*விக்கிரமாதித்தன் கதைகள் - 32*
*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*
*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*
*வேதாளம் சொன்ன கதைகள்*
*முதல் கதை*
*பத்மாவதி கதை - 1*
வற்றாத கங்கை நதியோடும் வாரணாசி நகரை பிரதாபமகுடன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் வஜ்ரமகுடன். வாரணாசியின் இளவரசன். மந்திரி குமாரன் புத்திசரீரன் வஜ்ர மகுடனின் நெருங்கிய நண்பன். இளவரசன் அழகன், வீரன். புத்தி சரீரன் பெயருக்கேற்ப உடம்பெல்லாம் மூளை!
இருவரும் ஒரு நாள் அருகில் உள்ள கானகத்தில் வேட்டையாடச் சென்றனர். வழியெங்கும் தென்பட்ட சிறு சிறு விலங்குகளை வேட்டையாடிபடி காட்டினுள் வந்துவிட்டனர். உச்சிப் பொழுதாகிடவே தாகமெடுத்தது.
"புத்தி சரீரா நீர்நிலை ஏதாவது அருகில் இருக்கிறதா பார்."
"இளவரசே, அதோ அந்தப் பக்கத்தில் மேலே நீர்ப்பறவைகள் பறக்கின்றன. அங்கிருந்து வீசும் காற்று குளுமையாக இருக்கிறது. அங்கு நீர் நிலை ஏதாவது இருக்கவேண்டும். போகலாம் வாருங்கள்."
நெருங்கும் போது காற்று மேலும் குளுமை அடைந்தது. பறவைகளின் சேர்ந்திசை இருவரையும் வரவேற்றது. மரங்கள் அடர்ந்த அந்தப் பகுதியில் அழகான தடாகம் ஒன்று இருந்தது. ஆனால் இருவரும் உள்ளே இறங்கிவிடவில்லை. காரணம் தேவமங்கயரை ஒத்த இளம் பெண்கள் நால்வர் நீராடிக் கொண்டிருந்தனர். நால்வருள் பேரழகியாக விளங்கிய யுவதி மேல் வஜ்ரமகுடனின் பார்வை நிலை பெற்றது. அவள் அழகில் மயங்கி நிலைகுலைந்தான் வஜ்ர மகுடன். அந்த வனமும் அவள் வனப்பும் அந்தப் பகுதிக்குத் தனித்த சோபையை அளித்தது. அவளுடன் இருந்த மற்ற பெண்கள், இவர்களைக் கவனிக்கவில்லை. இவள் மட்டும் பார்த்து விட்டாள். வாய்ச் சொற்களுக்கு இடமின்றி இருவரும் கண்களால் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர். இதனை அறியாமல் அவள் தோழியர் நீரடித்து, நீராடி விளையாடிக் கொண்டிருந்தனர். தோழியருள் ஒருத்தி, " நேரமாகிவிட்டதடி! கிளம்புவோம்." என்றாள். அதைக் கேட்டவுடன் ஒவ்வொருவராகக் கரையேறினர்.
இளவரசனின் மனங்கவர்ந்த அழகி, தடாகத்திலிருந்து தாமரை ஒன்றைப் பறித்தாள். தடாகத்தில் விளையாடுவதைப் போல அம்மலரைக் காதில் சூடிக் கொண்டாள். தந்தபத்திரம் என்ற காதில் அணியும் நகையைப் போலத் தாமரையையும் சுருட்டினாள். இன்னொரு தாமரை மலரைப் பறித்துத் தலையில் சூடிக் கொண்டாள். வலது உள்ளங்கையை நெஞ்சில் வைத்துக்கொண்டு ஓரக் கண்ணால் இளவரசனைப் பார்த்தாள்.
பிறகு அவள் தோழியருடன் சென்று விட்டாள்.
*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*
*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*
*வேதாளம் சொன்ன கதைகள்*
*முதல் கதை*
*பத்மாவதி கதை - 1*
வற்றாத கங்கை நதியோடும் வாரணாசி நகரை பிரதாபமகுடன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் வஜ்ரமகுடன். வாரணாசியின் இளவரசன். மந்திரி குமாரன் புத்திசரீரன் வஜ்ர மகுடனின் நெருங்கிய நண்பன். இளவரசன் அழகன், வீரன். புத்தி சரீரன் பெயருக்கேற்ப உடம்பெல்லாம் மூளை!
இருவரும் ஒரு நாள் அருகில் உள்ள கானகத்தில் வேட்டையாடச் சென்றனர். வழியெங்கும் தென்பட்ட சிறு சிறு விலங்குகளை வேட்டையாடிபடி காட்டினுள் வந்துவிட்டனர். உச்சிப் பொழுதாகிடவே தாகமெடுத்தது.
"புத்தி சரீரா நீர்நிலை ஏதாவது அருகில் இருக்கிறதா பார்."
"இளவரசே, அதோ அந்தப் பக்கத்தில் மேலே நீர்ப்பறவைகள் பறக்கின்றன. அங்கிருந்து வீசும் காற்று குளுமையாக இருக்கிறது. அங்கு நீர் நிலை ஏதாவது இருக்கவேண்டும். போகலாம் வாருங்கள்."
நெருங்கும் போது காற்று மேலும் குளுமை அடைந்தது. பறவைகளின் சேர்ந்திசை இருவரையும் வரவேற்றது. மரங்கள் அடர்ந்த அந்தப் பகுதியில் அழகான தடாகம் ஒன்று இருந்தது. ஆனால் இருவரும் உள்ளே இறங்கிவிடவில்லை. காரணம் தேவமங்கயரை ஒத்த இளம் பெண்கள் நால்வர் நீராடிக் கொண்டிருந்தனர். நால்வருள் பேரழகியாக விளங்கிய யுவதி மேல் வஜ்ரமகுடனின் பார்வை நிலை பெற்றது. அவள் அழகில் மயங்கி நிலைகுலைந்தான் வஜ்ர மகுடன். அந்த வனமும் அவள் வனப்பும் அந்தப் பகுதிக்குத் தனித்த சோபையை அளித்தது. அவளுடன் இருந்த மற்ற பெண்கள், இவர்களைக் கவனிக்கவில்லை. இவள் மட்டும் பார்த்து விட்டாள். வாய்ச் சொற்களுக்கு இடமின்றி இருவரும் கண்களால் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர். இதனை அறியாமல் அவள் தோழியர் நீரடித்து, நீராடி விளையாடிக் கொண்டிருந்தனர். தோழியருள் ஒருத்தி, " நேரமாகிவிட்டதடி! கிளம்புவோம்." என்றாள். அதைக் கேட்டவுடன் ஒவ்வொருவராகக் கரையேறினர்.
இளவரசனின் மனங்கவர்ந்த அழகி, தடாகத்திலிருந்து தாமரை ஒன்றைப் பறித்தாள். தடாகத்தில் விளையாடுவதைப் போல அம்மலரைக் காதில் சூடிக் கொண்டாள். தந்தபத்திரம் என்ற காதில் அணியும் நகையைப் போலத் தாமரையையும் சுருட்டினாள். இன்னொரு தாமரை மலரைப் பறித்துத் தலையில் சூடிக் கொண்டாள். வலது உள்ளங்கையை நெஞ்சில் வைத்துக்கொண்டு ஓரக் கண்ணால் இளவரசனைப் பார்த்தாள்.
பிறகு அவள் தோழியருடன் சென்று விட்டாள்.
No comments:
Post a Comment