ஜோதிடத் தொடர் தலைப்பு பற்றிய சிறு குறிப்பு
கடலின் மேற்பரப்பில் அலைகள் மேலெழுந்து சப்தம் இட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.
அதனை ரசிக்கலாம் ரசிக்க முடியும்.
அதேசமயம் அந்த அலைகள் அதிக வேகத்தில் மேலெழுந்து சப்தமிட்டால் அதனை ஆரவாரம் என்போம்.
அதீத வேகத்தில் மேலெழுந்து விட்டால் அதனை ஆர்ப்பரிப்பு என்போம்.
கடலின் மேற்பரப்பில் இருந்து கீழே சென்றால் சப்தங்கள் அடங்கிவிடும்.
கடலின் ஆழத்திற்கு சென்றால் நிசப்தம் ஆகிவிடும்.
கடல் அமைதியாக இருக்கும்.அங்கே சப்தம் இல்லை.
ஆரவாரம் இல்லை.
ஆர்ப்பரிப்பும் இல்லை.
அமைதி மட்டுமே நிலவும்.
நமது வாழ்க்கையும்
புரிந்து செயல்பட்டால் (5மிடம்) அமைதி நிலவும். மகிழ்ச்சி அடையும்.ஆனந்தம் பெருகும். (9ஆமிடம்)
வாழ்க்கையில் புரிதல் இல்லாமல் போனால் சப்தம் ஏற்படும்.
சலசலப்பு காணும்.
இது நீடித்தால் கைகலப்பு உருவாகும்.(6ஆமிடம்)
ஆரவாரம் (கட்டுக்குள் இருக்கும்)
சண்டை சச்சரவு ஏற்பட்டு துன்பம் தரும்.(8ஆமிடம்)
ஆர்ப்பரிப்பு கட்டு மீறி செயல்படும். அழிவைத் தரும்.
இதில் எந்த இடத்தில் நாம் இருக்கிறோம் என்று பார்த்தால் போதும் புரிந்து கொள்ள முடியும்.
நம் வாழ்க்கை அமைதியானதா?
ஆர்ப்பாட்டம் கொண்டதா?
ஆரவாரம் நிறைந்ததா?
ஆர்ப்பரிப்பாய் உள்ளதா?
இதனை அப்படியே நாம் பார்க்கும் ஜாதக ஆய்வில் பொருத்தி பாருங்கள்.
அமைதியான வாழ்க்கையில் நட்பு மேலோங்கி இருக்கும்.
ஆரவாரமான வாழ்வில் எதிரிகளின் ஆதிக்கம் நம்மீது விழுந்து ஆர்ப்பாட்டத்தையே ஏற்படுத்தும்.
இதனையே நாம் இங்கு பார்க்க இருக்கிறோம்.
அமைதியான வாழ்வா?ஆரவாரமான நிகழ்வா?
எல்லாம் வாங்கி வந்த வரம்.
No comments:
Post a Comment