Tuesday, February 11, 2020

பொதுவாக வேத ஜோதிடத்தில் கிரகங்களின் பார்வைக்கு பலன் உண்டு,அன்பதை நாம் அனைவரும் அறிவோம் .


 .இயற்கை சுப கிரகங்களின் ஒளி இயற்கை பாவகிரகங்கள் மேல் படும் பொழுது சுப கிரகத்தின் ஒளியின் அளவை பொறுத்து அதன் பார்வையை பெரும் அசுப கிரகங்கள் தன்னுடைய குணத்தை அதாவது பாவத்தன்மையை குறைத்துக்கொள்ளும் .

உதாரணமாக உங்கள் தெருவில் ஒரு பாட்டுக்கச்சேரி நடக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது அந்த பகுதியின் யாருக்கும் கட்டுப்பாடாத ஒரு ரவுடி அந்த விழாவில் பங்கெடுக்கும் பொழுது அவனுடைய சேஷ்டைகள் மற்றவர்களுக்கு பீதியை கிளப்பும் காரணம் அவனின் சேட்டைகளை யாரும் கட்டுப்படுத்த முடியாது ,அவன் யார் அருகில் செல்கிறானோ அவர்கள் மெதுவாக அந்த இடத்தை விட்டு வேறு இடம் நோக்கி செல்வர் .

அதே விழாவில் அந்த ஊரின் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அந்த விழாவில்  கலந்துகொண்டார் என்றால் குறிப்பிட்ட ரவுடி தன்னுடைய குணத்தை மாற்றிக்கொண்டு ஒரு ஓரத்தில் அமைதியாக தான் இருக்கும் இடம் தெரியாமல் நடந்துகொள்வான் ,இப்படித்தான் பாவகிரகங்கள் மீது சுப கிரக பார்வை  படும் பொழது தன்னுடைய குணத்தை முற்றிலும் வெளிப்படுத்த முடியாமல் அடக்கி வாசிக்கும் .


இயற்கை பாவகிரகங்கள் சுப கிரகத்துடன்இணையும்  பொழது பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல தன்னுடைய பாவத்தன்மையை மாற்றி அந்த கிரகத்தின் காரகங்களில் நல்ல காரகங்களை வெளிப்படுத்தும் .உதாரணமாக லக்னத்திற்கு பத்தில் செவ்வாய் வலிமையுடன் இருந்து  குருவுடன் செவ்வாய் சேரும் பொழுது அந்த செவ்வாயின் மூர்க்க குணம் மாறி அதனின் நற் காரகத்துவமான நிலம், அராசங்க பணியில் காவலர் உத்தியோகம் ,ரியல் எஸ்டேட் தொழில் இப்படி நல்ல காரகத்துவங்களை வழங்கிவிடும் ,

மாறாக தனித்த  செவ்வாய் வலிமையுடன் இருந்து லக்கனத்திற்கு பத்தில் எந்த இயற்கை  சுபரின் பார்வையும் படாமல் சேர்க்கையும் இல்லாமல்  இருந்தால் .அந்த செவ்வாய் அந்த ஜாதகனுக்கு மூர்க்க குணத்தை கொடுத்து பிரபல ரௌடியாகவோ அல்லது   மட்டன் ஸ்டால் போன்றவற்றிலாவது ரத்தம் பார்க்கக்கூடியவனாக மாறிடுவான் .
நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் சிறு விளக்கத்தை கொடுத்தேன் .   

இந்த வேத ஜோதிடத்தில் கிரகங்களின் பார்வைக்கு பலன் உண்டு என்பதை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் . நவக்கிரகங்களில் ராகு கேது தவிர ஏனைய கிரகங்களுக்கும் ஒளியின் கதிர் அளவினை நம் முன்னோர் கொடுத்துள்ளனர் .அதனை கொண்டு இந்து லக்னம் போன்றவைகள் கணக்கிடப்படுகின்றன .

சூரியனின் கதிர் எண்ணிக்கை முப்பது என்றும் அதற்க்கு அடுத்துள்ள புதனுக்கு எட்டு என்றும் அதற்க்கு அடுத்துள்ள சுக்ரனுக்கு பனிரெண்டு என்றும் செவ்வாய்க்கு ஆறு என்றும் குருவுக்கு பத்து என்றும் சனிக்கு ஓன்று என்றும் கதிரின் அளவை நம் முன்னோர் கணக்கிட்டு உள்ளனர் .


இந்த ஒளியின் அளவைகொண்டே அவை பாவகிரகங்கள் என்றும் சுப கிரகங்கள் என்றும் சொல்கின்றனர். மிக குறைந்த ஒளி அளவை கொண்ட சனியை  முழு பாபர் என்றும் ,அதற்க்கு அடுத்த நிலையில் உள்ள செவ்வாயை முக்கால் பாபர் என்றும் ,சூரியனுக்கு வெகு தொலைவில் 
 இருந்தாலும் தனக்கு கிடைக்கும் ஒளியின் அளவை இரண்டு மடக்காக வெளிப்படுத்தும் குருவை முதன்மை சுபகிரகம் என்றும் ,


 கதிரின் அடிப்படையில் குருவைவிட சுக்கரனுக்கு கதிரின்  அளவு அதிகம் என்றாலும் அந்த கிரகம் சூரியனுக்கு அருகில் இருந்து ஒளியை பெற்று வெளிப்படுத்துவதால்  இரண்டாவது சுப கிரகமாக கணக்கிடப்படுகிறது ,அந்த அடிப்படையில் புதன் மூன்றாவது சுபகிரகம் ஆவார் .அதாவது தீயோர் உடன் சேராத புதன் .

சந்திரனின் கதிர்  அளவு பதினாறு ஆகும் ,இருப்பினும் வேத ஜோதிடத்தில் வளர் பிறை சந்திரனை சுபர் என்றும் தேய்பிறை சந்திரனை கெட்டவர் என்றும் சொல்கின்றனர் காரணம் சந்திரன் ஆனவர் முழு நிலவாகி பின்னர் தேய்பிறை காலங்களில் தன்னுடைய ஒளியின் அளவை இழப்பதால் இவ்வாறு கணக்கிடப்படுகிறது . இந்த வரிசையில் சூரியனின் ஒளி அளவு அதாவது கதிரின் அளவு அதிகமாக இருந்தாலும் அரை சுபர் என்றே நம் முன்னோர் கணக்கிட்டு உள்ளனர் .

No comments:

Post a Comment