Monday, January 18, 2021

எதிரும் புதிரும் 18/01/2021 திங்கட்கிழமை

 *எதிரும் புதிரும்*


குரு சுக்கிரன்..!* 

ஜோதிடத்தில் இந்த இருவரும் முழு சுபர்கள்.


 *ஒருவர் தேவகுரு* .

 *மற்றவர் அசுரகுரு.* 


குரு ஆன்மீகத்திற்கு வழிகாட்டி.

சுக்கிரன்  லௌகீக வாழ்வுக்கு வழிகாட்டி.


இருவருமே ஆசான்கள் அதாவது இருவரும் குரு எனும் போதிக்கும் ஸ்தானத்தில் உள்ளவர்கள்,


 ஒருவர் பொருளை  கடக்க போதனை செய்வார், இன்னொருவர் பொருளை அனுபவித்து அதில் மோட்சம் எய்த போதிப்பார், ஒருவர் தேவ குரு இன்னொருவர் அசுர குரு,


 தேவகுருவின் குணம் சாத்வீகம், இன்னொருவரின் குணம் குரூரம், 


ஒருவர் மேன்மை எனும் மேல் நிலையை அடைய வழிகாட்டி, இன்னொருவர் வாழ்க்கை எனும் ஆசா பாசத்தில் சிக்குண்டு சுழல காரணகர்த்தா, 

பொருள் பற்றால் மோட்சம் கெடும் என்கிறார் தேவ குரு.

பொருள் ஆசை அனுபவித்து கடந்தாலே மோட்சம் என்கிறார் அசுர குரு.

உன்னுள் எழும் ஆற்றல் விந்தணுக்கள் அதை குண்டலினியில் மேல் நோக்கி எடுத்து சென்று ஞானம் எனும் மோட்சமடைய வழிகாட்டுவார் தேவ குரு, அதே விந்தணுவை வாழ்க்கைத் துணையின் மீது பிரயோகித்து உடல் ஆசையை கடக்க வழிகாட்டுவார் அசுர குரு,


 ஆக மொத்தத்தில் இருவரும் மனிதனுக்கு வழிகாட்டிகளே. ஆனால் பாதைகள் வெவ்வேறு.


சரி இவ்விருவரின் செயல்பாடு மற்றும் பொது குணாதிசயங்களை பார்ப்போம்..!


தேவ குரு ஒழுக்கம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவைகளே உன்னை உயர்த்தும் என்பார்., 

அசுர குரு பிறப்பது அனுபவிக்க, உனக்கு வேண்டியதை நீதான் முயற்சித்து பெற வேண்டும், கேட்டுப்பார் தரவில்லையா தட்டி பறி ஏனெனில் உன் இன்பம் உன் கையில் வாழு உன் இஷ்டம் போல் வாழு இங்கே எவனும் நல்லவனில்லை என்பார், பொதுவாகவே இவ்விருவரும் மிக அத்தியாவசியமான காரகங்களை கொண்ட கிரகங்கள் ஆவார்கள்.


 ஒருவரின் தெய்வீக நிலைக்கும், லௌகிக அனுபவத்துக்கும் இருவரும் காரணகர்த்தா, ஆனால் ஒருவரை பின்பற்றினால் இன்னொருவரை பின்பற்ற இயலாது என்பதே இங்கே கவனிக்க வேண்டியது, ஏனெனில் இவ்விருவரும் வழிகாட்டிகளே. ஆனால் பாதை வெவ்வேறு.

ஒருவர் மேன்மையில் மோட்சம் என்கிறார். இன்னொருவர் அனுபவித்து கடப்பதே மோட்சம் என்கிறார். 


ஆனால் இவ்விருவரின் கருத்துக்களும் உண்மையே என்பதே ஆச்சரியமான விஷயமாகும். ஏனெனில் இருவரும் குருமார்கள் அல்லவா! என்னதான் சுக்கிராச்சாரியார் அனுபவித்து கடப்பதே மோட்சம் என்றாலும், அனுபவங்களில் உயரிய உச்ச அனுபவம் காமம். அதை காலபுருஷ தத்துவத்தில் 12ல் அயன சயன ஸ்தானத்தில் உச்சம் பெற்று அனுபவிக்க சுக்கிரன் அங்கே உச்சம் பெற்றாலும், அந்த வீட்டின் அதிபதி தேவ குருவே.

 ஆக பொருளாசை/உடலாசை அதில் அனுபவம்.


இவைகள் பூர்வபுண்ணியம் எனும் தேவ குருவிடம் மட்டுமே உள்ளது. அதனால் தான் நிம்மதியான உறக்கம் அமைய புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்றனர் முன்னோர்கள். 


செல்வங்களில் குழந்தை செல்வமே மேலான செல்வம் அதை சுக்கிரன் எனும் சுக்கிலகாரகனே தருகிறான் என்றாலும், அதிலும் 5ம் வீட்டின் காரகாதிபதி என்கிற நிலையை பெற்று பூர்வ புண்ணிய பலனால் மட்டுமே உன்னால் அந்த செல்வத்தை அடைய இயலும் என்பதை குருவே நிர்ணயம் செய்கிறார் அல்லவா., காலபுருஷனின் 2ம் வீடு ரிஷபம்.அங்கு வாக்கு/நிலையான வருமானம்/குடும்பம் இவைகளை குறிக்கும் சுக்கிரனின் சொந்த வீடு, ஆனால் அதன் காரகாதிபதி குருவே.

 ஆக அங்கேயும் தேவ குரு எனும் பூர்வபுண்ணியம் அவசியம் தானே, 


என்ன டிசைன் இது?

.தேவ குரு உலகியல் ஆசையை துறக்க பூர்வபுண்ணிய பலனை தருவாரா? இல்லை அனுபவிக்கவும் தருவாரா?, கேள்வி எழுகிறது தானே. இங்கே தான் உள்ளது சூட்சுமம்.

 நன்றாக கவனியுங்கள் நீங்கள் செய்யும் பாவமும் சரி/புண்ணியமும் சரி உங்கள் பூர்வபுண்ணிய பலனே!, 

எது புண்ணிய பலனா? அல்லது பாவ பலனா?, இல்லை.

 *பாவ பலனை சனி* *தருவார்,* 

 *புண்ணிய பலன்களை* *மட்டுமே தேவ குரு* *அருள்வார்* 


, அப்போ 2ல் பல்வேறு வழியில் நீதிக்கு புறம்பாக பணம் ஈட்டுவது/தவறாக பேசுவது இவைகளை புண்ணிய பலனா தருகிறது?, 

ஆமாம் சந்தேகமே வேண்டாம்.

ஏனெனில் குரு காரகாதிபதி என்றாலும் அந்த வீட்டின் அதிபதி அசுர குரு சுக்கிராச்சாரியார்.

 அவரின் பணி மனிதனை லௌகீக அனுபவங்களில் மூழ்க செய்து, அதை அனுபவிக்க செய்து கர்மம் சேர்க்க வைப்பது, இவ்வளவு ஏன்?.  காலபுருஷனின் 9ம் வீடு  தேவ குருவின் தனுசு வீடு மற்றும்  பாக்யஸ்தானம் .அதில் சுக்கிரனின் நட்சத்திரம் உண்டல்லவா.! அதன் பொருள் என்ன?, அந்த ஸ்தானம் சேமிப்பு ஸ்தானம் எதை சேமிக்க?

 பணம் எனும் சேமிப்பு.


 அப்போது அங்கே சுக்கிரனின் நட்சத்திரம் நின்ற காரணம்?, 


அசுர குரு இவர் இருந்தால் தானே தவறாக மற்றவரின் செல்வத்தை மனிதன் சேர்த்து அனுபவிப்பான்( Swiss Bank Account) அதையே பாக்கிய பலன் என்பார்.

 இதனால் தான் *பணம் கர்மா* என்கிறோம், பணத்தை வைத்து இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுக்கும் போது பாக்யஸ்தானம் வலுப் பெறும்.

 அதாவது தேவ குரு பூர்வபுண்ணிய கணக்கில் சேர்ப்பார், 

அதே பணத்தை  இன்னொருவனிடம் இருந்து பறிக்கும் போது பாக்யஸ்தானம் வலுக் குறையும், 


அதாவது அசுர குரு கர்மம் சேர்க்க வைக்கிறார். இதை கேது குறித்து கொள்வார், ஏனெனில் ஜாதகருக்கு என்ன தெரியும் 9ல் உள்ள கேதுவின் நட்சத்திரம் அப்பாவையும் முன்வினை பயனையும் குறிக்கிறது என்பதை அவர் மறக்க வேண்டாமா? அப்போது தானே மறுபிறப்பு, இவன் பாட்டுக்கு 9ல் உள்ள சூரியனின் நட்சத்திரத்தை பிடித்து ஆன்மீக ஏற்றம் கண்டால் தேவ குரு அல்லவா வென்று விடுவார்!

 பின்னர் ஏது அடுத்த பிறவி?

, ஒன்றை நினைவில் வையுங்கள். பணத்தால் கர்மம் சேர்க்கவும் இயலும்., கழிக்கவும் இயலும். அதன் வழி சனி காட்டுவார்,


 அப்போ 12ல் உள்ள தேவ குரு நட்சத்திரம் மற்றும் சனி/புதனின் நட்சத்திரம் என்ன செய்யும்? 

என்ன செய்யும் புதனின் புத்தியை மழுங்கடித்து அதில் ஏறி நின்று தானே அசுர குரு உச்சம் 29 டிகிரி பெறுகிறார்.

குருவின் நட்சத்திரத்தில் நின்றால் லௌகிக ஆசை குறையும்.

அதுவே சனி நட்சத்திரமானால் அவரே கர்மாவின் படி அசுர குரு அல்லது தேவ குரு இரண்டில் ஒருவருக்கு ஜாதகரை அனுப்பிவிடுவார்.


 *ஒன்றை இங்கே நீங்கள் எல்லோரும் கவனிக்க வேண்டும்.* 


 குழந்தை எனும் கரு உருவாவது அயன/சயனம் எனும் போகத்தில்.அங்கே நிற்பது 3 விதமான நட்சத்திரம்.

 ஒன்று பூர்வபுண்ணியம், இன்னொன்று கர்மா, அடுத்தது புத்தி இவைகளின் செயல்பாடு அனைத்துமே தேவ குரு வீட்டில். 

அதாவது பூர்வபுண்ணியத்தில் உள்ளது, ஆனால் அதை பிரித்து தருவது சனி எனும் கர்மகாரகனே.


 ஆகவே குழந்தை பாக்கியம் பற்றி அறிய சுக்கிரன்/செவ்வாய்/குரு மட்டும் ஆராய்ந்தால் போதாது. சனியையும் சேர்த்தே ஆராய வேண்டும் என்பதை இங்கே அழுத்தமாக பதிவு செய்கிறேன்.

அது சரி அசுர குரு மோட்சம் கொடுப்பார் என்றீர்களே கொஞ்சம் அதை பற்றி  நீங்கள் கேட்பது புரிகிறது, அது வேறொன்றுமில்லை நன்றாக பொருள் காரகங்களை அனுபவிக்க வைத்து அதன் வழியே கர்மத்தை சேர்த்து அடுத்த பிரவிக்கான Birth Seat ஐ உறுதிபடுத்துவார், அப்போது தானே மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க இயலும்.


 இதில் வேடிக்கை அசுர குரு ராகுவுடன் கூட்டணி வைப்பார், தேவ குரு கேதுவுடன் கூட்டணி வைப்பார். இவர்கள் இருவரின் இடையே மாட்டிக்கொண்ட நாம் யாருடன் கூட்டணி வைப்பது கடவுளை தவிர.!?, இந்த பதிவை படிப்பவருக்கு ஒரு சந்தேகம் எழலாம். அதாவது அசுர குரு தேவ குரு இருவரும் மறைமுக கூட்டணி போல் உள்ளதே?!,


 அவ்வளவு தாங்க புரிஞ்சா சரி, 

சந்திப்போம் அதுவரை சிந்திப்போம்...!

No comments:

Post a Comment