Friday, August 30, 2024

இன்று புதிர் முடிச்சும் நாளை முடிச்சு அவிழ்ப்பும்

 வாராவாரம் பகுதியில் *இன்றைய ஆரவாரம் தலைப்பு*புதிர் முடிச்சும்  முடிச்சு அவிழ்ப்பும்




[28/08, 1:53 pm] S.Shanmuganandam🤴: 

ஜோதிடம்  கற்றுக்கொண்டிருப்பவர்கள் மற்றும் ஜோதிட அறிவை மேம்படுத்த நினைப்பவர்களும் இது போன்று நன்கு  ஜாதகத்தை அலசிப் பார்த்தே தங்களுடைய  ஜோதிட அறிவை மேன்மைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

 கிராமத்தில் வசிப்பவர்களை *கிராமவாசி* என்று அழைப்பர்.

 நகரத்தில் வசிப்பவர்களை *நகரவாசி* என்று அழைப்பர்.

 உள்ளூர் காரர்களை *உள்ளூர்வாசிகள்* என்றும், வெளியூர்காரர்களை *வெளியூர்வாசிகள்* என்றும் கூறுவது வழக்கம்.

 இந்த வாசிகள் என்பது அங்கே வசிப்பவர்கள் என்று பொருள்.

அப்படியானால் சிறையில் வசிப்பவர்களை சிறைவாசி என்று தானே சொல்கிறோம். 

 *ஒருவருக்கு ஏன் சிறைவாசம் ஏற்படுகிறது.*

 இதுதான் இன்றைய தலைப்பு இதைப்பற்றி தான் இன்றைய ஆய்வு.



[28/08, 1:53 pm] S.Shanmuganandam🤴: 

இங்கு கீழே இரண்டு ஜாதகங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 
இரு ஜாதகர்களும் ஒரே மாதிரியான செயல்களை செய்தவர்கள்.
 ஆனால் அவர்களின் நோக்கம் வேறு வேறு. அவர்களின் செயலுக்காக  கைது செய்யப்பட்டார்கள்.     
அவர்களுக்கு சிறைவாசம் ஏற்பட்டது.
விசாரனைக்குப்பிறகு அரசு தண்டனை பெற்றார்கள் . *உயர்ந்த பட்ச தண்டனையான தூக்கு தண்டனை இவர்களுக்கு கிடைத்தது*

அவர்களது இறப்புக்குப் பின் 
முதலாம் நபர் மக்களால் போற்றப்பட்டவர்.

இரண்டாம் நபர் மக்களால் தூற்றப்பட்டார்.

காரியம் ஒன்றுதான்; காரணம் வேறு. 

சரி  இப்போது கேள்விக்கு வருவோம்! 

1. இவர்களுக்கு சிறைவாசம் ஏற்பட்டது எதனால்? 

2. நாட்டின்  உயர்ந்த பட்ச தண்டனையான தூக்கு தண்டனை இவர்களுக்கு  கிடைத்தது எதனால்?

3. ஜாதகர் யார் என்று கொடுக்கப்படவில்லை.

 முடிந்தால் நீங்களே கண்டுபிடிங்கள்.
4. அது அவசியம் இல்லை.

5. துப்பு கொடுத்து விட்டேன். 

கிடைத்த ஆதாரங்களை கொண்டு யார் சரியான ரிப்போர்ட் எனக்கு தருகிறார்களோ அந்தத் துப்பறிவாளர்களுக்கு ஆங்கில படத்தில் வருவது போல *ஜேம்ஸ் பாண்ட் நாட் நாட் செவன் 007*என்ற பட்டத்தை கொடுத்தது போல உங்களுக்கு *ஜெமினிபாண்ட் நாட் நாட்* *பைவ்* *005* என்ற பட்டம் கொடுக்கப்படலாம்.

 தட்டி விடுங்கள் உங்கள் பொறியை!
கண்டுபிடியுங்கள் புதிரின் விடையை!

ஜாதகம் 1*👇


*ஜாதகம் 2*




 *மேற்கண்ட கேள்விகளுக்கு ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பு எவ்வாறு அமைந்துள்ளன? என்பதை ஜோதிட துப்பறிவாளர்கள் துப்பறிந்து எனக்கு ரிப்போர்ட் கொடுங்கள் பார்ப்போம்.*

அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👍

என்றும் அன்புடன் 
 *ரிஷி* 

 *திரு.S.ஷண்முகானந்தம்*
*பொள்ளாச்சி* 
 *94437 28932*

🤴: *இன்று புதிர் முடிச்சு....?*

 *நாளை முடிச்சு அவிழ்ப்பு!*

 *ஆரவார அலைகள் ஓய்வதில்லை*



No comments:

Post a Comment