Sunday, January 24, 2021

நீர்ப்பிரசன்னம் 25/01/2021 திங்கட்கிழமை


 இன்றைய பிரசன்னம்  25/01/2021திங்கட்கிழமை        

            நீர்ப்பிரசன்னம்

ஸ்ரீமால் சிந்தை கூரியன்             

பிரசன்ன ஜோதிடர் 

ஜாமக்கோள் பிரசன்னத்தில் 

உதயம் ஆருடம் கவிப்பு என்ற மூன்று ஹீரோக்கள் உள்ளனர்.

இவர்கள்தான் கேள்விக்கான பதிலை எடுத்து உரைப்பவர்கள். ஜாம கிரகங்கள் 8 ஜோதிடத்தில் உள்ள நவ கோள்களில் ராகு கேதுவை ஒன்றாக இணைத்து பாம்பு என பிரசன்னத்தில் அழைப்பர்.

மற்ற ஏழு கிரகங்களும் ஜாமக்கோள் பிரசன்னத்தில் பாம்பைப் போலவே இடமிருந்து வலமாக சுற்றி வருவர். இங்கு நீர்ப்பிரசன்னம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேள்வி: * எனது தோட்டத்தில் போர் போட உள்ளேன். தண்ணீர் கிடைக்குமா?

பதில்:  .

மீனம் உதயம். உதயத்தை நோக்கி சந்திரன் வருதல்.. நீர் உறுதியாகக் கிடைக்கும்

4ஆம் பாவத்தில், 

காரக கிரகம்  மற்றும் சந்திரன் கவிப்பில் இல்லாமல் இருப்பதால் நீர் உறுதியாகக் கிடைக்கும்.

நன்றி, 

ஸ்ரீமால் சிந்தை கூரியன்

Saturday, January 23, 2021

ஸ்ரீமத் பாகவதம். 24/01/2021 ஞாயிற்றுக்கிழமை


 ஸ்ரீமத் பாகவதம் - 1

அறிமுகம் (1) – எது ஆனந்தம்?

‘அனைவரும் ஆனந்தமாக இருக்க வேண்டும்; துன்பம் அத்தனையும் அகல வேண்டும்; இன்பம் பெருக வேண்டும்’ – இது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். நம் ஒவ்வொருவருக்கும் விருப்பும், வெறுப்பும் வேறுபடும். அது அந்தந்த மனிதனைப் பொறுத்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் விருப்பும், வெறுப்பும் வேறுபட்டாலும், அனைவருக்கும் விருப்பமெல்லாம் நிறைவேற வேண்டும்; வெறுப்பானவை எல்லாம் ஒழிந்துவிட வேண்டும் என்பதில் மட்டும் சந்தேகம் இருக்க முடியாது.

நாம் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதற்கு என்ன செய்ய வேண்டும்? துன்பம் எல்லாம் விலகுவதற்கு எப்படி வழி தேடுவது? ஆனந்தமானதை நினைத்தோமானால், ஆனந்தப்படுகிறோம். துன்பமயமானதை நினைத்தால், துன்பப்படுவோம். ஒரு பொருளினுடைய வாசம் நம் மூக்கை வந்து அடைகிறது. காற்றுதான் அந்தப் பொருளின் மணத்தை கிரஹித்து, நம்மிடத்தில் கொண்டு வரும். பொருள், மணமுள்ள பொருளாக இருந்தால், நல்ல மணம் மூக்கை வந்து அடையும். பொருள், துர்நாற்றம் உடைய பொருளாக இருந்தால், துர்நாற்றம்தான் மூக்கை வந்து அடையும். அப்போது, காற்றிலோ, மூக்கிலோ ஏதும் இல்லை. எந்தப் பொருளிலிருந்து வாசம் வருகிறதோ, அந்தப் பொருளைப் பொறுத்துதான், இந்த மணமோ, துர்நாற்றமோ நம்மை வந்து அடையும்.

இந்த உதாரணத்திலிருந்து நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனந்தமானதைப் பற்றி நினைத்தோமானால், நாமும் இன்பப்படுவோம். துன்பமயமானதை நினைத்தோமானால், நமக்கும் துன்பமே மிஞ்சும். உலகத்தில் எது ஆனந்தமானது? எதைப் பற்றி நாம் யோசித்துப் பார்த்தாலும், அதில் ஏதோ ஒரு விதத்தில் துன்பம் கலந்திருக்கிறது. நிலையற்ற தன்மை கலந்திருக்கிறது. அப்போது, நிலையான இன்பம் பெற வேண்டுமானால், நிலையுள்ள ஒரு பொருளை, ஆனந்தமான பொருளை, அதாவது பரப்ரஹ்மத்தை நினைக்க வேண்டும். பரப்ரஹ்மமே பகவான்!

“ஆனந்தம் ப்ரஹ்ம்மேதி வ்யஜானாத்”

– என்று உபநிஷத்துக்கள் கூறுகின்றன. ப்ரஹ்மத்தை ஆனந்த வடிவானது என்று தெரிந்து கொள். இதை யார் ஒருவன் தெரிந்து கொள்கிறானோ, அவன் மீளாத இன்பத்தை இவ்வுலகத்திலும் அடைகிறான்; அவ்வுலகத்திலும் பெறுகிறான்.

இவ்வுலகத்தில் சாந்தி; அவ்வுலகத்தை அடைவதற்கு உண்டான உறுதி. இதை நமக்கு ப்ரஹ்மம்தான் கொடுக்க முடியும். ஆனால், அந்த ப்ரஹ்மத்தை அறிவதற்கு வழி என்ன? அறிந்தால் அன்றோ நினைக்க...? நினைத்தால் அன்றோ இன்பப்பட...?

எந்த ஒரு பொருளையும் அறிவதற்கு மூன்று ப்ரமாணங்கள் உள்ளன. ப்ரமாணம் என்று சொன்னால், ப்ரமா கரணம் – ப்ரமாணம். ப்ரமா என்றால் புத்தி; அறிவு. கரணம் என்றால் கருவி.

ப்ரமாகரணம் என்றால், நல்ல அறிவையும், உண்மையான அறிவையும் கொடுக்கக் கூடிய கருவி. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால், Tool for authentic knowledge. உண்மையான அறிவுக்கு ஒரு கருவியே ப்ரமாணம்.

உலகில் மூன்று வகைப்பட்ட ப்ரமாணங்கள் உண்டு. (1) ப்ரத்யக்ஷம், நாம் கண்ணால் நேரே பார்த்து அறிவு பெறுவது; காதால் கேட்டு அறிவு பெறுவது; மூக்கால் முகர்ந்து அறிவு பெறுவது; நாக்கால் சுவைத்து அறிவு பெறுவது; கையால் தொட்டு அறிவு பெறுவது – இது அனைத்தும் ப்ரத்யக்ஷம்.

அடுத்தது, அனுமானம். நேரே காண முடியாவிட்டாலும், ஒரு மலைக்கு மேலே புகை இருந்தால், உள்ளுக்குள்ளே நெருப்பு இருக்க வேண்டும் என்று அனுமானம் செய்து அறிந்து கொள்கிறோம். இது இரண்டாவது வகைக் கருவி.

ஆனால், பகவான், கண்ணுக்கும் புலப்படப் போவதில்லை, அவனை அனுமானித்தும் தெரிந்து கொள்ள இயலாது. அப்போது, ப்ரஹ்மத்தை அறிவதற்கு ப்ரமாணம்தான் எது? சப்தம்...!

அதாவது வேதங்களே ப்ரமாணங்கள். வேதத்தைக் கொண்டே இறைவனை இன்னாரென்றும், இப்படிப்பட்டவன் என்றும் நாம் தெரிந்து கொள்ள இயலும். இனி அந்த வேதங்களின் சிறப்பைப் பார்ப்போம்.

வேதங்கள் அனந்த கோடி காலமாக, அநாதி காலமாக உள்ளவை; இன்ன தேதியில் வந்தவை என்று குறிப்பிட்டு சொல்ல முடியாதவை. ஒரு மனிதனுடைய வாயால் அவை பேசப்பட்டவையே அல்ல.

வேதங்கள் அநாதியானதாலும், ஒரு மனிதனோ, தேவனோ யாரும் இயற்றாததாலும், அது குற்றமே இல்லாததாக இருக்கும்.

நாம் ஒரு எழுத்து எழுதினாலோ, வாயால் பேசினாலோ நமக்கு இருக்கும் அறிவின் அளவுக்குத்தான் அந்தக் கட்டுரையோ, பேச்சோ இருக்கும். நம் திறமையால் அந்தப் பேச்சு கட்டுப்படுகிறது, குறைபடுகிறது. ஆனால் வேதங்களை யாரும் சொல்லாதபடியாலும், ஒரு தேதி குறிப்பிடப்படாதபடியாலும் – அவை அனைத்துமே குற்றமே இல்லாதவை.

குற்றம் இல்லாத வேதங்கள்தான் பகவானை நமக்குக் காட்டும். கண்ணன், கீதையில் கூறுகிறார்:

வேதைஸ்ச ஸர்வை: அஹமேவ வேத்ய: வேதாந்தக்ருத் வேதவிதேவ சாஹம்

– ‘அனைத்து வேதங்களாலும் நானே கூறப்படுகிறேன். வேதங்கள் ஒன்றே என்னைக் கூறும் வல்லமை படைத்தவை...’என்று கூறுகிறார்.

வேதங்களை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். முன் பகுதி பூர்வ பாகம். அதைக் கர்ம பாகம் என்று சொல்வார்கள். பின் பகுதி உத்தர பாகம். அதை ப்ரஹ்ம பாகம் என்று சொல்வார்கள். முன் பகுதி வேதம்; பின் பகுதி வேதாந்தம். வேதாந்தத்தைத்தான் ‘உபநிஷத்துக்கள்’ என்று கூறுகிறோம்.

இந்த இரண்டினாலும் என்ன விஷயம் கூறப்படுகிறது? வேதங்கள் எல்லாம் நாம் செய்யும் கர்மங்களைப் பற்றிச் சொல்லும். பூஜை, சந்தியாவந்தனம், தர்ப்பணம், சிராத்தம், அக்னி ஹோத்ரம், ஔபாஸனம் – இது முதலான எத்தனையோ கர்மங்களைச் செய்கிறோம். இதையெல்லாம் எப்படிச் செய்ய வேண்டும் என்று வேதம் கூறும்.

அது போதுமா? இந்த கர்மங்களால் எவன் பூஜிக்கப்படுகிறானோ, அந்த ப்ரஹ்மத்தைப் பற்றியும், அவன் அருமை, பெருமை, குணங்கள், பண்புகள், சேஷ்டிதங்கள், அவனுடைய சிறப்புகள் – இவை அனைத்தையும் சொல்ல வந்தவைதான் வேதாந்தம். அதாவது, உபநிஷத்துக்கள்.

வேதமும், வேதாந்தமும் சேர்த்து, ஒன்று பூஜை முறையையும், மற்றொன்று பூஜிக்கப்படும் பகவானைப் பற்றியும் சொல்லும். ஆனால், வேதங்களை மட்டும் படித்தோ, வேதாந்தத்தை மட்டும் படித்தோ நாம் பொருளின் எல்லையைக் கண்டுவிட முடியாது.

இதிஹாஸ புராணாப்யாம்

வேதம் ஸமுபப்ரும்ஹயேத்

பிபேதி அல்பச்ருதாத் வேத:

மாமயம் ப்ரதரிஷ்யதி

இது ஒரு புராண ச்லோகம். வேதமே இப்படி நினைக்குமாம் –

‘நம்மை மட்டும் ஒருவன் படித்தால், அவனால் உண்மை அறிவு பெற முடியாதே! நம் கூடவே இருக்கும் இதிஹாஸ, புராணங்களையும் படித்தால்தான் நம் பொருளை சரிவரத் தெரிந்து கொள்ள முடியும்!’

வேதங்களுக்கு உப ப்ரும்ஹணங்கள் என்று சில உயர்ந்த கிரந்தங்கள், ப்ரமாணங்கள் உண்டு. Supplementary text அல்லதுAncillary study என்று சொல்வது போலத்தான் இதிஹாஸங்களும், புராணங்களும்.

வேதத்தினுடைய கருத்து என்பது Theory படிப்பது போலாகும். ஆனால், இதிஹாஸ, புராணங்களைப் பற்றி படித்தோமானால், அது Practical session. வெறுமனே வேதத்தைப் படித்து மட்டும் பொருள் தெரிந்து கொள்ள இயலாது. இதிஹாஸ, புராணங்களின் உதவி கொண்டே வேதம், வேதாந்தத்தின் பொருள் அறிய முடியும்.

‘இதிஹாஸ, புராணங்கள் என்னத்துக்குப் பிரயோஜனம்? அவற்றால் நமக்கு என்ன லாபம்?’ என்று சிலருக்குத் தோன்றலாம்.

இதிஹாஸங்கள் இரண்டு. புராணங்கள் பதினெட்டு.

இரண்டு இதிஹாஸங்களும் அனைவரும் அறிந்ததே. ஒன்று, மஹாபாரதம். மற்றொன்று ராமாயணம்.

அதே போல் புராணங்கள் பதினெட்டு. இதிஹாஸங்கள், புராணங்கள் பகவானுடைய பிறப்பு, வளர்ப்பு, அவன் செய்த திருவிளையாடல்கள், அவன் தர்மத்தை நிலைநிறுத்த எடுத்துக் கொண்ட முயற்சிகள், நாம் செய்ய வேண்டிய பக்தி, நாம சங்கீர்த்தனம் – இப்படி பல விஷயங்களைப் பற்றியும் கூறும்.

(தொடரும்)


Friday, January 22, 2021

23/01, 9:13 am] : *ஜாமக்கோள் பிரசன்னம்*


 [

[*இன்றைய பிரசன்னம்*  23/01/2021 சனிக்கிழமை


  *தொழில்  பிரசன்னம்*                                          

ஜாமக்கோள் பிரசன்னத்தில் 

உதயம் ஆருடம் கவிப்பு என்ற மூன்று ஹீரோக்கள் உள்ளனர்.

இவர்கள்தான் கேள்விக்கான பதிலை எடுத்து உரைப்பவர்கள்.

ஜாம கிரகங்கள் 8 ஜோதிடத்தில் உள்ள நவ கோள்களில் ராகு கேதுவை ஒன்றாக இணைத்து *பாம்பு* என பிரசன்னத்தில் அழைப்பர்.

மற்ற ஏழு கிரகங்களும் ஜாமக்கோள் பிரசன்னத்தில் பாம்பைப் போலவே இடமிருந்து வலமாக சுற்றி வருவர். இங்கு   தொழில்பிரசன்னம் குறிப்பிடப்பட்டுள்ளது.


கேள்வி: *சொந்த தொழில் செய்யலாமா?* 

பதில்:

 இந்த பிரசன்னத்தில் தொழில் காரகர் சனி. அவர் 10மிடத்தில் உச்சம். எனவே சொந்தமாக தொழில் செய்யலாம்.

உதயத்தில், 

10ஆம் பாவத்தில், 

காரக கிரகம், மற்றும் சனி கவிப்பில் இல்லாமல் இருந்தால் அவர் சொந்தமாகத் தொழில் செய்யலாம்.

நன்றி

ஸ்ரீமால் சிந்தைகூரியன்

பிரசன்ன ஜோதிடர்

Thursday, January 21, 2021

குழந்தை செல்வம் 22/01/2021 வெள்ளிக்கிழமை

 வணக்கம் நண்பர்களே  


இன்றைய தினம் குழந்தை பாக்கியம் தொடர்பான விவரங்களையும் மேலும் புத்திர பாக்கியம்  கிடைப்பதற்கு உண்டான பரிகாரம் என்னவென்றும் எழுத  உள்ளேன் .


நம்முடைய கலாச்சாரம்  மிக உன்னதமானது .அதில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைப்பாடு மிக உன்னதமான ஓன்று .ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை மாறி ஒருவன் மற்றொரு திருமணம் செய்வதற்கு காரணியாக இருந்தது என்னவென்று பார்த்தால் குழந்தை இன்மையே ஆகும் .


ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்ற பின்னர் இரு குடும்பத்தாரும் தம்பதிகளிடம் இருந்து எதிர்பார்ப்பது குழந்தை செல்வமே ஆகும் .


 தாங்கள் எதிர் நோக்கும் குழந்தை செல்வம் இல்லாமல் போகும் பொழுது இரு குடும்பத்தாருக்கும் இடையே சின்ன மனவருத்தம் ஏற்படும் . 


அதன் பின்னர் இரு தரப்பினரும் குழந்தை பாக்கியம் கிடைக்கவேண்டி கோவில் குளம் என சுற்ற ஆரம்பிப்பார்கள் .ஒரு கால கட்டத்திற்கு பின்னர் இருவரில் யாருக்கு குறை என அறிய முற்பட்டு மருத்துவரிடம் செல்வர் .


தம்பதிகள் இருவரில் ஆணுக்கு குறைபாடு இருந்தால் பெரிய அளவில் மண வாழ்வில் பிரச்சனை இல்லாமலும் அதே நேரம் பெண்ணிற்கு குழந்தை பெரும் தகுதி இல்லை எனில் அவளின் மண வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் .


ஆமாம் பெண்ணிற்கு குழந்தை பெரும் தகுதி இல்லை என தெரிந்த பின்னர் அந்த ஆணின் குடும்பம் தனது மகனுக்கு மறுமணம் புரிய முற்படுகின்றனர் ஏனெனில் தங்களுக்கு வாரிசு அவசியம் என்ற அடிப்படையில் இரண்டாம் திருமணம் என்னும் புதிய கலச்சாரம் நம் பண்பாட்டை உடைத்து புதிதாக உள்ளே வந்தது .


ஒரு நபருக்கு குழந்தை பெரும் தகுதி இல்லை என்பதை திருமணத் திற்கு முன்னரே தெரிந்து கொள்ள முடியாதா என்று நீங்கள் கேட்பீர்களே ஆனால் நிச்சயம் திருமணத்திற்கு முன்னரே அறிந்து கொள்ளும் வாய்ப்பினை நம் முன்னோர்கள் உருவாக்கி உள்ளனர் .


மகத்துவம் வாய்ந்த அதி உன்னத கலையான ஜோதிட கலையின் வாயிலாக திருமண பொருத்தம் பார்க்கும் பொழுதே தெரிந்து கொள்ளலாம் .


திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது புத்திர பேரு தொடர்புடைய மகேந்திர பொருத்தத்தை பார்க்கவேண்டும் .அந்த பொருத்தம் இல்லை என்றால் கூட , உங்கள் ஜாதகத்தில் அயிந்தாம் பாவகம் வலிமையாக இருந்தால் நன்மையே .


அயிந்தாம் பாவகம் வலுவிழக்க க்கூடாது .அயிந்தாம் பாவகத்தின் இரு புறமும் அசுபகிரகங்கள் இருக்ககூடாது .


அயிந்தாம் பாவக அதிபர் லக்கணத்திற்கு ஆறு ,எட்டு ,பனிரெண்டில் மறைவு பெறக்கூடாது . 


அதே போல் அயிந்தாம் பாவக அதிபர் நீசம் ,அஷ்தங்கம் அடையக்கூடாது . அயிந்தாம் பாவக அதிபதியுடன் பாவ கிரகங்கள் சேர்க்கை இல்லாமல் இருப்பது நல்லதே .


 அயிந்தாம் பாவகத்தின் மேல் சனி பகவான்  பார்வை இல்லாமல் இருக்க நன்மையே .

அயிந்தாம் பாவகத்தை பாதகாதிபதி, அட்டமாதிபதி ,  ரோகாதிபதி ,விரயாதிபதி ஆகியோரின் பார்வை இல்லாமல் இருப்பது நல்லது . அதே போல் 


பாதகாதிபதி, அட்டமாதிபதி ,  ரோகாதிபதி போன்றவர்களின் சேர்க்கை இல்லாமல் இருப்பது நலம் .


இவற்றை எல்லாம் தாண்டி புத்திர பாக்கியத்தை அருளக்கூடிய புத்திரகாரகன் குரு  அஷ்தங்கம் , நீசம் அடையாமல் இருக்கவேண்டும் .


குழந்தை பாக்கியத்தை தரக்கூடிய அயிந்தாம் பாவகமும் ,குரு பகவானும் நல்லநிலையில் இருக்க வேண்டும்.


ஆண் பெண் இருவருக்கும் சுக்ரன் நல்ல நிலையில் இருக்கவேண்டும் காரணம் சுக்ரனே சுக்லம் என்னும் விந்தணுக்களுக்கு காரகர் ஆவார் . 


 சூரியன் அருகில் சென்று சுக்ரன் அஷ்தங்கம் அடைந்தால்  , உயிர் அனுக்கலான விந்தணுக்களை சுடு தண்ணீரில் கொட்டியதற்கு சமம் .


 சுடு நீரில் விழும் சுக்லம் என்னவாகும் பின் எப்படி குழந்தை செல்வம்  கிடைக்கும் . கணவன் மனைவி இருவரில் ஜாதகத்தில்  ஒருவருக்கு சிறிய குறைபாடும் மற்றொருவருக்கு புத்திர பாக்கியம் உடைய அமைப்பு இருந்தாலும் குழந்தை பாக்கியம்  கிடைக்க வாய்ப்பு உண்டு .


சுக்ரனும் ,செவ்வாயும் , நல்ல நிலை இருந்தாலே குழந்தை பாக்கியம்  கிடைக்கும் .


5-ஆம் இடத்தில் பாவ கிரகங்கள் (


ராகு, செவ்வாய், சனி) அல்லது சூரியன் அமர்ந்தால், ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது. 


5-ஆம் இடத்தில் உள்ள பாவக்கிரகங்களை,சுபகிரகங்கள் பார்த்தால் (ஒவ்வொரு லக்னத்திற்கும் சுபக் கிரகங்கள் வேறுபடும்) குழந்தை பாக்கியம் கிடைக்கும். 5-ஆம் இடத்திற்கு உரிய கிரகம், பாவக் கிரகங் களுடன் சேர்ந்தாலும் புத்திர தோஷம் ஏற்படும்.5-க்கு உரியகிரகம், 8-இல் மறைந்திருந்தாலும் தோஷம் ஏற்படும்.


லக்கினத்திற்கு 5-க்கு உரிய கிரகம், லக்னத்திற்கு 3-இல் இருந்தால் சந்தான தோசம்  உண்டாகும். 5-க்கு உரிய கிரகம் 6,7,8-இல் 4 இருந்தாலும் புத்திர தோஷம் உண்டு.12-இல் இருந்தால் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்படும். சுருக்கமாகச் சொன்னால், 5-க்கு உரியவன் 3,6,7,8,12- இல் இருந்தால், புத்திரதோஷம் ஏற்படும்.


புத்திர பாக்கியம் கிடைக்க  இருவரின் உடல்  அமைப்பிலும் குழந்தை பெரும் தகுதி இருக்க வேண்டும் .


நிலமும் விதையும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே விளைச்சல் எடுக்க முடியும் .


பரிகாரம் :


 பரிகாரம் செய்வதற்கு முன்னர் அதாவது முதல் நாள் பரிகாரத்திற்கு தேவையான .மஞ்சள் நிறத்தில் ஒரு துண்டு  , மஞ்சள் கிழங்கு ஓன்று . லட்டு அயிந்து ,பாயாசம் மற்றும் பூஜைக்கு தேவையான அடிப்படை பொருட்களை வாங்கி வைத்துக்  கொள்ளவேண்டும் . 


புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிகள் வியாழக்கிழமை அன்று அதிகாலை எழுந்து தட்சனாமூர்த்தி திருஉருவ   படத்தில் கண்விழித்து அதன் பின்னர் நீராடி வியாழக்கிழமை காலை ஆறு முதல் ஏழு  மணிக்குள் அதாவது குரு ஓரையில் தம்பதிகள் இருவரும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் அதாவது அந்த பெரியவர்கள் உங்களுக்கு குழந்தை பாக்கியம்  கிடைக்க உங்கள் மீது அக்கறை உள்ளவராக இருக்க வேண்டும் . 


 


தனிக்குடும்பமாக இருந்தால் அருகில் வசிக்கக் கூடிய அதாவது  உங்கள் மீது அக்கறை உடைய வயதில் மூத்தவர்களிடம் மஞ்சள் கிழங்கை  கொடுத்து அதை அவர்கள்  வலது கையில் வைத்து இடது கையால் மூடி   உங்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்க இறைவனிடம் வேண்டி அவர்கள் கொடுக்கும் மஞ்சள் கிழங்கை வாங்கும் முன்னர் 


,மேற்படி தம்பதிகள் இருவரும் அந்த மூத்தவர்கள்  கால்களில் விழுந்து ஆசி பெற வேண்டும் .அதன் பின்னர் ,அந்த மஞ்சள் கிழங்கை பூஜை அறையில் வைக்கும் முன்னர் ஏற்கனவே வாங்கிய மஞ்சள் துண்டில்  ஒரு பகுதியை தேவையான அளவிற்கு கிழித்து அந்த மஞ்சள் கிழங்கிற்கு ஆடை போல் சுற்ற வேண்டும் . இங்கு மஞ்சள் கிழங்கு தான் புத்திரகாரகன் குரு பகவான் ஆவார் , ஆடை சாற்றிய பின்னர் சுத்தமான இடத்தில் பூஜை அறையில் வைக்க வேண்டும் ,அதன் பின்னர் மஞ்சள் கிழங்கை தொடக்கூடாது .


 சாமிக்கு வாங்கிய பூஜை பொருட்களை கொண்டு பூஜை முடித்த பின்னர் .நிவேதனமான லட்டு ,,பாயசம் போன்றவைகளை தம்பதிகள் இருவரும் சாப்பிட வேண்டும் .நூற்றி எட்டு கொண்டை கடலையை நிவேதனமாக படைக்க வேண்டும். 


இது போல் பதினாறு வாரம் தொடர்ந்து செய்து வர வேண்டும் . அடுத்த வாரம் மூத்தவர்கள் தேவை இல்லை தம்பதிகளே சுவாமியை வழிபடலாம். ஆனால் நிவேதனம் அவசியம் . பதினாறாவது வாரம் முடிந்த பின்னர் மேற்படி மஞ்சள் கிழங்கை அதாவது முதல் வாரம் வைத்த மஞ்சள் கிழங்கை எடுத்து மஞ்சள் துணியில் சுற்றி நிற்கும் நீர் நிலைகளில் விட்டு விடவேண்டும் . . 


 மேலும் யானைக்கு ஒரு நேர உணவை தானமாக கொடுக்க வேண்டும் . 


முடித்தால் குழந்தை இல்லாத பெண்ணே தனது கையால் பதினாறு லட்டுக்களை பிடித்து அருகில் உள்ள தட்சினாமூர்த்தி மூர்த்தி ஆலயத்திற்கு இரவு எட்டு முதல் ஒன்பது மணிக்குள் சென்று உங்கள் கையால் பிடித்த லட்டுக்களை சுவாமிக்கு 


நிவேதனமாக வைத்து ,அதன் பின்னர் அந்த பதினாறு லட்டுக்களை பதினாறு நபர்களுக்கு கொடுக்க வேண்டும் . மேற்படி பாரிகரங்களை தொடர்ந்து முழு நம்பிக்கையுடன் செய்து வர குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் .          

புத்திர பாக்கியம் உங்களுக்கு உண்டா என அருகில் உள்ள ஜோதிடரிடம் உங்கள் இருவரின்  ஜாதகத்தையும்  கொடுத்து நன்கு பரிசோதித்து மேலும் சில பரிகாரம் செய்ய பலன் கிடைக்கும் .

  

Wednesday, January 20, 2021

ஜாமக்கோள் பிரசன்னம் என்கிற யாமக்கோள் ஆரூடம். 20/01/2021 புதன்கிழமை


 ஜாமக்கோள் பிரசன்னம் என்கிற யாமக்கோள் ஆரூடம்


      பூமியின் வெளிபரப்பும் அதன் மேல்படும் கதிர்களையும் ஆராய்ந்து ஜீவராசிக்கும் அண்டவெளிக்கும் தொடர்பு இருப்பதை உணர்ந்த சித்தர்களும் ஞானிகளும் வானமண்டலத்தில் ராசிமண்டலங்களும் ஒன்பது கோள்களும் 27 நட்சத்திரங்களும் இருப்பதை ஆராய்ந்து சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் சஞ்சாரம் செய்வதை உணர்ந்தார்கள்.


 நம் முன்னோர்கள் விட்டுசென்ற திதி, யோகம், கரணம், அயனம் போன்ற கால அளவுகளை ஆராய்ந்து சிறந்த ஒரு வான சாஸ்திரத்தை உருவாக்கினார் ஆரியபட்டர்.


     ஆரம்ப காலத்தில் மனிதன் வழிப்போக்கில் சென்று கொண்டிருக்கும்போது எந்த திசையில் இருந்து கேள்வி கேட்கிறார்களோ அந்த திசையையும் அதற்கு எதிர் திசையில் உள்ள சகுனத்தையும் வைத்து பலன் சொல்லி வந்தார்கள். மற்றும் தனக்கு முன்னாள் உதயமாகும் நிமித்தத்தை வைத்தும் பலன் சொல்லி வந்தார்கள்.


     எட்டு திக்குக்குள் எட்டு ஜாமத்தை வைத்து அமைத்து அதனுள் உதயத்தை ஓடவிட்டு உதயத்திலிருந்து சூட்சும ஆரூடத்தை எடுத்து பலன் சொல்லிவந்தார்கள். 


நிமித்த ஆரூடம், சகுன ஆரூடம், பறவைகள்,  கௌரி,பஞ்ச பட்சி, தொடுகுறி சாஸ்திரம் இது போன்ற பல பிரசன்னங்களையும், யுக்திகளையும் ஆராய்ந்து அரசர்கள் மற்ற நாட்டின் மீது படையெடுத்து செல்லவும் , மற்ற நாட்டினர் எப்போது படையெடுப்பார்கள் என அறியவும் பயன்படுத்தி வந்தார்கள்.


     சங்க காலத்தில் புறநானூறு சிலப்பதிகாரத்தில் பிரசன்னம் இருப்பதையும், சீவக சிந்தாமணியில் பிரசன்னம் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் தெளிவாக பார்க்கிறோம். வடமொழியில் ராவணேஸ்வரன் இயற்றிய ராவண காவியத்தில் ஜாமக்கோள் பிரசன்னத்தை பற்றியும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. சினேந்திர மாலையில் பிரசன்னத்தை பற்றியும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.


     ஜாமக்கோள் பிரசன்னத்தை பற்றி தேவக்கோட்டையை சேர்ந்த ஜோதிடர்கள் சென்ற நூற்றாண்டில் நுணுக்கமான விஷயங்களை பற்றியும் ஆய்வு நோக்குடன் ப்ரசன்ன நூல்களை வெளியிட்டுள்ளார்கள். மேலும், கல்யாணராமையர் , ஜோதிடக்கடல் வைத்தியநாதன், அல்லியேந்தல் அருணாச்சலம், திருப்பூர் S.கோபாலகிருஷ்ணன் போன்றோர் முறைபடுத்தி ஜாமக்கோள் ப்ரசன்ன நூல்களை வெளியிட்டுள்ளார்கள்.


ஜாமக்கோள் பிரசன்னத்தின் மூலம் மக்களின் அன்றாட நிகழ்வுகளில் ஏற்படும் வாழ்வியல் பிரச்சனைகள் எதுவானாலும் அதை ஆய்வு செய்யகூடிய கணித முறைகள் உண்டு. 


காணாமல் போனவர், தொலைந்து போன பொருள், தொழிலில் வெற்றி தோல்வி, திருமணத்தை பற்றி, குழந்தையை பற்றி இது போன்ற எந்த கேள்வி ஆனாலும் நடக்குமா? நடக்காதா? எப்போது நடக்கும்? என்பதை துல்லியமாக கூறமுடியும்.

Monday, January 18, 2021

எதிரும் புதிரும் 18/01/2021 திங்கட்கிழமை

 *எதிரும் புதிரும்*


குரு சுக்கிரன்..!* 

ஜோதிடத்தில் இந்த இருவரும் முழு சுபர்கள்.


 *ஒருவர் தேவகுரு* .

 *மற்றவர் அசுரகுரு.* 


குரு ஆன்மீகத்திற்கு வழிகாட்டி.

சுக்கிரன்  லௌகீக வாழ்வுக்கு வழிகாட்டி.


இருவருமே ஆசான்கள் அதாவது இருவரும் குரு எனும் போதிக்கும் ஸ்தானத்தில் உள்ளவர்கள்,


 ஒருவர் பொருளை  கடக்க போதனை செய்வார், இன்னொருவர் பொருளை அனுபவித்து அதில் மோட்சம் எய்த போதிப்பார், ஒருவர் தேவ குரு இன்னொருவர் அசுர குரு,


 தேவகுருவின் குணம் சாத்வீகம், இன்னொருவரின் குணம் குரூரம், 


ஒருவர் மேன்மை எனும் மேல் நிலையை அடைய வழிகாட்டி, இன்னொருவர் வாழ்க்கை எனும் ஆசா பாசத்தில் சிக்குண்டு சுழல காரணகர்த்தா, 

பொருள் பற்றால் மோட்சம் கெடும் என்கிறார் தேவ குரு.

பொருள் ஆசை அனுபவித்து கடந்தாலே மோட்சம் என்கிறார் அசுர குரு.

உன்னுள் எழும் ஆற்றல் விந்தணுக்கள் அதை குண்டலினியில் மேல் நோக்கி எடுத்து சென்று ஞானம் எனும் மோட்சமடைய வழிகாட்டுவார் தேவ குரு, அதே விந்தணுவை வாழ்க்கைத் துணையின் மீது பிரயோகித்து உடல் ஆசையை கடக்க வழிகாட்டுவார் அசுர குரு,


 ஆக மொத்தத்தில் இருவரும் மனிதனுக்கு வழிகாட்டிகளே. ஆனால் பாதைகள் வெவ்வேறு.


சரி இவ்விருவரின் செயல்பாடு மற்றும் பொது குணாதிசயங்களை பார்ப்போம்..!


தேவ குரு ஒழுக்கம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவைகளே உன்னை உயர்த்தும் என்பார்., 

அசுர குரு பிறப்பது அனுபவிக்க, உனக்கு வேண்டியதை நீதான் முயற்சித்து பெற வேண்டும், கேட்டுப்பார் தரவில்லையா தட்டி பறி ஏனெனில் உன் இன்பம் உன் கையில் வாழு உன் இஷ்டம் போல் வாழு இங்கே எவனும் நல்லவனில்லை என்பார், பொதுவாகவே இவ்விருவரும் மிக அத்தியாவசியமான காரகங்களை கொண்ட கிரகங்கள் ஆவார்கள்.


 ஒருவரின் தெய்வீக நிலைக்கும், லௌகிக அனுபவத்துக்கும் இருவரும் காரணகர்த்தா, ஆனால் ஒருவரை பின்பற்றினால் இன்னொருவரை பின்பற்ற இயலாது என்பதே இங்கே கவனிக்க வேண்டியது, ஏனெனில் இவ்விருவரும் வழிகாட்டிகளே. ஆனால் பாதை வெவ்வேறு.

ஒருவர் மேன்மையில் மோட்சம் என்கிறார். இன்னொருவர் அனுபவித்து கடப்பதே மோட்சம் என்கிறார். 


ஆனால் இவ்விருவரின் கருத்துக்களும் உண்மையே என்பதே ஆச்சரியமான விஷயமாகும். ஏனெனில் இருவரும் குருமார்கள் அல்லவா! என்னதான் சுக்கிராச்சாரியார் அனுபவித்து கடப்பதே மோட்சம் என்றாலும், அனுபவங்களில் உயரிய உச்ச அனுபவம் காமம். அதை காலபுருஷ தத்துவத்தில் 12ல் அயன சயன ஸ்தானத்தில் உச்சம் பெற்று அனுபவிக்க சுக்கிரன் அங்கே உச்சம் பெற்றாலும், அந்த வீட்டின் அதிபதி தேவ குருவே.

 ஆக பொருளாசை/உடலாசை அதில் அனுபவம்.


இவைகள் பூர்வபுண்ணியம் எனும் தேவ குருவிடம் மட்டுமே உள்ளது. அதனால் தான் நிம்மதியான உறக்கம் அமைய புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்றனர் முன்னோர்கள். 


செல்வங்களில் குழந்தை செல்வமே மேலான செல்வம் அதை சுக்கிரன் எனும் சுக்கிலகாரகனே தருகிறான் என்றாலும், அதிலும் 5ம் வீட்டின் காரகாதிபதி என்கிற நிலையை பெற்று பூர்வ புண்ணிய பலனால் மட்டுமே உன்னால் அந்த செல்வத்தை அடைய இயலும் என்பதை குருவே நிர்ணயம் செய்கிறார் அல்லவா., காலபுருஷனின் 2ம் வீடு ரிஷபம்.அங்கு வாக்கு/நிலையான வருமானம்/குடும்பம் இவைகளை குறிக்கும் சுக்கிரனின் சொந்த வீடு, ஆனால் அதன் காரகாதிபதி குருவே.

 ஆக அங்கேயும் தேவ குரு எனும் பூர்வபுண்ணியம் அவசியம் தானே, 


என்ன டிசைன் இது?

.தேவ குரு உலகியல் ஆசையை துறக்க பூர்வபுண்ணிய பலனை தருவாரா? இல்லை அனுபவிக்கவும் தருவாரா?, கேள்வி எழுகிறது தானே. இங்கே தான் உள்ளது சூட்சுமம்.

 நன்றாக கவனியுங்கள் நீங்கள் செய்யும் பாவமும் சரி/புண்ணியமும் சரி உங்கள் பூர்வபுண்ணிய பலனே!, 

எது புண்ணிய பலனா? அல்லது பாவ பலனா?, இல்லை.

 *பாவ பலனை சனி* *தருவார்,* 

 *புண்ணிய பலன்களை* *மட்டுமே தேவ குரு* *அருள்வார்* 


, அப்போ 2ல் பல்வேறு வழியில் நீதிக்கு புறம்பாக பணம் ஈட்டுவது/தவறாக பேசுவது இவைகளை புண்ணிய பலனா தருகிறது?, 

ஆமாம் சந்தேகமே வேண்டாம்.

ஏனெனில் குரு காரகாதிபதி என்றாலும் அந்த வீட்டின் அதிபதி அசுர குரு சுக்கிராச்சாரியார்.

 அவரின் பணி மனிதனை லௌகீக அனுபவங்களில் மூழ்க செய்து, அதை அனுபவிக்க செய்து கர்மம் சேர்க்க வைப்பது, இவ்வளவு ஏன்?.  காலபுருஷனின் 9ம் வீடு  தேவ குருவின் தனுசு வீடு மற்றும்  பாக்யஸ்தானம் .அதில் சுக்கிரனின் நட்சத்திரம் உண்டல்லவா.! அதன் பொருள் என்ன?, அந்த ஸ்தானம் சேமிப்பு ஸ்தானம் எதை சேமிக்க?

 பணம் எனும் சேமிப்பு.


 அப்போது அங்கே சுக்கிரனின் நட்சத்திரம் நின்ற காரணம்?, 


அசுர குரு இவர் இருந்தால் தானே தவறாக மற்றவரின் செல்வத்தை மனிதன் சேர்த்து அனுபவிப்பான்( Swiss Bank Account) அதையே பாக்கிய பலன் என்பார்.

 இதனால் தான் *பணம் கர்மா* என்கிறோம், பணத்தை வைத்து இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுக்கும் போது பாக்யஸ்தானம் வலுப் பெறும்.

 அதாவது தேவ குரு பூர்வபுண்ணிய கணக்கில் சேர்ப்பார், 

அதே பணத்தை  இன்னொருவனிடம் இருந்து பறிக்கும் போது பாக்யஸ்தானம் வலுக் குறையும், 


அதாவது அசுர குரு கர்மம் சேர்க்க வைக்கிறார். இதை கேது குறித்து கொள்வார், ஏனெனில் ஜாதகருக்கு என்ன தெரியும் 9ல் உள்ள கேதுவின் நட்சத்திரம் அப்பாவையும் முன்வினை பயனையும் குறிக்கிறது என்பதை அவர் மறக்க வேண்டாமா? அப்போது தானே மறுபிறப்பு, இவன் பாட்டுக்கு 9ல் உள்ள சூரியனின் நட்சத்திரத்தை பிடித்து ஆன்மீக ஏற்றம் கண்டால் தேவ குரு அல்லவா வென்று விடுவார்!

 பின்னர் ஏது அடுத்த பிறவி?

, ஒன்றை நினைவில் வையுங்கள். பணத்தால் கர்மம் சேர்க்கவும் இயலும்., கழிக்கவும் இயலும். அதன் வழி சனி காட்டுவார்,


 அப்போ 12ல் உள்ள தேவ குரு நட்சத்திரம் மற்றும் சனி/புதனின் நட்சத்திரம் என்ன செய்யும்? 

என்ன செய்யும் புதனின் புத்தியை மழுங்கடித்து அதில் ஏறி நின்று தானே அசுர குரு உச்சம் 29 டிகிரி பெறுகிறார்.

குருவின் நட்சத்திரத்தில் நின்றால் லௌகிக ஆசை குறையும்.

அதுவே சனி நட்சத்திரமானால் அவரே கர்மாவின் படி அசுர குரு அல்லது தேவ குரு இரண்டில் ஒருவருக்கு ஜாதகரை அனுப்பிவிடுவார்.


 *ஒன்றை இங்கே நீங்கள் எல்லோரும் கவனிக்க வேண்டும்.* 


 குழந்தை எனும் கரு உருவாவது அயன/சயனம் எனும் போகத்தில்.அங்கே நிற்பது 3 விதமான நட்சத்திரம்.

 ஒன்று பூர்வபுண்ணியம், இன்னொன்று கர்மா, அடுத்தது புத்தி இவைகளின் செயல்பாடு அனைத்துமே தேவ குரு வீட்டில். 

அதாவது பூர்வபுண்ணியத்தில் உள்ளது, ஆனால் அதை பிரித்து தருவது சனி எனும் கர்மகாரகனே.


 ஆகவே குழந்தை பாக்கியம் பற்றி அறிய சுக்கிரன்/செவ்வாய்/குரு மட்டும் ஆராய்ந்தால் போதாது. சனியையும் சேர்த்தே ஆராய வேண்டும் என்பதை இங்கே அழுத்தமாக பதிவு செய்கிறேன்.

அது சரி அசுர குரு மோட்சம் கொடுப்பார் என்றீர்களே கொஞ்சம் அதை பற்றி  நீங்கள் கேட்பது புரிகிறது, அது வேறொன்றுமில்லை நன்றாக பொருள் காரகங்களை அனுபவிக்க வைத்து அதன் வழியே கர்மத்தை சேர்த்து அடுத்த பிரவிக்கான Birth Seat ஐ உறுதிபடுத்துவார், அப்போது தானே மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க இயலும்.


 இதில் வேடிக்கை அசுர குரு ராகுவுடன் கூட்டணி வைப்பார், தேவ குரு கேதுவுடன் கூட்டணி வைப்பார். இவர்கள் இருவரின் இடையே மாட்டிக்கொண்ட நாம் யாருடன் கூட்டணி வைப்பது கடவுளை தவிர.!?, இந்த பதிவை படிப்பவருக்கு ஒரு சந்தேகம் எழலாம். அதாவது அசுர குரு தேவ குரு இருவரும் மறைமுக கூட்டணி போல் உள்ளதே?!,


 அவ்வளவு தாங்க புரிஞ்சா சரி, 

சந்திப்போம் அதுவரை சிந்திப்போம்...!