*விக்கிரமாதித்தன் கதைகள் - 34*
*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*
*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*
*வேதாளம் சொன்ன கதைகள்*
*முதல் கதை*
*பத்மாவதி கதை - 4*
"சங்கிராம வர்த்தனரை நன்றாகத் தெரியும். அவரது மகளுக்குச் செவிலித்தாயாக இருக்கிறேன்." என்றாள் பாட்டி.
புத்தி சரீரன் மகிழ்ந்தான். கிழவிக்குச் சில விலை உயர்ந்த பரிசுப் பொருள்கள் கொடுத்தான். கிழவியின் கண்கள் பேராசையால் விரிந்தன.
"பாட்டி, நீ ஓர் உதவி செய்ய வேண்டும். அதனை எங்கள் இருவருக்காக இரகசியமாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மேலும் பல பரிசுப் பொருள்கள் தருவேன்."
ஆசை யாரை விட்டது? கிழவி சம்மதித்தாள்.
"நீ சென்று பத்மாவதியிடம், 'அவள் சில நாள்களுக்கு முன்பு வனப்பகுதியில் உள்ள தடாகத்தில் கண்ட இளவரசன் அவளைப் பார்க்க வந்திருக்கிறான்' என்று சொல். அவள் சொன்ன பதிலை என்னிடம் கூறு.
கிழவி சரியென்று தந்தச் சிற்பி வீட்டுக்குச் சென்று பத்மாவதியைச் சந்தித்தாள். அவளிடம் இளவரசன் வந்திருக்கும் செய்தியை இரகசியமாயச் சொன்னாள், பத்மாவதி அந்தக் கிழவியிடம், "என்ன சொன்னாய்?" என்று கோபமாகக் கேட்டுவிட்டுக் காப்பூரத்தில் கைகளைத் தோய்த்தெடுத்துப் பத்து விரல்களும் கன்னத்தில் பதியுமாறு அடித்து விட்டாள்!
கிழவி வீட்டுக்குத் திரும்பியவுடன் அவர்களிடம் நடந்ததைச் சொல்லித் தன் கன்னத்தைக் காட்டினாள். வஜ்ரமகுடனுக்கு வருத்தமாகப் போய்விட்டது. ஒருவேளை அவள் என்னை விரும்புகிறாள் என்று நினைத்தது தவறோ?
புத்திசரீரன் கிழவியிடம் நடந்ததைக் கேட்டறிந்தவன், "நண்பா! கவலைப்படாதே. இப்போதும் அவள் குறியீடுகளால் சேதி சொல்லி அனுப்பியிருக்கிறாள்!”
"அப்படியா! என்ன செய்தி!?” என்றான் வஜ்ரமகுடன்.
"இப்போது நிலா இரவுகளில் ஒளிரும் காலம்! நடமாட்டத்தை எளிதில் அறிந்து விடுவார்கள். பத்து நாள்கள் கழியட்டும். அதுவரைப் பொறுமை காக்கவும். இதுதான் இச்செய்கைக்கு அர்த்தம்.”
இளவரசன்ஆறுதல் அடைந்தான். இருவரும் கிழவிக்கு மேலும் பொன்னும் பொருளும் கொடுத்து விதவிதமாகச் சமைக்கச் சொல்லி விருந்துண்டுப் பொழுதைப் போக்கினர்.
வஜ்ரமகுடன் கிழவியிடம் "இன்று பத்மாவதியிடம் சென்று நிலைமை எப்படி இருக்கிறது?” என்று விசாரி என்று சொன்னான். அவளும் காலையில் பத்மாவதி வீட்டுக்குச் சென்று விட்டு மாலையில் வந்துவிட்டாள்.
"பாட்டி என்ன ஆச்சு?"
"அதை ஏன் கேட்கிறீர்கள்? பத்து நாளைக்கு முன்னால் அவள் கன்னத்தில் அடித்ததை எண்ணி பயந்து ஒன்றும் பேசாமல் இருந்தேன். அவளே என்னிடம் பேச்சுக்கொடுத்து என்னை விஷயத்தைச் சொல்ல வைத்து, மூன்று விரல்களை மட்டும் சிவப்புக் குழம்பில் தோய்த்து எடுத்து என் மார்பில் அடித்து விட்டாள்.”
இளவரசன் மறுபடி குழப்பத்துடன் புத்திசரீரனைப் பார்த்தான்.
*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*
*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*
*வேதாளம் சொன்ன கதைகள்*
*முதல் கதை*
*பத்மாவதி கதை - 4*
"சங்கிராம வர்த்தனரை நன்றாகத் தெரியும். அவரது மகளுக்குச் செவிலித்தாயாக இருக்கிறேன்." என்றாள் பாட்டி.
புத்தி சரீரன் மகிழ்ந்தான். கிழவிக்குச் சில விலை உயர்ந்த பரிசுப் பொருள்கள் கொடுத்தான். கிழவியின் கண்கள் பேராசையால் விரிந்தன.
"பாட்டி, நீ ஓர் உதவி செய்ய வேண்டும். அதனை எங்கள் இருவருக்காக இரகசியமாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மேலும் பல பரிசுப் பொருள்கள் தருவேன்."
ஆசை யாரை விட்டது? கிழவி சம்மதித்தாள்.
"நீ சென்று பத்மாவதியிடம், 'அவள் சில நாள்களுக்கு முன்பு வனப்பகுதியில் உள்ள தடாகத்தில் கண்ட இளவரசன் அவளைப் பார்க்க வந்திருக்கிறான்' என்று சொல். அவள் சொன்ன பதிலை என்னிடம் கூறு.
கிழவி சரியென்று தந்தச் சிற்பி வீட்டுக்குச் சென்று பத்மாவதியைச் சந்தித்தாள். அவளிடம் இளவரசன் வந்திருக்கும் செய்தியை இரகசியமாயச் சொன்னாள், பத்மாவதி அந்தக் கிழவியிடம், "என்ன சொன்னாய்?" என்று கோபமாகக் கேட்டுவிட்டுக் காப்பூரத்தில் கைகளைத் தோய்த்தெடுத்துப் பத்து விரல்களும் கன்னத்தில் பதியுமாறு அடித்து விட்டாள்!
கிழவி வீட்டுக்குத் திரும்பியவுடன் அவர்களிடம் நடந்ததைச் சொல்லித் தன் கன்னத்தைக் காட்டினாள். வஜ்ரமகுடனுக்கு வருத்தமாகப் போய்விட்டது. ஒருவேளை அவள் என்னை விரும்புகிறாள் என்று நினைத்தது தவறோ?
புத்திசரீரன் கிழவியிடம் நடந்ததைக் கேட்டறிந்தவன், "நண்பா! கவலைப்படாதே. இப்போதும் அவள் குறியீடுகளால் சேதி சொல்லி அனுப்பியிருக்கிறாள்!”
"அப்படியா! என்ன செய்தி!?” என்றான் வஜ்ரமகுடன்.
"இப்போது நிலா இரவுகளில் ஒளிரும் காலம்! நடமாட்டத்தை எளிதில் அறிந்து விடுவார்கள். பத்து நாள்கள் கழியட்டும். அதுவரைப் பொறுமை காக்கவும். இதுதான் இச்செய்கைக்கு அர்த்தம்.”
இளவரசன்ஆறுதல் அடைந்தான். இருவரும் கிழவிக்கு மேலும் பொன்னும் பொருளும் கொடுத்து விதவிதமாகச் சமைக்கச் சொல்லி விருந்துண்டுப் பொழுதைப் போக்கினர்.
வஜ்ரமகுடன் கிழவியிடம் "இன்று பத்மாவதியிடம் சென்று நிலைமை எப்படி இருக்கிறது?” என்று விசாரி என்று சொன்னான். அவளும் காலையில் பத்மாவதி வீட்டுக்குச் சென்று விட்டு மாலையில் வந்துவிட்டாள்.
"பாட்டி என்ன ஆச்சு?"
"அதை ஏன் கேட்கிறீர்கள்? பத்து நாளைக்கு முன்னால் அவள் கன்னத்தில் அடித்ததை எண்ணி பயந்து ஒன்றும் பேசாமல் இருந்தேன். அவளே என்னிடம் பேச்சுக்கொடுத்து என்னை விஷயத்தைச் சொல்ல வைத்து, மூன்று விரல்களை மட்டும் சிவப்புக் குழம்பில் தோய்த்து எடுத்து என் மார்பில் அடித்து விட்டாள்.”
இளவரசன் மறுபடி குழப்பத்துடன் புத்திசரீரனைப் பார்த்தான்.
No comments:
Post a Comment