Saturday, November 2, 2024

யாருக்கு கண் திருஷ்டி ஏற்படும்?

 


*கல்லடி பட்டாலும் பரவாயில்லை* 

*கண்ணடி படக்கூடாது*.*

இந்த முதுமொழிக்கு பொருள் வாழ்வில் ஒருவருக்கு கண் திருஷ்டி படக்கூடாது என்பதுதான்.

யாருக்கு திருஷ்டி ஏற்படும்? 

கண் பார்வையின் தோஷம் மிகக் கொடூரமானது.

மற்றவர்களின் வாழ்வில் ஏற்படும் முன்னேற்றம் படிப்பு தொழில் வாழ்க்கை துணை குழந்தைகள் வீடு வசதி வாய்ப்புகள் இவற்றை பார்த்து மனதில் பொறாமை கொள்வது வயிறு எரிவது ஆகியவற்றால் ஏற்படுவது தான் திருஷ்டி. 


இந்த திருஷ்டி தோஷம் மேற்கண்ட விஷயங்களில் ஏற்படுமானால் அது சம்பந்தப்பட்ட விஷயங்களில் தடைகள், முன்னேற்றம் இன்மை, வீட்டில் சண்டை சச்சரவுகள், தீராத நோய் ஏற்படுதல் ஆகிவை எல்லாம் உருவாக்கும்.

இது போன்ற நிலைகளைப் பற்றி ஜோதிடத்தில் நாம் அறிந்து கொள்ள முடியுமா? அதற்கு ஏதேனும் வாய்ப்புகள் உண்டா? கிரக ரீதியாக என்ன மாற்றங்கள், அமைப்புகள் இது போன்ற நிலைமைகளை உருவாக்குகிறது என்பதை பார்ப்போம்.


கண் திருஷ்டி யார் மீது விழும்.* 


   சரி, நாம் ஜோதிடத்தில் கண் திருஷ்டி யார் யார் மீது படும் என்பதை பார்ப்போம். லக்னம் நின்ற ராசி உயிர். சந்திரன் நின்ற இடம் உடல். லக்னமாகிய உயிர் வெளியில் தெரியாது. வெளியில் தெரியும் ஒரு பொருளை தானே நாம் பார்க்க முடியும், அப்படி என்றால் *கண் திருஷ்டி  சந்திரன் அம்சமான உடல் மீது தானே படும். ஆக திருஷ்டி பார்க்க சந்திரன் நின்ற ஸ்தானத்தை பிரதானமாக எடுத்து கொண்டால் சரியாக அமையும்*.

திருஷ்டி தோஷம் ஏழையைக் கூட தாக்குமா?

     


       ஜாதகத்தில் ஜென்ம சந்திரனுக்கு கேந்திரங்களில் சுக்ரன், செவ்வாய், சனி, சூரியன், ராகு இருப்பவர்களுக்கு இந்த திருஷ்டி தோஷம்  அமைந்துவிடும். 

இதே போல் சந்திரனுடன் சுக்ரன் இணைந்து இருந்து மேற்படி கிரகங்கள் கேந்திரத்தில் இருந்தாலும் ஜாதகரை திருஷ்டி தோஷம் உண்டு இல்லை என்று பண்ணிவிடும். 


செவ்வாய், சனி இவர்கள் இருவரில் ஒருவர் சந்திரனை பார்த்தால் திருஷ்டி தோஷம் அதிகம் இருக்கும்,


 சந்திரனோடு கேது இணைவதும்,

லக்கினத்திற்கு ஐந்திலோ ராசிக்கு ஐந்திலோ,  சந்திரன் கேது இருப்பது

கண் திருஷ்டி தோஷம் ஏற்படுத்தும்.

 செவ்வாய், சனி இவர்கள் இருவரில் ஒருவர் சந்திரனை பார்த்தால் திருஷ்டி தோஷம் அதிகம் இருக்கும்,

 சொல்லப்போனால் இவர்கள் பணக்காரராக இருந்தாலும், இல்லை பரம ஏழையாக இருந்தாலும் இவரை யார் பார்த்தாலும் அவர்கள் இவர் மீது கண் திருஷ்டி போடுவது திண்ணம். 


*திருஷ்டி தோஷம் விலக்கும் அமைப்பு* 


சுப கோளான சுக்கிரன் சந்திரனை ஏழாம் வீட்டில் இருந்து பார்க்கும் போது திருஷ்டி தோஷம் நீங்கும்.

 ஆனால் அதே சமயம் களத்திர தோஷத்தை உருவாக்கி விடும்.

அடுத்து 

 *சந்திரன் நின்ற ராசியில் ராகு, கேது, சூரியன் இவர்கள் சேர்ந்து இருந்தால் திருஷ்டி தோஷம் இவர்களை திரும்பி கூட பார்க்காது.*

எது எப்படி இருந்தாலும்

ஜென்ம சந்திரனை குரு கேந்திரத்தில் இல்லாமல் பார்த்தால் எப்பேற்பட்ட திருஷ்டி தோஷமாக இருந்தாலும் அது தெய்வபலத்தால் இல்லாமல் போய் சந்தோஷத்தை ஜாதகன் அடைவான் என்பது உறுதி.


அதேபோல ஆத்ம காரகனான சூரியன் லக்னம், லக்னத்திற்கு மூன்றாம் வீடு, ஆறாம் வீடு, 10 ,11 ஆம் வீடுகளில் இருப்பின் இந்த தோஷம் விலகிவிடும், ஆனால் ராகு கேதுகளின் சம்மந்தம் தொடர்பு இருக்கக்கூடாது என்பது முக்கியம்.

No comments:

Post a Comment