*விக்கிரமாதித்தன் கதைகள் - 33*
*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*
*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*
*வேதாளம் சொன்ன கதைகள்*
*முதல் கதை*
*பத்மாவதி கதை - 2*
இளவரசன் வஜ்ர மகுடனும் அமைச்சர் மகன் புத்தி சரீரனும் தம் நகரத்துக்குத் திரும்பினர். வஜ்ர மகுடன் கானகத்தில் கண்ட தடாகப் பாவையையே எண்ணி எண்ணி மனம் சோர்ந்தான். நாள்கள் செல்லச் செல்ல எதிலும் மனம் செலுத்தாமல் கன்னிகையின் அழகிலேயே கருத்தூன்றிக் கிடந்தான். அவனது நண்பனான புத்தி சரீரன் இளவரசனின் நிலையை உணர்ந்து கொண்டான்.
"நண்பா, உனக்கு அவளைப் பார்க்கவேண்டும்போல் இருந்தால் சென்று பார்க்கவேண்டியதுதானே! ஏன் இங்கே அவள் நினைவில் கிடந்து உழல்கிறாய்?"
"புத்தி சரீரா, அதெப்படி முடியும்! அவள் தன் ஊர், பெயர் என்று எவற்றையும் சொல்லவில்லையே!"
"இளவரசே! அவள்தான் தன்னைப் பற்றிய குறிப்புகளைத் தாமரைப் பூவினால் தெரியப்படுத்தினாளே! கவனிக்கவில்லையா?"
"அ! அவள் தாமரையைக் கையில் வைத்துக் கொண்டுத் தோழியரோடு விளையாடுகிறாள் என்றல்லவா நினைத்தேன்! நீ எனக்கு விளக்கமாகச் சொல்!"
"முதலில் தாமரைப் பூவைக் காதில் சூடினாள். அவள் கர்ணோத்பலன் என்ற அரசனுடைய நாட்டின் குடிமகள் என்பதை இதன் மூலம் உணர்த்தினாள்.
பிறகு தாமரைப் பூவை அவள் தந்தபத்திரம் என்ற காதில் அணியும் நகையைப் போலச் சுருட்டினாள். இதன் மூலம்அவளது தந்தை ஒரு தந்தச் சிற்பி என்று குறிப்பிட்டாள்.
அடுத்து அவள் மற்றொரு தாமரைப் பூவைப் பறித்துத் தன் தலையில் சூடிக் கொண்டாள். தன் பெயர் பத்மாவதி என்று இதன் மூலம் உணர்த்தினாள்.
மேலும் கரத்தைக் குவித்துத் தன் நெஞ்சத்தில் வைத்துக் கொண்டாள். உன்னையும் ஓரக் கண்ணால் பார்த்தாள். தன் மனம் உனக்கே வசமாகிவிட்டது என்பதை அறிவித்தாள்.
உனக்காக நான் எல்லாத் திசைகளிலும் நம் ஒற்றர்களை அனுப்பி விசாரித்துவிட்டேன். கலிங்க நாட்டில் கர்ணோத்பலன் என்பவன் அரசனாக இருக்கிறான். அவனுடைய அரசவையில் சங்கிராம வர்த்தனன் என்ற தந்தச் சிற்பி இருக்கிறான். அவனுடைய அழகான மகளே நீ கண்ட பத்மாவதி."
இளவரசன் வஜ்ர மகுடன் மகிழ்ச்சி அடைந்தான். தனது காதல் கைகூடும் என்ற நம்பிக்கை வந்தது. இருவரும் தத்தம் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு கலிங்க நாட்டுக்குச் சென்றனர். அங்கு கரனோத்பலன் ஆளும் நகரத்தை விசாரித்து அறிந்தனர். அந்நகரத்தை அடைந்து பத்மாவதியின் வீட்டைத் தேடிக் கண்டு பிடித்தனர். அதே தெருவில் சிறியதொரு வீட்டில் தனியாக வசித்து வந்த கிழவி ஒருத்தியின் வீட்டினில் இருவரும் தங்கினர்.
அமைச்சரின் மகன் புத்தி சரீரன் கிழவியிடம் பேச்சுக் கொடுத்தான்.
"பாட்டி, இவ்வூரில் இருக்கும் தந்தச் சிற்பி சங்கிராமவர்த்தனர் என்பவரைத் தெரியுமா?"
*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*
*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*
*வேதாளம் சொன்ன கதைகள்*
*முதல் கதை*
*பத்மாவதி கதை - 2*
இளவரசன் வஜ்ர மகுடனும் அமைச்சர் மகன் புத்தி சரீரனும் தம் நகரத்துக்குத் திரும்பினர். வஜ்ர மகுடன் கானகத்தில் கண்ட தடாகப் பாவையையே எண்ணி எண்ணி மனம் சோர்ந்தான். நாள்கள் செல்லச் செல்ல எதிலும் மனம் செலுத்தாமல் கன்னிகையின் அழகிலேயே கருத்தூன்றிக் கிடந்தான். அவனது நண்பனான புத்தி சரீரன் இளவரசனின் நிலையை உணர்ந்து கொண்டான்.
"நண்பா, உனக்கு அவளைப் பார்க்கவேண்டும்போல் இருந்தால் சென்று பார்க்கவேண்டியதுதானே! ஏன் இங்கே அவள் நினைவில் கிடந்து உழல்கிறாய்?"
"புத்தி சரீரா, அதெப்படி முடியும்! அவள் தன் ஊர், பெயர் என்று எவற்றையும் சொல்லவில்லையே!"
"இளவரசே! அவள்தான் தன்னைப் பற்றிய குறிப்புகளைத் தாமரைப் பூவினால் தெரியப்படுத்தினாளே! கவனிக்கவில்லையா?"
"அ! அவள் தாமரையைக் கையில் வைத்துக் கொண்டுத் தோழியரோடு விளையாடுகிறாள் என்றல்லவா நினைத்தேன்! நீ எனக்கு விளக்கமாகச் சொல்!"
"முதலில் தாமரைப் பூவைக் காதில் சூடினாள். அவள் கர்ணோத்பலன் என்ற அரசனுடைய நாட்டின் குடிமகள் என்பதை இதன் மூலம் உணர்த்தினாள்.
பிறகு தாமரைப் பூவை அவள் தந்தபத்திரம் என்ற காதில் அணியும் நகையைப் போலச் சுருட்டினாள். இதன் மூலம்அவளது தந்தை ஒரு தந்தச் சிற்பி என்று குறிப்பிட்டாள்.
அடுத்து அவள் மற்றொரு தாமரைப் பூவைப் பறித்துத் தன் தலையில் சூடிக் கொண்டாள். தன் பெயர் பத்மாவதி என்று இதன் மூலம் உணர்த்தினாள்.
மேலும் கரத்தைக் குவித்துத் தன் நெஞ்சத்தில் வைத்துக் கொண்டாள். உன்னையும் ஓரக் கண்ணால் பார்த்தாள். தன் மனம் உனக்கே வசமாகிவிட்டது என்பதை அறிவித்தாள்.
உனக்காக நான் எல்லாத் திசைகளிலும் நம் ஒற்றர்களை அனுப்பி விசாரித்துவிட்டேன். கலிங்க நாட்டில் கர்ணோத்பலன் என்பவன் அரசனாக இருக்கிறான். அவனுடைய அரசவையில் சங்கிராம வர்த்தனன் என்ற தந்தச் சிற்பி இருக்கிறான். அவனுடைய அழகான மகளே நீ கண்ட பத்மாவதி."
இளவரசன் வஜ்ர மகுடன் மகிழ்ச்சி அடைந்தான். தனது காதல் கைகூடும் என்ற நம்பிக்கை வந்தது. இருவரும் தத்தம் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு கலிங்க நாட்டுக்குச் சென்றனர். அங்கு கரனோத்பலன் ஆளும் நகரத்தை விசாரித்து அறிந்தனர். அந்நகரத்தை அடைந்து பத்மாவதியின் வீட்டைத் தேடிக் கண்டு பிடித்தனர். அதே தெருவில் சிறியதொரு வீட்டில் தனியாக வசித்து வந்த கிழவி ஒருத்தியின் வீட்டினில் இருவரும் தங்கினர்.
அமைச்சரின் மகன் புத்தி சரீரன் கிழவியிடம் பேச்சுக் கொடுத்தான்.
"பாட்டி, இவ்வூரில் இருக்கும் தந்தச் சிற்பி சங்கிராமவர்த்தனர் என்பவரைத் தெரியுமா?"
No comments:
Post a Comment