[26/08, 3:24 pm] S.Shanmuganandam🤴: *இன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி.*
*கோகுலாஷ்டமி.*
*கிருஷ்ணன் அவதாரம் செய்த நாள்*
[26/08, 3:24 pm] S.Shanmuganandam🤴: இந்த புண்ணிய நாளில் அவரது ஸ்ரீகிருஷ்ணர் ஜாதகத்தைத்தான் *இன்று ஆய்வுக்கு* எடுக்கப்பட்டுள்ளது.
*ஆனந்தம் பொங்கும்* *அலைபாயும் நெஞ்சம்!!*
உள்ளம் கொள்ளை போகுதே!
மனதிற்கினிய அந்த மன்னவன் யார்?
களிப்பூட்டும் கதைகள் பேசும் காவிய நாயகன்
காதல் மன்னன்
யார்?
மலர்ந்த முகமும் வசீகரிக்கும் கண்களும் பார்த்த உடனேயே ஒருவர் அவர்பால் ஈர்க்கப்படுகிறார் என்றால் எப்படி?
அவரது அமைதியான தோற்றமும், இனிமையான பேச்சும் நம்மையும் அறியாமல் அவரிடம் நம் மனம் செல்கிறதே. எதனால்?
*ஜாதகரீதியாக தெரிந்துகொள்ள முடியுமா*?
நிச்சயமாக
*முடியும்.*
ஒருவரது ஜாதகத்தில் லக்னம் அல்லது லக்னாதிபதி சுக்ரன் வீடுகளான ரிஷபம், துலாமில் அமைந்தாலும்,
எந்த லக்னமாயினும் லக்னாதிபதியோடு சுக்ரன் இணைந்திருந்தாலும்,
லக்னாதிபதியை சுக்ரன் பார்த்தாலும்
அந்த ஜாதகர் மேற்சொன்னவாறு இருப்பார். மேலும் மங்கையர் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் காதல் மன்னன் ஆகவும் திகழ்வார். கலாரசிகராகவும் இருப்பார்.
அவ்வகையில் கலைத்துறையில் சினிமாவில் புகழ்பெற்று விளங்கிய பழம்பெரும் நடிகர் திரு. ஜெமினிகணேசன் அவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாயோடு சுக்ரன் இணைந்திருந்ததாலும், அவர்கள் இருவரும் லக்னத்துக்கு 2ல் அமைந்தாலும், இவருக்கு இனிய பேச்சும்,வசீகரத் தோற்றமும் அமைந்தது.
11ல் இருந்த சனி வலுவாக இருந்ததால் ஜனவசியமும் ஏற்பட்டது. திரையுலகில் சிறந்து விளங்கியதோடு மக்களால் அன்பாக *காதல்மன்னன்* என்றும் அழைக்கப்பட்டா
+++++++++++++++++++
அடுத்து கலைத்துறையிலும் அரசியலிலும் சிறந்து விளங்கிய *பழம்பெரும் நடிகர் திரு. என்.டி.ராமராவ் அவர்களின் ஜாதகம் ஆகும்.*
இவரது ஜாதகத்தில் சுக்ரன் வீடான துலாமில் லக்னம் அமைந்ததும், லக்னாதிபதி சுக்ரன் 7ஆம் வீட்டில் அமைந்து லக்னத்தைப் பார்ப்பதும் சிறப்பாகும்.
லக்னத்தில் குருவும், சந்திரனும் அமைந்து லக்னாதிபதிப் பார்ப்பதும் அருமையான அமைப்பாகும்.
[26/08, 3:36 pm] S.Shanmuganandam🤴: லக்னத்தில் குரு அமைந்தது தெய்வத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட ஜாதகம் என்பர்.
அத்தோடு சந்திரன் இணைவு என்பது சந்திரபிம்பத்தைப் போன்ற முகப்பொலிவையும் தோற்றத்தையும் குறிப்பதாகும்.என்.டி.ராமராவ் அவர்களின் முகத்தோற்றம் ஒப்பனையில் தெய்வீகப்பொலிவைக் காட்டியதற்கு இதுவே காரணம். அதனாலேயே அவர் கிருஷ்ணர் வேடம் தரித்தாலே நிஜகிருஷ்ணராகவே மாறிவிடுகிறார்.
கோடானுகோடி மக்களின் உள்ளங்களில் அவர் கிருஷ்ணராகவே வாழ்ந்துகொண்டிருந்தார். *மக்களின் மனங்களில் உண்மையில் அவர் காதல்மன்னனாகவே வாழ்ந்தார்.*
11மிடத்து ராகுபகவான் அதை செம்மையாக செய்தார். 5லிருந்த கேதுவும் அரச யோகத்தைத் தந்து அரசியலில் வெற்றியைத் தேடித் தந்தார். ஆந்திர அரசின் முதல்வராகவும் விளங்கினார்.
[26/08, 3:37 pm] S.Shanmuganandam🤴:
*அப்படி என்றால்*
*உண்மையான காதல் மன்னன் யார்*?*
வேடம் தரித்து நடித்ததாலேயே இவர்கள் இவ்வளவு பேரும் புகழும் பெற்றார்கள் என்றால்……
*உண்மையான காதல் மன்னன்* யாராவது இருந்திருப்பார் அல்லவா?
ஆமாம், இருந்தார்.
யார் அவர் ?
*அவர்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்*
இந்த புண்ணிய நாளில் அவரது ஜாதகத்தைத்தான் *சிறப்பு ஆய்வுக்கு* எடுக்கப்பட்டுள்ளது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஜெனனம் ரிசப லக்னத்தில் பிறந்து இருக்கிறார்.*
ரிசப ராசி ,
இதுவும் சுக்ரன் வீடு.
அவர் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்து இருக்கிறார்.
லக்னத்திலேயே சந்திரன்.
*லக்னத்தில் சந்திரன் உச்சம் பெற்றதாலும் லக்னாதிபதியாக சுக்கிரனே இருப்பதாலும் அழகுக்கு பஞ்சமில்லாமல் தெய்வீக உருவம் பெற்றார்.*
லக்னாதிபதி சுக்கிரன் ,
12 - ம் அதிபதி செவ்வாயுடன் இணைந்து மூன்றாம் வீட்டில் இருக்கிறார்.
மேலும் பாவி ராகுவும் கூடவே நிற்கிறான்.
4க்குரியவன் சூரியன் ஆட்சிபலத்தோடு 8ஆம் அதிபதி குருவுடன் சேர்ந்து உள்ளார்.
மேலும் பாக்கியாதிபதி சனி பகவான் 7மிடத்திலிருந்து லக்னத்தை பார்க்கிறார் .
2 - ம் இடத்து அதிபதி புதன் ஐந்தாம் வீட்டில் உச்சம் பெற்றான்.
ஆகையால் அறிவுக்கு ஒரு குறையும் இல்லை. உத்தவரை குருவாக அடைந்து அனைத்து வேதமும் அறிந்தவராக இருந்தார்.
மேலும் நாலாம் வீட்டில் குரு ஆட்சி பெற்ற சூரியனுடன் இருப்பதால் கல்வியில் மிக சிறப்பாக இருந்தார். ஆயகலைகள் 64 ம் கற்று அறிந்தவர் என்று பெயர் எடுத்தார்.
கலாரசிகர். இசைப்பிரியர். 2க்குரிய புதன் உச்சம். குழல் ஊதுவதில் விருப்பம். அவரது குழல் இசை தெய்வீக கானமாகத் திகழ்ந்தது. அவரது குழல் இசையைக் கேட்ட மனிதர்கள், கோபியர்கள் தேவநிலயை எய்தினார். மனிதர்கள் மட்டுமல்லாது பறவைகளும், விலங்குகளும் கூட அவரது இசைக்கு வசமாயின
லக்னாதிபதி சுக்கிரனும், மூன்றாம் அதிபதி சந்திரனும், பரிவர்த்தனை ஆகியும் உள்ளனர்.
ஏழாம் இடத்தில் சனி , ஏழுக்கு உடைய செவ்வாய் ஆறுக்கு உடைய சுக்கிரனுடன் சேர்ந்து மேலும் பாவி ராகுவுடனும் கூடி மூன்றாம் வீட்டில் நிற்பதாலும், அவருக்கு பல மனைவியர் அமைந்தார்கள்.
சந்திரனுக்கு ஏழாம் இடத்தில் சனி இருந்ததாலும் லக்னத்தில் மூன்றாம் அதிபதி சந்திரன் உச்சம் பெற்று இருக்கிறான். மூன்றில் செவ்வாய் நீசமாகி இருக்கிறான். மேலும் வர்கோத்தம் பெற்றும் உள்ளார்.
ஆனாலும் அந்த வீட்டதிபதி சந்திரன் உச்சமாகியும் உள்ளதால் நீசபங்க இராஜயோகம் ஏற்பட்டு விட்டது.
ஆகவே கிருஷ்ணர் மிகவும் வீரதீரமிக்கவராகவும் விளங்கினார்.
அரசியல்ஞானம் மிக்கவராகவும் இருந்தார். யதுகுலத்திற்கே அரசராகவும் திகழ்ந்தார்.
இல்லறத்திலும் அரசியலிலும்,ஆன்மீகத்திலும் மிகச்சிறப்பாக வாழ்ந்த ஒரு தெய்வீகபுருஷர் ஸ்ரீகிருஷ்ணர்.
தேய்பிறை அஷ்டமியில் ஜென்மம் காலத்தினால் தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் அமைப்பு ஆகும்.
பூ பாரத்தை நீக்கியது.
துவாபர யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
இவரது ஜெனனம் ஒரு அவதார நோக்கத்தைப் பூர்த்தி செய்தது.
அவரது அவதாரம் முழுமையான ஓர் தெய்வீக நிலை ஆகும்.
இந்த நந்நாளில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பற்றி எழுதுவதில் மிக்க மகிழ்ச்சியும் இதை சாத்தியமாக்கிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் என்னுடைய சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
நன்றி.
கிருஷ்ணார்ப்பணம்.❤
No comments:
Post a Comment