வணக்கம் நண்பர்களே
இன்றைய தினம் குழந்தை பாக்கியம் தொடர்பான விவரங்களையும் மேலும் புத்திர பாக்கியம் கிடைப்பதற்கு உண்டான பரிகாரம் என்னவென்றும் எழுத உள்ளேன் .
நம்முடைய கலாச்சாரம் மிக உன்னதமானது .அதில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைப்பாடு மிக உன்னதமான ஓன்று .ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை மாறி ஒருவன் மற்றொரு திருமணம் செய்வதற்கு காரணியாக இருந்தது என்னவென்று பார்த்தால் குழந்தை இன்மையே ஆகும் .
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்ற பின்னர் இரு குடும்பத்தாரும் தம்பதிகளிடம் இருந்து எதிர்பார்ப்பது குழந்தை செல்வமே ஆகும் .
தாங்கள் எதிர் நோக்கும் குழந்தை செல்வம் இல்லாமல் போகும் பொழுது இரு குடும்பத்தாருக்கும் இடையே சின்ன மனவருத்தம் ஏற்படும் .
அதன் பின்னர் இரு தரப்பினரும் குழந்தை பாக்கியம் கிடைக்கவேண்டி கோவில் குளம் என சுற்ற ஆரம்பிப்பார்கள் .ஒரு கால கட்டத்திற்கு பின்னர் இருவரில் யாருக்கு குறை என அறிய முற்பட்டு மருத்துவரிடம் செல்வர் .
தம்பதிகள் இருவரில் ஆணுக்கு குறைபாடு இருந்தால் பெரிய அளவில் மண வாழ்வில் பிரச்சனை இல்லாமலும் அதே நேரம் பெண்ணிற்கு குழந்தை பெரும் தகுதி இல்லை எனில் அவளின் மண வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் .
ஆமாம் பெண்ணிற்கு குழந்தை பெரும் தகுதி இல்லை என தெரிந்த பின்னர் அந்த ஆணின் குடும்பம் தனது மகனுக்கு மறுமணம் புரிய முற்படுகின்றனர் ஏனெனில் தங்களுக்கு வாரிசு அவசியம் என்ற அடிப்படையில் இரண்டாம் திருமணம் என்னும் புதிய கலச்சாரம் நம் பண்பாட்டை உடைத்து புதிதாக உள்ளே வந்தது .
ஒரு நபருக்கு குழந்தை பெரும் தகுதி இல்லை என்பதை திருமணத் திற்கு முன்னரே தெரிந்து கொள்ள முடியாதா என்று நீங்கள் கேட்பீர்களே ஆனால் நிச்சயம் திருமணத்திற்கு முன்னரே அறிந்து கொள்ளும் வாய்ப்பினை நம் முன்னோர்கள் உருவாக்கி உள்ளனர் .
மகத்துவம் வாய்ந்த அதி உன்னத கலையான ஜோதிட கலையின் வாயிலாக திருமண பொருத்தம் பார்க்கும் பொழுதே தெரிந்து கொள்ளலாம் .
திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது புத்திர பேரு தொடர்புடைய மகேந்திர பொருத்தத்தை பார்க்கவேண்டும் .அந்த பொருத்தம் இல்லை என்றால் கூட , உங்கள் ஜாதகத்தில் அயிந்தாம் பாவகம் வலிமையாக இருந்தால் நன்மையே .
அயிந்தாம் பாவகம் வலுவிழக்க க்கூடாது .அயிந்தாம் பாவகத்தின் இரு புறமும் அசுபகிரகங்கள் இருக்ககூடாது .
அயிந்தாம் பாவக அதிபர் லக்கணத்திற்கு ஆறு ,எட்டு ,பனிரெண்டில் மறைவு பெறக்கூடாது .
அதே போல் அயிந்தாம் பாவக அதிபர் நீசம் ,அஷ்தங்கம் அடையக்கூடாது . அயிந்தாம் பாவக அதிபதியுடன் பாவ கிரகங்கள் சேர்க்கை இல்லாமல் இருப்பது நல்லதே .
அயிந்தாம் பாவகத்தின் மேல் சனி பகவான் பார்வை இல்லாமல் இருக்க நன்மையே .
அயிந்தாம் பாவகத்தை பாதகாதிபதி, அட்டமாதிபதி , ரோகாதிபதி ,விரயாதிபதி ஆகியோரின் பார்வை இல்லாமல் இருப்பது நல்லது . அதே போல்
பாதகாதிபதி, அட்டமாதிபதி , ரோகாதிபதி போன்றவர்களின் சேர்க்கை இல்லாமல் இருப்பது நலம் .
இவற்றை எல்லாம் தாண்டி புத்திர பாக்கியத்தை அருளக்கூடிய புத்திரகாரகன் குரு அஷ்தங்கம் , நீசம் அடையாமல் இருக்கவேண்டும் .
குழந்தை பாக்கியத்தை தரக்கூடிய அயிந்தாம் பாவகமும் ,குரு பகவானும் நல்லநிலையில் இருக்க வேண்டும்.
ஆண் பெண் இருவருக்கும் சுக்ரன் நல்ல நிலையில் இருக்கவேண்டும் காரணம் சுக்ரனே சுக்லம் என்னும் விந்தணுக்களுக்கு காரகர் ஆவார் .
சூரியன் அருகில் சென்று சுக்ரன் அஷ்தங்கம் அடைந்தால் , உயிர் அனுக்கலான விந்தணுக்களை சுடு தண்ணீரில் கொட்டியதற்கு சமம் .
சுடு நீரில் விழும் சுக்லம் என்னவாகும் பின் எப்படி குழந்தை செல்வம் கிடைக்கும் . கணவன் மனைவி இருவரில் ஜாதகத்தில் ஒருவருக்கு சிறிய குறைபாடும் மற்றொருவருக்கு புத்திர பாக்கியம் உடைய அமைப்பு இருந்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உண்டு .
சுக்ரனும் ,செவ்வாயும் , நல்ல நிலை இருந்தாலே குழந்தை பாக்கியம் கிடைக்கும் .
5-ஆம் இடத்தில் பாவ கிரகங்கள் (
ராகு, செவ்வாய், சனி) அல்லது சூரியன் அமர்ந்தால், ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது.
5-ஆம் இடத்தில் உள்ள பாவக்கிரகங்களை,சுபகிரகங்கள் பார்த்தால் (ஒவ்வொரு லக்னத்திற்கும் சுபக் கிரகங்கள் வேறுபடும்) குழந்தை பாக்கியம் கிடைக்கும். 5-ஆம் இடத்திற்கு உரிய கிரகம், பாவக் கிரகங் களுடன் சேர்ந்தாலும் புத்திர தோஷம் ஏற்படும்.5-க்கு உரியகிரகம், 8-இல் மறைந்திருந்தாலும் தோஷம் ஏற்படும்.
லக்கினத்திற்கு 5-க்கு உரிய கிரகம், லக்னத்திற்கு 3-இல் இருந்தால் சந்தான தோசம் உண்டாகும். 5-க்கு உரிய கிரகம் 6,7,8-இல் 4 இருந்தாலும் புத்திர தோஷம் உண்டு.12-இல் இருந்தால் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்படும். சுருக்கமாகச் சொன்னால், 5-க்கு உரியவன் 3,6,7,8,12- இல் இருந்தால், புத்திரதோஷம் ஏற்படும்.
புத்திர பாக்கியம் கிடைக்க இருவரின் உடல் அமைப்பிலும் குழந்தை பெரும் தகுதி இருக்க வேண்டும் .
நிலமும் விதையும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே விளைச்சல் எடுக்க முடியும் .
பரிகாரம் :
பரிகாரம் செய்வதற்கு முன்னர் அதாவது முதல் நாள் பரிகாரத்திற்கு தேவையான .மஞ்சள் நிறத்தில் ஒரு துண்டு , மஞ்சள் கிழங்கு ஓன்று . லட்டு அயிந்து ,பாயாசம் மற்றும் பூஜைக்கு தேவையான அடிப்படை பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும் .
புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிகள் வியாழக்கிழமை அன்று அதிகாலை எழுந்து தட்சனாமூர்த்தி திருஉருவ படத்தில் கண்விழித்து அதன் பின்னர் நீராடி வியாழக்கிழமை காலை ஆறு முதல் ஏழு மணிக்குள் அதாவது குரு ஓரையில் தம்பதிகள் இருவரும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் அதாவது அந்த பெரியவர்கள் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க உங்கள் மீது அக்கறை உள்ளவராக இருக்க வேண்டும் .
தனிக்குடும்பமாக இருந்தால் அருகில் வசிக்கக் கூடிய அதாவது உங்கள் மீது அக்கறை உடைய வயதில் மூத்தவர்களிடம் மஞ்சள் கிழங்கை கொடுத்து அதை அவர்கள் வலது கையில் வைத்து இடது கையால் மூடி உங்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்க இறைவனிடம் வேண்டி அவர்கள் கொடுக்கும் மஞ்சள் கிழங்கை வாங்கும் முன்னர்
,மேற்படி தம்பதிகள் இருவரும் அந்த மூத்தவர்கள் கால்களில் விழுந்து ஆசி பெற வேண்டும் .அதன் பின்னர் ,அந்த மஞ்சள் கிழங்கை பூஜை அறையில் வைக்கும் முன்னர் ஏற்கனவே வாங்கிய மஞ்சள் துண்டில் ஒரு பகுதியை தேவையான அளவிற்கு கிழித்து அந்த மஞ்சள் கிழங்கிற்கு ஆடை போல் சுற்ற வேண்டும் . இங்கு மஞ்சள் கிழங்கு தான் புத்திரகாரகன் குரு பகவான் ஆவார் , ஆடை சாற்றிய பின்னர் சுத்தமான இடத்தில் பூஜை அறையில் வைக்க வேண்டும் ,அதன் பின்னர் மஞ்சள் கிழங்கை தொடக்கூடாது .
சாமிக்கு வாங்கிய பூஜை பொருட்களை கொண்டு பூஜை முடித்த பின்னர் .நிவேதனமான லட்டு ,,பாயசம் போன்றவைகளை தம்பதிகள் இருவரும் சாப்பிட வேண்டும் .நூற்றி எட்டு கொண்டை கடலையை நிவேதனமாக படைக்க வேண்டும்.
இது போல் பதினாறு வாரம் தொடர்ந்து செய்து வர வேண்டும் . அடுத்த வாரம் மூத்தவர்கள் தேவை இல்லை தம்பதிகளே சுவாமியை வழிபடலாம். ஆனால் நிவேதனம் அவசியம் . பதினாறாவது வாரம் முடிந்த பின்னர் மேற்படி மஞ்சள் கிழங்கை அதாவது முதல் வாரம் வைத்த மஞ்சள் கிழங்கை எடுத்து மஞ்சள் துணியில் சுற்றி நிற்கும் நீர் நிலைகளில் விட்டு விடவேண்டும் . .
மேலும் யானைக்கு ஒரு நேர உணவை தானமாக கொடுக்க வேண்டும் .
முடித்தால் குழந்தை இல்லாத பெண்ணே தனது கையால் பதினாறு லட்டுக்களை பிடித்து அருகில் உள்ள தட்சினாமூர்த்தி மூர்த்தி ஆலயத்திற்கு இரவு எட்டு முதல் ஒன்பது மணிக்குள் சென்று உங்கள் கையால் பிடித்த லட்டுக்களை சுவாமிக்கு
நிவேதனமாக வைத்து ,அதன் பின்னர் அந்த பதினாறு லட்டுக்களை பதினாறு நபர்களுக்கு கொடுக்க வேண்டும் . மேற்படி பாரிகரங்களை தொடர்ந்து முழு நம்பிக்கையுடன் செய்து வர குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் .
புத்திர பாக்கியம் உங்களுக்கு உண்டா என அருகில் உள்ள ஜோதிடரிடம் உங்கள் இருவரின் ஜாதகத்தையும் கொடுத்து நன்கு பரிசோதித்து மேலும் சில பரிகாரம் செய்ய பலன் கிடைக்கும் .
No comments:
Post a Comment