு ரா என்று மட்டும் சொல்லத் தொடங்கினான்.
ரா ரா ரா ரா....
இறுதியாக ரா என்று தொடங்கும் சுலோகத்தையும் சொல்லி அதன் பொருளையும் கூறினார் இராஜகுரு.
“அரசன் என்ற ராஜனே! உனது மகனின் நலத்தை விரும்புவாயெனில் உன்னைச் சுற்றியுள்ள சான்றோர்களை அரவணைத்துச் செல்க. அவர்களை உன்னுடன் தக்கவைத்துக் கொள்க.”
என்ன ஆச்சரியம்!
இளவரசன் தனது சித்த பிரமை நீங்கி மீண்டும் முந்தைய நிலையை அடைந்தான். தந்தையிடம் நடந்தது அனைத்தையும் சொன்னான். பஹுசுருதன் மகன் புத்திசாகரன் தன்னைத் தடுத்ததையும், அதனையும் மீறிச் சென்றதையும், அதன் பிறகு நடந்ததையும் கூறினான்.
நந்த மன்னனும் அவனது மகன் ஜெயபாலனும் திரைக்குப் பின் இருக்கும் பெண்ணுக்கு நன்றி கூற விரும்பினார்கள்.
நந்தமன்னனுக்கு ஒரே வியப்பு!
“பெண்ணே! காட்டில் புலி, கரடி ஆகிய விலங்குகளால் ஏற்பட்ட துன்பம் உனக்கு எப்படித் தெரியும்?”
“மன்னா! சரஸ்வதி தேவி என் நாவில் குடியிருக்கிறாள். இறையருளால் நான் எப்படி உன் மனைவி பானுமதியின் மச்சத்தை அறிந்துகொண்டேனோ, அதே போல அவளருளால் கானகத்தில் நடந்ததையும் அறிந்துகொண்டேன்.”
நந்தமன்னனுக்குத் திகைப்பு. அப்படியானால் இதுவரை என்னுடன் பெண்குரலில் பேசியவர் யார்?
திரைச் சீலையைப் பிடித்து இழுத்தான். அங்கு இராஜகுருவைப் பார்த்தான். அவரது பாதங்களில் அனைவரும் வணங்கினார்கள். என்ன நடந்தது என்பதை அமைச்சர் பஹுசுருதன் விளக்கினார்.
“அமைச்சரே! உமது அறிவாற்றலினால் நான் பிழைத்தேன். என் குடும்பத்துக்கும் நன்மை கிடைத்தது. நல்லார் நட்பு என்றும் கை கொடுக்கும். அதுவே நற்பலன்கள் கிடைக்கும் வழி.
புனித நதிகளில் நீராடி மனிதன் தன் பாவங்களிலிருந்து விடுபடுகிறான். நல்லார் தொடர்பின்மூலம் தமது எதிர்காலத்தை அறிந்து ஆபத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறான்.
உம்மைப் போன்ற புத்திசாலி அமைச்சரினால், இராஜகுரு போன்ற நல்லவர்களின் தொடர்பும் ஆசியும் மீண்டும் வாய்த்தது. அரசானனவன் சிறந்த அமைச்சரைத் தேர்ந்தெடுத்து அருகில் வைத்துக்கொள்ளவேண்டும்.”
இவ்வாறு நந்தமன்னன் பஹுசுருதனைப் புகழ்ந்து, அரண்மனையில் மேலும் பரிசுகள் தந்து மகிழ்ந்தான்.
*விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தில் உள்ள பதுமைகள் சிரித்த கதை – 1*
போஜ மன்னன், தனது அமைச்சர் நீதிவாக்கியர் சொன்ன பஹுசுருதன் கதையை கேட்டு மகிழ்ந்து, அவரைக் கட்டித் தழுவிப் பரிசுகள் தந்தான்.
பின் அந்த அழகிய சிம்மாசனத்தை உஜ்ஜயினி நகரத்துக்குக் கொண்டு சென்றான். அங்கு ஒரு சிறப்பான மண்டபத்தைக் கட்டினான். அங்கு அந்த சிம்மாசனத்தை நிறுவினான்.
வேத மந்திரங்கள் முழங்க, தெய்வீக நதிகளின் நீரினால் அந்தச் சிம்மாசனத்திற்கு அபிஷேகம் செய்தான். புரோகிதர்களை வைத்து உரிய சடங்குகள் செய்தான்.
நாடெங்கும் தானதர்மங்கள் செய்தான். பாணர்கள் அரசனின் அருமை, பெருமைகளைப் பாடினர்.
மங்கள வாத்தியங்கள் முழங்க போஜமன்னன் சிம்மாசனத்தில் ஏறமுற்பட்டான்.
சிம்மாசனத்தின் இருபக்கங்களில் உள்ள முப்பத்திரண்டு பதுமைகளும் திடீரென்று சிரிக்கத் தொடங்கின.
போஜமன்னன் சட்டென்று நின்றான்.
*நீதிவாக்கியர் போஜராஜனுக்குச் சொன்ன பஹுசுருதன் கதை – 8*
இராஜகுரு சாரதாநந்தனர் அடுத்த சுலோகத்தைக் கூறத் தொடங்கினார். அது மி என்ற எழுத்தில் தொடங்கும் சுலோகம். மித்திரன் என்று தொடங்குவது. அதன் பொருளையும் விளக்கினார்.
“நட்புக்கு துரோகம் செய்பவன், நன்றி கொன்றவன், நம்பிக்கை வைத்தவர்களுக்கு துரோகம் செய்பவன் இவற்றைச் செய்பவர்கள் வானில் ஆதவனும் நிலவும் இருக்கும்வரையில் நரகத்தில் கிடந்து தவிப்பார்கள்.”
இதைக் கேட்டதுதான் தாமதம்! ஜெயபாலன் தான் சொல்லிக்கொண்டிருந்த மிரா என்னும் சொல்லில் மி-ஐ விட்டுவிட்டு ரா என்று மட்டும் சொல்லத் தொடங்கினான்.
ரா ரா ரா ரா....
இறுதியாக ரா என்று தொடங்கும் சுலோகத்தையும் சொல்லி அதன் பொருளையும் கூறினார் இராஜகுரு.
“அரசன் என்ற ராஜனே! உனது மகனின் நலத்தை விரும்புவாயெனில் உன்னைச் சுற்றியுள்ள சான்றோர்களை அரவணைத்துச் செல்க. அவர்களை உன்னுடன் தக்கவைத்துக் கொள்க.”
என்ன ஆச்சரியம்!
இளவரசன் தனது சித்த பிரமை நீங்கி மீண்டும் முந்தைய நிலையை அடைந்தான். தந்தையிடம் நடந்தது அனைத்தையும் சொன்னான். பஹுசுருதன் மகன் புத்திசாகரன் தன்னைத் தடுத்ததையும், அதனையும் மீறிச் சென்றதையும், அதன் பிறகு நடந்ததையும் கூறினான்.
நந்த மன்னனும் அவனது மகன் ஜெயபாலனும் திரைக்குப் பின் இருக்கும் பெண்ணுக்கு நன்றி கூற விரும்பினார்கள்.
நந்தமன்னனுக்கு ஒரே வியப்பு!
“பெண்ணே! காட்டில் புலி, கரடி ஆகிய விலங்குகளால் ஏற்பட்ட துன்பம் உனக்கு எப்படித் தெரியும்?”
“மன்னா! சரஸ்வதி தேவி என் நாவில் குடியிருக்கிறாள். இறையருளால் நான் எப்படி உன் மனைவி பானுமதியின் மச்சத்தை அறிந்துகொண்டேனோ, அதே போல அவளருளால் கானகத்தில் நடந்ததையும் அறிந்துகொண்டேன்.”
நந்தமன்னனுக்குத் திகைப்பு. அப்படியானால் இதுவரை என்னுடன் பெண்குரலில் பேசியவர் யார்?
திரைச் சீலையைப் பிடித்து இழுத்தான். அங்கு இராஜகுருவைப் பார்த்தான். அவரது பாதங்களில் அனைவரும் வணங்கினார்கள். என்ன நடந்தது என்பதை அமைச்சர் பஹுசுருதன் விளக்கினார்.
“அமைச்சரே! உமது அறிவாற்றலினால் நான் பிழைத்தேன். என் குடும்பத்துக்கும் நன்மை கிடைத்தது. நல்லார் நட்பு என்றும் கை கொடுக்கும். அதுவே நற்பலன்கள் கிடைக்கும் வழி.
புனித நதிகளில் நீராடி மனிதன் தன் பாவங்களிலிருந்து விடுபடுகிறான். நல்லார் தொடர்பின்மூலம் தமது எதிர்காலத்தை அறிந்து ஆபத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறான்.
உம்மைப் போன்ற புத்திசாலி அமைச்சரினால், இராஜகுரு போன்ற நல்லவர்களின் தொடர்பும் ஆசியும் மீண்டும் வாய்த்தது. அரசானனவன் சிறந்த அமைச்சரைத் தேர்ந்தெடுத்து அருகில் வைத்துக்கொள்ளவேண்டும்.”
இவ்வாறு நந்தமன்னன் பஹுசுருதனைப் புகழ்ந்து, அரண்மனையில் மேலும் பரிசுகள் தந்து மகிழ்ந்தான்.
*விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தில் உள்ள பதுமைகள் சிரித்த கதை – 1*
போஜ மன்னன், தனது அமைச்சர் நீதிவாக்கியர் சொன்ன பஹுசுருதன் கதையை கேட்டு மகிழ்ந்து, அவரைக் கட்டித் தழுவிப் பரிசுகள் தந்தான்.
பின் அந்த அழகிய சிம்மாசனத்தை உஜ்ஜயினி நகரத்துக்குக் கொண்டு சென்றான். அங்கு ஒரு சிறப்பான மண்டபத்தைக் கட்டினான். அங்கு அந்த சிம்மாசனத்தை நிறுவினான்.
வேத மந்திரங்கள் முழங்க, தெய்வீக நதிகளின் நீரினால் அந்தச் சிம்மாசனத்திற்கு அபிஷேகம் செய்தான். புரோகிதர்களை வைத்து உரிய சடங்குகள் செய்தான்.
நாடெங்கும் தானதர்மங்கள் செய்தான். பாணர்கள் அரசனின் அருமை, பெருமைகளைப் பாடினர்.
மங்கள வாத்தியங்கள் முழங்க போஜமன்னன் சிம்மாசனத்தில் ஏறமுற்பட்டான்.
சிம்மாசனத்தின் இருபக்கங்களில் உள்ள முப்பத்திரண்டு பதுமைகளும் திடீரென்று சிரிக்கத் தொடங்கின.
போஜமன்னன் சட்டென்று நின்றான்.
No comments:
Post a Comment