*விக்கிரமாதித்தன் கதைகள் - 31*
*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*
*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை -4*
"அப்படியா, விக்கிரமாதித்தா? நான் யார் தெரியுமா?”
"பேசும் பிணம்! பிணம் பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது!”
"ஹா! பிணம் பேசாது. நான் பிணத்தில் ஒளிந்திருக்கும் வேதாளம். என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஏதாவது நீ குறுக்கே பேசினால் மறுபடி மரத்திற்குப் போய் விடுவேன்.”
விக்கிரமாதித்தன் மெளனமாக நடந்தான். கொஞ்ச தூரம் சென்றதும் வேதாளம் விக்கிரமாதித்தனிடம் பேச்சுக் கொடுத்தது.
"விக்கிரமாதித்தா, உயர்வுடைய பெரியோர்கள் தங்களுடைய நேரத்தைப் பயனுடையதாகக் கழிப்பார்கள். விவேகமற்ற கீழோர் தூங்குவதிலும் அர்த்தமற்ற வேடிக்கைகளிலும் கழிப்பார்கள். நீ செல்ல வேண்டிய தூரம் பயனுடையதாகக் கழிய சில புதிர்க் கதைகளைக் கூறுகிறேன், கேள்!"
வேதாளம் விக்கிரமாதித்தனிடம் மேலும் சொன்னது.
" நான் ஒவ்வொரு கதை முடிவிலும் புதிர் ஒன்றைச் சொல்வேன். கதையைக் கவனமாகக் கேட்ட நீ, புதிருக்கான விடையைச் சொல்ல வேண்டும். பதில் தெரிந்தும் சொல்லாவிட்டால் உன் தலை சுக்குநூறாக வெடித்துச் சிதறிவிடும். சம்மதமா?”
வேதாளம் பேசும்போது குறுக்கே பேசக் கூடாது. பதில் தெரிந்தும் புதிருக்கு விடை சொல்லாவிட்டால் தலை வெடித்து விடும். பதிலைச் சொல்வதற்காகப் பேசினாலோ வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறித் தலைகீழாகத் தொங்கும். அதற்கென்ன மறுபடி போய் வேதாளத்தைத் தூக்கிக் கொண்டு வர வேண்டியதுதான்.
முடிவு செய்த விக்கிரமாதித்தன் மெளனமாக வேதாளத்தைச் சுமந்து கொண்டு நடந்தான்.
ஒப்பந்தப்படி வேதாளம் கதையொன்றைச் சொல்லி முடிவில் புதிரையும் சொல்லும். விக்கிரமாதித்தன் சரியான விடை சொன்னதும், அவன் முதுகிலிருந்து விடுபட்டுப் பறந்து சென்று முருங்கை மரத்தில் தொங்கும். விக்கிரமாதித்தன் மீண்டும் மயானத்துக்கு நடந்து சென்று, முருங்கை மரத்திலேறி, வேதாளத்தைக் கீழே வீழ்த்தித் தூக்கிக் கொண்டு வருவான். இவ்வாறு பலமுறை நடந்தது.
வேதாளம் சொன்ன முதல் கதை.
*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*
*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை -4*
"அப்படியா, விக்கிரமாதித்தா? நான் யார் தெரியுமா?”
"பேசும் பிணம்! பிணம் பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது!”
"ஹா! பிணம் பேசாது. நான் பிணத்தில் ஒளிந்திருக்கும் வேதாளம். என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஏதாவது நீ குறுக்கே பேசினால் மறுபடி மரத்திற்குப் போய் விடுவேன்.”
விக்கிரமாதித்தன் மெளனமாக நடந்தான். கொஞ்ச தூரம் சென்றதும் வேதாளம் விக்கிரமாதித்தனிடம் பேச்சுக் கொடுத்தது.
"விக்கிரமாதித்தா, உயர்வுடைய பெரியோர்கள் தங்களுடைய நேரத்தைப் பயனுடையதாகக் கழிப்பார்கள். விவேகமற்ற கீழோர் தூங்குவதிலும் அர்த்தமற்ற வேடிக்கைகளிலும் கழிப்பார்கள். நீ செல்ல வேண்டிய தூரம் பயனுடையதாகக் கழிய சில புதிர்க் கதைகளைக் கூறுகிறேன், கேள்!"
வேதாளம் விக்கிரமாதித்தனிடம் மேலும் சொன்னது.
" நான் ஒவ்வொரு கதை முடிவிலும் புதிர் ஒன்றைச் சொல்வேன். கதையைக் கவனமாகக் கேட்ட நீ, புதிருக்கான விடையைச் சொல்ல வேண்டும். பதில் தெரிந்தும் சொல்லாவிட்டால் உன் தலை சுக்குநூறாக வெடித்துச் சிதறிவிடும். சம்மதமா?”
வேதாளம் பேசும்போது குறுக்கே பேசக் கூடாது. பதில் தெரிந்தும் புதிருக்கு விடை சொல்லாவிட்டால் தலை வெடித்து விடும். பதிலைச் சொல்வதற்காகப் பேசினாலோ வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறித் தலைகீழாகத் தொங்கும். அதற்கென்ன மறுபடி போய் வேதாளத்தைத் தூக்கிக் கொண்டு வர வேண்டியதுதான்.
முடிவு செய்த விக்கிரமாதித்தன் மெளனமாக வேதாளத்தைச் சுமந்து கொண்டு நடந்தான்.
ஒப்பந்தப்படி வேதாளம் கதையொன்றைச் சொல்லி முடிவில் புதிரையும் சொல்லும். விக்கிரமாதித்தன் சரியான விடை சொன்னதும், அவன் முதுகிலிருந்து விடுபட்டுப் பறந்து சென்று முருங்கை மரத்தில் தொங்கும். விக்கிரமாதித்தன் மீண்டும் மயானத்துக்கு நடந்து சென்று, முருங்கை மரத்திலேறி, வேதாளத்தைக் கீழே வீழ்த்தித் தூக்கிக் கொண்டு வருவான். இவ்வாறு பலமுறை நடந்தது.
வேதாளம் சொன்ன முதல் கதை.
No comments:
Post a Comment