Wednesday, January 29, 2020

செஞ்சேரிமலை சிறப்பு மந்திரகிரி ஆண்டவர்30/01/2020 வியாழன்

*செஞ்சேரிமலை சிறப்பு*

கோவைக்குச் சிறப்பு சேர்க்கும் பல்லடம் வட்டம் சுல்தான்பேட்டைக்கு அருகில்  செஞ்சேரிமலை முருகன் கோவில்.
மிகவும் புராதனமான தொன்மையான வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில் இது.

முருகப்பெருமான் கோயில் கொண்டுள்ள செஞ்சேரி மலை.

முருகக்கடவுளை நினைத்து... மனமுருகப் பிரார்த்திக்கும்போது... உதடுகள் உச்சரிக்கிற எளிய சொற்களுக்கு கூட மந்திரசக்தி உண்டாகி விடும்! அதற்கு முழு முதற் காரணமாக இருப்பது அந்த இறைவனின் திருநாமத்தில் நிறைந்திருக்கிற மகிமையும், அருளுமேயாகும்! தனது பெயரையே மந்திரசால மூர்த்தியாக கொண்டு முருகப்பெருமான் கோயில் கொண்டுள்ள செஞ்சேரி மலைக்கு நாம் சென்று வரலாமா...!

கோவை மாவட்டம், பல்லடத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில்... மேற்கே பதினெட்டு கி.மீ. தூரத்தில் செஞ்சேரி மலை அமைந்துள்ளது. சூலூரில் இருந்து சுல்தான்பேட்டை வழியாகவும் இந்த மலைக்கு செல்ல பாதை வசதி உண்டு.

‘தென்சேரி கிரி’ என்று பழம்பெயர் கொண்ட இத்திருத்தலமானது முருகக்கடவுள் அருள் புரியும் தலங்களில் முக்கியமானது. ‘மந்திரகிரி’ எனவும் இம்மலைக்கு சிறப்பு பெயர் குறிக்கப்படுகிறது. இங்கு கோயில் கொண்டிருக்கிற ஆறுமுகப்பெருமான் ‘மந்திராசல வேலாயுதமூர்த்தி’யாக விளங்குகிறார். தன்னை நினைப்பவரை காப்பாற்றும் மலை (மந்+திர+கிரி=மந்திரகிரி) என்றும் மூலவரான இறைவனுக்கு மந்திராசல மூர்த்தி என்றும் திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன.

அடிவாரத்தில் மலையடிப்பாளையம் என்னும் ஊர் உள்ளது. இங்கிருந்து நூற்று ஐம்பது அடி உயரத்தில்தான் கோயில் அமைந்துள்ளது என்பதால் மிக எளிதில் சென்று விடலாம்.

அடிவாரத்திற்கு சற்று மேலே... சந்தன வினாயகர் காட்சி தருகிறார். தனது தோற்றத்தினாலேயே உள்ளங்களில் குளிர்ச்சியை உண்டுபண்ணக்கூடிய இவர், சந்தனக் குளுமையாய்... இங்கே மணம் நிறைய வீற்றிருக்கிறார். அதிலிருந்து இன்னும் கொஞ்சம் சென்றதும்... இடும்பனைத் தரிசிக்கிறோம்.

உச்சியில் கிழக்கு நோக்கி மந்திரகிரி வேலாயுத சுவாமியின் திருக்கோயில் துலங்குகிறது. கோவிலின் உள்ளே மூலவர் அழகுத் திருக்கோலமாய் விளங்ககிறார். ஆறுமுகத்துடன் வள்ளி தெய்வானை சமேதராய்க் காட்சி அளிக்கும்... அந்த அருட்பிரவாகத்தை மனமார வழிபடுகிறோம். இங்கேயுள்ள தனிச்சிறப்பு இவரின் ஆறுமுகங்களையும் ஒருசேர நாம் காணமுடிகின்ற ஒன்றாகும். மேலும் மயில் வாகனமானது இடதுபக்கம் தலையை வைத்திருக்கிற காட்சியையும் பார்க்க முடிகிறது.


தமிழ்நாட்டில் உள்ள முருகப் பெருமான் திருத்தலங்களில் சிலவற்றில் மட்டுமே இந்த தனித்துவத்தை நாம் காண இயலும்! விண்ணில் மேகங்கள் குவிந்தால்... விரிந்தாடுகிற தோகையென எண்ணமெல்லாம்... இந்த இறைஇவனின் திருமேனியில் குவிந்து விடுகிறது...! உள்ளமோ -  வண்ண மயிலாக எழுந்து ஆடுகிறது.
இடது பக்கத்து கரத்தில் சேவற்கொடிக்கு பதிலாக, சேவலையே கொண்டுள்ளவர் இந்த செஞ்சேரி மலை இறைவன், அருணகிரிநாதரின் பக்தியுள்ளம் இந்த எழிற்கோலத்தை கண்டு பரவசமடைந்திருக்கிறது.

அருணகிரியார் தனது பயணத்தின்பாது இங்கு வழிபாட்டை முடித்த பின்னர் மேற்குத்திசையிலுள்ள பொன்மலைக்கு சென்றிருக்கிறார் என்றும் அறியப்படுகிறது.

கர்ப்பக்கிரக முன்வாசல் மண்டபத்தின் இருபுறமும் கல்வெட்டுக்கள் சில உள்ளன. தலவிரு)ட்சமாக ‘கருநொச்சி’ உள்ளது. கர்ப்பக் கிரகத்தின் வெளியே உள்ள அர்த்த மண்டபத்தில் கிழக்கு நோக்கி வலதுபுறத்தில் வினாயகரும், பிரகநாயகியம்மையும், இடது புறத்தில்... கைலாயநாதரும் காட்சி அளிக்கின்றனர்.

சுற்று வட்டாரத்து மக்கள் தங்களின் எதிர்காலப் பலன்கள் குறித்தும், துவங்கவிருக்கும் காரியங்கள் செவ்வனே நிறைவேற வேண்டும் என்பது குறித்தும் இந்த செவ்வேள் கந்தனின் கோயிலில் ‘பூக்கேட்டல்’ என்னும்ட வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

ஆறுமுகப் பெருமானின் திருக்கரங்களில் வலக்கையில் ஒன்றும், இடக்கையில் ஒன்றும் என பூக்களை வைக்கின்றனர். ஐந்து நிமிடங்களுக்குள் வலக்கையில் இருந்து பூ விழுமாயின், எண்ணி வந்த காரியம் ஜெயமாகும் எனவும்... இடக்கையில் இருந்து பூவிழுமாயின் அந்த காரியத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் நேரம் கடந்தும் பூ விழவில்லை என்றால் காலதாமதமாகும் எனவும் அர்த்தங்கள் இதற்கு இருக்கின்றன.

திருக்கோவிலின் வடபக்கத்தில் ‘சயிலோதகம்’ எனப்படும் ஞானதீர்த்தம், சுனை வடிவத்தில் காணப்படுகிறது. எந்த சூழலிலும் இந்த சுனை வற்றாமலிருப்பது சிறப்புக்குரியது. அபிஷேகத்திற்கும், பூஜைக்கும் இந்த நீரையே பயன்படுத்துகின்றனர்.

தினமும் நான்கு காலப் பூஜைகளும், வைகாசி விசாகம், ஐப்பசி கந்தர்சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற சமயங்களில் சிறப்பு பூஜைகளும், விழாக்களுமாக இங்கு நிகழ்கின்றன. தையில் நடக்ஙகும் பிரம்மோற்சவமும், தேர்த் திருவிழாவும் மிகுதியான பக்தர்களை இங்கு வரவழைக்கின்றன. செஞ்சேரி மலைக்கு மேற்கே ஒரு கி.மீ. தூரத்தில் விண்டுமலை உள்ளது. இதனை சக்தியின் வடிவமாகக்கருதி ‘சக்திகிரி’ என்று அழைக்கின்றனர். திருமால் நினற திருக்கோளத்தில் இங்கு விளங்குகிறார்.

தேவர்களைக் காப்பதற்காக, சூரபத்மனையும், அவனைத் தலைவனாகக் கொண்டிருக்கும் அசுரர்களையும் அழிக்க வேண்டிய சூழல் உருவானது. இதற்காகவே முருகக்கடவுள் தோன்றினார் என்பது பரவலாக அறியப்பட்டிருக்கும் வரலாறு. இந்த முருகனுக்குத் துணையாக பரமசிவன்... வீரபாகுவை அனுப்பினார். பார்வதியோ சக்திவேலினைத் தந்தார்.

ஒரு கைக்கு சக்திவேலும், மீதமுள்ள பதினோரு கைகளுக்குப் பதினோரு ஆயுதங்களும் முருகப் பெருமானுக்கு தன் தாயாரால் இவ்விதம் வழங்கப்பட்ட பிறகு சூரபத்மனின் மாயச் சக்திகளில் இருந்து மீண்டு வர மந்திர உபதேசமும் செய்து வைக்கப்பட்டது. பார்வதிதேவியின் வேண்டுகோளுக்கேற்ப, பரமசிவனார்... முருகப் பெருமானை நோக்கி ‘‘நீ போகிற வழியில் பேரருளால்... மலையின் வ
டிவமாக யாம் உள்ளோம். உன் தாயின் வடிவமாக சக்திகிரி அங்கே தென்படும்.

அந்தக் கிரியில் சென்று ஒரு தினம் சிவந்தனையோடு தவம் செய்வாயா! அங்கே வந்து மந்திர உபதேசத்தை உனக்குப் செய்தருளுகிறோம்’’ எனக் கூறினார்.
அதன்படியே தவத்தை மேற்கொண்ட முருகனின் திருச்செவிகளில் மூந்திரத்தை உரைத்து சூரபத்மனை வென்றுவர தந்தையார் கட்டளையிட்டார். அப்படி அவர் கட்டளையிட்டது இந்த மலையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பொருட்டே இந்த மலை ‘மந்திராசலம்’ எனப் பெயர் பெற்றது.

இந்த மலையின் குகையன்றில் யோக நிலையில் போகர் சிலகாலம் இருந்தார். அகத்தியர், வாமதேவர் முதலானோர் ஆசிரமம் அமைத்து அடிவாரத்தில் தங்கியிருந்தனர். பிரம்மன் தனது பாவம் நீங்க இங்கே நோன்பு மேற்கொண்டிருந்தான். போர் முடிந்து சூரனை வெற்றி கொண்ட நிலையில் திருப்பரங்குன்றத்தில் தெய்வானையை மணம் முடித்துக் கொண்டு திரும்பி வரும்பொழுது முருகப் பெருமான் இங்கே தங்கினார் என்பவனை எல்லாம் தலபுராணத்திலிருந்து நமக்கு அறியக் கிடைக்கின்றன.
*விக்கிரமாதித்தன் கதைகள் - 33*

*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*

*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*

*வேதாளம் சொன்ன கதைகள்*

*முதல் கதை*

*பத்மாவதி கதை - 2*

இளவரசன் வஜ்ர மகுடனும் அமைச்சர் மகன் புத்தி சரீரனும் தம் நகரத்துக்குத் திரும்பினர். வஜ்ர மகுடன் கானகத்தில் கண்ட தடாகப் பாவையையே எண்ணி எண்ணி மனம் சோர்ந்தான். நாள்கள் செல்லச் செல்ல எதிலும் மனம் செலுத்தாமல் கன்னிகையின் அழகிலேயே கருத்தூன்றிக் கிடந்தான். அவனது நண்பனான புத்தி சரீரன் இளவரசனின் நிலையை உணர்ந்து கொண்டான்.

"நண்பா, உனக்கு அவளைப் பார்க்கவேண்டும்போல் இருந்தால் சென்று பார்க்கவேண்டியதுதானே! ஏன் இங்கே அவள் நினைவில் கிடந்து உழல்கிறாய்?"

"புத்தி சரீரா, அதெப்படி முடியும்! அவள் தன் ஊர், பெயர் என்று எவற்றையும் சொல்லவில்லையே!"

"இளவரசே! அவள்தான் தன்னைப் பற்றிய குறிப்புகளைத் தாமரைப் பூவினால் தெரியப்படுத்தினாளே! கவனிக்கவில்லையா?"

"அ! அவள் தாமரையைக் கையில் வைத்துக் கொண்டுத் தோழியரோடு விளையாடுகிறாள் என்றல்லவா நினைத்தேன்! நீ எனக்கு விளக்கமாகச் சொல்!"

"முதலில் தாமரைப் பூவைக் காதில் சூடினாள். அவள் கர்ணோத்பலன் என்ற அரசனுடைய நாட்டின் குடிமகள் என்பதை இதன் மூலம் உணர்த்தினாள்.

பிறகு தாமரைப் பூவை அவள் தந்தபத்திரம் என்ற காதில் அணியும் நகையைப் போலச் சுருட்டினாள். இதன் மூலம்அவளது தந்தை ஒரு தந்தச் சிற்பி என்று குறிப்பிட்டாள்.

அடுத்து அவள் மற்றொரு தாமரைப் பூவைப் பறித்துத் தன் தலையில் சூடிக் கொண்டாள். தன் பெயர் பத்மாவதி என்று இதன் மூலம் உணர்த்தினாள்.

மேலும் கரத்தைக் குவித்துத் தன் நெஞ்சத்தில் வைத்துக் கொண்டாள். உன்னையும் ஓரக் கண்ணால் பார்த்தாள். தன் மனம் உனக்கே வசமாகிவிட்டது என்பதை அறிவித்தாள்.

உனக்காக நான் எல்லாத் திசைகளிலும் நம் ஒற்றர்களை அனுப்பி விசாரித்துவிட்டேன். கலிங்க நாட்டில் கர்ணோத்பலன் என்பவன் அரசனாக இருக்கிறான். அவனுடைய அரசவையில் சங்கிராம வர்த்தனன் என்ற தந்தச் சிற்பி இருக்கிறான். அவனுடைய அழகான மகளே நீ கண்ட பத்மாவதி."

இளவரசன் வஜ்ர மகுடன் மகிழ்ச்சி அடைந்தான். தனது காதல் கைகூடும் என்ற நம்பிக்கை வந்தது. இருவரும் தத்தம் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு கலிங்க நாட்டுக்குச் சென்றனர். அங்கு கரனோத்பலன் ஆளும் நகரத்தை விசாரித்து அறிந்தனர். அந்நகரத்தை அடைந்து பத்மாவதியின் வீட்டைத் தேடிக் கண்டு பிடித்தனர். அதே தெருவில் சிறியதொரு வீட்டில் தனியாக வசித்து வந்த கிழவி ஒருத்தியின் வீட்டினில் இருவரும் தங்கினர்.

அமைச்சரின் மகன் புத்தி சரீரன் கிழவியிடம் பேச்சுக் கொடுத்தான்.

"பாட்டி, இவ்வூரில் இருக்கும் தந்தச் சிற்பி சங்கிராமவர்த்தனர் என்பவரைத் தெரியுமா?"

Thursday, January 23, 2020

*தை அமாவாசை 2020ன் சிறப்புக்கள்*
24-1.2020
*வெள்ளிக்கிழமை*

பித்ரு காரகனாகிய சூரியனும் மாத்ரு காரகனாகிய  சந்திரனும் கர்ம காரகனாகிய சனியின் வீடான மகரத்தில் கூடும் நன்னாள் தை மாதத்தில் நிகழும்.அந்த காலமே தை அமாவாசை ஆகும்.இந்தாண்டு மற்ற ஆண்டுகள் போல் அல்லாமல் அதே வீட்டிற்கு வீட்டின் அதிபதியாகிய சனி பகவானும் ஆட்சி வலுவிற்கு வந்து திருக்கணித முறைப்படி பெயர்ச்சி ஆகிறார்.எனவே அன்றைய தினத்தில் நம் முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணம் கட்டாயம் நல்ல பலன்களை கொடுத்து வாழ்வில் சுபிட்சங்களை வாரி வழங்கும்.

நமது வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் மகிழ்ச்சியடைகிறோம். நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களே பித்ருக்கள் அவர்கள் தங்களது சந்ததியினர் நலமுடன் வாழ் வாழ்வில் முன்னேற, தடைகள் அகல, பல தோஷங்கள் நிவர்த்தியாக வருடத்தில் சில குறிப்பிட்ட தினங்களுக்கு பூலோகம் வந்து ஆசி வழங்குவதாக ஐதீகம். அதில் அமாவாசை நாள் மிகவும் சக்தி பொருந்திய நாளாகும். அந்த நாளில் நாம் மிகவும் மனம் மகிழ்ச்சியுடன் முன்னோர்களை வரவேற்று தர்ப்பணம் அளிக்கவேண்டும். தட்சிணாயாண புண்ணிய காலமான ஆடி அமாவாசை நாளில் பூவுலகத்திற்கு வந்து புரட்டாசி மாதத்தில் மகாளாய பட்ச காலத்தில் நம்முடனே இருந்து உத்தராயாண புண்ணிய காலமான தை மாதத்தில் வரும் அமாவாசை நாளில் நம்மை ஆசிர்வதித்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பி செல்வதாக ஐதீகம்.

அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு அவர்களின் ஆசி பெறும் போது, நமது பாக்ய ஸ்தானம் வலிமை பெறும். இதன் மூலம் திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளை நீக்கி கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம். வருகிற தை அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.

தை அமாவாசை வழிபாடு

தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும். இல்லத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் நடைபெறும். நீண்டநாளாக வருத்தி வந்த நோய் அகலும். மனக்கலக்கம் விலகும், மனதில் மகிழ்ச்சி பொங்கும். திருப்புல்லாணி, ராமேஸ்வரம், கோடியக்கரை, பூம்புகார், திருவெண்காடு, திருச்சி அம்மா மண்டபம், திருச்செந்தூர், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பவானி கூடுதுறை போன்ற தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கலாம்...

அமாவாசை அன்று முன்னோர்கள் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். தை அமாவாசையன்று, இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது.

முன்னோர்களுக்கு மூன்று கை தண்ணீர் என்று சொல்வார்கள். அவர்களுக்கு செய்யும் தர்ப்பண பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் சூரியன் வழங்குகிறார். அந்த தேவதைகள் மறைந்த முன்னோரிடம் பலன்களை சேர்க்கின்றன என்பது ஐதீகம். அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு இரு கைகளாலும் நீர் விடும் அர்க்கியம் செய்வது மிகுந்த நன்மை தரும். கடல் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்றுகொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளையும் பூரணமாக பெறலாம்.

திதி கொடுக்க நல்ல நேரம்

ஜனவரி 24ஆம் தேதி அதிகாலை 3.06 மணிக்கு அமாவாசை திதி உள்ளது. அன்று முழுவதும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கவும், அவர்களை வழிபடவும் மிகச்சிறந்த நாளாக பார்க்கப்படுகிறது. காலை 8.25 மணி முதல் 9.48 வரை திதி கொடுக்கலாம். ராகு காலம் எமகண்டம், குளிகை நேரம் தவிர பிற நேரங்களில் திதி கொடுக்கலாம்.

மோட்ச தீபம்

பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் தை அமாவாசையன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள பிதுர் கட்டத்திலும், அங்குள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடி விட்டு, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். அதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசீர்வதிப்பதாக ஐதீகம்.

திலஹோமம்

இயற்கையாக இறந்தவர்களின் ஆன்மாவிற்கு எளிதில் முக்தி கிடைத்துவிடும். மன வேதனை அடைந்து துர்மரணம் அடைந்தாலோ, கொடூரமான நோய் தாக்கத்தால் இறந்தாலோ அவர்களின் ஆன்மா எளிதில் முக்தி அடைவதில்லை. இயற்கையாக மரணித்து, முக்தி அடைந்தவரின் வீட்டில் சுப நிகழ்வு நடந்து கொண்டே இருக்கும். அகால மரணமடைந்த ஆத்மா முக்தி அடையும் வரை நல்ல காரியங்கள் நடைபெறுவதில் தடைகள் ஏற்படும். இதற்கு காரணம் ஆத்ம சாந்திக்கான கடமைகளை செய்யாமல் விடுவதுதான். முன்னோர்களின் ஆன்மாக்களை யாரும் பார்க்க முடியாது, ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கவும் முடியாது. எனவே பஞ்ச பூதங்களையும், நவக்கிரகங்களையும் முன் நிறுத்தி உரிய மந்திரங்களோடு செய்யப்படும் தில ஹோமம், எத்தகைய துர்மரணமடைந்த ஆத்மாவையும் சாந்தியடைய செய்துவிடும். ஹோமம் செய்ய முடியாதவர்களுக்கு அமாவாசை வழிபாடு நல்ல பலன் தரும்.

.....நன்றி......🙏

Wednesday, January 22, 2020

*விக்கிரமாதித்தன் கதைகள் - 33*

*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*

*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*

*வேதாளம் சொன்ன கதைகள்*

*முதல் கதை*

*பத்மாவதி கதை - 2*

இளவரசன் வஜ்ர மகுடனும் அமைச்சர் மகன் புத்தி சரீரனும் தம் நகரத்துக்குத் திரும்பினர். வஜ்ர மகுடன் கானகத்தில் கண்ட தடாகப் பாவையையே எண்ணி எண்ணி மனம் சோர்ந்தான். நாள்கள் செல்லச் செல்ல எதிலும் மனம் செலுத்தாமல் கன்னிகையின் அழகிலேயே கருத்தூன்றிக் கிடந்தான். அவனது நண்பனான புத்தி சரீரன் இளவரசனின் நிலையை உணர்ந்து கொண்டான்.

"நண்பா, உனக்கு அவளைப் பார்க்கவேண்டும்போல் இருந்தால் சென்று பார்க்கவேண்டியதுதானே! ஏன் இங்கே அவள் நினைவில் கிடந்து உழல்கிறாய்?"

"புத்தி சரீரா, அதெப்படி முடியும்! அவள் தன் ஊர், பெயர் என்று எவற்றையும் சொல்லவில்லையே!"

"இளவரசே! அவள்தான் தன்னைப் பற்றிய குறிப்புகளைத் தாமரைப் பூவினால் தெரியப்படுத்தினாளே! கவனிக்கவில்லையா?"

"அ! அவள் தாமரையைக் கையில் வைத்துக் கொண்டுத் தோழியரோடு விளையாடுகிறாள் என்றல்லவா நினைத்தேன்! நீ எனக்கு விளக்கமாகச் சொல்!"

"முதலில் தாமரைப் பூவைக் காதில் சூடினாள். அவள் கர்ணோத்பலன் என்ற அரசனுடைய நாட்டின் குடிமகள் என்பதை இதன் மூலம் உணர்த்தினாள்.

பிறகு தாமரைப் பூவை அவள் தந்தபத்திரம் என்ற காதில் அணியும் நகையைப் போலச் சுருட்டினாள். இதன் மூலம்அவளது தந்தை ஒரு தந்தச் சிற்பி என்று குறிப்பிட்டாள்.

அடுத்து அவள் மற்றொரு தாமரைப் பூவைப் பறித்துத் தன் தலையில் சூடிக் கொண்டாள். தன் பெயர் பத்மாவதி என்று இதன் மூலம் உணர்த்தினாள்.

மேலும் கரத்தைக் குவித்துத் தன் நெஞ்சத்தில் வைத்துக் கொண்டாள். உன்னையும் ஓரக் கண்ணால் பார்த்தாள். தன் மனம் உனக்கே வசமாகிவிட்டது என்பதை அறிவித்தாள்.

உனக்காக நான் எல்லாத் திசைகளிலும் நம் ஒற்றர்களை அனுப்பி விசாரித்துவிட்டேன். கலிங்க நாட்டில் கர்ணோத்பலன் என்பவன் அரசனாக இருக்கிறான். அவனுடைய அரசவையில் சங்கிராம வர்த்தனன் என்ற தந்தச் சிற்பி இருக்கிறான். அவனுடைய அழகான மகளே நீ கண்ட பத்மாவதி."

இளவரசன் வஜ்ர மகுடன் மகிழ்ச்சி அடைந்தான். தனது காதல் கைகூடும் என்ற நம்பிக்கை வந்தது. இருவரும் தத்தம் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு கலிங்க நாட்டுக்குச் சென்றனர். அங்கு கரனோத்பலன் ஆளும் நகரத்தை விசாரித்து அறிந்தனர். அந்நகரத்தை அடைந்து பத்மாவதியின் வீட்டைத் தேடிக் கண்டு பிடித்தனர். அதே தெருவில் சிறியதொரு வீட்டில் தனியாக வசித்து வந்த கிழவி ஒருத்தியின் வீட்டினில் இருவரும் தங்கினர்.

அமைச்சரின் மகன் புத்தி சரீரன் கிழவியிடம் பேச்சுக் கொடுத்தான்.

"பாட்டி, இவ்வூரில் இருக்கும் தந்தச் சிற்பி சங்கிராமவர்த்தனர் என்பவரைத் தெரியுமா?"

துளசிச் செடி மகிமைகள் 22/01/2020 புதன்

*துளசிச் செடி மகிமைகள்:*
"******************************

( 1 ). ஒவ்வோர் வீட்டிலும், துளசி
செடி அவசியம் இருக்கனும். சிறிது கருப்பாக இருக்கும் கிருஷ்ண துளசி எனில் இரட்டைச் செடியாகத்தான் வளர்க்க வேண்டும்.!

( 2 ). வீட்டின் முன்னே,அல்லது
முற்றத்திலோ வளர்க்கவும்.!

( 3). நீரை கடவுள் பெயர் சொல்லி, தெளித்து விட்டு, வேரில் அளவோடு ஊற்றவும்.!

( 4 ). வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது, துளசியை வணங்கிவிட்டுச் சென்றால் எந்த சகுன பாதிப்பும் இல்லை!

( 5 ) .வீட்டிற்கு திரும்பியபின், கை கால் கழுவிய பின், துளசியை வணங்கினால் தீய சக்திகளின் தொல்லையில்லை

( 6 ). பெண்கள் திருமணமாகிப் புகுந்த வீட்டிற்கு செல்லும் போது துளசியிடம் விடை பெற வேண்டும். பிறந்த வீட்டிற்கு வரும் போதெல்லாம் நீருற்றி வழிபட வேண்டும்.

#வறுமை #அகல,#திருமணப்பேறு #உண்டாக #துளசி #வழிபாடு

கீழ் கண்ட சுலோகத்தை சொல்லி வணங்கி தீப,தூப நிவேதனங்களுடன் துளசியை
பூஜித்து வர வறுமை அகலும்,திருமணப்பேறு உண்டாகும் ,சகல
செளபாக்கியங்களும்
கிடைக்கும்.

கீழ்கண்ட துளசியின் பெயர்களை அர்த்தம் அறிந்து படிப்பவனுக்கு அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்கும்.

"ப்ருந்தா, ப்ருந்தாவணி, விச்வ பூகிதா, விச்வபவானி, புஷ்ப ஸாரா,நந்தநீச துளசி,
கிருஷ்ண ஜீவினி ஏதத நாமாஷ்டகம் சைவ ஸ்தோத்திரம் நமார்த்த ஸம்யுக்தம்
ய: படேத் தாம்ச சம்பூஜிய சோச்வமேத பலன் லபேத்"

#இதன் #அர்த்தம்
பிருந்தாதேவியை நான் பூஜிக்கிறேன்
பிருந்தாவணியை நான் பூஜிக்கிறேன்
விச்வ பூஜிதாவை நான் பூஜிக்கிறேன்
விச்வபவானியை நான் பூஜிக்கிறேன்
புஷ்பஸாராவை நான் பூஜிக்கிறேன்
நந்தினியை நான் பூஜிக்கிறேன்
கிருஷ்ணவேனியை நான் பூஜிக்கிறேன்
துளசியை நான் பூஜிக்கிறேன்.

கீழ்க்காணும் ஸ்லோகத்தைக் கூறி துளசியை நமஸ்கரிக்க சகல சம்பத்துகளும் உண்டாகும்.

துளசி வந்தனம்:
---------------------------
"துளஸி ஸ்ரீ சகி ஸுபே பாபஹாரிணி புண்யதே
நமஸ்தே நாரதநுதே நாராயண மன:ப்ரியே'

அர்த்தம்: திருமகளின் தோழியும், பாபத்தைப் போக்கி புண்ணியம் அருள்பவளும், நாரதரால் வணங்கப்பட்டவளும், நாராயணரின் மனதுக்குப் பிரியம் உடையவளுமான துளசிதேவியே உன்னை வணங்குகிறேன்...

Tuesday, January 21, 2020

*விக்கிரமாதித்தன் கதைகள் - 32*

*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*

*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*

*வேதாளம் சொன்ன கதைகள்*

*முதல் கதை*

*பத்மாவதி கதை - 1*

வற்றாத கங்கை நதியோடும் வாரணாசி நகரை பிரதாபமகுடன் என்ற அரசன் ஆண்டு வந்தான்.  அவனுடைய மகன் வஜ்ரமகுடன். வாரணாசியின் இளவரசன். மந்திரி குமாரன் புத்திசரீரன் வஜ்ர மகுடனின் நெருங்கிய நண்பன். இளவரசன் அழகன், வீரன். புத்தி சரீரன் பெயருக்கேற்ப உடம்பெல்லாம் மூளை!

இருவரும் ஒரு நாள் அருகில் உள்ள கானகத்தில் வேட்டையாடச் சென்றனர். வழியெங்கும் தென்பட்ட சிறு சிறு விலங்குகளை வேட்டையாடிபடி காட்டினுள் வந்துவிட்டனர். உச்சிப் பொழுதாகிடவே தாகமெடுத்தது.

"புத்தி சரீரா நீர்நிலை ஏதாவது அருகில் இருக்கிறதா பார்."

"இளவரசே, அதோ அந்தப் பக்கத்தில் மேலே நீர்ப்பறவைகள் பறக்கின்றன. அங்கிருந்து வீசும் காற்று குளுமையாக இருக்கிறது. அங்கு நீர் நிலை ஏதாவது இருக்கவேண்டும். போகலாம் வாருங்கள்."

நெருங்கும் போது காற்று மேலும் குளுமை அடைந்தது. பறவைகளின் சேர்ந்திசை இருவரையும் வரவேற்றது. மரங்கள் அடர்ந்த அந்தப் பகுதியில் அழகான தடாகம் ஒன்று இருந்தது. ஆனால் இருவரும் உள்ளே இறங்கிவிடவில்லை. காரணம் தேவமங்கயரை ஒத்த இளம் பெண்கள் நால்வர் நீராடிக் கொண்டிருந்தனர். நால்வருள் பேரழகியாக விளங்கிய யுவதி மேல் வஜ்ரமகுடனின் பார்வை நிலை பெற்றது. அவள் அழகில் மயங்கி நிலைகுலைந்தான் வஜ்ர மகுடன். அந்த வனமும் அவள் வனப்பும் அந்தப் பகுதிக்குத் தனித்த சோபையை அளித்தது.  அவளுடன் இருந்த மற்ற பெண்கள், இவர்களைக் கவனிக்கவில்லை. இவள் மட்டும் பார்த்து விட்டாள். வாய்ச் சொற்களுக்கு இடமின்றி இருவரும் கண்களால் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர். இதனை அறியாமல் அவள் தோழியர் நீரடித்து, நீராடி விளையாடிக் கொண்டிருந்தனர். தோழியருள் ஒருத்தி, " நேரமாகிவிட்டதடி! கிளம்புவோம்." என்றாள்.  அதைக் கேட்டவுடன் ஒவ்வொருவராகக் கரையேறினர்.

இளவரசனின் மனங்கவர்ந்த அழகி, தடாகத்திலிருந்து தாமரை ஒன்றைப் பறித்தாள். தடாகத்தில் விளையாடுவதைப் போல அம்மலரைக் காதில் சூடிக் கொண்டாள். தந்தபத்திரம் என்ற காதில் அணியும் நகையைப் போலத் தாமரையையும் சுருட்டினாள். இன்னொரு தாமரை மலரைப் பறித்துத் தலையில் சூடிக் கொண்டாள். வலது உள்ளங்கையை நெஞ்சில் வைத்துக்கொண்டு ஓரக் கண்ணால் இளவரசனைப் பார்த்தாள்.

பிறகு அவள் தோழியருடன் சென்று விட்டாள்.


Sunday, January 19, 2020

சுகமான தூக்கம்! யாருக்கு? 19/01/2020 ஞாயிறு

சுகமான தூக்கம்! யாருக்கு?

மாதமோ சித்திரை!
நேரமோ பத்தரை!
நமக்கோ மாத்திரை!
ஆனாலும் வாய்க்கனுமே நித்திரை!


 பொதுவாக சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் ஆவதால்,அக்னி நட்சத்திரமும் கூடவே வருவதால்  இந்த காலகட்டங்களில் சாதாரண குடும்பங்களில் இருப்பவர்களுக்கு நித்திரை என்பது அவ்வளவு எளிதாக இருக்காது.


நித்திரையில் சித்திரை என்பது யாருக்கு இருக்கும்?

 அதாவது தூக்கம் இயல்பான அளவில் Deep sleep என சொல்லக்கூடிய அளவில் இருக்காது.

 புழுக்கமும் வியர்வையும் அதிகமாக இருப்பதால் ஏதோ ஒரு அளவு தூக்கம் மட்டுமே இருக்கும்.

 ஒரு ஜாதகத்தில் 12-ஆம் இடம் என்பது அயன சயன போகம் எனப்படும்.

 ஒரு மனிதன் நிம்மதியாக
தூங்குவானா என்பதை அறியப்படுத்தும் இடம் இதுவாகும்.

 மரணத்திற்குப்பின் அவனது ஜீவனுக்கு ஜீவன் முக்தி உண்டா? என்பதை காட்டும் இடமும் இதுவே.

 12-ஆம் வீடு சுப வீடாக இருந்து ,அங்கு சுப கிரகமும் இருந்து, பாபகிரகங்கள் நோக்காமல் ,சேராமல் இருந்து மற்றொரு சுபகிரகம் பார்த்தால் அவர்கள் படுத்தவுடன் நிம்மதியாக தூங்குவர் எந்த இடத்திலும்.

 அதேபோல் 12ம் வீட்டில் பாவ கிரகங்கள் இருந்து சந்திரன் ,ராகு ,சனி போன்ற பாவ கிரகங்களுடன் சேர்ந்திருந்தால்  சிலருக்கு தீய கனவுகள் மூலம் திடீரென விழிப்பு நிலை ஏற்படும்.

 புரண்டு,புரண்டு படுத்தாலும் தூக்கம் என்பது வராது.

 ஏதோ ஒரு விஷயத்தை நினைத்து திடீரென தூக்கத்திலிருந்து விழித்தாலும், ,இவர்களுக்கு நித்திரை என்பது முழு அளவில் இருக்காது.

 அது ஏ சி ரூமாக இருந்தாலும் சரி.

 அட்டமச் சனி, ஏழரை சனி நடக்கும் போது  நிஜவாழ்வில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினை ,நித்திரயின் மூலமாக கனவாக வந்து திடீரென நிம்மதியை குலைத்து நித்திரையை கெடுக்கும்.

 இதைப் பலரும் அனுபவித்து இருக்கலாம்.

 தீய கனவோ, அல்லது பயமுறுத்தக் கூடிய கனவோ ,அடிக்கடி நித்திரையில் வந்தால் , அவர்கள் தினமும் தூங்குவதற்கு முன்  சுந்தரகாண்டத்தில் உள்ள திரிசடை சொப்பனம் என்ற பாராயணத்தை தினசரி தூங்குவதற்கு முன் பாராயணம் செய்து ,தூங்குவதால் கெட்ட கனவுகள் வராது.

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே!
அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே!

என்று தெரியாமலா கவியரசர் பாடினார்.

ஓம் நமசிவாய

Friday, January 17, 2020

ஜாதகம் என்றால் என்ன? 18/01/2020 சனி

ஜாதகம் என்றால் என்ன?

ஜாதகம் என்றால் என்ன? ஒரு குழந்தை பிறந்திருக்கிறது என்றால் அது எந்த நாளில் எந்த நேரத்தில் பிறந்திருக்கிறது. அது எந்த ஊரில் பிறந்திருக்கிறது என்பதைப் பார்த்து அந்த ஊரை முக்கியமாகக் கொண்டு அந்த நேரத்தில் எந்த எந்த கிரகங்கள் எத்தனை எத்தனை டிகிரியில் அமைந்துள்ளது என்பதை கணித்து 12 கட்டங்களில் குறித்து தருவார்கள். அதை ராசிக் கட்டம் என்று சொல்வார்கள். அதைத்தான் நாம் ஜாதகம் என்றும் சொல்லி வருகிறோம்.நமது பூமியை ஆதாரமாக (reference) வைத்து, பூமியைச் சுற்றியுள்ள அண்ட வெளியை (zodiac) 12 பாகங்களாகப் பிரித்து (12 ராசிகள்), எந்த கிரகம், எந்த பாகத்தில், அன்றைய தினத்தில், நேரத்தில் உள்ளது என்பதையே ராசி சக்கரம் (ராசிக் கட்டம்) உணர்த்தும்.
பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன?

மேஷம்,
ரிஷபம்,
மிதுனம்,
கடகம்,
சிம்மம்,
கன்னி,
துலாம்,
விருச்சிகம்,
தனுசு,
மகரம்,
கும்பம்,
மீனம்.

2.
ராசி அதிபதிகளின் பெயர் என்ன?

மேஷம் - செவ்வாய்
ரிஷபம் - சுக்கிரன்
மிதுனம் - புதன்
கடகம் - சந்திரன்
சிம்மம் - சூரியன்
கன்னி - புதன்
துலாம் - சுக்கிரன்
விருச்சிகம் - செவ்வாய்
தனுசு - குரு
மகரம் - சனி
கும்பம் - சனி
மீனம் - குரு

 12 வீடுகளுக்கும் தனித்தனியாக உள்ள வேலைகள் (Portfolios) என்ன?
அட்டவனை உள்ளது பார்க்கவும்

4. லக்கினம் என்பது என்ன?

ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை வானத்தில் எந்த ராசியைப்
பார்த்தவாறு ஜனித்திருக்கிறதோ அதுதான் அந்தக் குழந்தையின் பிறந்த லக்கினம்

உதாரணம். சித்திரை மாதம் முதல் தேதியன்று (That is on April 14th) காலை
6 மணி முதல் 8 மணி வரை மேஷ லக்கினம்.ஆவணி மாதம் (August 17th or 18th) அதே காலை நேரத்தில் உதய
லக்கினம் சிம்மம் இப்படி. அதையடுத்து ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும்
அடுத்தடுத்த லக்கினம் வரிசைப்படி மாறிக்கொண்டிருக்கும்.

5. லக்கினத்தை வைத்து ஒவ்வொருவீட்டையும் எண்ணிப்பார்க்கும் முறை என்ன?

லக்னம் இருக்கும் ராசி முதல் வீடு. அதில் இருந்து கடிகார சுற்றுப்படி வந்தால்
ஒவ்வொரு ராசியும் 2,3,4,5,6,7,8,9,10,11, 12 என்று வரிசைப்படி வரும்.

6. சந்திர ராசி என்றால் என்ன? அது எதை ஆதாரமாகக் கொண்டது?

ஒரு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசி, சந்திர ராசி எனப்படும்.
அது ஜாதகன் பிறந்த நட்சத்திரத்தை ஆதாரமாகக் கொண்டது.

7. லக்கினம் எதற்குப் பயன்படும்? சந்திர ராசி எதற்குப் பயன்படும்?

பிறந்த ஜாதகம் (Birth Chart) என்பது வாகனம்,தசாபுத்தி என்பது ரோடு,கோள்சாரம் என்பது டிரைவர்.லக்கினத்தையும் அதை அடுத்துள்ள பன்னிரெண்டு வீடுகளையும் வைத்து ஜாதகனுடைய
வாழ்க்கையையும், தசாபுத்தியைவைத்து அந்த ஜாதகன் பயனடையப் போகும் காலத்தையும் கோள்சாரத்தைவைத்து அந்தப் பலன்கள் கையில் கிடைக்கும் காலத்தையும் அறியலாம்.

8. கோச்சாரம் (கோள் சாரம் - Transit of planets) என்பது என்ன?

ஒவ்வொரு கோளும் வானவெளியில் சுழன்று ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியில் இடம் பெயர்ந்து அமருவதே கோள்சாரம் எனப்படும்.

9. தசா / புத்தி என்பது என்ன? அதன் பயன் என்ன?

ஜாதகன் பிறந்த நட்சத்திரத்திற்கு அதிபதியான கிரகம் எதுவோ அதற்குரிய தசாதான் ஜாதகனின் ஆரம்ப தசா, அதை அடுத்து ஒவ்வொரு தசாவாக மாறிக் கொண்டே வரும் மொத்த தசா காலம் 120 ஆண்டுகள். ஒவ்வொரு தசாவையும் மற்ற கோள்கள் பங்குபோட்டுக் கொள்ளும். அதற்கு புத்தி என்று பெயர் (Sub period). ஒவ்வொருகிரகமும் அதன் தசாவில் அல்லது புத்தியில்தான் தனக்குரிய நல்ல அல்லது தீய பலன்களைக் கொடுக்கும்

10. தசா புத்திகள் எதை வைத்து ஆரம்பிக்கின்றன?

ஒரு ஜாதகரின் பிறந்த நட்சத்திரத்தின் அதிபதியின் தசைதான் துவக்க தசை.

11. தசா புத்திகளின் கால அளவு, மற்றும் வரிசை என்ன?

சூரிய தசை - 6 ஆண்டுகள்
சந்திர தசை - 10 ஆண்டுகள்
செவ்வாய் தசை - 7 ஆண்டுகள்
ராகு தசை - 18 ஆண்டுகள்
குரு தசை - 16 ஆண்டுகள்
சனி தசை - 19 ஆண்டுகள்
புதன் தசை - 17 ஆண்டுகள்
கேது தசை - 7 ஆண்டுகள்
சுக்கிர தசை - 20 ஆண்டுகள்

மொத்தம் 120 ஆண்டுகள்

ஒரு பார்முலா உள்ளது:
Major Period x Sub Period = Number of months & Days of the Sub- Period (In the three digit answer, first 2 digits are months and the last digit multiplied by three is the days

12. கோள்களின் பெயர் என்ன? அவைகளின் சொந்த வீடு எது?

சூரியன் - சிம்மம்
சந்தின் - கடகம்
(இந்த இரண்டு கோள்களுக்கும் ஒரு வீடு மட்டுமே சொந்தம்)
செவ்வாய் - மேஷம், விருச்சிகம்
புதன் - மிதுனம், கன்னி
குரு - மூலம், மீனம்
சுக்கிரன் - ரிஷபம், துலாம்
சனி - மகரம், கும்பம்
(இந்த ஐந்து கிரகங்களுக்கு
தலா 2 வீடுகள் சொந்தம்)
ராகு - சொந்த வீடு இல்லை
கேது - சொந்த வீடு இல்லை

13. அவைகள் உச்சம் அல்லது நீசம் ஆவது என்றால் என்ன?எங்கே ஆகும்?

ஒரு கிரகத்திற்கு அதன் சொந்த வீட்டில் 100% சக்தி (Power) உண்டு
உச்ச வீட்டில் சொந்தவீட்டைப்போல இரண்டு மடங்கு சக்தி உண்டு!

கோள்கள் "உச்சம்" அடையும் இராசி
சூரியன் - மேஷத்தில்,
சந்திரன் - ரிஷபத்தில்,
குரு - கடகத்தில்
புதன் - கன்னியில்
சனி - துலாமில்
ராகு,கேது - விருச்சிகத்தில்
செவ்வாய் - மகரத்தில்
சுக்கிரன் - மீனத்தில்
=======
நீசவீட்டில் ஒரு கிரகத்திற்கு சுத்தமாக வலிமை இருக்காது.

கோள்கள் "நீசம்" அடையும் இராசி
சூரியன் - துலாமில்,
சந்திரன் - விருச்சிகத்தில்,
செவ்வாய் - கடகத்தில்,
புதன் - மீனத்தில்
குரு - மகரத்தில்
சுக்கிரன் - கன்னியில்
சனி - மேஷத்தில்
ராகு, கேது - ரிஷபத்தில்

14.அவைகளின் நட்பு வீடு, பகை வீடுகள் எவை?

Chart கொடுக்கப்பட்டுள்ளது



கேந்திரம் என்பது லக்கினத்தில் இருந்து 4, 7,10ஆம் வீடுகள்

திரிகோணம் என்பது லக்கினம், 5, 9 ஆம் வீடுகள். கேந்திரம் சிறப்பானது அதைவிட திரிகோணம் இன்னும் சிறப்பானது.இந்த வீடுகளில் அமரும் கிரகங்கள் வலிமை
பெற்றுவிடும்
15. அஸ்தமனம் என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது?

ஒரு கிரகம் வலிமை இழந்து போவதுதான் அஸ்தமனம் இரண்டு கிரகங்கள் 5 டிகிரிக்குள் அமர்ந்திருந்தால், 2-வதாக இருக்கும் கிரகம் வலிமை இழக்கும். இந்த விதிப்படி சூரியனுடன் ஒரு கிரகம் 10 பாகைக்குள் இருக்கும்போது வலிமை இழந்துவிடும்

16. அஷ்டகவர்கம் என்றால் என்ன?

அஷ்டவர்க்கம் என்பது ஒரு கிரகத்தின் வலிமையையும், ஒரு வீட்டின் தன்மையையும் மதிப்பெண்கள் கொடுத்துக் கணிப்பது.ஒருகிரகத்தின் அதிகபட்ச மதிப்பெண் 8 ஒரு ஜாதகத்தின் மொத்த மதிப்பெண் 337
(யாராக இருந்தாலும் 337 மட்டுமே)
இந்த மதிப்பெண்களை வைத்து ஒரு ஜாதகத்தில் உள்ள நன்மை தீமைகளை சுலபமாக அறியலாம்.
இதற்கு பதிவின் சைடுபாரில் உள்ள ஜகன்நாதஹோரா மென்பொருளைப் பயன்படுத்தவும்.

17.நவாம்சம் என்றால் என்ன? அது எதற்குப் பயன்படும்?

Navamsam is the magnified version of a Rasi Chart
ஒரு ராசியை ஒன்பது சமபாகங்களாகப் பிரித்து, ராசியில் உள்ள கிரகம் அதன் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக்
காட்டுவதுதான் நவாம்சம்.(குறிப்பாக கணவன் அல்லது மனைவியைப் பற்றி அறிய உதவும்)

18. காரகன் என்பவன் யார்? எது எதற்கு யார் யார் காரகன்?
காரகன் என்பவன் authority ஒரு வீட்டின் அதிபதி என்பது அந்த வீட்டின் சொந்தக்காரன் (Owner)
காரகன் என்பவன் அந்த வீட்டின் செயல்களுக்கு உத்தரவு போட்டு நடத்திவைக்கும் வலிமை உடையவன்(authority)

(உதாரணத்திற்கு ஒன்பதில் சனி இருந்தால், அப்பாவிற்கும் மகனுக்கும் ஒத்துவராது.
ஆனால் ஜாதகனுடைய ஜாதகத்தில் சூரியன் நன்றாக இருந்தால் நல்ல தந்தையாகக் கொடுப்பான்.
ஒத்துவராமைக்கு இவன் காரணமாக இருந்தாலும் தந்தை அனுசரித்து அன்பாக இருப்பார். அதற்கு காரகன் காரணமாக அமைவான்.)

தந்தைக்குக் காரகன் சூரியன் உடல் காரகன் சூரியன் தாய்க்குக் காரகன் சந்திரன் மன காரகன் சந்திரன்
ஆயுள் காரகன் சனி தொழில் காரகன் சனி களத்திர காரகன் சுக்கிரன் தன (பணம்) காரகன் குரு புத்திரகாரகன் குரு
கல்வி,புத்தி காரகன் புதன் ஆற்றல், திறமைகளுக்குக் காரகன் செவ்வாய்!
*விக்கிரமாதித்தன் கதைகள் - 31*

*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*

*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை -4*

"அப்படியா, விக்கிரமாதித்தா? நான் யார் தெரியுமா?”

"பேசும் பிணம்! பிணம் பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது!”

"ஹா! பிணம் பேசாது. நான் பிணத்தில் ஒளிந்திருக்கும் வேதாளம். என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஏதாவது நீ குறுக்கே பேசினால் மறுபடி மரத்திற்குப் போய் விடுவேன்.”

விக்கிரமாதித்தன் மெளனமாக நடந்தான். கொஞ்ச தூரம் சென்றதும் வேதாளம் விக்கிரமாதித்தனிடம் பேச்சுக் கொடுத்தது.

"விக்கிரமாதித்தா, உயர்வுடைய பெரியோர்கள் தங்களுடைய நேரத்தைப் பயனுடையதாகக் கழிப்பார்கள். விவேகமற்ற கீழோர் தூங்குவதிலும் அர்த்தமற்ற வேடிக்கைகளிலும் கழிப்பார்கள். நீ செல்ல வேண்டிய தூரம் பயனுடையதாகக் கழிய சில புதிர்க் கதைகளைக் கூறுகிறேன், கேள்!"

வேதாளம் விக்கிரமாதித்தனிடம் மேலும் சொன்னது.

" நான் ஒவ்வொரு கதை முடிவிலும் புதிர் ஒன்றைச் சொல்வேன். கதையைக் கவனமாகக் கேட்ட நீ, புதிருக்கான விடையைச் சொல்ல வேண்டும். பதில் தெரிந்தும் சொல்லாவிட்டால் உன் தலை சுக்குநூறாக வெடித்துச் சிதறிவிடும். சம்மதமா?”

வேதாளம் பேசும்போது குறுக்கே பேசக் கூடாது. பதில் தெரிந்தும் புதிருக்கு விடை சொல்லாவிட்டால் தலை வெடித்து விடும். பதிலைச் சொல்வதற்காகப் பேசினாலோ வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறித் தலைகீழாகத் தொங்கும். அதற்கென்ன மறுபடி போய் வேதாளத்தைத் தூக்கிக் கொண்டு வர வேண்டியதுதான்.

முடிவு செய்த விக்கிரமாதித்தன் மெளனமாக வேதாளத்தைச் சுமந்து கொண்டு நடந்தான்.

ஒப்பந்தப்படி வேதாளம் கதையொன்றைச் சொல்லி முடிவில் புதிரையும் சொல்லும். விக்கிரமாதித்தன் சரியான விடை சொன்னதும், அவன் முதுகிலிருந்து விடுபட்டுப் பறந்து சென்று முருங்கை மரத்தில் தொங்கும். விக்கிரமாதித்தன் மீண்டும் மயானத்துக்கு நடந்து சென்று, முருங்கை மரத்திலேறி, வேதாளத்தைக் கீழே வீழ்த்தித் தூக்கிக் கொண்டு வருவான். இவ்வாறு பலமுறை நடந்தது.

வேதாளம் சொன்ன முதல் கதை.

Thursday, January 16, 2020

கரிநாள்! என்றால் என்ன? 16/01/2020 வியாழன்

* கரிநாள்!
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

     கரிநாள் கணக்கிடும் முறையும்...!
        செய்யக்கூடாத செயல்களும்...!

🌞 சந்திரனை வைத்து சந்திராஷ்டமம் எப்படி கணிக்கப்படுகிறதோ அதே போல சூரியனை அடிப்படையாக வைத்து கரிநாள் கணிக்கப்படுகிறது!

🌞 சந்திராஷ்டம நாளில் நல்ல காரியங்கள் செய்வதில்லை, முக்கிய முடிவுகளை எடுப்பதில்லை. அதே போல் கரிநாளில் சுபகாரியங்கள் செய்வதில்லை!

🌞 மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களுள் பரணி, கிருத்திகை, ஆயில்யம், பூரட்டாதி போன்ற சில நட்சத்திரங்களும், 15 திதிகளுக்குள் அஷ்டமி, நவமி போன்ற சில திதிகளும், 7 கிழமைகளுக்குள் செவ்வாய், சனி போன்ற சில கிழமைகளும் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கும், நீண்ட தூர பிரயாணம் போன்றவற்றுக்கும் விலக்கப்பட வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்!!

🌞 அதைப்போலவே, ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் சில நாட்களில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இதையே கரிநாள் என்று கூறுகிறார்கள்!

🌞 கரிநாள் என்பது திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல. கரிநாள் என்பது ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள் என்பதே!

🌞 கரிநாள் என்றால் நஞ்சு என்று பொருள்படும். அன்றைய தேதியில் சூரியக் கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும்!!

சுபகாரியங்களை தவிர்ப்பது ஏன்?

🌞 சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும் பொழுது, நமது உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும்,ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாக அதிக அளவில் தூண்டப்படுகின்றன. இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், டென்ஷன் ஆதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற நிகழ்வுகளுக்கு அதிக வாய்ப்பு உண்டாகும். இதுபோன்றகாரணங்களால் கரிநாட்களில் சுபகாரியங்கள் செய்வதை தவிர்த்திருக்கிறார்கள்!

🌞 தமிழ்நாட்டில் சௌரமான மாதங்கள் நடைமுறையில்கடைபிடிக்கப்படுகின்றன. சௌரம் என்றால் சூரியன் என்று பொருள். அதாவது, சூரிய சஞ்சாரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் மாதங்கள் சௌரமான மாதங்களாகும்!!

பஞ்சாங்கத்தில் கரிநாட்கள் :

🌞 ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் கரிநாள் வரும். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் இந்த இந்த தேதிகள் கரிநாட்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.  இந்த தமிழ் தேதிகள் மாறாதது. எந்த ஒரு தமிழ் ஆண்டுக்கும் இது பொருந்தும். எடுத்துக்காட்டாக, தை மாதம் 1, 2, 3, 11, 17 ஆகிய தேதிகள் கரிநாட்களாகும். இவை மாறவே மாறாது!

12 மாதங்களில் கரிநாட்கள் :

சித்திரை முதல் பங்குனி வரை தமிழ் மாதத்தில் வரும் கரிநாட்கள் என்றைக்கு வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

சித்திரை 6, 15

வைகாசி 7, 16, 17

ஆனி 1, 6

ஆடி 2, 10, 20

ஆவணி 2, 9, 28

புரட்டாசி 16, 29

ஐப்பசி 6, 20

கார்த்திகை 1, 10, 17

மார்கழி 6, 9, 11

தை 1, 2, 3, 11, 17

மாசி 15, 16, 17

பங்குனி 6, 15, 19

🌞 ஆகவே, இக்கரிநாட்களில் திருமணம், கிரகப்பிரவேசம், சீமந்தம், நீண்ட தூர பிரயாணம் போன்றவற்றை செய்தாலோ அல்ல‍து தொடங்கினாலோ, அவை கெடுதலில் முடியும்!

🌞 மேலும் அந்த கெடுதல் நமது வாழ்நாள் முழுவதும் நம்மை நிழல்போல தொடர வாய்ப்பு இருப்பதால் இவற்றை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது!

🌞 ஆனால், பூஜைகள் ஹோமங்கள் பரிகாரங்கள் ஆகியவற்றை கரிநாட்களில் செய்யலாம். மேலும் விருத்திக்கு வரக்கூடாது என்று நாம் நினைக்கும் காரியங்களை அன்று நடத்தலாம். உதாரணமாக கடனை அடைக்கும் பணியை மேற்கொள்ளலாம். ஏனென்றால் அன்றைக்கு கடனை அடைத்தால் மீண்டும் கடன் வாங்கும் நிலைமை ஏற்படாது!!!

நல்லதைச் செய்ய இந்நாளைத் தவிர்ப்போம்!
தீயனவற்றிலிருந்து நம் வாழ்வைத் காப்போம்!

லோகாஸ் ஸமஸ்தான் சுகினோ பவந்து!
எல்லோரும் இன்புற்று வாழ்க!

Wednesday, January 15, 2020

மகர சங்கராந்தி 15/01/2020 புதன்

சூரிய பகவான் ஒரு ராசியைக் கடந்து அடுத்த ராசிக்குப் பிரவேசிக்கும் நேரத்தில்தான் தமிழ்மாதம் பிறக்கிறது. இதை வடமொழியில் சங்கராந்தி என்பர்.

தை மாதப் பிறப்பு மகர சங்கராந்தி எனக் கொண்டாடப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு மாத சங்கராந்தியும் ஒவ்வொரு பெயரால் அழைக்கப்பட்டு, அன்று செய்ய வேண்டிய பூஜைகள், தானங்கள் பற்றி முன்னோர்கள் ஒரு நெறிமுறையை வகுத்துள்ளனர்.

தான்ய சங்கராந்தி: சூரியன் மேஷராசியில் நுழையும் சித்திரை மாதத்தின் முதல் நாள், தான்ய சங்கராந்தி என அழைக்கப்படுகிறது. அன்று சூரியபகவானை பூஜித்து தானிய வகைகளை தானம் செய்தால் ஆயிரம் யாகங்கள் செய்த பலன்கள் கிட்டும்.

தாம்பூல சங்கராந்தி: வைகாசி, ரிஷபராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம். இம்மாதப் பிறப்பு, தாம்பூல சங்கராந்தி எனப்படுகிறது. அன்று சூரியனுக்கு அர்ச்சனை செய்து ஒரு மண் பாத்திரத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், இயன்ற தட்சணை வைத்து வாசனைப் பொருட்களுடன் வயதான தம்பதியருக்கு தானம் அளித்தால் நற்பலன்கள் பெருகும்.

மனோரத சங்கராந்தி: மிதுனராசிக்கு சூரிய பகவான் இடம் பெயரும் ஆனி மாதப் பிறப்பு, மனோரத சங்கராந்தி என வழங்கப்படுகிறது. அன்று ஒரு குடத்தில் வெல்லத்தை நிரப்பி, வேதம் கற்ற பெரியோருக்கு அறுசுவை உணவளித்து, பின் அந்த வெல்லக்குடத்தை தானம் செய்ய வேண்டும். இதனால், நியாயமான விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

அசோக சங்கராந்தி: ஆடி மாத ஆரம்பம், சூரிய பகாவன் கடக ராசியில் பிரவேசிக்கும் காலம். அன்றைய தினம், சூரியபகவானை நினைத்து ஆதித்ய ஹ்ருதயம் சொல்லவோ கேட்கவோ வேண்டும். முன்னோர்களை நினைத்து வணங்க வேண்டும். இது அசோக சங்கராந்தி எனப்படுகிறது. அன்று ஆதித்யனை வணங்குவதால், சோகங்கள் நாசமாகும்.

ரூப சங்கராந்தி: ஆவணி மாதப் பிறப்பு, சிம்மராசியில் சூரியன் நுழையும் நேரம். இது ரூப சங்கராந்தி எனப்படு கிறது. ஒரு பாத்திரத்தில் நெய்யை நிரப்பி சூரியனை வழிபட்டபின் அதனை தானமளிப்பது நல்லது. இதனால் நோய்கள் நீங்கும்.

தேஜ சங்கராந்தி: கன்னிராசியில் சூரியன் பிரவேசிக்கும் புரட்டாசி மாதப்பிறப்பு அன்று தேஜசங்கராந்தி. அன்று நெல், அரிசி போன்றவற்றின் மீது கலசம் வைத்து அதில் சூரியனை எழுந்தருளச் செய்து மோதகம் நிவேதிக்க வேண்டும். இதனால் காரியத்தடைகள் அகலும்.

ஆயுர் சங்கராந்தி: ஐப்பசி மாத முதல் நாள், பகலவன் துலாம் ராசியில் பிரவேசிக்கிறார். இந்த நாள், ஆயுர் சங்கராந்தி எனப் போற்றப்படுகிறது. அன்று கும்பத்தில் பசுவின் பாலோடு வெண்ணெய் சேர்த்து நிரப்பி, சூரியனை வழிபட்டபின், வேதியர்க்கு அக் கும்பத்தை தானமாக அளிக்க வேண்டும். இதனைச் செய்வதால் ஆயுள்பலம் கூடும்.

சௌபாக்கிய சங்கராந்தி: கார்த்திகை மாத முதல் நாள் சூரியன் விருச்சிக ராசியில் நுழைகிறார். இந்நாள் சௌ பாக்கிய சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. அன்று சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்து சிவப்பு நிற துணி சாத்தி, இயன்ற மங்களப் பொருள்கள் அல்லது ஆடை தானம் செய்ய வேண்டும். இதனால் தடைகள் விலகி எ ண்ணியது ஈடேறும்..

தனுர் சங்கராந்தி: சூரியன் தனுசு ராசியில் வாசம் செய்யத் தொடங்கும் மார்கழி மாதப் பிறப்பினை தனுர் சங்கராந்தி என அழைப்பர். அன்றைய தினம் ஒரு கலசத்தில் சுத்தமான நீரை நிரப்பி சூரியனின் பிரதிமையை அதில் போட்டு அல்லது சூரியனின் பிம்பம் அதில் விழும்படி வைத்து பூஜித்து, அதனை தானமாக அளிக்க வேண்டும். எளியவர்களுக்கு இயன்ற உணவளிக்க வேண்டும். இதனால் கிரக தோஷங்கள் நீங்கும்.

மகரசங்கராந்தி: தைமாதம் கதிரவன் மகர ராசியில் சஞ்சரிப்பதால், இது மகரசங்கராந்தி. இதுவே பொங்கல் திருநாள £க பிரசித்தி பெற்றது. இது மற்ற அனைத்து சங்கராந்திகளைவிட முக்கியமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இம்மாதமே தேவர்களின் விடியற்காலை நேரமாகும். முதல் நாளில் பொங்கலிட்டு சூரியனை வழிபடுவதோடு, இந்த மாதம் முழுவதும் இஷ்ட தெய்வ ஆராதனை செய்தால் மகத்தான புண்ணியம் கிட்டி, செல்வ வளம் சேரும்.


லவண சங்கராந்தி: மாசிமாதம், கும்ப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம். இம்மாத பிறப்பு லவண சங்கராந்தி என அழைக்கப்படுகிறது. அன்று சூரிய பூஜை செய்து உப்பினை தானமாக அளித்தால் மோட்சம் கிட்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

போக சங்கராந்தி: பங்குனி மாத முதல் நாள், போக சங்கராந்தி தினம். ஆதவன் மீன ராசியில் பிரவேசிக்கும் நாள் இது. இம்மாதம் முதல் நாளிலும், கடைசி நாளிலும் சூரிய பூஜை செய்ய வேண்டும். அதனால் தனதான்யம் அபிவிருத்தியாகும்.

சங்கராந்தி எனும் ஒவ்வொரு மாதப்பிறப்பன்றும் பகலவனை வழிபட இயலாவிட்டாலும், இயன்ற தானங்களையாவது செய்தால் சூரிய பகவானின் திருவருள் கிட்டும்.

Saturday, January 11, 2020

விக்கிரமாதித்தன் கதைகள் - 30

*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*

*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை -3*

விக்கிரமாதித்தனைப் பார்த்தவுடன் அந்தக் கபட சன்னியாசி, வரவேற்று அமரச் செய்தான். அமர்ந்தவுடன் விக்கிரமாதித்தன் சுற்றிலும் பார்த்தான். இருட்டில் பூத பைசாச நடமாட்டங்களை அவனால் உணர முடிந்தது. கோரமான உருவங்கள் தென்பட்டன. முனிவருக்கும் இவற்றுக்கும் என்ன தொடர்பு! இருந்தாலும் முனிவரைக் கேட்டான், "முனிவரே, தாங்கள் இடும் கட்டளை யாது? செய்து முடிக்கக் காத்திருக்கிறேன்."

ஞானசீல கபட முனிவனுக்கு விக்கிரமாதித் தனால் ஆகக்கூடிய காரியம் ஒன்றிருக்கிறதே! யாராலும் வீழ்த்த முடியாத வேதாளத்தை வீழ்த்தித் தனக்கு அடிமையாகச் செய்வது. அது விக்கிரமாதித்தனால் மட்டுமே முடியும்!

"ஆமாம், விக்கிரமா! இந்த பூஜை தாந்திரீக சாஸ்திரங்களை உள்ளடக்கியது. அதோ அந்த வழியாகத் தெற்கு நோக்கிச் செல்! இரு யோஜனை தொலைவில் மயானம் ஒன்று தென்படும். உள் நுழைந்தால் முருங்கை மரம் ஒன்று காணப்படும். அதன் உச்சி மரக்கிளையில் பிணம் ஒன்று தலைகீழாயத் தொங்கிக் கொண்டிருக்கும். அதனை இங்குக் கொண்டு வா. "

இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று நினைத்தான் விக்கிரமாதித்தன். எந்த முனிவரும் பிணத்தை வைத்து யாகம் செய்வதில்லை. இவன் வேடத்துக்கும் இறைவழிபாட்டு முறைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என்ன என்று பிறகு கண்டுபிடிப்போம்! முதலில் பிணத்தை எடுத்து வருவோம்! நான் வணங்கும் உஜ்ஜயினி மாகாளி துணையிருப்பாள்…

"அப்படியே ஆகட்டும்."

விக்கிரமாதித்தன் தெற்கு நோக்கிப் புறப்பட்டான்.

எதிரில் எவர் வருவதும் தெரியாத காரிருள். கண்ணுக்குத் தெரியாத அமானுஷ்யங்களின் நடமாட்டம்! காளியின் அருளால் அச்சமின்றிச் சென்றான் விக்கிரமாதித்தன். முனிவன் சொன்ன மயானத்தை அடைந்தான்.

ஆங்காங்கே பிணங்கள் எரிவதும் இரவுப் பூச்சிகளின் மயிர்க்கூச்செரியும் சத்தங்களும் அங்கே நிகழ்ந்தன! கபாலங்கள் காற்றில் மிதந்து வந்தன! அவற்றின் பெரிய பற்கள் அசைவதும் சிரிப்பொலி எழுப்புவதுமாக அவனை அச்சப்படுத்த முயன்றன. காற்றில் பிணவாடையும் சுடுகாட்டுச் சாம்பலும் மிதந்து வந்தன. குறளிப் பேய்களும், பைசாசங்களும் ஓலமிட்டன. பிணங்களைத் தின்னும் பூதங்கள் புதைத்த பிணங்களைத் தோண்டி எடுத்துக் கடித்துக்கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் கண்ணுற்ற விக்கிரமாதித்தன், கொஞ்சமும் மனங்கலங்காமல், முருங்கை மரத்தைத் தேடினான். மரம் தென்பட்டது. காற்றில் அசைந்த காட்சி அவனை அச்சப்படுத்திப் பார்த்தது. அருகில் சென்று அண்ணாந்து பார்த்தான். ஒவ்வொரு கிளையும் அசைந்துகொண்டிருப்பது மனத்தில் திகில் மூட்டுவதாக இருந்தது. அந்த உச்சிக் கிளையில் பிணம் ஒன்று தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தது.

ஆஹா! முனிவன் கேட்ட பிணம் இதுதானா! மரத்தில் வேகமாக ஏறினான். பிணத்தை நெருங்கினான், அது கட்டப்பட்டிருந்த கயிற்றை அறுத்துக் கீழே வீசினான். அவனும் கீழே இறங்கினான். இறங்கிப் பார்த்தால் பிணத்தைக் காணவில்லை! பிணம் மறுபடி மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது!

மறுபடி மேலேறி அந்தப் பிணத்தைத் தன் முதுகுடன் சேர்த்துக் கட்டிக்கொண்டான். கீழே இறங்கினான். பிணத்தைத் தோளில் சுமந்துகொண்டே முனிவனை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அந்தப் பிணத்தினுள் புகுந்திருந்த வேதாளம், விக்கிரமாதித்தனை வினவியது.

“யார் நீ? என்னை எதற்காகச் சுமந்து செல்கிறாய்?”

விக்கிரமாதித்தன் பேசும் பிணத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டான்.

“உஜ்ஜயினியை ஆளும் விக்கிரமாதித்தன் நான். முனிவனின் உத்தரவின் பேரில் உன்னைத் தூக்கிக் கொண்டுபோக வந்திருக்கிறேன்.”



                                            இன்னும்  வரும் ......

Monday, January 6, 2020

ஏகாதசி விரதம் அறிவியல் காரணம்:

சந்திரன் பூமியை ஒரு தடவை சுற்றி வர ஏறத்தாழ இருபத்தொன்பதரை நாட்கள் ஆகின்றன. இதில் ஒவ்வொரு நாளும் "திதி' எனப்படும். ஒரு சந்திரமாதத்தில் 30 திதிகள் உள்ளன. அமாவாசையிலிருந்து 15 நாட்கள் சுக்லபட்சம் (வளர்பிறை), பவுர்ணமியிலிருந்து 15 நாட்கள் கிருஷ்ண பட்சம்( தேய்பிறை) எனப்படும்.

அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் ஒன்றாக உதித்து ஒன்றாக மறைகின்றன. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் 12 டிகிரி வீதம் சந்திரன் சூரியனிலிருந்து பின்னால் செல்கிறது. 11வது நாளான ஏகாதசியன்று 132 டிகிரி பின்னால் இருக்கிறது. மேற்கூறிய நாளில் புவிஈர்ப்புசக்தி அதிகமாகிறது. இந்த சமயத்தில் எப்போதும் போல் உணவருந்தினால் சரியாக செரிக்காது. ஆகையால், இந்த நாளில் முன்னோர் விரதம் இருக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

வைகுண்ட ஏகாதசியன்று, வழக்கமான 132 டிகிரியை விட, மேலும் 3 டிகிரி கூடுதலாக, சந்திரன் சூரியனுக்கு 135 டிகிரி பின்னால் இருக்கிறது. அன்று புவிஈர்ப்பு சக்தி மிக அதிகமாக இருப்பதால் விரதம் இருக்கிறோம். ஏகாதசி விரதமிருந்தால், அதற்கு முன் பத்துநாட்கள் சாப்பிட்ட உணவிலுள்ள கழிவுப்பொருட்கள் கரைந்து வெளியேறுகிறது. வயிறு சுத்தமாகிறது. ஜீரணக்கருவிகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. அதன் பின் நமக்கு வைட்டமின் "ஏ', "சி' தேவைப்படுகிறது. அதனால் தான் மறுநாள் துவாதசியன்று "ஏ' சத்து நிறைந்த அகத்திக்கீரை, "சி' சத்து நிறைந்த நெல்லிக்காய் மற்றும் சுண்டைக்காய் சேர்த்துக் கொள்கிறோம்.....

விரதத்தினால் ஏற்படும் உடல் உஷ்ணம் தணிக்கும் வகையில் மேற்கண்ட ஏற்பாடுகள் அறிவுறுத்தப்படுகிறது.

அதனால் உடல் ஆரோக்கியம்
மேம்படுத்தப்படுகிறது.
உடல், மனம் ஓய்வும் அமைதியும் பெறுகிறது.

அடுத்த 15நாள்கள் உடல் தெம்பும் உற்சாகமும் அடைகிறது.
மனோதிடம் வலிவு பெறுகிறது.

ஆரோக்கியத்தைப் பேணுவதில் நம் முன்னோர்கள் மனோதத்துவ த்துடன் அறிவியலோடு இயைந்து செயல்பட்டுள்ளார்கள் என்பதை எண்ணும்போது
பெருமிதமாக உள்ளது.

உடல் நலத்தைப் பேணி வளமான வாழ்க்கை வாழ்வோம்!
💐💐💐💐🙏🙏🙏🤝

Sunday, January 5, 2020

5/01/2020 ஞாயிறு விடுகதை

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான் 🍃🎍

இந்த விடுகதையானது சாதாரணமாக வரும் உளறலோ பிதற்றலோ அல்ல, இது ஒரு தெய்வீக சமாச்சார விடுகதை.

இதற்கு புராணத்தை வைத்து விளக்கிவிடலாம்.
தானம் கேட்கும் வறியவர்களுக்கு தட்டாமல் வழங்குபவர் தான் தட்டான். ( தட்டான் - மஹாபலிச் சக்கரவர்த்தி )

தட்டானுக்கு சட்டை போடுவது என்றால் தானம் கொடுக்க நினைப்பவரின் எண்ணத்தை தடுப்பது அதாவது அவரின் ஈகை உள்ளத்தை மறைப்பது என்று பொருள்.

நம் மஹாபலிச் சக்கரவர்த்தி 99 அசுவமேத யாகம் செய்துவிட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்யும்போது பெருமாள் வாமன அவதாரத்தில் வந்து அவரிடம் தானம் கேட்கிறார். ( குட்டை பையன் - வாமன அவதாரத்தை குறிக்கிறது. ) ஆனால் சுக்ராச்சாரியார் மஹாபலி தாரை வார்ப்பதைத் தடுக்க வண்டாக உருமாறி கமண்டலத்தின் வாயை நீர் வராதவாறு அடைத்துக்கொள்கிறார். அப்பொழுது நம் குட்டைப் பையன் வாமனர் என்ன செய்யறார்?
ஒரு குச்சியை (கட்டை) எடுத்து கமண்டலத்தின் குழாயை குத்தி சுக்ராச்சாரியருக்கு ஒரு கண் ஊனமாகி விடுமாறு செய்கிறார். பின் சுக்ராச்சாரியார் தன் தவறை உணர்ந்தார்.
அவரை மன்னித்து, கொடுப்பதில் வள்ளலான மஹா பலிச் சக்கரவர்த்தியின் புகழை உலகறிய செய்தவர் பெருமாள்.

இது தான் “தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்…” என்பதற்கான விளக்கம்…!!

2. பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை

குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன் என்று பொருள்.
ஸ்ரீ என்றால் செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்கு பைனான்ஸ் செய்தவர் நம் குபேரன்.

ஆக பெருமாளின் குலம் பெருக ரட்சித்த குபேரன்தான் பெருமாளின் குலசேகரன். குபேரனுக்கு EMI கட்ட பெருமாளுக்கு பொருளீட்ட ஒரு ஸ்தலம் தேவைப்பட்டது. அப்பொழுது பெருமாளுக்கு ஏழுமலையை அளித்தவர் ஸ்ரீ வராகப்பெருமாள்.

அதனால் (வராகம் - பன்றி முகம் உடையவர் )
ஸ்ரீ வராகப்பெருமாளுக்கு நன்றி சொல்லி, குன்றின்மீது நின்றகோலத்தில் மக்களுக்கு அருள்புரிந்து அவருடையை குலசேகரனுக்கு (குபேரன்) சேரவேண்டிய பணத்தை கொடுத்து கடனை வென்றாராம் பெருமாள்.

இது தான் “பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை…” என்ற விடுகதைக்கான விளக்கம்...⊱⊰குரு⊱⊰

ஓம் நமோ நாராயணா போற்றி ஓம்... 🌷🧩🌷

3."அத்தினத்திற்க்கும் ஓட்டைக்கையுக்கும் ஆயிரம் கதா தூரம் ஆனாலும் நடக்குதங்கே சேலை வாணிகம்"

நானே விடை சொல்கிறேன் ...🌷🧩🌷

இரண்டு வரியில் மொத்த மகாபாரதம்.

அத்தினம் என்றால் துரியோதனன் ஆட்சி செய்த கௌரவர்களின் அஸ்தினாபுரத்திற்க்கும் ஓட்டகையென்றால் கிருஷணபரமார்த்மா பரிபாலனம் செய்த துவாரகைக்கும் இடையே ஆயிரம் மைல் தூரமாம். இங்கே கௌரவர்கள் சபையில் பாஞ்சாலி மானபங்கப்படுத்தப்பட்டு அந்த கிருஷ்ணனை நினைக்க இந்த ஆயிரம் மைல் துரத்திலிருந்து சேலையை அனுப்பி கிருஷ்ணபரமாத்மா திரௌபதியின் மானத்தைக்காத்தாராம். 🌷🧩🌷

இது தானே அந்த மகாபாரத்தின் முக்கிய நிகழ்வு.

Friday, January 3, 2020

மோதிர விரலால் "ஓம்" என்று எழுதுங்கள். குளிக்கும் போது நிகழும் "அதிசயத்தை" பாருங்கள்.!

🔯 குளிக்கும் போது ஒரு சில விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்பது ஐதீகம்.

☸ குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்க வேண்டும்.

👿 கர்மம் செய்த பின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம்.

❇ மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்.

🔯 தினமும் கங்கா ஸ்நானம் செய்ய முடியும்.

👿 குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிர விரலால் ஓம் என்று தியானம் செய்து எழுதுங்கள்.

🐷 அந்த நீர் அப்போது முதல் கங்கை நீராக மாறிவிடும். ஒரு நிமிட தியானத்தில் "இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்று கொள்ளுங்கள்" என்று இறையிடம் வேண்டி கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும்.

🖲 அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும்.

🐻 உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவதுதான் சரி.

🚀 தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றி கொள்ள வேண்டும்.

❇ நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு.

🐿 காலில் இருந்து பரவும் குளிர்ச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும். அதுவே சரியான முறை.

☸ தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை "பிரஷ்டம்" என்பர்.

🔮 அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது. அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும்.

🏵 ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும்.

🖲 குளிக்கும் நீரிலே டவலை நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உத்தமம்.

🐒 அனேகமாக, அனைவரும் ஈரம் படாத துண்டைத்தான் உபயோகிப்பீர்கள்.

🐻 உலர்ந்த துணியானது உள் சூட்டை வேகமாக பரவ செய்து பல வித உள் நோவுகளை உருவாக்கும்.

🐿 பிறருடன் வாய் திறந்து பேச கூடாத மூன்று நேரங்களில் ஒன்று குளிக்கும் நேரம்.

🔯 மௌனத்தை கடைபிடிக்கலாம், அல்லது மனதளவில் தெரிந்த ஜெபத்தை செய்யலாம்.

🥁 குளிப்பதினால், பஞ்ச இந்த்ரியகளால் செய்த தவறுகளினால் நமக்குள் சேர்த்து வைத்துள்ள கர்மாக்கள் களைய பெறுகிறது.

🐯 குளிக்கும் போது, வாயில் கொள்ளளவு நீரை வைத்து குளித்தபின் துப்புவதால், கண்டத்துக்குமேல் (கழுத்துக்கு) வருகிற நீர் சம்பந்தமான கட்டுகளை, நோய்களை தவிர்க்கலாம்.

🗣 வாயில் இருக்கும் நீர் மேல் நோக்கி எழும்பும் அக்னியின் வேகத்தை எடுத்துவிடும்.

✳ நீர் நிலைகள், குளம், ஆறு, கடல் இவைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள்.

🦊 நாரம் என்கிற தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாகவும் சொல்வார்கள்.

🏀 ஆதலால், ஓடி சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்க வேண்டும்.

🗣 நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது.

🐷 நீரின்றி ஒரு உயிரும் இல்லை.நீரை விரயம் செய்ய கடன் அதிகரிக்கும்.

🙊 உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும்.

🚀 மேற்குறிப்பிட்ட அனைத்தும்  குளிக்கும் போது நாம் பயன்படுத்த கூடிய  நல்ல முறைகள் என்பது  குறிப்பிடத் தக்கது.

Wednesday, January 1, 2020

விக்கிரமாதித்தன் கதைகள் - 28

*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*

*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை - 1*

பராக்கிரமசாலியான விக்கிரமாதித்தன், தனது நாடாறு மாத ஆட்சியைச் சிறப்புடன் நவரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்த வண்ணம் இருந்தான்.

உஜ்ஜயினி நகரத்துக்கு வெளியே சில காத தூரத்தில் மயானம் ஒன்று இருந்தது. அந்த மயானத்திலிருந்த முருங்க மரத்தில் வேதாளம் ஒன்று தொங்கியவாறு இருந்தது. அந்த வேதாளத்தை வசப்படுத்தியவர்களுக்கு அது வேண்டியன செய்யும். ஆனால் அதை வசப்படுத்த முயன்றோர் உயிருடன் இருப்பதில்லை!

மயானத்தை ஒட்டிய கானகத்தில் இருந்த வனதுர்க்கையம்மன் கோவிலில் மந்திரவாதி ஒருவன் யாகம் வளர்த்துக்கொண்டிருந்தான். ஞானசீலன் என்ற பெயருடைய அந்த மந்திரவாதி, துர்க்கையம்மனையும் வேதாளத்தையும் தன் வயமாக்க விரும்பினான். அதன் முதல்படியாகத் துர்க்கைக்கு யாகம் வளர்க்கத் தொடங்கினான். யாகத்தின் முடிவில் பிரசன்னமான துர்க்கையிடம் ஞானசீலன், இவ்வுலகையே ஆள வேண்டும் என்றும் வேதாளத்தை வசப்படுத்த வேண்டும் என்றும் விக்கிரமாதித்தனின் சிம்மாசனத்தில் அமர்ந்து உலகை ஆள வேண்டும் என்றும் அதற்கு வழி கூறுமாறும் கேட்டான்.

"ஞான சீலா! ஆயிரம் மன்னர்களைக் கொன்று பலியிட்டு யாகம் செய். 999 அரசர்களின் தலையை வெட்டி எனது பலிபீடத்தில் வை. ஆயிரமாவது பலியாக எனக்கு அளிக்க விக்கிரமாதித்தனின் தலையைக் கொடு. அதற்கு முன் அவனைக் கொண்டே வேதாளத்தை உனக்கு வசமாக்கு."

ஞானசீலன் தான் நடத்தும் யாகத்துக்கு அரசர்களை வேட்டையாடத் தொடங்கினான். தந்திரம் செய்தும் மந்திரம் செய்தும் மன்னர்களை வரவழைத்து வனதுர்க்கைப் பலியிட்டான். 1, 2, 3, .... 999 தலைகள் உருண்டன! இனி ஒன்றே ஒன்றுதான்!

விக்கிரமாதித்தன்!

விக்கிரமாதித்தனை எப்படி மடக்கலாம்! யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். ஞானசீலன் தவம் செய்யும் முனிவர் வேடம் தரித்தான். அந்த வேடதாரி மந்திரவாதி விக்கிரமாதித்தனின் அரண்மனைக்கு வந்தான். விக்கிரமாதித்தன் அவனை வணங்க, ஆசி வழங்குவது போல மாதுளங்கனி ஒன்றைக் கொடுத்தான். பணிவுடன் விக்கிரமாதித்தன் பெற்றுக்கொண்டான். முனிவன் சென்றுவிட்டான். மன்னன் அந்தக் கனியை பக்கத்திலிருந்த அதிகாரியிடம் கொடுத்து உள்ளே வைக்கச் சொன்னான்.

மறுநாளும் வேடதாரி முனிவன் வந்தான். கனி கொடுத்துவிட்டுச் சென்றான். விக்கிரமாதித்தன் வணங்கி அந்தக் கனியைப் பெற்று அதிகாரியிடம் கொடுத்தான். தினமும் மந்திரவாதி ஞானசீலன்,  முனிவன் வேடத்தில் வந்து கனி கொடுத்துவிட்டுச் சென்றான்.

ஒரு நாள் அந்த அதிகாரியுடன் விக்கிரமாதித்தன் பேசிக்கொண்டிருந்தபோது அரண்மனை நந்தவனத்தில் வளரும் குரங்கு அந்தப் பக்கமாக வந்தது. முனிவன் கொடுத்த மாதுளங்கனிகள் உணவு மேசையின் மேல் தட்டு ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒன்றை அந்தக் குரங்கு எடுத்துக் கடித்தது. அதிலிருந்து ஜொலிக்கும் நவரத்தினக் கற்கள் விழுந்தன.

விக்கிரமாதித்தன் பிரமித்தான்!

காலச்சுவடு மற்றும் காலச்சக்கரம். 2/01/2020 வியாழன்

காலச்சுவடு மற்றும் காலச்சக்கரம்

இந்துக்களின் காலக்கணக்கு,
உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்....👇🏻

கி.பி.1947 - பாரத சுதந்திரம்
கி.பி 1847 - பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம்
கி.பி 1192 - முஸ்லீம் ஆட்சி துவக்கம்
கி.பி. 788 - ஆதி சங்கரர் தோற்றம்
கி.பி 58 - சாலி வாகன சக வருசம்
கி.மு.57 - விக்ரமாதித்ய சகம் வருடம்
கி.மு 509 - புத்தர் தோற்றம்
கி.மு 3102 - கலியுகம் ஆரம்பம்
கி.மு 3138 - மகாபாரத போர், யுதிஷ்டிரர் முடிசூட்டு, யுதிஷ்டிர சகம் கி.மு 8,69,100 - இராமபிரானின் காலம்
கி.மு21,05,102 - சூரிய சித்தாந்தம்
கி.மு 38, 90,100- சத்திய யுகம் ஆரம்பம், 28-வது சதுர்யுகம்
கி.மு12,05,31,100 - பிரளய முடிவு, தற்போது உள்ள ஏழாம் மன்வந்தரம் ஆரம்பம், இக்ஷவாகு வம்சம்
கி.மு42,72,51,100 - 6 ஆம் மன்வந்தரம்
கி.மு73,39,71,100 - 5 ஆம் மன்வந்தரம்
கி.மு1,04,06,91,100- 4 ஆம் மன்வந்தரம்
கி.மு13,47,41,11,100- 3 ஆம் மன்வந்தரம்
கி.மு1,65,41,31,100- 2 ஆம் மன்வந்தரம்
கி.மு1,96,08,51,100- 1 ஆம் மன்வந்தரம்,மனிதர் - உயிர்களும் படைப்பு
கி.மு1,98,67,71,100- கல்பம் ஆரம்பம், உலகப்படைப்பு!
     
குறிப்பு:- விஞ்ஞானிகள் உலகம் தோன்றி சுமார் 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று கணக்கிட்டுள்ளனர்...

அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!
வாழ்க நம் முன்னோர்கள்!💐💐💐💐🙏🙏🤝