சுகமான தூக்கம்! யாருக்கு?
மாதமோ சித்திரை!
நேரமோ பத்தரை!
நமக்கோ மாத்திரை!
ஆனாலும் வாய்க்கனுமே நித்திரை!
பொதுவாக சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் ஆவதால்,அக்னி நட்சத்திரமும் கூடவே வருவதால் இந்த காலகட்டங்களில் சாதாரண குடும்பங்களில் இருப்பவர்களுக்கு நித்திரை என்பது அவ்வளவு எளிதாக இருக்காது.
நித்திரையில் சித்திரை என்பது யாருக்கு இருக்கும்?
அதாவது தூக்கம் இயல்பான அளவில் Deep sleep என சொல்லக்கூடிய அளவில் இருக்காது.
புழுக்கமும் வியர்வையும் அதிகமாக இருப்பதால் ஏதோ ஒரு அளவு தூக்கம் மட்டுமே இருக்கும்.
ஒரு ஜாதகத்தில் 12-ஆம் இடம் என்பது அயன சயன போகம் எனப்படும்.
ஒரு மனிதன் நிம்மதியாக
தூங்குவானா என்பதை அறியப்படுத்தும் இடம் இதுவாகும்.
மரணத்திற்குப்பின் அவனது ஜீவனுக்கு ஜீவன் முக்தி உண்டா? என்பதை காட்டும் இடமும் இதுவே.
12-ஆம் வீடு சுப வீடாக இருந்து ,அங்கு சுப கிரகமும் இருந்து, பாபகிரகங்கள் நோக்காமல் ,சேராமல் இருந்து மற்றொரு சுபகிரகம் பார்த்தால் அவர்கள் படுத்தவுடன் நிம்மதியாக தூங்குவர் எந்த இடத்திலும்.
அதேபோல் 12ம் வீட்டில் பாவ கிரகங்கள் இருந்து சந்திரன் ,ராகு ,சனி போன்ற பாவ கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் சிலருக்கு தீய கனவுகள் மூலம் திடீரென விழிப்பு நிலை ஏற்படும்.
புரண்டு,புரண்டு படுத்தாலும் தூக்கம் என்பது வராது.
ஏதோ ஒரு விஷயத்தை நினைத்து திடீரென தூக்கத்திலிருந்து விழித்தாலும், ,இவர்களுக்கு நித்திரை என்பது முழு அளவில் இருக்காது.
அது ஏ சி ரூமாக இருந்தாலும் சரி.
அட்டமச் சனி, ஏழரை சனி நடக்கும் போது நிஜவாழ்வில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினை ,நித்திரயின் மூலமாக கனவாக வந்து திடீரென நிம்மதியை குலைத்து நித்திரையை கெடுக்கும்.
இதைப் பலரும் அனுபவித்து இருக்கலாம்.
தீய கனவோ, அல்லது பயமுறுத்தக் கூடிய கனவோ ,அடிக்கடி நித்திரையில் வந்தால் , அவர்கள் தினமும் தூங்குவதற்கு முன் சுந்தரகாண்டத்தில் உள்ள திரிசடை சொப்பனம் என்ற பாராயணத்தை தினசரி தூங்குவதற்கு முன் பாராயணம் செய்து ,தூங்குவதால் கெட்ட கனவுகள் வராது.
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே!
அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே!
என்று தெரியாமலா கவியரசர் பாடினார்.
ஓம் நமசிவாய
மாதமோ சித்திரை!
நேரமோ பத்தரை!
நமக்கோ மாத்திரை!
ஆனாலும் வாய்க்கனுமே நித்திரை!
பொதுவாக சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் ஆவதால்,அக்னி நட்சத்திரமும் கூடவே வருவதால் இந்த காலகட்டங்களில் சாதாரண குடும்பங்களில் இருப்பவர்களுக்கு நித்திரை என்பது அவ்வளவு எளிதாக இருக்காது.
நித்திரையில் சித்திரை என்பது யாருக்கு இருக்கும்?
அதாவது தூக்கம் இயல்பான அளவில் Deep sleep என சொல்லக்கூடிய அளவில் இருக்காது.
புழுக்கமும் வியர்வையும் அதிகமாக இருப்பதால் ஏதோ ஒரு அளவு தூக்கம் மட்டுமே இருக்கும்.
ஒரு ஜாதகத்தில் 12-ஆம் இடம் என்பது அயன சயன போகம் எனப்படும்.
ஒரு மனிதன் நிம்மதியாக
தூங்குவானா என்பதை அறியப்படுத்தும் இடம் இதுவாகும்.
மரணத்திற்குப்பின் அவனது ஜீவனுக்கு ஜீவன் முக்தி உண்டா? என்பதை காட்டும் இடமும் இதுவே.
12-ஆம் வீடு சுப வீடாக இருந்து ,அங்கு சுப கிரகமும் இருந்து, பாபகிரகங்கள் நோக்காமல் ,சேராமல் இருந்து மற்றொரு சுபகிரகம் பார்த்தால் அவர்கள் படுத்தவுடன் நிம்மதியாக தூங்குவர் எந்த இடத்திலும்.
அதேபோல் 12ம் வீட்டில் பாவ கிரகங்கள் இருந்து சந்திரன் ,ராகு ,சனி போன்ற பாவ கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் சிலருக்கு தீய கனவுகள் மூலம் திடீரென விழிப்பு நிலை ஏற்படும்.
புரண்டு,புரண்டு படுத்தாலும் தூக்கம் என்பது வராது.
ஏதோ ஒரு விஷயத்தை நினைத்து திடீரென தூக்கத்திலிருந்து விழித்தாலும், ,இவர்களுக்கு நித்திரை என்பது முழு அளவில் இருக்காது.
அது ஏ சி ரூமாக இருந்தாலும் சரி.
அட்டமச் சனி, ஏழரை சனி நடக்கும் போது நிஜவாழ்வில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினை ,நித்திரயின் மூலமாக கனவாக வந்து திடீரென நிம்மதியை குலைத்து நித்திரையை கெடுக்கும்.
இதைப் பலரும் அனுபவித்து இருக்கலாம்.
தீய கனவோ, அல்லது பயமுறுத்தக் கூடிய கனவோ ,அடிக்கடி நித்திரையில் வந்தால் , அவர்கள் தினமும் தூங்குவதற்கு முன் சுந்தரகாண்டத்தில் உள்ள திரிசடை சொப்பனம் என்ற பாராயணத்தை தினசரி தூங்குவதற்கு முன் பாராயணம் செய்து ,தூங்குவதால் கெட்ட கனவுகள் வராது.
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே!
அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே!
என்று தெரியாமலா கவியரசர் பாடினார்.
ஓம் நமசிவாய
No comments:
Post a Comment