*விக்கிரமாதித்தன் கதைகள் - 35*
*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*
*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*
*வேதாளம் சொன்ன கதைகள்*
*முதல் கதை*
*பத்மாவதி கதை -5*
" வருத்தப்பட ஏதுமில்லை நண்பா! இன்னும் மூன்று நாள்களுக்கு வர வேண்டாம் என்று சொல்லி அனுப்பியிருக்கிறாள்.” என்றான் புத்திசரீரன்.
மூன்று நாள்கள் இளவரசன் வஜ்ரமகுடன் பொறுத்திருந்து கிழவியை மறுபடி அனுப்பி விசாரிக்கச் சொன்னான். கிழவியும் பத்மாவதியைச் சந்தித்தாள். பதிலொன்றும் சொல்லாமல் கிழவியைத் தன்னுடன் இருக்க வைத்தாள். மாலையில் கிழவி கிளம்பும் போது போகாதே, "வாசல் வழியாகப் போகாதே! மதயானை மிதித்து விடக் கூடும். பின்பக்கம் வழியாகப் போ!" என்று பத்மாவதி அவளை அழைத்துக் கொண்டு போய், மாடியிலிருந்து ஓர் இருக்கையில் அவளை அமரச் செய்தாள். யாரும் இல்லாத நேரத்தில் தமது வேலைக்காரிகள் மூலம் கயிறு கட்டி அந்த இருக்கையைத் தோட்டத்தில் மெதுவாக இறக்கவிடச் செய்தாள். கிழவியும் யாருமறியாமல் வீடு வந்து சேர்ந்தாள்.
நடந்தவற்றை இருவரிடமும் சொன்னாள். மறுபடி இளவரசன் குழம்பினான்.
புத்திசரீரன் நகைத்தான்.
“நண்பனே, வஜ்ரமகுடா! உன் எண்ணம் நிறைவேறப் போகிறது! இன்றிரவு இந்தக் கிழவி வந்த வழியே அந்த வீட்டிற்குள் செல்லலாம். வேறு மார்க்கத்தில் சென்றால் மதயானையை ஒத்த அரசருடைய வீரர்கள் கையில் சிக்க நேரிடும்.”
இளவரசன் வஜ்ரமகுடன் இரவு நேரத்தில் தோட்டத்தை அடைந்தான். கயிற்றுடன் இறக்கப்பட்ட இருக்கை அங்கே இருந்தது. அதில் ஏறி அமர்ந்ததும் வேலைக்காரப் பெண்கள் கயிற்றை இழுத்தனர்.
அங்கே ....
மாடியில் நிலவு வெளிச்சத்தில் ஒளிரும் பாவை விளக்கைப் போல பத்மாவதி அவன் வரவுக்காகக் காத்திருந்தாள். இருவரும் காந்தர்வ மணம் புரிந்து உல்லாசமாகப் பொழுதைக் கழித்தனர். தன் மனத்துக்கு உகந்தவளைக் கண்ட மகிழ்ச்சியில் வஜ்ரமகுடன் மேலும் சில நாள்கள் அவளுடன் தங்கினான்.
இரு நாள்கள் கழித்து அவளிடம், “ அன்பே என் நாட்டு அமைச்சர் மகன் புத்தி சரீரன் என்னுடன் வந்துள்ளான். அவனைப் போய்ப் பார்க்கவேண்டும். அவனில்லாவிட்டால் நான் உன்னைப் பார்த்திருக்கவே முடியாது.” என்றான்.
“ என்ன சொல்கிறீர்கள்? அவர் எவ்வகையில் எனக்கு உதவினார்?”
“அவன் தான் நீ விடுத்த புதிர்களையெல்லாம் அவிழ்த்து உன்னை எனக்குப் புரிய வைத்தான். அவனில்லாவிடில் நான் இல்லை!”
“இதை ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை? உங்கள் நண்பர் என்னுடைய சகோதரர் அல்லவா? அவருக்கு நான் மரியாதை கொடுத்துப் பணிதல் வேண்டும்!”
“சரி பத்மாவதி! நான் புறப்படுகிறேன்.” என்ற இளவரசன் வந்துவிட்டான்.
இங்கு வந்து நடந்ததையெல்லாம் சொன்னான்.
“இளவரசனே, நீ தவறு செய்துவிட்டாய்! நான் தான் உனக்கு உதவி செய்தேன் என்பதை நீ அவளிடம் சொல்லியிருக்கக் கூடாது!” என்றான் புத்தி சரீரன்.
மறுநாள் பத்மாவதியின் வீட்டு வேலைக்காரி அங்கு வந்தாள். கையோடு அமைச்சர் மகன் உண்பதற்காகத் தின்பண்டம் கொண்டுவந்திருந்தாள். கூடவே வெற்றிலை, பாக்கு, தாம்பூலம் ஆகியவற்றையும் சேர்த்து அமைச்சர் மகனுக்குப் பத்மாவதியின் காணிக்கை என்று சொன்னாள்.
இளவரசனிடம், “இளவரசே! பத்மாவதி உங்களுக்காகச் சாப்பிடாமல் காத்திருக்கிறாள். நீங்கள் சாப்பிட வாருங்கள். இங்கு சாப்பிடாதீர்கள்!” என்று கூறினாள்.
சென்றுவிட்டாள்.
அமைச்சர் மகன் புத்தி சரீரன், “நண்பா, ஒரு வேடிக்கை காட்டுகிறேன் பார்!” என்றான்.
பத்மாவதி கொடுத்த பலகாரத்திலிருந்து ஒன்றை எடுத்துத் தெருவிலிருந்த நாய்க்குப் போட்டான்.
அது உண்பதைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே செத்து விழுந்தது!
இன்னும் வரும்.....
*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*
*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*
*வேதாளம் சொன்ன கதைகள்*
*முதல் கதை*
*பத்மாவதி கதை -5*
" வருத்தப்பட ஏதுமில்லை நண்பா! இன்னும் மூன்று நாள்களுக்கு வர வேண்டாம் என்று சொல்லி அனுப்பியிருக்கிறாள்.” என்றான் புத்திசரீரன்.
மூன்று நாள்கள் இளவரசன் வஜ்ரமகுடன் பொறுத்திருந்து கிழவியை மறுபடி அனுப்பி விசாரிக்கச் சொன்னான். கிழவியும் பத்மாவதியைச் சந்தித்தாள். பதிலொன்றும் சொல்லாமல் கிழவியைத் தன்னுடன் இருக்க வைத்தாள். மாலையில் கிழவி கிளம்பும் போது போகாதே, "வாசல் வழியாகப் போகாதே! மதயானை மிதித்து விடக் கூடும். பின்பக்கம் வழியாகப் போ!" என்று பத்மாவதி அவளை அழைத்துக் கொண்டு போய், மாடியிலிருந்து ஓர் இருக்கையில் அவளை அமரச் செய்தாள். யாரும் இல்லாத நேரத்தில் தமது வேலைக்காரிகள் மூலம் கயிறு கட்டி அந்த இருக்கையைத் தோட்டத்தில் மெதுவாக இறக்கவிடச் செய்தாள். கிழவியும் யாருமறியாமல் வீடு வந்து சேர்ந்தாள்.
நடந்தவற்றை இருவரிடமும் சொன்னாள். மறுபடி இளவரசன் குழம்பினான்.
புத்திசரீரன் நகைத்தான்.
“நண்பனே, வஜ்ரமகுடா! உன் எண்ணம் நிறைவேறப் போகிறது! இன்றிரவு இந்தக் கிழவி வந்த வழியே அந்த வீட்டிற்குள் செல்லலாம். வேறு மார்க்கத்தில் சென்றால் மதயானையை ஒத்த அரசருடைய வீரர்கள் கையில் சிக்க நேரிடும்.”
இளவரசன் வஜ்ரமகுடன் இரவு நேரத்தில் தோட்டத்தை அடைந்தான். கயிற்றுடன் இறக்கப்பட்ட இருக்கை அங்கே இருந்தது. அதில் ஏறி அமர்ந்ததும் வேலைக்காரப் பெண்கள் கயிற்றை இழுத்தனர்.
அங்கே ....
மாடியில் நிலவு வெளிச்சத்தில் ஒளிரும் பாவை விளக்கைப் போல பத்மாவதி அவன் வரவுக்காகக் காத்திருந்தாள். இருவரும் காந்தர்வ மணம் புரிந்து உல்லாசமாகப் பொழுதைக் கழித்தனர். தன் மனத்துக்கு உகந்தவளைக் கண்ட மகிழ்ச்சியில் வஜ்ரமகுடன் மேலும் சில நாள்கள் அவளுடன் தங்கினான்.
இரு நாள்கள் கழித்து அவளிடம், “ அன்பே என் நாட்டு அமைச்சர் மகன் புத்தி சரீரன் என்னுடன் வந்துள்ளான். அவனைப் போய்ப் பார்க்கவேண்டும். அவனில்லாவிட்டால் நான் உன்னைப் பார்த்திருக்கவே முடியாது.” என்றான்.
“ என்ன சொல்கிறீர்கள்? அவர் எவ்வகையில் எனக்கு உதவினார்?”
“அவன் தான் நீ விடுத்த புதிர்களையெல்லாம் அவிழ்த்து உன்னை எனக்குப் புரிய வைத்தான். அவனில்லாவிடில் நான் இல்லை!”
“இதை ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை? உங்கள் நண்பர் என்னுடைய சகோதரர் அல்லவா? அவருக்கு நான் மரியாதை கொடுத்துப் பணிதல் வேண்டும்!”
“சரி பத்மாவதி! நான் புறப்படுகிறேன்.” என்ற இளவரசன் வந்துவிட்டான்.
இங்கு வந்து நடந்ததையெல்லாம் சொன்னான்.
“இளவரசனே, நீ தவறு செய்துவிட்டாய்! நான் தான் உனக்கு உதவி செய்தேன் என்பதை நீ அவளிடம் சொல்லியிருக்கக் கூடாது!” என்றான் புத்தி சரீரன்.
மறுநாள் பத்மாவதியின் வீட்டு வேலைக்காரி அங்கு வந்தாள். கையோடு அமைச்சர் மகன் உண்பதற்காகத் தின்பண்டம் கொண்டுவந்திருந்தாள். கூடவே வெற்றிலை, பாக்கு, தாம்பூலம் ஆகியவற்றையும் சேர்த்து அமைச்சர் மகனுக்குப் பத்மாவதியின் காணிக்கை என்று சொன்னாள்.
இளவரசனிடம், “இளவரசே! பத்மாவதி உங்களுக்காகச் சாப்பிடாமல் காத்திருக்கிறாள். நீங்கள் சாப்பிட வாருங்கள். இங்கு சாப்பிடாதீர்கள்!” என்று கூறினாள்.
சென்றுவிட்டாள்.
அமைச்சர் மகன் புத்தி சரீரன், “நண்பா, ஒரு வேடிக்கை காட்டுகிறேன் பார்!” என்றான்.
பத்மாவதி கொடுத்த பலகாரத்திலிருந்து ஒன்றை எடுத்துத் தெருவிலிருந்த நாய்க்குப் போட்டான்.
அது உண்பதைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே செத்து விழுந்தது!
இன்னும் வரும்.....
No comments:
Post a Comment