விக்கிரமாதித்தன் கதைகள் - 13
முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்க காலக் கதைகள் - 1
சந்திரவர்ணன் கதை - 1
அந்தக் காலத்தில் நந்தியாபுரம் என்ற நகரம் இருந்தது. அங்கு கல்வியில் சிறந்த சந்திர வர்ணன் என்ற அந்தணன் வாழ்ந்து வந்தான். மேலும் கலைகளிலும் சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெறும் பொருட்டு அந்த நகரத்தை விட்டுக் கிளம்பினான். சிறந்த குரு கிடைப்பதற்காகப் பல இடங்களில் அலைந்து திரிந்தான்.
அவ்விதம் சந்திரவர்ணன் வேறு இடம் நோக்கிச் செல்கையில், குளம் ஒன்றின் அருகில் இளைப்பாறினான். அக்குளத்தில் இறங்கி நீர் அருந்திவிட்டுக் கரையில் உள்ள அரச மரத்தடியில் இளைப்பாறினான்.
அம்மரத்தில் தேவலோகத்தைச் சேர்ந்த ஒருவன் சாபத்தினால் பிரம்ம ராக்ஷசனாக மாறி வசித்து வந்தான். சந்திரவர்ணனிடம் பேச விரும்பிக் குரல் கொடுத்தான்.
"நான் இந்த மரத்தில் வசிக்கும் பிரம்ம ராக்ஷசன். அந்தணனே, இக்கொடிய காட்டின் வழி எங்கே செல்கிறாய்?"
குரலின் திசையில் தலையை உயர்த்தினான் சந்திரவர்ணன். மரத்தின் மேலொரு கோர உருவம் அமர்ந்திருந்தது. அச்சம் கொள்ளாமல் பதில் அளித்தான்.
"நந்தியாபுரத்தைச் சேர்ந்த அந்தணன் நான். பெயர் சந்திரவர்ணன். ஓரளவு வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி அடைந்துள்ளேன். மேற்கொன்டு அவற்றை அறிய நல்ல குருவை நாடி வந்துள்ளேன்."
"நான் தேவலோகவாசி. சாபம் ஒன்றின் காரணமாக பிரம்ம ராக்ஷசனாக இங்கு இருக்கிறேன். நானும் நால்வகை வேதங்களையும் சாஸ்திரங்களையும் அறிந்தவன்தான். நான் சொல்வதைக் கேட்பாயெனில் அவற்றை உனக்குச் சொல்லித் தருகிறேன். "
சற்றும் தயங்கவில்லை.
"நான் என்ன செய்ய வேண்டும்?"
"இன்றிலிருந்து ஆறு மாத காலம் உனக்குக் கற்பிக்கிறேன். பாடங்களை இங்குள்ள அரச இலைகளில் எழுதிக் கீழே போடுவேன். அவற்றை எடுத்துப் படி. அவற்றில் கூறியபடி பயிற்சி செய். இந்த ஆறு மாத காலத்திற்கு உனக்குப் பசி, தூக்கம் ஏற்படாமலிருக்க மந்திரம் ஒன்றை உபதேசம் செய்கிறேன். கவனமாகக் கேள்."
அன்று முதல் பகலிரவு பாராமல், உணவு உட்கொள்ளாமல், உறங்காமல் பிரம்ம ராக்ஷசன் போடும் அரச இலைகளைச் சேமித்து, அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டான்.
ஆறு மாத காலத்தில் சந்திர வர்ணன் முழுவதையும் கற்றுத் தெளிந்தான்.
ஒரு நாள் பிரம்ம ராக்ஷசனின் சாபம் நீங்கியது. தேவலோகத்தில் இருந்து தேவேந்திரன் புஷ்பக விமானத்தை அனுப்பினான். தேவரூபம் பெற்ற பிரம்ம ரக்ஷசன், "சந்திர வர்ணா, என்னிடமிருந்து வித்தைகள் அனைத்தையும் கற்றுக் கொண்டாய். உன் நாடு திரும்பு. நல்ல பெண்ணை மணந்து வாழ்வாங்கு வாழ்வாய். மங்களம் உனக்கு உண்டாகட்டும்." என்று கூறிப் புறப்பட்டான்.
சந்திரவர்ணன் மகழ்ச்சியுடன் புறப்பட்டான். ஊர் திரும்பும் வழியில் கன்னியாபுரி என்ற நகரத்தை அடைந்தான்.
முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்க காலக் கதைகள் - 1
சந்திரவர்ணன் கதை - 1
அந்தக் காலத்தில் நந்தியாபுரம் என்ற நகரம் இருந்தது. அங்கு கல்வியில் சிறந்த சந்திர வர்ணன் என்ற அந்தணன் வாழ்ந்து வந்தான். மேலும் கலைகளிலும் சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெறும் பொருட்டு அந்த நகரத்தை விட்டுக் கிளம்பினான். சிறந்த குரு கிடைப்பதற்காகப் பல இடங்களில் அலைந்து திரிந்தான்.
அவ்விதம் சந்திரவர்ணன் வேறு இடம் நோக்கிச் செல்கையில், குளம் ஒன்றின் அருகில் இளைப்பாறினான். அக்குளத்தில் இறங்கி நீர் அருந்திவிட்டுக் கரையில் உள்ள அரச மரத்தடியில் இளைப்பாறினான்.
அம்மரத்தில் தேவலோகத்தைச் சேர்ந்த ஒருவன் சாபத்தினால் பிரம்ம ராக்ஷசனாக மாறி வசித்து வந்தான். சந்திரவர்ணனிடம் பேச விரும்பிக் குரல் கொடுத்தான்.
"நான் இந்த மரத்தில் வசிக்கும் பிரம்ம ராக்ஷசன். அந்தணனே, இக்கொடிய காட்டின் வழி எங்கே செல்கிறாய்?"
குரலின் திசையில் தலையை உயர்த்தினான் சந்திரவர்ணன். மரத்தின் மேலொரு கோர உருவம் அமர்ந்திருந்தது. அச்சம் கொள்ளாமல் பதில் அளித்தான்.
"நந்தியாபுரத்தைச் சேர்ந்த அந்தணன் நான். பெயர் சந்திரவர்ணன். ஓரளவு வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி அடைந்துள்ளேன். மேற்கொன்டு அவற்றை அறிய நல்ல குருவை நாடி வந்துள்ளேன்."
"நான் தேவலோகவாசி. சாபம் ஒன்றின் காரணமாக பிரம்ம ராக்ஷசனாக இங்கு இருக்கிறேன். நானும் நால்வகை வேதங்களையும் சாஸ்திரங்களையும் அறிந்தவன்தான். நான் சொல்வதைக் கேட்பாயெனில் அவற்றை உனக்குச் சொல்லித் தருகிறேன். "
சற்றும் தயங்கவில்லை.
"நான் என்ன செய்ய வேண்டும்?"
"இன்றிலிருந்து ஆறு மாத காலம் உனக்குக் கற்பிக்கிறேன். பாடங்களை இங்குள்ள அரச இலைகளில் எழுதிக் கீழே போடுவேன். அவற்றை எடுத்துப் படி. அவற்றில் கூறியபடி பயிற்சி செய். இந்த ஆறு மாத காலத்திற்கு உனக்குப் பசி, தூக்கம் ஏற்படாமலிருக்க மந்திரம் ஒன்றை உபதேசம் செய்கிறேன். கவனமாகக் கேள்."
அன்று முதல் பகலிரவு பாராமல், உணவு உட்கொள்ளாமல், உறங்காமல் பிரம்ம ராக்ஷசன் போடும் அரச இலைகளைச் சேமித்து, அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டான்.
ஆறு மாத காலத்தில் சந்திர வர்ணன் முழுவதையும் கற்றுத் தெளிந்தான்.
ஒரு நாள் பிரம்ம ராக்ஷசனின் சாபம் நீங்கியது. தேவலோகத்தில் இருந்து தேவேந்திரன் புஷ்பக விமானத்தை அனுப்பினான். தேவரூபம் பெற்ற பிரம்ம ரக்ஷசன், "சந்திர வர்ணா, என்னிடமிருந்து வித்தைகள் அனைத்தையும் கற்றுக் கொண்டாய். உன் நாடு திரும்பு. நல்ல பெண்ணை மணந்து வாழ்வாங்கு வாழ்வாய். மங்களம் உனக்கு உண்டாகட்டும்." என்று கூறிப் புறப்பட்டான்.
சந்திரவர்ணன் மகழ்ச்சியுடன் புறப்பட்டான். ஊர் திரும்பும் வழியில் கன்னியாபுரி என்ற நகரத்தை அடைந்தான்.
No comments:
Post a Comment