Saturday, February 22, 2020

கால பலம் 23/02/2020 ஞாயிறு


கால பலம்




சந்திரன், சனி, செவ்வாய் இரவில் பலமுடையவர்கள்.

 சூரியன், குரு, சுக்கிரன் பகலில் பலமுடையவர்கள்.

 புதனுக்கு பகல் இரவு இரண்டிலும் பலம் உண்டு.

பக்ஷ பலம்

சுக்ல பக்ஷத்தில் அதாவது வளர்பிறையில் வளர் பிறை சந்திரன்,குரு, சுக்கிரன், தனித்த புதன் அல்லது சுப கிரகங்களுடன் கூடிய புதன் ஆகியோருக்கு பலம் உண்டு.

கிருஷ்ண பக்ஷத்தில் அதாவது தேய் பிறையில் தேய்பிறை சந்திரன்,சனி, செவ்வாய், பாவிகளுடன் சேர்ந்த புதன் ஆகியோருக்கு பலம் உண்டு.

மொத்தத்தில் வளர்பிறையில் சுப கிரகங்களும் , தேய் பிறையில் பாப கிரகங்களும் பலம் பெறுகிறார்கள்.

எல்லோரும் இன்புற்று வாழ்க!
லோகாஸ் ஸமஸ்தான் சுகினோ பவந்து!

Thursday, February 20, 2020

இந்துக்காலக் கணக்கீடு
இந்த கணக்கு புரிகிறதா? பாருங்கள்.ஞ
இந்துக்காலக் கணக்கீடு:இந்துக் காலக் கணக்கு

ஒரு நாளில் இந்த பூமியில் பிறக்கும் உயிர்களின் எண்ணிக்கை மொத்தம் 21,600
ஒரு மனிதனின் ஒருநாள் சுவாச எண்ணிக்கை
21,600
21,600 x 200 43,20,000

ஒரு சதுர்யுகத்தின் இருநூறுவருடங்களை 80+60+40+20 எனப்பிரித்து நான்கு யுகங்களாக்கினர் நமது முன்னோர்கள்.அவை
கிருத யுகம், திரேத யுகம், துவாபர யுகம் ,கலியுகம் ஆகும்.
கிருத யுகம் 21,600 x 80 = 17,28,000 ஆண்டுகள்
திரேத யுகம் 21,600 x 60 =12,96,000 ஆண்டுகள்
துவாபரயுகம்21,600 x 40 = 8,64,000 ஆண்டுகள்
கலியுகம் 21,600 x 20 = 4,32,000 ஆண்டுகள்

ஆகமொத்தம் 43,20,000 ஆண்டுகள்
நான்கு யுகங்கள் சேர்ந்து ஒரு சதுர்(4)யுகம் ஆகும்.
1 சதுர்யுகம் என்பது 43,20,000 ஆண்டுகள்
71 சதுர்யுகம் என்பது 30,67,20,000 ஆண்டுகள்
1 மன்வந்திரம் என்பது 30,67,20,000 ஆண்டுகள்
994 சதுர்யுகங்கள் அல்லது 14 மன்வந்திரம்
என்பது 429,40,80,000 ஆண்டுகளாகும்.
2கல்பம் என்பது 14 மன்வந்திரம்(429,40,80,000ஆண்டுகள்)
2கல்பம் என்பது பிரம்மாவுக்கு ஒரு நாள் ஆகும்.
தற்போதையபிரம்மாவின் வயது 51 .

பாதகாதிபதி என்ன செய்வார்? 20/02/2020 வியாழன்

பாதகாதிபதி என்ன செய்வார்?
பாதகம் என்றால் மோசமானது. தீய பலன்கள் நடைமுறையில் இருக்கும்.
எல்லாம் எதிராகவே நடக்கும்.

உபய லக்னம்🎏  மிதுனம், கன்னி, தனுசு, மீனம் .

மிதுன லக்கினத்திற்கு பாதகாதிபதி குரு பகவான் .
கன்னி லக்கினத்திற்கு பாதகாதிபதி  குரு  பகவான்.
 தனுசு லக்கினத்திற்கு பாதகாதிபதி புதன்  பகவான்.
 மீனம்  லக்கினத்திற்கு பாதகாதிபதி புதன் பகவான்.
பாதகம் செய்யும் கிரகங்களின் திசை அல்லது புத்தி நடக்கும் போது கெடுதியான பலன்கள் நடைபெறுகிறது.
பாதகம் செய்யும் கிரகங்கள் மறைவு ஸ்தானமாகிய 6,8,12ஆம் இடங்களில் இருந்து திசை அல்லது புத்தி நடக்கும் போது நல்ல பலன்களை நடை பெறச்செய்யும்.
பாதகத்தைச் செய்யும் கிரகங்கள் நீசம் அடையும் போது நல்ல பலன்களை நடை பெறச்செய்யும்.

பாதகத்தை சாதகமாக்குவது எப்படி?
மிதுனம், கன்னி லக்கினத்தின் பாதகாதிபதி குரு பகவானின் திசை அல்லது புத்தி நடக்கும் போது திருச்செந்தூர் சென்று முருகனை வணங்கிவர நன்மையான பலன்கள் நடைபெறும்.

தனுசு, மீனம் லக்கினத்திற்கு பாதகாதிபதி புதன் பகவானின் திசை அல்லது புத்தி நடக்கும் போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்று வணங்கிவர
நன்மையான பலன்கள் நடைபெறும்.
                                                                                                                                     நன்றி .

Wednesday, February 19, 2020

சொந்த வீடு அமையும் யோகம் யாருக்கு அமையும்? 19/02/2020 புதன்

சொந்த வீடு அமையும் யோகம் யாருக்கு அமையும்?

திரிகோணாதிபதிகளின் பாவகத்தின் திசையில் 4-ஆம் பாவகத்தின்புக்தி அல்லது செவ்வாயின் புக்தி வரும்போது ஜாதகருக்கு சொந்தமாக வீடு அமையும்.

12ஆம் பாவகத்தில் சுக்கிரன் அமைவதும்,
4ஆம் பாவ அதிபதியாக சூரியன் வலுவாக அமைவதும் மாடி வீடு கட்டும் யோகம் ஏற்படும்.


சொந்த வீடு!  சொர்க்கபுரி!

Monday, February 17, 2020

குரு+ராகு சேர்க்கை 17/02/2020 திங்கள்

குரு+ராகு சேர்க்கை

ராகு எதையும் பெரிதாகக் காட்டிக் கொள்வது.
சவடால் பேர்வழி.
அலங்காரம், ஆடம்பரம், டாம்பீகம் இவற்றுக்கெல்லாம் காரணகர்த்தா ராகு.
லாகிரி மற்றும் போதை வஸ்துகள், மது,மாது, சூது.அத்தோடு அச்சூழலுக்கு அதீத கர்த்தா ஆவார்.
இவைகளுக்கு நேர் எதிரான வர் குரு.
தெளிவான சிந்தனை, பார்வை, சாந்த குணம், இதமான கனிவான பேச்சு, தெய்வீக, ஆன்மீக சிந்தனை, நற்செயல்கள்,வேத பாராயணம், ஆலய நிர்வாகம் போன்றவைக்கு குரு காரணம் ஆவார்.
 நல்லவர்களோடு நல்லவர் சேர்க்கை இருப்பின் நன்மையே விளையும்.★
மாறாக தீயவர் சேர்க்கை ஏற்படின் தீய பலனே விளையும்.

குரு ராகு சேர்க்கையில் குருபார்வை மங்கும். மிக நெருக்கமாக இருக்கையில் குருபார்வையை இருள் சூழ்ந்து விடுகின்றது. பின்னர் குரு பார்வையே பலனற்றதாகி விடுகிறது.

3.20° இடைவெளியில் இரண்டு கிரகங்களும் நெருங்கி இருக்கும் போது குரு பார்வையில் சுபத்துவம் அற்று போய் விடுகின்றது. இதனால் குருவின் 5,7,9ம் பார்வைகளால் பாதிப்புக்கள் உருவாகின்றது. இத்தகைய ஜாதகர்களுக்கு புத்திர தோஷம் கடுமையாக இருக்கும்.

6.40° இடைவெளியில் நெருங்கி இருக்கும் போது ஜாதகர் போலி நியாயம் பேசுபவராகவும் கல்வியில் தடைகளையும் கண் பார்வையில் மந்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

10° இடைவெளியிலான நெருக்கம் ஜாதகரின் முயற்சிகளை முடக்கி விடுகின்றது. எடுத்த காரியத்தில் தடையாக அமைவது.

நன்றி.

Saturday, February 15, 2020

நன்மை, தீமை 19/02/2020 ஞாயிறு

நன்மையும், தீமையும் நடப்பது நான்கில்!

நன்மையை வேண்டுவோர் நான்கை கேளீர்
நல்லதை அறியும் ஞானம் வேண்டும்
அறிந்ததை அடையும் மாறா ஆசைவேண்டும்
அடைந்திட முயற்சியோ அவசியம் வேண்டும்
முயல்கையில் சோதனையைக் கடக்க வேண்டும்
சோதனையைக் கடந்ததும் சொர்க்கமே தோன்றுமே!


தீங்கை தவிர்க்க நான்கை கவனி!
தீமையை காணும் ஞானம் தவறில்லை
கண்டதை விரும்பும் ஆசை தவறாம்
தவறை தவறியும் செய்திடாத் திறனே
தீங்கில்லா வாழ்விற்கு துணையாம் கேளீர்!

நலம். நலம் அறிய ஆவல் என்பதே நான்கையே சாரும்.
நலம் பெறுவோம்!
வளம் அடைவோம்!💐💐💐🤝

Tuesday, February 11, 2020

பாதகாதிபதி

பாதகாதிபதி ஒரு லக்னத்திற்கு என்ன செய்வார்?
ரிஷப லக்னத்தை எடுத்துக்கொள்வோம். ரிஷப லக்னத்திற்கு பதகாதிபதி 9க்குடைய சனி.
ரிஷப லக்னம் ஸ்திர லக்னமாகும்.அனைத்து ஸ்திர லக்னத்திற்கும்  9க்குடையவன் பாதகாதிபதியாவர்.
9க்குடைய ஸ்தானம் தந்தையை குறிக்கும். பாதகாதிபதியாக இங்கு தந்தை ஸ்தானத்தை பெற்ற சனி எப்படி செயல்படுவார்? என்றால் ரிஷப லக்ன ஜாதகருக்கு தந்தையால் எந்தவித நன்மையையும் ஜாதகர் பெற முடியாது.
பொதுவாகவே இவர்கள் தந்தை இருந்தும் இல்லாதவர்கள் அதாவது கூட இருந்தாலும் பிரயோஜனமில்லை  அல்லது தந்தையை பிரிந்து வாழ்வார்கள் அல்லது சிறுவயதிலேயே தந்தையை இழந்து விடுவார்கள்.
பொதுவாக வேத ஜோதிடத்தில் கிரகங்களின் பார்வைக்கு பலன் உண்டு,அன்பதை நாம் அனைவரும் அறிவோம் .


 .இயற்கை சுப கிரகங்களின் ஒளி இயற்கை பாவகிரகங்கள் மேல் படும் பொழுது சுப கிரகத்தின் ஒளியின் அளவை பொறுத்து அதன் பார்வையை பெரும் அசுப கிரகங்கள் தன்னுடைய குணத்தை அதாவது பாவத்தன்மையை குறைத்துக்கொள்ளும் .

உதாரணமாக உங்கள் தெருவில் ஒரு பாட்டுக்கச்சேரி நடக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது அந்த பகுதியின் யாருக்கும் கட்டுப்பாடாத ஒரு ரவுடி அந்த விழாவில் பங்கெடுக்கும் பொழுது அவனுடைய சேஷ்டைகள் மற்றவர்களுக்கு பீதியை கிளப்பும் காரணம் அவனின் சேட்டைகளை யாரும் கட்டுப்படுத்த முடியாது ,அவன் யார் அருகில் செல்கிறானோ அவர்கள் மெதுவாக அந்த இடத்தை விட்டு வேறு இடம் நோக்கி செல்வர் .

அதே விழாவில் அந்த ஊரின் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அந்த விழாவில்  கலந்துகொண்டார் என்றால் குறிப்பிட்ட ரவுடி தன்னுடைய குணத்தை மாற்றிக்கொண்டு ஒரு ஓரத்தில் அமைதியாக தான் இருக்கும் இடம் தெரியாமல் நடந்துகொள்வான் ,இப்படித்தான் பாவகிரகங்கள் மீது சுப கிரக பார்வை  படும் பொழது தன்னுடைய குணத்தை முற்றிலும் வெளிப்படுத்த முடியாமல் அடக்கி வாசிக்கும் .


இயற்கை பாவகிரகங்கள் சுப கிரகத்துடன்இணையும்  பொழது பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல தன்னுடைய பாவத்தன்மையை மாற்றி அந்த கிரகத்தின் காரகங்களில் நல்ல காரகங்களை வெளிப்படுத்தும் .உதாரணமாக லக்னத்திற்கு பத்தில் செவ்வாய் வலிமையுடன் இருந்து  குருவுடன் செவ்வாய் சேரும் பொழுது அந்த செவ்வாயின் மூர்க்க குணம் மாறி அதனின் நற் காரகத்துவமான நிலம், அராசங்க பணியில் காவலர் உத்தியோகம் ,ரியல் எஸ்டேட் தொழில் இப்படி நல்ல காரகத்துவங்களை வழங்கிவிடும் ,

மாறாக தனித்த  செவ்வாய் வலிமையுடன் இருந்து லக்கனத்திற்கு பத்தில் எந்த இயற்கை  சுபரின் பார்வையும் படாமல் சேர்க்கையும் இல்லாமல்  இருந்தால் .அந்த செவ்வாய் அந்த ஜாதகனுக்கு மூர்க்க குணத்தை கொடுத்து பிரபல ரௌடியாகவோ அல்லது   மட்டன் ஸ்டால் போன்றவற்றிலாவது ரத்தம் பார்க்கக்கூடியவனாக மாறிடுவான் .
நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் சிறு விளக்கத்தை கொடுத்தேன் .   

இந்த வேத ஜோதிடத்தில் கிரகங்களின் பார்வைக்கு பலன் உண்டு என்பதை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் . நவக்கிரகங்களில் ராகு கேது தவிர ஏனைய கிரகங்களுக்கும் ஒளியின் கதிர் அளவினை நம் முன்னோர் கொடுத்துள்ளனர் .அதனை கொண்டு இந்து லக்னம் போன்றவைகள் கணக்கிடப்படுகின்றன .

சூரியனின் கதிர் எண்ணிக்கை முப்பது என்றும் அதற்க்கு அடுத்துள்ள புதனுக்கு எட்டு என்றும் அதற்க்கு அடுத்துள்ள சுக்ரனுக்கு பனிரெண்டு என்றும் செவ்வாய்க்கு ஆறு என்றும் குருவுக்கு பத்து என்றும் சனிக்கு ஓன்று என்றும் கதிரின் அளவை நம் முன்னோர் கணக்கிட்டு உள்ளனர் .


இந்த ஒளியின் அளவைகொண்டே அவை பாவகிரகங்கள் என்றும் சுப கிரகங்கள் என்றும் சொல்கின்றனர். மிக குறைந்த ஒளி அளவை கொண்ட சனியை  முழு பாபர் என்றும் ,அதற்க்கு அடுத்த நிலையில் உள்ள செவ்வாயை முக்கால் பாபர் என்றும் ,சூரியனுக்கு வெகு தொலைவில் 
 இருந்தாலும் தனக்கு கிடைக்கும் ஒளியின் அளவை இரண்டு மடக்காக வெளிப்படுத்தும் குருவை முதன்மை சுபகிரகம் என்றும் ,


 கதிரின் அடிப்படையில் குருவைவிட சுக்கரனுக்கு கதிரின்  அளவு அதிகம் என்றாலும் அந்த கிரகம் சூரியனுக்கு அருகில் இருந்து ஒளியை பெற்று வெளிப்படுத்துவதால்  இரண்டாவது சுப கிரகமாக கணக்கிடப்படுகிறது ,அந்த அடிப்படையில் புதன் மூன்றாவது சுபகிரகம் ஆவார் .அதாவது தீயோர் உடன் சேராத புதன் .

சந்திரனின் கதிர்  அளவு பதினாறு ஆகும் ,இருப்பினும் வேத ஜோதிடத்தில் வளர் பிறை சந்திரனை சுபர் என்றும் தேய்பிறை சந்திரனை கெட்டவர் என்றும் சொல்கின்றனர் காரணம் சந்திரன் ஆனவர் முழு நிலவாகி பின்னர் தேய்பிறை காலங்களில் தன்னுடைய ஒளியின் அளவை இழப்பதால் இவ்வாறு கணக்கிடப்படுகிறது . இந்த வரிசையில் சூரியனின் ஒளி அளவு அதாவது கதிரின் அளவு அதிகமாக இருந்தாலும் அரை சுபர் என்றே நம் முன்னோர் கணக்கிட்டு உள்ளனர் .

Friday, February 7, 2020

07/02/2020 வெள்ளி விக்கிரமாதித்தன் கதைகள் -35

*விக்கிரமாதித்தன் கதைகள் - 35*

*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*

*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*

*வேதாளம் சொன்ன கதைகள்*

*முதல் கதை*

*பத்மாவதி கதை -5*

" வருத்தப்பட ஏதுமில்லை நண்பா! இன்னும் மூன்று நாள்களுக்கு வர வேண்டாம் என்று சொல்லி அனுப்பியிருக்கிறாள்.” என்றான் புத்திசரீரன்.

மூன்று நாள்கள் இளவரசன் வஜ்ரமகுடன் பொறுத்திருந்து கிழவியை மறுபடி அனுப்பி விசாரிக்கச் சொன்னான். கிழவியும் பத்மாவதியைச் சந்தித்தாள். பதிலொன்றும்  சொல்லாமல் கிழவியைத் தன்னுடன் இருக்க வைத்தாள். மாலையில் கிழவி கிளம்பும் போது போகாதே, "வாசல் வழியாகப் போகாதே! மதயானை மிதித்து விடக் கூடும். பின்பக்கம் வழியாகப் போ!" என்று பத்மாவதி அவளை அழைத்துக் கொண்டு போய், மாடியிலிருந்து ஓர் இருக்கையில் அவளை அமரச் செய்தாள். யாரும் இல்லாத நேரத்தில் தமது வேலைக்காரிகள் மூலம் கயிறு கட்டி  அந்த இருக்கையைத் தோட்டத்தில் மெதுவாக இறக்கவிடச் செய்தாள். கிழவியும் யாருமறியாமல் வீடு வந்து சேர்ந்தாள்.

நடந்தவற்றை இருவரிடமும் சொன்னாள். மறுபடி இளவரசன் குழம்பினான்.

புத்திசரீரன்  நகைத்தான்.
“நண்பனே, வஜ்ரமகுடா!  உன் எண்ணம் நிறைவேறப் போகிறது! இன்றிரவு இந்தக் கிழவி வந்த வழியே அந்த வீட்டிற்குள் செல்லலாம். வேறு மார்க்கத்தில் சென்றால் மதயானையை ஒத்த அரசருடைய வீரர்கள் கையில் சிக்க நேரிடும்.”

இளவரசன் வஜ்ரமகுடன் இரவு நேரத்தில்  தோட்டத்தை அடைந்தான். கயிற்றுடன் இறக்கப்பட்ட இருக்கை அங்கே இருந்தது. அதில் ஏறி அமர்ந்ததும் வேலைக்காரப் பெண்கள் கயிற்றை இழுத்தனர்.

அங்கே ....

மாடியில் நிலவு வெளிச்சத்தில் ஒளிரும் பாவை விளக்கைப் போல பத்மாவதி அவன் வரவுக்காகக் காத்திருந்தாள். இருவரும் காந்தர்வ மணம் புரிந்து உல்லாசமாகப் பொழுதைக் கழித்தனர். தன் மனத்துக்கு உகந்தவளைக் கண்ட மகிழ்ச்சியில் வஜ்ரமகுடன் மேலும் சில நாள்கள் அவளுடன் தங்கினான்.

இரு நாள்கள் கழித்து அவளிடம், “ அன்பே என் நாட்டு அமைச்சர் மகன் புத்தி சரீரன் என்னுடன் வந்துள்ளான். அவனைப் போய்ப் பார்க்கவேண்டும். அவனில்லாவிட்டால் நான் உன்னைப் பார்த்திருக்கவே முடியாது.” என்றான்.

“ என்ன சொல்கிறீர்கள்? அவர் எவ்வகையில் எனக்கு உதவினார்?”

“அவன் தான் நீ விடுத்த புதிர்களையெல்லாம் அவிழ்த்து  உன்னை எனக்குப் புரிய வைத்தான். அவனில்லாவிடில் நான் இல்லை!”

“இதை ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை? உங்கள் நண்பர் என்னுடைய சகோதரர் அல்லவா? அவருக்கு நான் மரியாதை கொடுத்துப் பணிதல் வேண்டும்!”

“சரி பத்மாவதி! நான் புறப்படுகிறேன்.” என்ற இளவரசன் வந்துவிட்டான்.

இங்கு வந்து நடந்ததையெல்லாம் சொன்னான்.

“இளவரசனே, நீ தவறு செய்துவிட்டாய்! நான் தான் உனக்கு உதவி செய்தேன் என்பதை நீ அவளிடம் சொல்லியிருக்கக் கூடாது!” என்றான் புத்தி சரீரன்.

மறுநாள் பத்மாவதியின் வீட்டு வேலைக்காரி அங்கு வந்தாள். கையோடு அமைச்சர் மகன் உண்பதற்காகத் தின்பண்டம் கொண்டுவந்திருந்தாள். கூடவே வெற்றிலை, பாக்கு, தாம்பூலம் ஆகியவற்றையும் சேர்த்து அமைச்சர் மகனுக்குப் பத்மாவதியின் காணிக்கை என்று சொன்னாள்.

இளவரசனிடம், “இளவரசே! பத்மாவதி உங்களுக்காகச் சாப்பிடாமல் காத்திருக்கிறாள். நீங்கள் சாப்பிட வாருங்கள். இங்கு சாப்பிடாதீர்கள்!” என்று கூறினாள்.

சென்றுவிட்டாள்.

அமைச்சர் மகன் புத்தி சரீரன், “நண்பா, ஒரு வேடிக்கை காட்டுகிறேன் பார்!” என்றான்.

பத்மாவதி கொடுத்த பலகாரத்திலிருந்து ஒன்றை எடுத்துத் தெருவிலிருந்த நாய்க்குப் போட்டான்.

அது உண்பதைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே செத்து விழுந்தது!


இன்னும் வரும்.....

Sunday, February 2, 2020

3/02/2020 திங்கள்

*விக்கிரமாதித்தன் கதைகள் - 34*

*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*

*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*

*வேதாளம் சொன்ன கதைகள்*

*முதல் கதை*

*பத்மாவதி கதை - 4*

"சங்கிராம வர்த்தனரை நன்றாகத் தெரியும். அவரது மகளுக்குச் செவிலித்தாயாக இருக்கிறேன்." என்றாள் பாட்டி.

புத்தி சரீரன் மகிழ்ந்தான். கிழவிக்குச் சில விலை உயர்ந்த பரிசுப் பொருள்கள் கொடுத்தான். கிழவியின் கண்கள் பேராசையால் விரிந்தன.

"பாட்டி, நீ ஓர் உதவி செய்ய வேண்டும். அதனை எங்கள் இருவருக்காக இரகசியமாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மேலும் பல பரிசுப் பொருள்கள் தருவேன்."

ஆசை யாரை விட்டது? கிழவி சம்மதித்தாள்.

"நீ சென்று பத்மாவதியிடம், 'அவள் சில நாள்களுக்கு முன்பு வனப்பகுதியில் உள்ள தடாகத்தில் கண்ட இளவரசன் அவளைப் பார்க்க வந்திருக்கிறான்' என்று சொல். அவள் சொன்ன பதிலை என்னிடம் கூறு.

கிழவி சரியென்று தந்தச் சிற்பி வீட்டுக்குச் சென்று பத்மாவதியைச் சந்தித்தாள். அவளிடம் இளவரசன் வந்திருக்கும் செய்தியை இரகசியமாயச் சொன்னாள், பத்மாவதி அந்தக் கிழவியிடம், "என்ன சொன்னாய்?" என்று கோபமாகக் கேட்டுவிட்டுக் காப்பூரத்தில் கைகளைத் தோய்த்தெடுத்துப் பத்து விரல்களும் கன்னத்தில் பதியுமாறு அடித்து விட்டாள்!

கிழவி வீட்டுக்குத் திரும்பியவுடன் அவர்களிடம் நடந்ததைச் சொல்லித் தன் கன்னத்தைக் காட்டினாள். வஜ்ரமகுடனுக்கு வருத்தமாகப் போய்விட்டது. ஒருவேளை அவள் என்னை விரும்புகிறாள் என்று நினைத்தது தவறோ?

புத்திசரீரன் கிழவியிடம் நடந்ததைக் கேட்டறிந்தவன், "நண்பா! கவலைப்படாதே. இப்போதும் அவள் குறியீடுகளால் சேதி சொல்லி அனுப்பியிருக்கிறாள்!”

"அப்படியா! என்ன செய்தி!?” என்றான் வஜ்ரமகுடன்.

"இப்போது நிலா இரவுகளில் ஒளிரும் காலம்! நடமாட்டத்தை எளிதில் அறிந்து விடுவார்கள். பத்து நாள்கள் கழியட்டும். அதுவரைப் பொறுமை காக்கவும். இதுதான் இச்செய்கைக்கு அர்த்தம்.”

இளவரசன்ஆறுதல் அடைந்தான். இருவரும் கிழவிக்கு மேலும் பொன்னும் பொருளும் கொடுத்து விதவிதமாகச் சமைக்கச் சொல்லி விருந்துண்டுப் பொழுதைப் போக்கினர்.

வஜ்ரமகுடன் கிழவியிடம் "இன்று பத்மாவதியிடம் சென்று  நிலைமை எப்படி இருக்கிறது?” என்று விசாரி என்று சொன்னான். அவளும் காலையில் பத்மாவதி வீட்டுக்குச் சென்று விட்டு மாலையில் வந்துவிட்டாள்.

"பாட்டி என்ன ஆச்சு?"

"அதை ஏன் கேட்கிறீர்கள்? பத்து நாளைக்கு முன்னால் அவள் கன்னத்தில் அடித்ததை எண்ணி பயந்து ஒன்றும் பேசாமல் இருந்தேன். அவளே என்னிடம் பேச்சுக்கொடுத்து என்னை விஷயத்தைச் சொல்ல வைத்து, மூன்று விரல்களை மட்டும் சிவப்புக் குழம்பில் தோய்த்து எடுத்து என் மார்பில் அடித்து விட்டாள்.”

இளவரசன் மறுபடி குழப்பத்துடன் புத்திசரீரனைப் பார்த்தான்.