*நேற்று புதிர் முடிச்சு....?**
இன்று முடிச்சு அவிழ்ப்பு!*
மாவீரன் பகத்சிங் ஜாதகம் ஆகும்.
*நேற்று புதிர் முடிச்சு....?*
*இன்று முடிச்சு அவிழ்ப்பு!*
நேற்று இரு ஜாதகங்கள் கொடுக்கப்பட்டு இரு கேள்விகள் கேட்கப்பட்டன.
1.ஒருவருக்கு ஏன் சிறைவாசம் ஏற்படுகிறது?
2.அரசின் உயர்ந்த பட்ச தண்டனையான தூக்கு தண்டனை இவர்களுக்கு கிடைத்தது எதனால்?
*மேற்கண்ட கேள்விகளுக்கு ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பு எவ்வாறு அமைந்துள்ளன? என்பதை ஜோதிட துப்பறிவாளர்கள் துப்பறிந்து எனக்கு ரிப்போர்ட் கொடுங்கள் என்று கேட்கப்பட்டது*.
[29/08, 10:11 am] S.Shanmuganandam🤴: ஜாதகத்தில் கிரகங்களின் நிலை கோலாட்டமா?
அல்லது தப்பாட்டமா?
என்பதைக் கொண்டு தான் வாழ்க்கை கொண்டாட்டமா? அல்லது திண்டாட்டமா? என்று தீர்மானிக்க முடியும்.
இந்த *உதாரண ஜாதகங்களில் இரண்டலுமே கோள்கள் தப்பாட்டமே ஆடின.*
எப்படி?
சரி.கேள்விக்கு வருவோம்.
*சிறைவாசம் செய்யும்* /
*சிறை செல்லும் ஜாதக அமைப்பு* எப்படி இருக்கும் என்று ஜோதிட ரீதியாக பார்க்கலாம்.
*சிறை செல்லும் யோகம்*
ஜோதிட சாஸ்திரம் இந்த சிறைவாசத்தை *பந்தன யோகம்* என்று கூறுகிறது.
*பந்தன யோகத்தைப்* பற்றி நிறைய சொல்லி இருக்கிறது.
*பந்தன யோகம்* என்பது கட்டுப்படுத்துதல் சிறைபடுதல் என்று பொருள்.
*பந்தனம் என்றால் கட்டுதல்*/*கட்டுபடுதல் *(ராகு)*
*இரும்பு சங்கிலியால்(சனி) பிணைக்கப்படுதல்.*
(தன் அதீத ஆற்றலால் இருவரும் தன் கட்டுப்பாட்டில் ஒருவரை கட்டிப்போடுதல்.)
*இங்கு ராகுவும் சனியும் தீவிரமாக செயலாற்றுவர்.
1 ஆம் பாவம் லக்னாதிபதி (ஜாதகர்)
2 ஆம் பாவம் குடும்பம்
4 ஆம் பாவம் வீடு
8 ஆம் பாவம் சிறைத்தண்டனை பெறுமிடம் (கோர்ட்)
12 ஆம் பாவம் சிறைவாசம் (ஜெயில்)
6ஆம் பாவம் வழக்கு
[29/08, 10:11 am] S.Shanmuganandam🤴:
ஜோதிடத்தில் *மர்மதேசம்* எது?
*ஆறு, எட்டு, பன்னிரண்டு ஸ்தானங்கள் தான் மர்ம தேசங்கள் ஆகும்*
8 ஆம் பாவம் சிறைத்தண்டனை பெறுமிடம் (கோர்ட்)
12 ஆம் பாவம் சிறைவாசம் (ஜெயில்)
6ஆம் பாவம் வழக்கு
இத்தோடு 2 மற்றும் 4 ஆம் பாவங்களுக்கு பாவர்கள் (சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது)தொடர்பு ஏற்பட்டால் அவை கெடும்;பாதிப்பு அடையும்.. இவர்களின் பங்கு அதிதீவிரமாக செயலாற்றும்.
1 ஆம் பாவம் லக்னாதிபதி (ஜாதகர்)
2 ஆம் பாவம் குடும்பம்
4 ஆம் பாவம் வீடு
மேலும் இவைகளுக்கு *பாப கர்த்தாரி யோகம்(தோஷம்)* ஏற்படின் அந்த பாவங்கள் கெடவே செய்யும்.
இதுபோன்று பல ஜோதிட விதிகள் இருந்தாலும் இவை பிரதானமாக செயல்படும்.
*சிறை தண்டனை*
ஒருவருடைய ஜாதகத்தில் 8ஆம் இடத்தில் ராகு இருந்தால் அவர் சிறை செல்வார். மேலும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
அதே ராகு 12ஆம் இடத்தில் இருந்தால் பலமுறை சிறை செல்ல வேண்டி வரும்.
6,8,12பாவத்திலும் தீயவர் வாசம் செய்து சுபர் தொடர்பு இல்லாமல் இருப்பின் அங்கு *பந்தன யோகம் ஏற்படும்.*
ஒருவரது ஜாதகத்தில் *இரண்டு,
பனிரெண்டாமிடங்களில் பாவிகள் இடம்பெறுவதும்*, இவர்களுடன் லக்னாதிபதி இவ்விடங்களில் அமர்வதும் சிறை செல்லும் அமைப்பை தரும்.*
*ஜாதகம் 1*👇
இனி ஜாதகத்தைப் பார்ப்போம்.
ஜாதகம் 1.
*லக்னம் விருச்சிகம்*
*லக்னாதிபதி செவ்வாய் லக்னத்திற்கு 3ல் உச்சம்*
லக்னாதிபதி வலு தான்.
அதனால் ஜாதகருக்கு அதீத தைரியம் எடுத்த காரியத்தை சீக்கிரமாக நடத்திட வேண்டும் என்ற தீவிர எண்ணம் உடையவராக விளங்கச் செய்தது.
லக்னத்திற்கு பலம் சேர்க்கும் வண்ணம் லக்ன யோகர்கள் குரு, சந்திரன்,
*5ஆம் அதிபதி குரு 9ல் கடகத்தில் உச்சம்.*
வீடு கொடுத்த சந்திரன் 5ல் அமர்வு. இருவரும் பரிவர்த்தனை பெற்றுள்ளனர்.
மற்றொரு யோகரான சூரியன் 12ல் நீச பங்கம் அடைகிறார்.
அசுபர்களான சனி 4ல்
கேது 2ல்
ராகு 8ல்
சூரியன் 12ல்.
லக்னமும் லக்னாதிபதியும் பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளனர்.
லக்னாதிபதியும் 6ஆம் அதிபதியும் ஒருவரே.
6ஆம் அதிபதி செவ்வாய் வலுவாக உள்ளது.
12 ல் சூரியன் சுக்கிரனோடு சேர்ந்து வலுவாகி விட்டார்.
8ல் உள்ள ராகு புதனைப்போல செயல்படுவார்.
அந்த புதன் சுக்கிரனோடு இணைந்து பலம் பெற்று விட்டது.
12ஆம் அதிபதி சுக்கிரனும் ஆட்சி பலத்துடன் உள்ளார்.
ஆக 6,8,12 பாவங்கள் மிக பிரமாதமாக வலை வீசி காத்திருக்கின்றனர்.
8 ல் உள்ள ராகு சிறைவாசத்தை confirm செய்து விட்டார்.
இவை எல்லாவற்றையும் காட்டிலும் *சிறைக்கு காரகரான சனி 4ல்* டெண்ட் அடித்து தன் திரிகோண ஸ்தானமான 9 ஆமிடத்தில் தனது நண்பர்களை கூட்டாக்கி ஜாதகரை சிறையில் தள்ள தயாரான நிலையில் உள்ளார்.
தசா காலத்திற்கு காத்திருந்த கோள்கள் *ஜாதகருக்கு அட்டமாதிபதி புதன் தசா ஆரம்பம் ஆனவுடன் கோலாட்டத்தை மாற்றி தப்பாட்டம் அடிக்க ஆரம்பித்தது*.
புதன் 8ஆமிடத்து வேலையை ராகு கையில் எடுத்து கொண்டது.
ஜாதகரை கைது செய்தது
அடித்த பந்து வசமாக கையில் மாட்டவே
12 ல் சூரியன் அரசுக்கு எதிராக செயல்பட்டவர் என்று காரணம் காட்டி சிறையில் அடைத்தது.
விசாரணைக்கு பிறகு அரசாங்கம் அவரை க்ளீன் போல்ட் ஆக்கியது.
சூரியனுக்கு திரிகோணத்தில் நின்ற ராகு ஜாதகருக்கு உயர்ந்த பட்ச தண்டனையாக தூக்குதண்டனை வழங்கி தனது ஆட்டத்தை செவ்வனே நடத்தி முடித்தது.
*2,7க்குரியவர்கள் பொது மாரகாள் ஆவார்.*
7க்குரிய சுக்கிரன் மாரகாள் ஆவார்.
அந்த வகையில் அட்டமாதிபதி புதன் தசா வில் சுக்கிரன் புக்தி காலத்தில் இருவரும் 12 ஆமிடத்தில் இருந்து ஜாதகரின் உயிரைப் பிரித்து விட்டார்கள்.
கோள்களின் தப்பாட்டம் ஆடினாலும் ஜாதகர் குருவின் பார்வையால் அசாத்திய துணிச்சல் மிக்கவராக செயலாற்றி எதற்கும் பயப்படாத வராக தூக்குக் கயிற்றை தானே தன் கழுத்தில் மாட்டிக் கொண்டு *இன்குலாப் ஜிந்தாபாத்* என்று முழக்கமிட்டு கொண்டவாறு தாய்நாட்டிற்காக உயிர் நீத்தார்.
அவரது செயல்பாடுகளால் இறப்புக்கு பின் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவராகவும் அனைத்து இளைய சமுதாயத்தினருக்கு முன் மாதிரியாகவும் திகழ்ந்தார்.
அதற்கும் 5,9ல் நின்ற கோள்கள் பரிவர்த்தனை உச்சம்
8ஆமிடத்திற்கு 9, 10க்குரியவர்கள் ஆட்சி உச்சம் பெற்றதால் ஜாதகரின் இறப்புக்குப் பின் இறவா புகழ் பெற்றார்.
இவ்வளவும் சொன்னீர்கள்.
ஜாதகர் யாரென்று சொல்லவில்லையே என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
அவர் தான் சுதந்திர போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த *மாவீரன் பகத்சிங் ஜாதகம்* ஆகும்.
அவரது தியாகத்தை போற்றும் வகையில் இந்த வார ஆரவாரத்தில் ஆர்ப்பரித்து எழுச்சி காட்டிய செம்மலுக்கு நாம் நம் வீர வணக்கத்தைத் தெரிவித்து கொள்வோம்!
*ஜெய் ஹிந்த்*!
*வாழ்க பாரதம்!!*
அவர் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை கடுமையாக விமர்சித்தவர் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் மீது இரண்டு உயர்மட்ட தாக்குதல்களில் ஈடுபட்டார்-ஒன்று உள்ளூர் போலீஸ் தலைவர் மீதும் மற்றொன்று டெல்லியில் உள்ள மத்திய சட்டமன்றத்தின் மீதும். அவர் செய்த குற்றங்களுக்காக 1931 இல் 23 வயதில் தூக்கிலிடப்பட்டார்.
இறப்பு
சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடிகுண்டு வீசியது மற்றும் துண்டு பிரசுரம் வழங்கி "இன்குலாப் ஜிந்தாபாத்" என்று முழக்கமிட்டு தானே சரணடைந்த பின்னர், காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகியோர் 1931-ம் ஆண்டு, மார்ச் 23-ந்தேதி தூக்கிலிடப்பட்டார்கள்.
++++++++++++++++++++
குழு உறுப்பினர்களின் பதிவு
[29/08, 10:17 am] S.Shanmuganandam🤴:
*துப்பறிவாளர்கள் மற்றும் மற்றவர்களின் Reports பதிவுகள் உங்கள் பார்வைக்கு....*
[29/08, 10:20 am] S.Shanmuganandam🤴: *திரு யுவராஜா*
[28/08, 4:46 pm] Sukran Yuvaraja: குரு வணக்கம் 🙏
*ஜாதகம்-1*
ஜாதகர் பிறந்திருப்பது விருச்சிக லக்கனம், மீன ராசி, உத்திரட்டாதி-1ம் பாதம்.
லக்னாதிபதி செவ்வாய் லக்னத்திற்கு மூன்றில் உச்சம் பெற்று சுபக்கிரகமான உச்சம் பெற்ற குருவின் பார்வையில் இருக்கிறார். மேலும் குரு லக்னத்தையும் பார்க்கிறார். இங்கு சனி பகவான் லக்னத்தை பார்த்தாலும் அவர் பார்வை லக்கினத்தின் கடைசி விளிம்பில் தான் படுகிறது. எனவே லக்னத்தின் மீது முழுவதுமாக அவரது பார்வை விழாது. மேலும் அவரது பார்வை இருளை குருவின் ஒளி நீக்கி விடுகிறது.
தைரிய ஸ்தானத்தில் லக்னாதிபதி செவ்வாய் உச்சம் பெற்று இருப்பதால் ஜாதகர் எதற்கும் அஞ்சாத துணிவு மிக்கவர். மேலும் லக்னத்தையும் லக்னாதிபதியையும் குரு பார்ப்பதால் ஜாதகர் நரசிந்தனை உடையவர், இரக்க சுபாவம் நிறைந்தவர். இவருக்கு லக்னாதிபதியும் உச்சம் பஞ்சமாபதியும் உச்சம் மற்றும் பரிவர்த்தனை. பாதக பாக்யாதிபதி என்று சொல்லக்கூடிய சந்திரனும் சுக்ல பட்ச திரையோதசி திதி சந்திரனாக பரிவர்த்தனை மூலம் பலம் பெற்றுள்ளார்.
ஆக இவருக்கு 1,5,9 வலுத்து லக்ன பாவகமும் குரு தொடர்பில் இருப்பதால் இவர் தேசப்பற்று கொண்டு தன்னலமற்ற சேவை செய்தார்.
*இவருக்கு சிறைவாசம் மற்றும் தூக்கு தண்டனை ஏன்?*
சிறைச்சாலைகள் என்றால் அது பனிரெண்டாம் பாவகம். அதன் அதிபதி ஆட்சி. அங்கு சூரியன் இருப்பது அரசாங்க தண்டனைகள் பெற வழி வகுக்கும். மேலும் அட்டமாதிபதி மற்றும் ஆயுள் ஸ்தானாதிபதி புதன் அங்கு அமர்ந்து ஆதிபத்திய ரீதியாக இவருடைய ஆயுள் தூக்கு தண்டனை மூலம் முடிவுக்கு வந்தது.
ஒருவர் வாழும் பொழுது புகழோடு இருக்க வேண்டுமென்றால் 1,5,9,10 நன்றாக இருக்க வேண்டும். இவருக்கு 10 ஆம் அதிபதி நீசம் என்றாலும் அங்கே வர்கோத்தமம் மற்றும் நீசபங்கம் அடைந்து சுக்கிரனை அஸ்தங்கம் செய்து பலமாகத்தான் உள்ளார்.
ஒருவர் இறந்த பின் புகழ் அடைய எட்டாம் வீட்டிற்கு 9,10 வலுக்க வேண்டும். இவரது ஜாதகத்தில் எட்டாம் வீடான மிதுனத்திற்கு ஒன்பதாம் அதிபதி சனிபகவான் ஆட்சி பெற்று பாகைமுறையில் சுக்ல பட்ச திரையோதசி சந்திரனுடன் இணைந்து வலுவாக உள்ளார். அதே போல் எட்டாம் வீட்டிற்கு பத்தாம் அதிபதி குருவும் உச்சம் பெற்று பரிவர்த்தனை மூலம் பலமாக உள்ளார். எனவேதான் இவர் மறைவிற்கு பின்னரும் இன்றும் மக்களால் போற்றப்படுகிறார்.
[28/08, 5:05 pm] Sukran Yuvaraja: *ஜாதகம்-2*
ஜாதகர் பிறந்திருப்பது மிதுன லக்னம் கன்னி ராசி.
நீங்கள் லக்னாதிபதி புதன் லக்னத்திற்கு 12ல் வக்ரம் அடைந்து சூரியன் மற்றும் ராகு உடன் இணைந்து சுப கிரகமான குருவின் பார்வையில் உள்ளார். லக்னத்தில் செவ்வாய். லக்னத்தை நீச்சம் பெற்ற சனி பகவான் பார்க்கிறார். லக்னாதிபதி இருப்பது சுக்கிரன் வீடு. ஆக லக்னாதிபதி குரு பார்வையில் சுக்கிரன் வீட்டில் சூரியனோடு கூடியிருந்து நல்ல மதிக்கத்தக்க தோரணை, நவநாகரிகமாக வாழ விரும்புதல், தன்னம்பிக்கை தலைமைப் பண்பு கொண்டு இருந்தாலும் அங்கே அவர் ராகுவுடன் இணைந்தது மற்றும் நீச்ச சனி பகவான் பார்வை லக்னம் மேல் விழுந்தது அவருடைய குணத்தை கெடுத்தது. மேலும் லக்னத்தில் ஆறாம் அதிபதி செவ்வாய் அமர்ந்து மேலும் லக்னத்தை கெடுத்து விட்டார்.
என்னதான் ஜாதகரியிடம் நற்குணங்கள் இருந்தாலும் இந்த ராகு, சனிபகவான் மற்றும் செவ்வாயின் லக்ன தொடர்பு ஜாதகரை ஒரு தீவிரவாத செயலுக்கு ஆளாக்கியது.
இவருடைய ஜாதகத்திலும் 12-ல் சூரியன் அரசாங்க தண்டனை உண்டு. எட்டாம் அதிபதி மற்றும் ஆயுள்காரகர் சனி பகவான் நீசம். எனவே ஜாதகருக்கு மத்திம ஆயுள்.
இவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி ஓரளவு பலமாக இருந்தாலும் பாக்கியாதிபதி சனி பகவான் நீசம். பஞ்சமாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று பலமாக இருந்தாலும் அவரை மற்றொரு சுப கிரகங்களான குரு மற்றும் வளர்பிறை சந்திரன் பார்த்து நன்கு கனிந்த வாழைப்பழத்தை போல பயன்படாமல் போய்விட்டார்.
இவருடைய ஜாதகத்திலும் எட்டாம் வீடான மகர வீட்டிற்கு ஒன்பதாம் அதிபதியான புதன் குரு பார்வையில். பத்தாம் அதிபதியான சுக்கிரன் உச்சம். ஆக இவரை மக்களுக்கு இன்னமும் தெரிகிறது. ஆனால் இவரது லக்னபாவகம் கெட்டதால் இவருடைய செயலால் மக்கள் இவரை தூற்றுகின்றனர். ஆனாலும் ஒரு சிலர் இவரை கொண்டாடி வருகின்றனர். அவர்தான் *நாதுராம் கோட்ஸே*
நன்றி வணக்கம்🙏
இவன்
தங்கள் மாணவன்
K. யுவராஜா
[28/08, 5:26 pm] Sukran Yuvaraja:
வணக்கம் குருவே 🙏🙏🙏 முதலாவது ஜாதகத்தில் ஜாதகர் பிறந்த தேதி 19.10.1907 வருகிறது. Born gloriousல் போட்டால் அன்று யாருடைய பிறந்த நாளும் வரவில்லை. எனக்கு *பகத்சிங்* ஆக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது. ஆனால் அவரது பிறந்த நாள் செப்டம்பர் 27,28 என கூகுளில் காட்டுகிறது. பகத்சிங் என்றால் இவரது தசா அடிப்படையில் அட்டமாதிபதி புதன் தசாவில் இவர் தூக்கிலிடப்பட்டது சரியாக பொருந்தி வருகிறது
.
[29/08, 10:21 am] S.Shanmuganandam🤴: [28/08, 5:58 pm] Sukran muniyandigandhi21:
ஜாதகம் 1.
லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி குரு 9ல் பாதகஸ்தானத்தில் உச்சம் .குரு நின்ற நட்சத்திர அதிபதி கேது சாரம் .கேது லக்னத்திற்கு 2ல்.கல்வி அறக்கட்டளை தரும சாலை அறங்காவலர் குழு தொடர்பான விஷயங்களில் சட்டத்திற்கு பிரச்னையில் மாட்டியிருக்கலாம் . ராகு 8ல் அட்டமஸ்தானத்தில்.சாரம் குரு சாரம் .குரு 9ல் பாதக பாக்கியஸ்தானத்தில்.5ம் பாவகம் என்பது குழந்தை .9 தந்தை மகன் பாகபிரிவினையின் சொத்துகள் பாகபிரிவினையின் மூலம் தந்தை மகன் உறவு இடர்பாடுகள் ஏற்பட்டு அதன்மூலம் பாதகங்கள் ஜாதகருக்கு உண்டானதால் சிறைச்சாலை சென்றிருக்கலாம்.
[28/08, 6:01 pm] Sukran muniyandigandhi21:
ஜாதகம் 2.
உபயலக்னம் . 6/11அதிபதி செவ்வாய் லக்னத்தில் .கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் அடிதடி வம்பு வழக்கு சந்திக்க நேரிடலாம் . நண்றி
[29/08, 10:22 am] S.Shanmuganandam🤴: குருவணக்கம்.
சுப்பிரமணியன்
பம்பாய்
முதல் ஜாதகர்.
லக்னாதிபதி செவ்வாய்.. பொளர்ணமிக்கு ஒப்பான சந்திரனோடு பரிவர்த்தனையான/உச்சகுருபார்வையில்...பாப்பம் போய் சுபத்வம் அடைந்தார்.5ல் ஆசை அபிலாஷை அரசியல் பாவகத்தில் குருவுடன் பரிவர்த்தனைபெற்றப.ஒளிசந்தீரன் சனியுடு டிகிரி அளவில் இணைவானதால் நோக்கம் விபரீதம் ஆகி கெட்டது..
அரசுக்கான சூர்யபகவான் 12ல் நீசமாகிமாந்தி தொடர்பால்இயற்கைக்குமாறான மரணம்.
8ல் ராகுபகவான் கண்டம் விபத்து மரணம்.சம்பவத்தது..
9ல் உச்சகுரு லக்னத்தைபார்வையிட்டு பொதுமக்கள் ஆதரவு/சப்போர்ட்/அன்பு /கவுரவம் உண்டு. பொதுமக்கள் நேசிக்கப்பட்ட.
டிகிரி அளவில்சனிபகவான் பார்வையால் லக்னம்/7ம்/
2ம்இடம் பாதிப்பு.
+++++++++++++
இரண்டாம் ஜாதகர்.
லக்னத்தில் செவ்வாய் கோபக்காரர் ஆத்திர/ அவசர/யதேச்சையானமுடிவு.உண்டு.
இதிலும் அரசுக்கான சூரியபகவான் ராகு/லக்னாதிபதி இணைவு 12ல்விரயஸ்தானத்தில்
உச்ச சனிபகவான்பார்வையால்லக்னம்/5ம்இடம்(ஆசை அபிலாஷை அரசியல்)10ம் இடம்பட்டம் பதவி.
புகழ் கெட்டது.
10ல்நிஸ்பலமான.உச்சசுக்ரன்/குரு சந்திரன் சமசப்தமபார்வையால் பட்டம் பதவி புகழ் கெட்டது
8 9க்கான சனிபகவான்உச்சனாகி 11ம் இடத்தை பாதகாதிபதியாக கெடுத்து ஜாதகருக்கு துர்மரணம் விபத்து கண்டத்தை கொடுத்தார்.
2ல்மாந்திAdamantஆனசொல்லால் கெட்டார்.
6ல் கேது.
செவ்வாயின் பார்வையில்.4 7 10 ம் இடங்கள் கெட்டன.
கெட்டபெயர் அகீர்த்தி ஏற்பட்டது
🙏
சுப்பிரமணியன்
பம்பாய்
[29/08, 10:22 am] S.Shanmuganandam🤴: *சுக்கிரன் ரவீந்திரன்*
முதலாவது ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் மூன்றாம் இடத்தில் உச்சமடைந்து குருபகவான் பார்வை பெற்று சுபராகி உள்ளார் இந்த ஜாதகர் நல்ல செயல் மக்களுக்கு செய்து அரசு பார்வையில் குற்றம் ஆனதால் தண்டிக்கப்பட்டு இருப்பார்.
இரண்டாவது ஜாதகத்தில் லக்னாதிபதி பன்னிரண்டில் மறைந்து ஆறாம் அதிபதி செவ்வாய் லக்னத்தில் அமர்ந்து செவ்வாய்க்கு பகை வீடாகி சுப கிரகங்கள் பார்வை இல்லாததால் வீண் வம்பு வழக்கு அடிதடி குற்றச்செயல் போன்றவற்றால் அரசு தண்டனை அடைந்திருப்பார்.
[29/08, 10:23 am] S.Shanmuganandam🤴: *98418 42191*
எனக்கு அவ்வளவாக தெரியாது..
எனினும்..
முதல் jathagar, தாய் நாட்டுக்கு பணி ஆற்றி, soldier போன்ற பணி செய்து மற்ற நாட்டவர்கள் தண்டனை கொடுத்து இருக்க வாய்ப்புள்ளது..
லக்னம் குரு பரத்தும், செவ்வாய் குருவால் பார்க்க பட்டு, நல்ல, நியாயமான வீரமாய், நல்ல புகழுக்கு சொந்த காரணமாக சந்திரன் குரு பரத்தும் உள்ளது.. சிறை குறிக்கும் 12 ஆம் இடம், சுக்ரன் பரத்தும் இருபது , தவறான தண்டனை இல்லை என நெனைக்க வைக்கிரது.
2. Jadagathil.. செவ்வாய், சுபம் இல்லாமல் இருபது, சனி lagnathai பரத்தும் முன் கோபி என காட்டுகிறது.
4 இடமான தாய் மற்றும் உச்ச சுக்ரன் இடம் அதிஹ வலு பெற்றுள்ளது சரியான அமைப்பு இல்லை..
பணம் அல்லது தாய் மூலம் குற்றம் செய்திருக்க வாய்ப்புள்ளது. தாய் இல்லாமல் இருக்கும் வாய்புகள் உள்ளது.
12 ஆம் இடத்தில், சூரியன், ராகு இருபது நல்லது அல்ல.. 11 ஆம் லாப இடம் சனியால் அசுப படுத்த பட்டு உள்ளது. 8 ஆம் இடம், குற்றம் செயல், சனி வீடே சனி பார்வை,
எனவே முதல் jadagam நல்லது என நினைகிறேன்.
Amateur astrologer.. மன்னிக்கவும்..🙏🏼
+++++++++++++++++++
[29/08, 10:25 am] S.Shanmuganandam🤴: *திருமதி சூர்யபிரபா*
[28/08, 8:37 pm] Sukran Sooriyaprabha:
Good evening.
முதல் ஜாதகம்
இந்த ஜாதகர் விருச்சிக லக்கனம் காலப் புருஷனுக்கு எட்டாவது வீடு ஸ்திர லக்னம் லக்னாதிபதி செவ்வாய் உச்சம் லக்னத்துக்கு மாரக ஸ்தானத்தில் உச்ச குருவின் பார்வையில்
ஜாதகர் அசாத்திய தைரியம் உடையவராக இருந்திருப்பார்
லக்னத்திற்கு உச்ச குருவின் பார்வையும் ஆட்சி பெற்ற சனியின் பார்வையும்
லக்னத்திற்கு பன்னிரண்டாம் இடத்தில் விரயாதிபதியான சுக்கிரன் ஆட்சி சூரியன் நீசம் அட்டமாதிபதியும் மாரகாதிபதியுமான புதன் மாந்தியுடன் இணைவு
சூரியன் நீசம் அரசாங்கத்தினால் தண்டனை சிறைவாசம் எட்டாம் இடத்தில் ராகு
ஆறாம் இடத்தை செவ்வாய் சனி சுக்கிரன் சூரியன் புதன் பார்வை இந்த ஜாதகருக்கு சூரியன் நீசமான காரணத்தினாலும் ஆறாம் பாகம் வலுப்பெற்றதாலும் இவருக்கு எதிரிகள் இருந்தனர் . பத்தாம் இடமான கர்ம ஸ்தானத்தை உச்சம் பெற்ற செவ்வாயும் சனியும் பார்வை
லக்னத்தை உச்சக்குரு பார்த்ததாலும் ஒளி பொருந்திய சந்திரன் ஐந்தாம் இடத்தில் இருப்பதாலும் பதினொன்றாம் இடத்தை அபிலாசைகள் நிறைவேறும் இடத்தை சந்திரன் பார்வை இருந்ததாலும் சனிபகவான் ஆட்சியாக இருப்பதாலும் பொதுமக்கள் ஆதரவு இவர் மக்களால் போற்றப்படுவதற்கு காரணம்
Thanks
[28/08, 8:50 pm] Sukran Sooriyaprabha: இரண்டாம் ஜாதகர்
இந்த ஜாதகர் மிதுன லக்னம் லக்னாதிபதி புதன் லக்னத்திற்கு 12 இல் விரய ஸ்தானத்தில் சூரியன் மற்றும் ராகுவுடன்
லக்னத்தில் செவ்வாய் பகவான் தனக்கு பகை வீட்டில்
பன்னிரண்டாம் வீட்டு அதிபதியான சுக்கிர பகவான் சந்திரன் குரு பார்வை பெற்று உச்சத்தை அடைந்திருந்தார் நிஸ் பலமாக இருந்தாலும் சுக்கிரன் உச்சமாக இருக்கிறார்
லக்னத்தை நீசம் பெற்ற சனி பகவான் பார்வை லக்னத்தை எந்த சுப கிரகங்களும் பார்க்கவில்லை அட்டமஸ்தானத்தை செவ்வாய் சனி பார்வை குருவின் பார்வையும் அட்டமஸ்தானத்திற்கு உண்டு சனிபகவான் நீசமாக இருப்பதாலும் ஐந்தாம் இடத்தை நீசம் பெற்ற சனி பகவான் பார்ப்பதாலும் பொதுமக்கள் ஆதரவு இல்லை சூரியன் ராகு இணைவு இவருக்கு அரசாங்க தண்டனை கிடைத்திருக்கிறது
நன்றி வணக்கம்
[29/08, 10:26 am] S.Shanmuganandam🤴: *Sukran Lakshmi*
குரு வணக்கம்🙏
முதல் ஜாதகம்:
விருச்சிக லக்னம் மீன ராசி ஆகும்,
லக்னாதிபதி செவ்வாய் சனி பகவான் வீட்டில் இருந்தாலும் அவர் உட்சம் மேலும் உட்ச குரு பார்வையில்..வீடு குடுத்தவன் ஆட்சி வக்ரம்.
லக்னத்தில் உட்ச குரு பார்வை நல்லது.
ராசி அதிபதி குரு உச்சம் அவரே லக்னத்திற்கு 9ஆம் வீட்டில் இருப்பது புகழ் கீர்த்தி ஆகும்.
இங்கே ஜாதகரின் குணம் நேர்மை நற்சிந்தனை உடையவர் ஒழுக்கம் நிறைந்தவர் அதேபோல் ராசியையும் குரு பார்ப்பதால் ஜாதகரின் நோக்கம் செயல் அனைத்திலும் நேர்மை மற்றும் நியாய ஒழுக்க சிந்தனை இருக்கும்.
ஆக இந்த ஜாதகர் தான் ஏற்று நடக்கும் பணி சிந்தனை அனைத்தும் நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்துவார்.
அடுத்தபடியாக கேள்வி என்னவென்றால் சிறைவாசம் ஏற்பட்டது எதனால் அதிகபட்ச உச்ச தண்டனை தூக்கு தண்டனை எதனால் கிடைத்தது?
ஒருவர் சிறை செல்ல வேண்டும் என்றால் வம்பு வழக்கு ஏற்பட்டு அதன் பிறகு தண்டனை அடைந்து அந்த தண்டனை அனுபவிக்க சிறைக்கு செல்ல வேண்டும்.
ஆக இங்கே ஜாதக ரீதியாக பார்த்தோமேயானால் லக்னத்திற்கு ஆறு எட்டு பன்னிரண்டு ஆதிபத்தியம் விசேஷம் ஏற்பட்டு அதே சமயத்தில் கேது மற்றும் செவ்வாய் சிவப்பு நிற கட்டிடமல்லவா இந்த காரகத்தின் வழியே சிறை தண்டனை ஏற்படும்.
ஆக ஆறு எட்டு பன்னிரெண்டு மற்றும் கேது செவ்வாய் இவர்களின் தொடர்பு இருக்க வேண்டும் மேலும் இந்த காரக மற்றும் ஆதிபத்திய பாவங்களை குரு அல்லது சுக்கிரன் பார்த்து மேலும் வலு சேர்க்க வேண்டும் அப்படி ஒரு நிலை ஏற்படும் போது தான் ஜாதகருக்கு சிறை தண்டனை ஏற்படும்.
ஆக இந்த ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டாமிடம் ராகு அமர்வு எட்டாம் அதிபதி புதன் 12ஆம் வீட்டில் தொடர்பு கொள்கிறார். மேலும் லக்னத்திற்கு ஆறாம் அதிபதி செவ்வாய் உச்சம் பெற்று குருவின் பார்வையில் இருக்கிறார்.
ஆக 8 /12 தொடர்பு ஏற்படும்பொழுது சிறைவாசம் அதை தொடர்ந்து தண்டனை நிறைவேற்றுதல் நடக்கும். அப்படி என்றால் புதன் தசா இந்த லக்னத்திற்கு அட்டமாதிபதி தசா ,மேலும் கேது புத்தியில் சிறைவாசம் செய்திருப்பார்.
லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் கேது செவ்வாயுடன் இணைவு அதே சமயத்தில் குருவைப் போல செயல்பட்டு இருப்பார்.
இந்த செவ்வாய் கேது காம்பினேஷன் வழக்கு தொடர் அல்லது தண்டனை சிறைவாசம் அனுபவித்தல் இந்த காரகத்துவங்களை வெளிப்படுத்தி இருக்கும்.
அதே சமயத்தில் குரு ஒன்பதாம் வீட்டில் உச்ச நிலையில் இருப்பதால் ஒன்று மூன்று மற்றும் ஐந்தாம் பாவங்களை பார்வையிடுவதால் இந்த சிறை தண்டனை மூலம் இவருக்கு புகழ் ஏற்பட்டிருக்கும்.
அடுத்தபடியாக உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை அதாவது உயிர் போகுதல் உயிர் விரையம் அது 12 ஆம் பாவம் ஆகும்.
இந்த ஜாதகத்தில் கேது புத்தி அதற்கு அடுத்ததாக வரும் சுக்கிர புக்தி லக்னத்திற்கு பன்னிரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்று சூரியன் மற்றும் புதனுடன் இணைந்து புக்தி நடத்தி இருப்பார்.
இங்கேயும் காம்பினேஷன் என்ற ஒரு விஷயத்தை நாம் பார்க்க வேண்டும் இந்த சுக்கிரன் சூரியன் பத்தாம் அதிபதி புதன் 8 மற்றும் 11 ஆம் அதிபதி ஆக அரசு வழி, தண்டனை எட்டாமிடம் என்பது தண்டனை மற்றும் 11ஆம் இடம் நண்பர்கள் அவர்கள் வழி விரயம் ஏற்படும் என்பது தெரிகிறது.
ஏனென்றால் இந்த விருச்சிக லக்னத்திற்கு புதன் வரக்கூடாத ஆகாத வேண்டாத தசாவாகும்.
ஆக முதல் ஜாதகர் நல்ல நோக்கத்துடன் சில வம்பு வழக்குகளை சந்தித்து இருப்பார் அதற்காக சிறை பட்டு இருப்பார் நண்பர்களுடன் சேர்ந்து செயல்களை செய்து இருப்பார் அதே சமயத்தில் அந்த தண்டனையை அனுபவித்து தன் உயிரை விரயம் செய்திருப்பார். இதுவே தூக்கு தண்டனை இவருக்கு கிடைத்ததற்கு காரணம்.
இந்த ஜாதகத்தின் மகத்துவம் என்னவென்றால் கீர்த்தி புகழ் என்று சொல்ல கூடிய ஒன்பதாம் வீட்டில் குரு உச்சநிலையில் இருப்பதால் இவர் இறந்தும் இரவா புகழ் பெற்றிருக்கிறார் அதே சமயத்தில் குருவின் ஒன்பதாம் பார்வை ஐந்தாம் வீட்டில் படுவதால் அரசியல் ஆர்வம் மற்றும் நல்ல நோக்கத்திற்காக இவை அனைத்தும் நடந்திருக்கும்.
ஜாதகம் இரண்டு:
இந்த ஜாதகர் மிதுன லக்னம் கன்னியா ராசியாகும். லக்னத்திலே செவ்வாய் மற்றும் சனி பகவான் பார்வை ஆக குண கேடு உண்டாகும், பாவ புண்ணியங்களுக்கு அஞ்சாத ஜாதகம் அவசரகுணம் பழி தீர்க்கும் உணர்வு மேலோங்கி இருக்கும்.
ஒருவர் சிறை தண்டனை மற்றும் தூக்கு தண்டனை பெற வேண்டும் என்றால் ஜாதகரீதியாக விளக்கம் ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன்.
அதனால் இந்த ஜாதகத்தில் நேரடியாக தண்டனை எப்போது பெற்றிருப்பார் என்பதை பற்றி பார்க்கலாம்.
இந்த லக்னத்திற்கு ஆறு குடையவன் செவ்வாய் ஆறாம் வீட்டிலே கேது, வீடு கொடுத்த செவ்வாய் சனியின் பார்வையில்,
ஆக ஆறுக்குடையவன் லக்னத்தில் இருப்பது இந்த ஜாதகர் வலிய வம்பு வழக்குகளை தேடிக்கொள்வார்.
அதுபோல் எட்டாம் அதிபதி சனி பகவான் இந்த ஜாதகத்தில் நீச்ச நிலையில் உள்ளார் அவரே ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபர் ஆவார். ஒன்பதாம் அதிபதி நீச்சம் பெற்று இருப்பது சனி புக்தி காலங்களில் இவருக்கு எட்டு மற்றும் ஒன்பதாம் ஆதிபத்திய வேலைகளை இந்த சனி பகவான் நீச்ச நிலையில் இருந்து செய்வார்.
ஆக வம்பு வழக்கு அசிங்கம் கேவலம் அவமானம் புகழ் கெடுதல் இவை அனைத்தும் ஏற்படும்.
சரி எப்பொழுது தண்டனை கிடைத்திருக்கும்?
இந்த மிதுன லக்னத்திற்கு ஆறுகுடைய செவ்வாய் வரக்கூடாத தசா ஏழுக்குடைய குரு மாறக தசா எட்டுக்குடைய சனி வம்பு வழக்கு சிறை தண்டனை ஏற்படுத்தக்கூடிய தசாவாவும்.
முதலில் செவ்வாய் திசை எடுத்துக் கொண்டோமே ஆனால் இந்த செவ்வாய் 6டைவனாக இருந்து லக்னத்தில் இருந்தாலும் சனியின் பார்வையில் அவர் மட்டுப்படுகிறார் ஆக செவ்வாய் திசையில் வம்பு வழக்கு வர வாய்ப்பு இல்லை.
அடுத்தபடியாக மாறகால் என்று சொல்லக்கூடிய குரு தசாவில் ஏற்பட்டிருக்க கூடும் எவ்வாறெனில் குரு தசா ஏழு மற்றும் 10க்கு அதிபதியாகி நான்காம் வீட்டில் வக்கிர நிலையில் இருந்து சந்திரனுடன் இணைந்து இருக்கிறார் அதே சமயத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் பார்வையில் இருக்கிறார். இப்படி அஷ்ட சஷ்டகம் பார்வை நற்பலனை தர இயலாது.
அதாவது குரு என்பவர் கௌரவம் ஒழுக்கம் இதற்கு காரகர். சுக்கிரனின் பார்வையில் இவை அனைத்தும் கெடும் .
மேலும் மாறகால் பொதுவாக வலுக்கக்கூடாது இங்கே சந்திரனின் இணைவில் மாறகால் வலுத்து விட்டார்.
ஆக இந்த ஜாதகருக்கு குரு தசா நற்பலனை தர இயலாது, குரு தசா சுய புத்தி முடிந்து அதன் பிறகு வரும் சனி புக்தியில் தண்டனை ஏற்பட்டிருக்கும்.
ஏனென்றால் அட்டமாதிபதி சனி பகவான் இங்கே நீச்ச நிலையில் இருப்பதால் நிச்சயமாக சிறை தண்டனை உயிர் போகுதல் மற்றும் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துதல் இவை அனைத்தும் நடந்திருக்கும்.
இருவர் ஜாதகத்தையும் ஒப்பிடும் பொழுது இருவரும் ஒரு நோக்கத்திற்காக செயல்பட்டிருந்தாலும் முதல் ஜாதகர் ஒன்பதாமிடத்தில் குரு உச்ச நிலையில் இருந்து புகழ் உச்சத்தை அடைந்தார் இரண்டாம் ஜாதகத்தில் ஒன்பதாம் அதிபதி நீச்ச நிலையில் இருப்பதால் அதற்கு நேர்மாறான பலனை அனுபவித்தார் மக்களால் தூற்றபட்டார்.
முதல் ஜாதகர் விவரம் இவர் லையால்பூர் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர்,
சுதந்திரப் போராட்டத்திற்காக இளம் வயதிலேயே போராடியவர் லாலா லட்சுமத் ராய் அவர்களின் மரணத்திற்காக பழிவாங்கும் நோக்கத்தில் 1929 ஆம் ஆண்டு சென்ட்ரல் லெஜிஸ்லேடிவ் அசெம்பிளி பகுதியில் வெடிகுண்டு சம்பவம் நடத்தியவர்.
அதற்கான தண்டனையாக தனது 23 வயதில் சாண்டாஸ் ஆபிஸர் அவரை கொலை செய்ததால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்.
அவர் வேறு யாரும் அல்ல இரவாப்புகழ் பெற்ற பகத்சிங் அவர்கள்தான்.
அடுத்த ஜாதகம் மகாராஷ்டிராவில் பிறந்த நபர் கொள்கைக்காக தவறான போராட்டங்களில் நண்பர்களுடன் ஈடுபட்டு குணக்கேடு அடைந்து ,
நமது நாட்டின் சுதந்திர தந்தை அண்ணல் காந்தியடிகளை கொலை செய்தவர்,
அவர் வேறு யாருமின்றி நத்துராம் கோட்சே ஆவார்.
ஒரே விதமான காரக ஆதிபத்தியங்கள் தான் ஆனால் பலன்களை இருவர் ஜாதகத்திலும் இரண்டு விதமான ரிசல்ட்.
எனது ஆய்வு பிடித்திருந்தால் லைக் கொடுங்கள்.
எல்லா புகழும் நமது குருநாதருக்கே.
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@@@@@@@@@####
[29/08, 10:17 am] S.Shanmuganandam🤴:
நான் ஏற்கனவே அறிவித்தபடி கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு ஜாதகத்தை துப்பறிவு செய்து எனக்கு வந்த, கொடுத்த ரிப்போர்ட் படி ஆய்வு செய்ததில் சிறந்த ஜோதிட துப்பறிவாளர்களுக்கு ஆங்கில படங்களில் வருவது போல *ஜேம்ஸ் பாண்ட் நாட் நாட் செவென்* என்பது போல இவர்களுக்கு *ஜெமினி பாண்ட் நாட் நாட் ஃபைவ்* என்ற பட்டம் கீழ்க்கண்ட இவர்களுக்கு பெருமையோடு வழங்கப்படுகிறது.
உண்மையில் அவர்களுக்கு இந்த தகுதியும் இருப்பதால் இந்த மதிப்பும் மரியாதையும் தரப்படுகிறது என்பதுதான் உண்மை என்பது உங்கள் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
காரணம் இவர்கள் இருவருமே கேட்கப்பட்ட கேள்விகளைக் தாண்டி ஒருபடி மேலே சென்று *ஜாதகர் யாரென்று* கண்டுபிடித்து கூறினார்கள்.
இதுதான் *curiosity* என்பது.
அது இந்த ஜோதிட துப்பறிதலுக்குமிகமிகத் தேவை.
*சிறப்பு* 👍 *well-done*
[29/08, 10:17 am] S.Shanmuganandam🤴: அந்த வகையில்
*முதலாவதாக பட்டத்தை பெறுபவர்*
*திருவாளர் யுவராஜா*
*ஜெமினி பாண்ட் நாட் நாட் பைவ்*
🤣
ஆணுக்கு பெண் சளைத்தவர்கள் அல்ல என்று தனது ஜோதிட அறிவாற்றலால் தன் திறமையை வெளிப்படுத்திய சிறப்பாக துப்பறிந்த பெண்மணி லேடி ஜேம்ஸ் பாண்ட் போல இவருக்கு *லேடி ஜெமினி பாண்ட் நாட் நாட் பைவ்* என்ற பட்டம்
*திருமதி லட்சுமி திருச்சி* அவர்களுக்கு
பெருமையோடு வழங்கப்படுகிறது.😅
இந்த பரிசு 👆
*திரு யுவராஜா*
*திருமதி லட்சுமி* ஆகியோருக்கு பெருமையோடு வழங்கப்படுகிறது.😅
பங்கேற்று குறிப்புகளைக் கொண்டு ஜாதகத்தை துப்பறிவு செய்த மற்றவர்களுக்குப் பாராட்டுக்கள்.
அவர்களை *ஜோதிட துப்பறியும் ஏஜெண்ட்* என்ற சிறப்புநிலைப் பட்டம் மகிழ்வோடு வழங்கப்படுகிறது.
*பாராட்டுக்கள்!*
*வாழ்த்துக்கள்!* 👍
தொடர்ந்து இதுபோன்ற ஆய்வுகளில் ஈடுபட்டு உங்கள் ஜோதிடப்பணி சிறப்புற மனதார வாழ்த்துகிறேன்.🤝🌷💐
நன்றி வணக்கம் 🙏
என்றும் அன்புடன்
*உங்கள் ரிஷி*
*திரு S.ஷண்முகானந்தம் M.A.B.Ed.*RTD Hm*.
*பொள்ளாச்சி*
*ஜாதகம் 2 விவரம்*
*முடிச்சு அவிழ்ப்பு நாளை வெளிவரும்......*
[29/08, 10:35 am] S.Shanmuganandam🤴:
*இவரது பிறந்த தேதி Googleல் கிடைத்ததைக் கொண்டு ஆய்வுக்கு படுத்தப்பட்டது.*
தேதி மாற்றம் என்பதை விட அவரது செயல்பாடுகள் குறித்து பார்க்கும் போது கோள்களின் கோலாட்டமும் சரியான முறையில் செயலாற்றும் போது அதற்கான தேதியே ஏற்கப்பட்டது.
*அதன்படி 19/10/1907 தேதியே ஓகே.*
விக்கிப்பீடியா ஒரு தகவலுக்காக மட்டுமே.
என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.🙏
No comments:
Post a Comment