கால பலம்
சந்திரன், சனி, செவ்வாய் இரவில் பலமுடையவர்கள்.
சூரியன், குரு, சுக்கிரன் பகலில் பலமுடையவர்கள்.
புதனுக்கு பகல் இரவு இரண்டிலும் பலம் உண்டு.
பக்ஷ பலம்
சுக்ல பக்ஷத்தில் அதாவது வளர்பிறையில் வளர் பிறை சந்திரன்,குரு, சுக்கிரன், தனித்த புதன் அல்லது சுப கிரகங்களுடன் கூடிய புதன் ஆகியோருக்கு பலம் உண்டு.
கிருஷ்ண பக்ஷத்தில் அதாவது தேய் பிறையில் தேய்பிறை சந்திரன்,சனி, செவ்வாய், பாவிகளுடன் சேர்ந்த புதன் ஆகியோருக்கு பலம் உண்டு.
மொத்தத்தில் வளர்பிறையில் சுப கிரகங்களும் , தேய் பிறையில் பாப கிரகங்களும் பலம் பெறுகிறார்கள்.
எல்லோரும் இன்புற்று வாழ்க!
லோகாஸ் ஸமஸ்தான் சுகினோ பவந்து!