Sunday, November 21, 2021

வெற்றிகளைக் குவிக்கும் ஓரை

 *ஓரைகள்*


ஒரு நாளில் பகல் பொழுது 12 மணி நேரம் ஆகும் .அதேபோல இரவு 12 மணி நேரம் ஆகும்.

ஓரை என்பது நவ கோள்களில் ராகு கேதுக்களைத் தவிர்த்து மீதமுள்ள ஏழு கிரகங்களை வைத்து வரிசைப்படுத்தி அந்தந்த கிழமைகளுக்கு ஏற்ப கிழமை நாதனை தலைமையாகக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஒரு கிரகம் ஓரையாக செயல்படும்.


ஓரைகள் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும். சூரியன் 

சுக்கிரன்

 புதன் 

சந்திரன் 

சனி 

குரு

 செவ்வாய்


உதாரணமாக திங்கட்கிழமை என்றால் காலை 6:00 மணிக்கு சந்திர ஓரை ஆரம்பிக்கும் அதன் பின் ஒரு மணி நேரம் கழித்து 7 மணிக்கு சனி ஓரை தொடங்கும்.

இவ்விதமாக அடுத்தடுத்து ஓரைகள் வரிசைக்கிரமமாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு கிரகம் ஓரையாக செயல்படும்.


 பஞ்சாங்கத்தில் பொதுவாக 6 மணியில் இருந்து ஓரை ஆரம்பித்திருப்பார்கள்....இது பொது....


ஆனால் ஒவ்வொரு ஊருக்கும் சூரிய உதயம் அஸ்தமனம் வேறு படும்..


சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை எவ்வளவு நேரம் இருக்கிறதோ அதை 12 ஆல் வகுத்து வருவதை ஒரு ஓரை எனக்கொள்ள வேண்டும்..


அதன்படியே 12 ஓரைகளும் பகல் பொழுதிற்கு கணக்கிடலாம்...துல்லியமாக ஓரையை கணக்கிட இம்முறையே கையாளப்படுகிறது...


இரவு பொழுதும் இப்படியே


 *ஓரைகளும்  செய்திகளும்* 


ஓரைகளுக்கும் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்கும் சம்பந்தம் உண்டு..ஏன்?....எப்படி?....


அது எப்படியெனில், ஓரைகள் 100 % பலம் வாய்ந்தவை..

நமக்கு நடக்கும் அல்லது நாம் கேட்கும் செய்திகள், பார்க்கும் காட்சிகள் ஓரை சார்ந்த கிரக காரகத்தன்மை பொருந்தியதாக இருக்கும்...


நீங்கள் திடீர் என்று ஒரு கோரமான செய்தி (விபத்து) போன்ற செய்திகள் கேட்டால் அது *செவ்வாய் ஓரையோ* அல்லது *செவ்வாய் அந்தர ஓரையாவது* இருக்கும்...


அது மட்டும் இல்லாமல் கிழமைகளுக்கு உரிய பகை ஓரைகளிலும் இது போன்ற கோர செய்திகள் கேட்பீர்கள்...


நீங்கள் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அப்போது ஒரு திருமண நிகழ்வு காட்சியாக தெரிகிறது என்றால் அந்த நேரத்தில் *குரு ஓரை* நடந்து கொண்டிருக்கும்.


 அதேபோல காதல் பாட்டுகள் காட்சிகள் வரும்போது *சுக்கிர ஓரை* நடந்துகொண்டிருக்கும்.


நீங்கள் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஜன்னல் ஓரத்தில் இருந்து வெளியே பார்க்கும் போது ஏதாவது நீர்நிலைகள் ஏரி குளம் கிணறு ஆறு போன்றவை தென்பட்டால் கண்டிப்பாக அந்த நேரத்தில் *சந்திரன் ஓரை* நடந்து கொண்டிருக்கும்.


நம்மை சுற்றி நடக்கும் அனைத்திற்கும் காரணம் உண்டு...

அவற்றில் இந்த ஓரையின் தாக்கம் இல்லாமல் இருக்காது.


முயன்றுதான் பாருங்களேன்...

Saturday, November 20, 2021

 கீழே படித்து விட்டு 

கோவில்களுக்கு நீங்கள்செல்லாமா 

செல்லவேண்டாமா 

முடிவு பண்ணுக....!!!


இந்த பதிவு 1000 ஆண்டு பழைமையான கோவில்களுக்கு மட்டுமே சம்மந்தபடும்...!!


1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.


2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.


3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.


4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.


5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.


6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..


7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.


8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.


9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும்.


10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.


11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..


12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக்.


13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.


14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.


15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.


16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.


17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும், மூலவரின் தரிசனம் கிட்டும்போது, அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி.


18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.


19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ..


20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.


இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம் ..குழந்தைகளையும் பழக்குவோம் …அது அறிவியல் ஆகட்டும் ..எதுவாகட்டும் …


Thursday, October 21, 2021

2021-2022 குருப்பெயர்ச்சி

 🌹குருப்பெயர்ச்சி பலன் 2021-2022


💢கும்ப ராசி....ஜன்ம குரு

     


எதிர்வரும் 

20.11.2021 அன்று 

சனிக்கிழமை 

கார்த்திகை மாதம் 4 ஆம்  தேதி

இரவு 11.31  மணி அளவில்

திருக்கணித பஞ்சாங்கப்படி மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு குருப்பெயர்ச்சி ஆகிறார்.


      பொதுவாக குரு ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் ஒரு மாத காலத்திற்கு முன்பே தான்  செய்ய இருக்கும் பலனுக்கு அஸ்திவார பணிகளை செய்ய துவங்கி விடுவார்.


      கும்ப ராசியில் பிரவேசிக்க உள்ள

குருபகவான் இந்த முறை மிக அதிவேகமாக கும்ப ராசியில் உள்ள நட்சத்திரங்களான

அவிட்டம் 3,4 ஆம் பாதங்களையும், சதயம்,

பூரட்டாதி 1,2,3 பாதங்களையும் கடந்து ஐந்தே மாதத்தில் (13.4.2022) மீன ராசியை அடைகிறார்.


       கும்ப  ராசியினருக்கு 

இதுநாள்வரை   12 ல்அமர்ந்து சனியுடன் இணைந்து நீச பங்கம் பெற்றாலும் நல்ல பலனை வழங்காத  குரு பகவான்


       தற்சமயம் 12ஆம் இடத்தில் இருந்து கும்ப ராசியில்  சஞ்சரித்து அதிவேகமாக 2 ஆம் இடத்தை நோக்கி பயணிக்க உள்ளார்.


           குரு கும்ப ராசிக்கு  11,2 ஆம்

 இட  அதிபதியாக இருப்பதால்  குரு ராசியில் அமர்வது கடந்த காலத்தை ஓப்பிடும் போது ஓரளவு சுமாரன பலனை அளிக்க உள்ளார்.


           கும்ப ராசியினர் ஏழரை சனியின் விரைய சனி ஆதிக்கத்தில் இருந்து இன்னும் விடுபட வில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


        இந்த குறுகிய கால குருப்பெயர்ச்சியால்நன்மையும்,தீமையும் கலந்த கலவையாக எதிர் வரும் நாட்கள் செல்ல உள்ளது.

       

       சுப கிரமான குரு தான் இருக்கும் இடத்தை விட தான் பார்வை செய்யும் இடத்தின் பலனை விருத்தி செய்வார்.


          கும்ப  ராசிக்கு ஜன்ம குருவாக சஞ்சரிக்க உள்ள குரு பகவான் தனது பார்வையினால்


ஐந்தாமிடத்தையும்


ஏழாமிடத்தையும்


ஒன்பதாமிடத்தையும்


புனிதப்படுத்தப் போகிறார்.


🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Monday, October 4, 2021

ராகு திசை என்ன செய்யும்? நவகிரகங்களில் ராகு கேது பருப்பொருள் அற்ற ஒரு கிரகம். இந்த ராகு எதையும் பிரமாண்டமாக யோசிக்க வைக்கும். செய்யவும் வைக்கும்.சாதுரியமாக ஏமாற்றக் கூடிய திறன் படைத்தவர் ராகு ஆவார். சூது நிறைந்தவர். மயக்க நிலைக்கு ஆளாக்குபவர். சூதாட்டம், கேம்பிளிங், குதிரை பந்தயம், ஆட்கடத்தல், மது கஞ்சா அபின் போன்ற போதை வஸ்துக்களுக்கு காரகமானவர் இந்த ராகு. ஒருவரின் ஜாதகத்தில் ராகு திசை 18 ஆண்டு காலம் நடைமுறையில் இருக்கும். இந்த காலகட்டத்தில் ராகு நம்மை எப்படி மாற்றி வைப்பார் என்பதே இந்த பதிவு. ராகு திசை என்ன செய்யும்?

 

ராகு திசை என்ன செய்யும்?


நவகிரகங்களில் ராகு கேது  பருப்பொருள் அற்ற  ஒரு கிரகம்.

இந்த ராகு எதையும் பிரமாண்டமாக யோசிக்க வைக்கும். செய்யவும் வைக்கும்.சாதுரியமாக ஏமாற்றக் கூடிய திறன் படைத்தவர் ராகு ஆவார்.


சூது நிறைந்தவர். மயக்க நிலைக்கு ஆளாக்குபவர்.

சூதாட்டம், கேம்பிளிங், குதிரை பந்தயம், ஆட்கடத்தல், மது கஞ்சா அபின் போன்ற போதை வஸ்துக்களுக்கு காரகமானவர் இந்த ராகு.


ஒருவரின் ஜாதகத்தில் ராகு திசை 18 ஆண்டு காலம் நடைமுறையில் இருக்கும்.


இந்த காலகட்டத்தில் ராகு நம்மை எப்படி மாற்றி வைப்பார் என்பதே இந்த பதிவு.


ராகு திசை என்ன செய்யும்?



ராகு தசையில் கிடைக்கும் பொருள் காரகம்/உயிர்காரகம் அல்லது இரண்டுமே முடிவில் இழக்கவேண்டி வரும்.

 அல்லது இருந்தும் பயனற்ற நிலையில் இருக்கும்., ராகு தசையில் அறிமுகமாகும் நட்பு/உறவுகள் அனைத்துமே தசையின் முடிவினில் ஒரு கசப்புடனே நீடிக்கும் அல்லது முறிந்துவிடும்.


ராகு தசையில் அமையும் ஜீவனமானது மறைவில் எந்த விளம்பரமும் இல்லாமல் நடைபெறும் வரை நீடிக்கும், அதுவே விளம்பரம்/ஆடம்பரம் என்று ஜீவனத்தை வெளிப்படுத்தினால் தசை முடிவில் ஒன்று இழக்கவேண்டி வரும் அல்லது முடக்கத்தில் சிக்கி தவிக்கும்,


 ராகு தசையில் ஏற்படும் நோய் கர்ம பலனாகும், இதனை அனுபவித்து கழிக்கும் பொழுது குரு தசையில் இன்னல்கள் குறையும், ராகு தசையில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் அவர் தரும் காரகங்களை அனுபவிப்பவர்கள் மட்டுமே ஓரளவுக்கு தசையின் முடிவில் தாக்குப்பிடிக்கிறார்கள்.


இக்காலகட்டத்தில் ராகுவின் அதிதேவதையான பத்ரகாளியை வழிபட நமக்கு நேரவிருக்கும் இன்னல்கள் துன்பங்கள் குறையும்.


ராகு காயத்ரி

நாகத் வஜாய வித்மஹே!

பத்ம ஹஸ்தாய தீமஹி!

தந்நோ ராகு பிரசோத

Monday, August 2, 2021

அஜாமிளன் கதையும் & 4ம் பாவமும்


 ஸ்ரீராமஜெயம்.


ஆண்,பெண் கற்பு ஒழுக்கத்தை குறிக்கும் பாவகங்கள் என்னென்ன?

 ஒழுக்கம் கெட்டிருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?


ஒரு சொல், ஒரு வில் ஒருத்தனுக்கு ஒருத்தி என வாழ்ந்தவன் எம்பெருமான் ஸ்ரீராமன்.


 கற்பு என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது


 ஒரு ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானமாக குறிக்கப்படுகிறது.


 அதேநேரத்தில் 3,7,12 இடங்களும்  காமத்தை குறிக்கும் இடமாக குறிக்கப்படுகிறது.


 8ம் இடம் என்பது ரகசிய உறவை குறிக்கும் இடமாகும்.


நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக கெடாமல் இருந்தால், ஒழுக்கம் தவறாத காதலும், நெறி தவறாத வாழ்வு அமையும்.


 ஜாதகத்தில் நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச கிரகங்கள் இருந்து,  4ம் அதிபதி கெட்டு, சுக்ரன், ராகு அல்லது சனியோடு நெருக்கமாக இணைந்து, சுக்ரதிசை நடந்து  கோட்சாரத்தில் ஏழரைச் சனி அஷ்டமச் சனி நடந்தால் கற்புக்கு கேரண்டி இல்லை.


 சுக்கிரனின் வீடுகளான ரிஷபம் ,துலாத்தில்  சுக்கிரன்  ராகு அல்லது சனி இணைந்து சுக்கிர தசை நடந்தாலும் காம எண்ணங்கள் ஊற்றெடுக்கும்.


 7-ஆம் இடம் என்பது ஒரு ஜாதகத்தில் காம ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.


 பொதுவாக 7ம் இடத்தில் சுக்கிரன்  இருப்பவர்களுக்கு  காம எண்ணங்கள் மேலோங்கும்.


 ஏழில் சுக்கிரன் சனி இணைந்து, பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டு, முப்பதிலிருந்து ஐம்பது வயது வரை சுக்கிர தசை நடைபெற்று கோட்சாரம் கெட்டு சுபகிரக பார்வை இல்லையென்றால் கண்டிப்பாக கற்புக்கு களங்கம் நேரும்.


 எட்டாம் இடத்தில் அ 12ம்  இடத்தில் சுக்கிரன் சனி சேர்ந்து இருந்து அல்லது சுக்கிரன் ராகு சேர்ந்திருந்து அந்த வீடு சுக்கிரனுடைய வீடாக அமைந்து, பாவ கிரகங்களின் தொடர்பை பெற்று, சுப கிரக தொடர்பு இல்லை என்றால் 


 மேற்சொன்ன  திசைகள் 30 லிருந்து 50 வரை நடைபெறுமானால் , வெளியே யாருக்கும் தெரியாத ரகசிய உறவாக அந்த உறவு இருக்கும்.


 சுக்கிரன் சனியின் நெருக்கமான இணைவு ,தன்னைவிட மூத்த பெண்ணையோ அல்லது கீழ்நிலை பெண்களையோ அடையும் அமைப்பை கொடுக்கும்.


ஜாதகத்தில் 4ஆம் இடத்திற்கு பல காரகத்துவங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் ஆண் ,பெண் இருவரின் கற்பு சார்ந்த  ஒழுக்கத்தைக் குறிக்கும் இடமாக நாலாம் இடம் உள்ளது.


நாலாம் அதிபதி நீசம் ஆகி பாவ கிரகங்களுடன் (சனி,ராகு) சேர்ந்திருந்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .(குறிப்பாக 71/2 சனியில்)


 பருவ வயதில் இருக்கும் பெண்கள் மேற்சொன்ன அமைப்போடு ராகு ,சனி, சுக்கிர திசை நடந்தால் காதல் என்ற பெயரில் காமுகனிடம் ஏமாறும் நிலை ஏற்படும்.


 நாலாம் இடம் சுக ஸ்தானம் என்பதால் நாலாம் அதிபதி நீசமாகியிருந்தால், தவறான வழியில் சுகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.


காதலால் களங்கமுண்டு.


 காதலனிடம் அல்லது காதலியிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.


7/12 யிலும் ,அட்டம சனியிலும் தேவையற்ற பெண்கள் சகவாசம் தானாக தேடி வரும்.


விதி வசத்தால் பெண் பாவம் செய்தவர்கள் ராமநாமம் உச்சரித்தால் தீயிலிட்ட பஞ்சு போல் தீவினைகள் தீரும்.


அஜாமிளன் வரலாறு நமக்கு உணர்த்தும் பாடமிது. 


அன்னியக்குச்சம் என்ற ஊரில் வசித்தவன் அஜாமிளன் என்ற அந்தணன். அவனுக்கு அழகான மனைவி இருந்தாள். ஆனாலும், அவன் விதியின் பிடியில் சிக்கி தாசிகளின் இல்லத்திற்கு சென்றான். இத்தனைக்கும் அவன் மனைவியும் அவனுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. அவர்களுக்கு பத்து குழந்தைகள் பிறந்தனர். எவ்வளவோ முயன்றும், அஜாமிளனின் மனைவியால் அவனைத் திருத்தவே முடியவில்லை. அவனது கடைசி காலகட்டமும் வந்து விட்டது. நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்த அவன் சாகும் தருணத் தில், தன் மூத்த மகன் நாராயணனை அழைத்தான். நாராயணா, நாராயணா, என அழைக்கவும், அவன் உயிர் பிரிவதற்கும் சரியாக இருந்தது. எமதூதர்கள் வந்தனர். அவனைக் கட்டியிழுத்து எமதர்மனிடம் கொண்டு சென்று, அவன் செய்த பாவத் திற்கு தண்டனை வாங்கிக் கொடுக்க எண்ணினர். இதற்குள் வைகுண்டத்தில் இருந்து தேவலோக விமானம் வந்தது. அவர்கள் எமதூதர்களிடம் வாதிட்டனர். எமதூதர்களே! நீங்கள் அஜாமிளனை விட்டு விடுங்கள். அவன் சாகும் நேரத்தில் நாராயணனின் 

நாமத்தைச் சொன்னான். எனவே அவனை வைகுண்டத்துக்கு அழைத்துச் செல்கிறோம், என்றனர். அதற்கு தூதர்கள், ஐயன்மீர்! தாங்கள் செய்வது முறையாகுமா? அவன் பாற்கடலில் பள்ளி கொண்ட நாராயணனையா அழைத்தான். தன் மகன் நாராயணனை அல்லவா அழைத்தான்! அது மட்டுமல்ல. அவன் தாசிகளோடு கூடிக்களித்து குடும்பச் சொத்தை அழித்தான். மனைவி, குழந்தைகளின் மனதைப் புண்படுத்தினான். இந்தக் கொடியவனை வைகுண்டம் கொண்டு செல்வதில் அர்த்தமே இல்லை என்றனர். விஷ்ணு தூதர்களோ இதற்கு சம்மதிக்கவில்லை. நாராயணா என ஒருமுறை சொன்னால் போதும். அவன் அதுவரையில் செய்த பாவங்கள் தொலைந்து விடுகின்றன. இது விஷ்ணுவின் உத்தரவு. நாங்கள் அவனை வைகுண்டம் கொண்டு செல்கிறோம், என்று கூறி விமானத்தில் ஏற்றிச் சென்று விட்டனர். விஷ்ணு தூதர்களை எதிர்க்க முடியாத காலதூதர்கள், பயந்தபடியே எமனிடம் சென்றனர். அடேய், மடையர்களே, அஜாமிளனை ஏனடா விட்டு 

வந்தீர்கள்? என்று எமன் கேட்பான் என நினைத்தனர். எமதர்மராஜனோ அவர்களிடம், தூதர்களே கலங்க வேண்டாம். விஷ்ணு தூதர்கள் சொன்ன அனைத்தும் உண்மையே. சாகும் நேரத்தில் நாராயண நாமம் சொல்பவர்களை நான் தண்டிப்பதில்லை. அஜாமிளன் தவறு செய்தது கூட சூழ்நிலையின் காரணமாகத்தான். அவன் ஒரு காலத்தில் அந்தணருக்குரிய அனைத்து கர்மநெறிகளையும் தவறாமல் கடைபிடித்து வாழ்ந்தான். ஒருமுறை காட்டு வழியே நடந்து வரும் போது காமுகன் ஒருவன், ஒரு தாசியுடன் இணைந்திருந்ததைப் பார்த்து விட்டான். அதன் பின் அவனும் கெட்டுப் போனான். தாசிகளோடு உள்ள பழக்கத்தை அவனால் தவிர்க்க இயலவில்லை. ஆனால், கடைசி நேரத்தில் எப்படியோ நாராயண நாமம் சொல்லி விட்டான். நான் நாராயணனுக்கு கட்டுப்பட்டவன் தான். அவரே சர்வலோக வியாபி. அனைவரையும் காக்கும் பொறுப்பு அவருடையது. நாராயண நாமமே உலகில் உயர்ந்தது. அந்த நாமத்தை உச்சரிக்கும் ஒருவன் மாசு மருவற்ற பரிசுத்தனாகி விடுகிறான். விஷ்ணுவை ஆராதிப்பவர்களுக்கு துன்பம் என்பது எள்ளளவும் இல்லை. நீங்களும் இனி நாராயண நாமம் சொல்லுங்கள், என்றான். எமலோகத்தை நாராயண நாம கோஷம் வியாபித்தது.


ஓம் நமசிவாய

Saturday, May 29, 2021

 ஶ்ரீராமஜெயம் 🙏


*நமது  ஆன்மீக குழுவில் இருந்து திருப்பதி பற்றி பலரும் அறிந்திராத செய்திகள்*


*திருப்பதி என்பது அடிவாரப்பகுதியையே குறிக்கும். திருமலை என்பதே கோவிலுள்ள பகுதியைக் குறிக்கும். திருமலை பற்றி பலரும் அறியாத செய்திகள் சிலவற்றை இங்கு காண்போம்.*


*1. திருமலை ஏழுமலையானுடைய சிலை, "சிலாதோரணம்" என்ற விசித்திரமான கல்லில் செதுக்கப்பட்டது. இக்கல்லானது, திருமலையில் மட்டுமே காணப்படுகிறது. இக்கல்லினுடைய ஆயுள், சுமார் 250 கோடி ஆண்டுகளென, மண்ணியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.*


*2.திருமலை ஏழுமலையானுடைய பிரசாதம், உடைந்த மண்சட்டியில் வைத்துப் படைக்கப்படும் தயிர்ச்சோறு ஆகும். இப்படி ஒரு பிரசாதப்படையல், வேறு எந்த கடவுளுக்கும் படைக்கப்படுவதில்லை.*


*3.தற்போதுள்ள செயற்கையான பச்சைக்கற்பூரத்தை, தொடர்ந்து சிலவாரங்கள், கருங்கல்லில் தடவினாலே வெடிப்புகள் ஏற்பட்டு விடுகிறது. ஆனால், இந்த பச்சைக்கற்பூரத்தை, எத்தனைநாட்கள் ஏழுமலையான் சிலையில் தடவினாலும், சிலையில் வெடிப்புகள் ஏற்படுவதில்லை.*


*4.திருமலையில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் உண்மையான பெயர், "மனோஹரம்" என்பதாகும். 2−8−1715 அன்று தொடங்கி, லட்டு, ஏழுமலையானுக்குப் படைக்கப்பட்டது. 1803ஆம் ஆண்டு முதல்,பக்தர்களுக்கு, பூந்தி வடிவில் விநியோகிக்கப்பட்டது. காலப்போக்கில்தான் லட்டு வடிவிலான மனோஹரம் பிரசாதமாக, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.*


*5.திருமலை ஏழுமலையானுக்குக், கண்களை மறைத்தபடி, நாமமிடுவது சமீபகாலமாகத்தான் உள்ளது. நெடுங்காலமாக, கண்களை மறைக்காமல்தான் நாமமிடப்பட்டு வந்துள்ளது.*


*6. திருமலை ஏழுமலையானுக்குரிய நித்யானுஷ்டான பூஜை கைங்கர்யங்களை வரையறுத்துக் கொடுத்தவர் ஶ்ரீராமானுஜர் ஆவார்.*


*7.திருமலை ஏழுமலையானுடைய சிலை, நவீன கால மெஷின் பாலீஷ்போட்ட சிலைகளைப் போலவே, ஆதிகாலந்தொட்டு அமைந்திருப்பது ஆச்சர்யமான விஷயம்தான். கருங்கல்சிலைகளில், இந்தஅளவு மினுமினுப்பான சிலை, இந்த சிலையாகத்தான் இருக்கக்கூடும்.*


*9.திருமலை ஏழுமலையான் கோவிலில், ஆனிமாதம்,தெலுங்கு வருடப் பிறப்பு, தீபாவளி நாட்களில் தர்பார் நடத்தப்படுகிறது. ஆனிமாத தர்பாரின்போது, கோவில் வரவு−செலவுக்கணக்கு ஏழுமலையானிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. பிறகு, ஏழுமலையானின் ஒப்புதல் பெற்றதாகப் பாவித்து, கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் புதிதாகப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த சிறப்பு வைபவமும், இங்குமட்டும்தான் நடைபெறுகிறது.*


*10. திருமலை ஏழுமலையானுடைய சிலையிலுள்ள சிற்பசாஸ்திர நுட்பங்கள், சிற்பக்கலை வல்லுநர்களுக்கே, அதிசயமாகவும், ஆச்சர்யமூட்டும் விதமாகவும் இருக்கின்றன.*


*11. சென்னை ஆளுநராக இருந்த சர்.தாமஸ் மன்ரோ, திருமலை ஏழுமலையானுக்கு, தினமும்,தயிர்ச்சோறு, சர்க்கரைப் பொங்கல் செய்வதற்கு, தன் சொந்த பணத்தில், நைவேத்தியக்கட்டளை ஏற்பாடு செய்தார். இந்த அறக்கட்டளை இன்றும் தொடர்கிறது. இன்றைக்கும் காலை 11.30 மணிக்குக் கோவில் மணி அடிக்கப்பட்டு, மன்ரோ பெயர் படிக்கப்பட்டு, நைவேத்தியம் செய்யப்படுகிறது.*


*12. திருமலை ஏழுமலையானுக்குச் சாற்றப்படும் வஸ்திரம், 21 முழ நீளமும்,5 கிலோ எடையுமுள்ள பட்டு பீதாம்பரமாகும். இதை தயாரிப்பதற்கென்றே சென்னையில் தனிக்கடையே உள்ளது. இந்த வஸ்திரம், ஏழுமலையான் கோவில் அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கும். இவ்வளவு பெரிய வஸ்திரம் சாற்றப்படும் கடவுள் ஏழுமலையானே ஆவார்.*


*12. ஏழுமலையான் கோவிலில், முன்பு, வெள்ளிக்கிழமை தோறும், அர்ச்சனைக்கு வில்வஇலை பயன்படுத்தப்பட்டது. அதற்கு பதிலாக, தற்போது, மார்கழிமுழுவதும், வில்வ அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. வில்வஇலை சிவஅர்ச்சனைக்குரியது. வில்வம் அர்ச்சனைக்குப் பயன்படுத்தப்படும், ஒரே வைணவஆலயம் ஏழுமலையான் கோவில் மட்டுமே.*


*13. சிவராத்திரியன்று, ஏழுமலையானுக்கு, "ஷேத்ரபாலிகா" உற்சவம் நடத்தப்படுகிறது. அன்று மூலவருக்கு, வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சார்த்தப்பட்டு, வீதியுலா நடைபெறுகிறது.*


*14.ஏழுமலையான் சிலைக்கு எண்ணெய்க்காப்பு சாற்றப்படுவதில்லை; புனுகுக்காப்பு சாற்றப்படுகிறது.*


*15.ஏழுமலையானுக்கு முன்பு, பன்னீர் அபிஷேகமும், மஞ்சள் அபிஷேகமும் நடத்தப்பட்டு வந்தன. சுமார் ஐநூறாண்டுகளுக்கு முன்பு பன்னீர் அபிஷேகமும், சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்பு மஞ்சள் அபிஷேகமும் நிறுத்தப்பட்டுவிட்டன.*


*16. ஏழுமலையான் கோவிலில் சாத்துமுறை தென்கலை; ஆனால், கோவில் நிர்வாகம் வடகலையினர் வசமுள்ளது.*


*17. தாள்ளபாக்கம் அன்னமய்யா என்பவர், ஏழுமலையான் மீது 32000 கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். இது ஒரு சாதனை நிகழ்வாகும்.*


*18. ஏழுமலையான் கோவிலில், மூவகை லட்டுகள் புழக்கத்திலுள்ளன. ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு என்ற இருவகை லட்டுகளும், 750கிராம் எடையில், அதிகளவில் முந்திரி, திராட்சை, உள்ளிட்ட பொருட்களுடன் உயர்தரமான முறையிலும், குறைவான அளவிலும் தயாரிக்கப்படுபவை. இவை, பெரும்பாலும், பிரமுகர்களுக்கே தரப்படுபவை. சராசரியான "புரோக்தம்" லட்டு, அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதன்எடை 175 கிராம் ஆகும்.*


*19. திருமலை 3000அடி உயரத்திலுள்ள குளிர்ப் பிரதேசமாகும். ஆனால், ஏழுமலையான் சிலையின் வெப்பம் மட்டும், 110டிகிரி ஃபாரன்ஹீட்டிற்குக் குறைவதே கிடையாது. இது, இன்றளவும் அதிசயமான நிகழ்வாகவே உள்ளது.*


*20. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடையுடையது; இதை ஏழுமலையானுக்குச் சாற்ற 3 அர்ச்சகர்கள் தேவை. சூரியகடாரி என்ற ஆபரணம் 5 கிலோ எடையுடையது. இவை போல, அரிதான பல நகைகள், ஏழுமலையானுக்குக் குவிந்துள்ளன. அரியநகைகள் தவிர, சாதாரண நகைகளும் அமோகமாக உள்ளன. இவற்றைச் சேமிக்க இடமோ, ஏழுமலையானுக்கு உடுத்த நேரமோ இல்லாமல் இருப்பதால், சாதாரண நகைகளை மட்டும், ஆண்டிற்கு ஒருமுறை பத்திரிக்கைகளில் விளம்பரஞ்செய்து ஏலம் விடுகிறார்கள்.*


*21. உலகிலேயே அரிதான ஒற்றைக்கண் நீலம் என்ற அரிய ரத்தினக்கல், ஏழுமலையான் கோவிலில் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாயாகும்.*


*22. ஏழுமலையான் கோவிலின் தலமரம் புளியமரம்.*


*23. ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் கிடையாது; கொண்டாட்டம் மட்டும் உண்டு.*


*24. ஏழுமலையான் கோவிலினுள், கொங்கணச் சித்தர் சமாதியும் உள்ளது. ஆனால், எங்குள்ளது என்பதில் குழப்பம் நிலவுகிறது.*


*25. வெளிநாடுகளில் இருந்து, பூசனைப் பொருட்கள் வருவிக்கப்படும் ஒரே பெருமைக்குரிய கோவில் ஏழுமலையான் கோவிலே ஆகும். (எ.கா) சீனப் புனுகு, நேபாளக் கஸ்தூரி, நெதர்லாந்து ரோஜா.*


*26. ஏழுமலையானுக்குத் தினசரி , ஒருமுறை அபிஷேகத்திற்கான குறைந்தபட்ச செலவு, தற்போதைய நிலவரப்படி ஒருலட்சம் ரூபாய் ஆகும்.*


Shared as received.


*ஸர்வம்_ஸ்ரீ_கிருஷ்ணார்ப்பணம்*


ஓம் நமோ நாராயணாய 🙏

Thursday, May 27, 2021

 *மேஷ லக்கனச் சிறப்பு* 


மேஷ லக்கனம் சர லக்கனம்.


 இதன் லக்கனாதிபதி செவ்வாய். அவரே அட்டமாதிபதியும் ஆகிறார்.  செவ்வாயும் ஒரு சரக்கிரகமே. செவ்வாய்க்கு அட்டமாதிபத்தியம் உண்டு. அது அசுபஸ்தானமாகும்.


 லக்கனாதிபதியே ஆயுள் ஸ்தானாதிபதியாவதால் தீர்க்க ஆயுள் கொடுக்கிறார்.  அதனால் அட்டமாதிபத்தியம் பின் தள்ளப்பட்டு சுபக்கிரகமாகிறார் செவ்வாய்.


இந்த லக்கனத்திற்கு பஞ்சமாதிபதியான சூரியன் நட்பு கிரகம் முதல் திரிகோணமான பூர்வபுண்ணியஸ்தானம் மட்டும் பெற்று சுபகிரகமாகிறார். சூரியனுக்கு வேறு ஆதிபத்தியம் இல்லை


அடுத்த பலமிக்க திரிகோணமான பாக்கியஸ்தானத்தின் ஆதிபத்தியம் பெற்றவர் குரு , விரயமாகிய 12 - ம் ராசிக்கும் ஆதிபத்தியம் பெறுகிறார்.


 இதனால் விரயத்தையும் கலந்து கொடுக்கக் கடமைப்  படுகிறார்  என்றாலும் இயற்கையில் சுபக்கிரகமான குரு,  செவ்வாய்க்கும்  சூரியனுக்கும் நட்பு கிரகமானதாலும் பலத்த திரிகோணம் பெற்றுள்ளாதாலும் ஒரு விஷேச. சலுகைமூலம் துர்ஸ்தானாதிபத்தியம் பின் தள்ளப்பட்டு,  முழுச் சுபராக யோகாதிபதியாகிறார்.


சூரியனும் குருவும் பரிவர்த்தனை பெற்றாலோ அல்லது 1, 5 ,9 - ம் ராசிகளில் சேர்ந்து  நின்று,  லக்கனாதிபதி செவ்வாய் பார்வை ஏற்பட்டாலோ பலத்த யோகத்தை செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.


சூரியன் 7 ,10,  ராசிகளில் சஞ்சரித்தால் களத்திர வழியிலும்,  ஜீவன வழியிலும் நல்ல சிறப்பான பலனைக் கொடுப்பார்.


 சூரியனோடு,  செவ்வாய்,  குரு  சேர்ந்து 7 ,9 ,10 ராசிகளில் இருப்பது ராஜயோகமாகும். புதன் - சனியோடு மட்டும் எவ்விதத் தொடர்பும் இல்லாமலிருக்க வேண்டும்


3 , 6 - ம்  ராசிகளான துர்ஸ்தானங்களுக்கு அதிபதியாகிய *புதனும்* சரலக்கனத்திற்கு  11- ம் ராசிக்குடைய. *சனியும்* ,  இந்த லக்கனத்திற்கு *மாரகாதிபதிகளாவார்கள்* . சனிக்கு 11 -ம் ராசி பாதகாதிபத்தியமாகும்.


 இவ்விருவரும்  மறைந்து பலம் குன்றுவதே நலமாகும்.


சுக்கிரன் 2 , 7 ம் ராசிகளுக்கு குடும்பம்,  களத்திரம்,  என இரு ஆதிபத்தியம் பெறுவதாலும். களத்திரகாரகரே களத்திரஸ்தானாதிபத்தியம் பெற்றதாலும். குடும்பம், தனம், திருமணம் போன்ற வற்றிக்குச் சிறப்பான பலனைக் கொடுக்கிறார்.


மேஷ லக்கனகாரர்களின் திருமண வாழ்க்கை பெரும்பாலானோருக்கு காதல் வயப்பட்டு விடுகிறது. இதனால் பலர் தோல்வியைத் தழுவுகின்றனர் எனலாம். இவர்களால் காதலில் வெற்றி பெற பல நிலையான நண்பர்கள் இருப்பார்கள்.


சுக்கிரன் + சந்திரன் 4,7,10 ராசிகளின் ஆதிபத்திய பலமும் பெற்று இருந்து குருவின் பார்வை பெறுவது நல்லதாகும்.


செவ்வாய், சனி, சூரியன் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமல் இருப்பது விஷேமாகும்.


லக்கன கேந்திரமாகிய கடகத்தில் குரு உச்சம் பெறுவது தவறில்லை. அதனால் ஹம்சயோகம் ஏற்படும். அதனால் குரு பலத்த யோககாரகராகி விடுவார்


புதனும் , சனியும் பலம் குறைந்திருப்து லக்கனத்திற்கு நலம்


தேய்பிறை சந்திரன் சுபப்பலன்களை கொடுப்பார்.


லக்கனத்திற்கு ராகு கேது பகைவர்கள்.


நாளை ரிஷப லக்னத்தை பார்போம்


Tuesday, May 25, 2021

 அர்த்தமுள்ள ஜோதிடம் – 13


கொரோன கர்மாவும், மரணங்களும்..


அர்த்தமுள்ள ஜோதிடம்    இந்த முறை கதை வடிவில்,


கொரோன பாசிட்டிவ் என்ற ரிசல்ட்டுடன் ஆம்புலன்சில் ஏறிய அந்த பெரியவரை எங்கேயோ பார்த்த ஞாபகம் வந்தது.


 அவரது மகன் முன்னால் ஏறி கவலையோடு தலை தாழ்த்தி அமர்ந்தார்.

பின்னால் அவரோடு மனைவி இருக்க, நர்ஸ் லக்ஷ்மி ஆக்சிஜன் குடுவையை திருகி  அந்த அமில காற்றை அவருக்கு செலுத்தினாள்..


“ஜி.எச் ல பெட் லாம் ஃபுல்ல்லா இருக்கு சார். 10000 கொடு, முடிச்சி தர்றேன்” மகனிடம் கேட்டேன்.


“அவ்ளோ பணம் இல்லப்பா, நீ ஜி.எச் க்கு போ, பாத்துக்கலாம்”


“ஆம்புலன்சு க்கு 2500 இருக்குல்ல..?” நக்கலாக கேட்டேன்.


“ம்ம்” ஒற்றை எழுத்தில் பதில் வந்த்து..


ஜி.எச் அடைந்து, பின் பக்க கதவினை திறந்து விடும் போது தான் அவரது முகத்தை முழுதாய் பார்த்தேன்.. இவர் ஜோதிடர் அய்யப்பன் தானே.. பத்து வருடம் முன் பார்த்து இவரிடம் ஜாதகம் பார்த்து இருந்தேன்..


மகனின் தோளை தொட்டு “ எனக்கு மாரக தசை நடக்கல, உனக்கு கர்ம தசையும் நடக்கல, கவலை படாதே, திரும்பி வந்துருவேன்..” சொல்லிவிட்டு மனைவியோடு உள்ளேறி போனார்..


அவரது மகன் என்னிடம் 2500 நீட்ட , “ வேணாம் சார், வெச்சுக்கோ.. தேவைப்படும். உள்ள யாராவது கேட்டா என் பேரு சொல்லு சார், டிரைவர் கணேசன்னு சொல்லு சார், எல்லாருக்கும் நல்லா தெரியும், எவனும் காசு கேக்க மாட்டான்.. உங்க அப்பாவ நான் முன்னாடி பாத்துருக்கேன், நல்ல மனுஷன் சார், சீக்கிரம் சரியாயிடும், நான் வரேன் சார்..” என்று புறப்பட்டேன்..


அடுத்த பயணம் ஒரு இறந்த உடலை சுமந்து வீடு வரை செல்வதாக அமைந்தது..


அய்யப்பன் அய்யா சொன்ன ஒரு வார்த்தை.. என்ன அது? மாரக தசை, கர்ம தசை.. ஒன்றும் புரியவில்லை,, ஆனால் அவர் சொன்ன விதமும், அந்த தன்னம்பிக்கையும் என்னை ஏதோ செய்தது.. தினமும் பல பேரை பார்க்கிறென். பீதியும், பயமும் பார்த்து பழகிய எனக்கு இந்த அனுபவம் புதுசு…


10 நாள் கழித்து,


 படிகள்  இறங்கி வரும் ஜோதிடர் அய்யப்பனை தூரத்தில் இருந்தே கண்டு கொண்டேன்.

ஓடி போய், நலன் விசாரித்து என்னுடைய ஆம்புலன்சில் ஏற்றி கொண்டேன்.. 


இந்த முறை மனிதர் மிக தெம்பாயிருந்தார்.. முன் சீட்டில் தான் உட்கார்ந்தார்.. வண்டி புறப்பட்டது..


“ சார், ஒரு சந்தேகம் கேக்கலாமா?”


“கேளுப்பா, உன்னை எங்கேயோ பார்த்து இருக்கேன்.. ஆனா சட்டுனு ஞாபகம் வரல”


“பத்து வருஷம் முன்ன, குழந்தை விஷயமா உங்க கிட்ட ஜாதகம் பாத்தேனுங்க, நீங்க சொன்னா மாறியே, எனக்கு 5 வருஷம் முன்னாடி புள்ள பொறந்துச்சிங்க, சொல்லலாம் னு வூட்டாண்ட வந்தேன், நீங்க வீடு காலி பண்ணீட்டிங்க, “


“அப்படியா.. சந்தோசம்.. உன் சந்தேகம் கேளு”


“ நீங்க அன்னைக்கு ஆஸ்பத்திக்குள்ள போகும் போது மாரக, கர்ம தசை னு ஏதோ சொன்னீங்க, தைரியமா போனீங்க, அப்படி னா என்னங்க?”


“ அதுவா, சிம்பிளா சொன்னா, எனக்கு மண்டைய போடுற டைம் இன்னும் வரல, எம் புள்ளைக்கு எனக்கு கொள்ளி வைக்கிற டைம் வரல,  மரண காலம் மாரக தசை, கர்ம காரியம் பண்ற காலம் கர்ம தசை அவ்ளோ தான், எல்லாமே டைம் தான்“ சிரித்தபடி சொன்னார்..


“அது எப்படி சார் உனக்கு தெரியும், நீ என்னா கடவுளா?”


பலமாக சிரித்தார்..


“உனக்கு எத்தனை வருஷம் கழிச்சி குழந்தை பொறந்துச்சி?”


“கல்யாணம் ஆகி 10 வருஷம் கழிச்சி, அதுவும் நீங்க சொன்ன மாதிரி சரியா அதே 2015 ல”


“ ட்ரீட்மெண்ட் பாத்தியா?”


“நிறைய பார்த்தேன்,  10 வருஷம்.. நிறைய பணம் போச்சி”


“ ஏன் உனக்கு ட்ரீட்மென்ட் பாத்த உடனே குழந்தை பொறக்கல. எல்லாருக்குமே ஒரே மாதிரி மருந்து தானே, சிலருக்கு உடனே கேக்குது, பலருக்கு லேட் ஆகுது.. பலருக்கு கேக்கறதே இல்ல.. ”


“அது வந்து , அது வந்து”


“அந்த ‘அது’ தான் விதி, அந்த விதி தான் டைம், அந்த அத கடவுள் தான் எழுதுறான், அந்த விதி சம்பவம் நடத்தறதுக்கு தேவைப்படுறது ஒண்ணே ஒண்ணு தான் அது டைம்.. ‘அத’  ஒரு அளவுக்கு தெரிஞ்சிக்கற வழி தான் ஜோதிடம்.. “


“கடவுள் நல்லவர் தான, அப்போ எல்லாருக்கும் ஒரே மாதிரி நல்ல விதி எழுத வேண்டியது தானே..”


மீண்டும் மிக பலமாக சிரித்தார்..


“ உன் விதியை கடவுள் எழுதறாரு, அவரு வெறும் டைப்பிஸ்ட் தான், அதுக்கு கதை திரைக்கதை வசனம் எல்லாம் உருவாக்கி கொடுக்கறது யாரு தெரியுமா?”


“யாரு?”


“நீ தான்.. ஒரு உதாரணத்துக்கு உன் கதைக்கே வரேன்,, உன் ஜாதகத்த பாத்துட்டு உனக்கு நான் என்ன பரிகாரம் பண்ண சொன்னேன்..”


“ 5 வருஷம் யார் கிட்டயும் எந்த எக்ஸ்ட்ரா காசும் வாங்காம ஆம்புலன்ஸ் ஓட்ட சொன்னீங்க.. முடிஞ்ச அளவுக்கு உதவ சொன்னீங்க..”


“ஏன் அப்படி சொன்னேன்னு என்னைக்காவது யோசிச்சியா?”


“இல்ல” 


“நீ பாவத்த சம்பாதிச்ச வழியிலயே, அத தீர்க்கணும்.. அதுக்குதான், “


“எப்படி? எல்லாரும் வாங்கற மாதிரி தான நானும் வாழறேன், இதுல என்ன பாவம் இருக்கு.”


“நோயோட  நடந்து கூட வர்ற முடியாத அவசர கண்டிஷன் ல இல்லாதவங்க தான் ஆம்புலன்ஸ் ல வருவாங்க, அவங்க இயலாமை ய வெச்சு தான பாவ  காசு சம்பாதிச்ச,  உன்னோட இயலாமை ய பயன்படுத்தி, நீ சம்பாதிச்ச பாவ காசு செலவாகும்..  அது தான் கர்மா”


“அப்ப இந்த கொரனோ ல பாதிச்ச எல்லாரும் பாவம் பண்ணவங்க அப்படி தான சொல்ல வர்றீங்க”


“மனுஷன் மனுஷனுக்கு பண்றது தான் பாவம் னு இல்ல, இயற்கை க்கு எதிரா செயல்படுறதும் பாவம் தான், மனுசனும், மத்த உயிரினங்களும் வாழறதுக்கு தேவையான அத்தனையும் இயற்கை படைச்சிருக்கு, ஆனா மனுஷன் தான் மட்டும் சுகமா வாழணும் னு, இருக்குற அத்தனை வளத்தையும் அழிக்கும் போது, இயற்கை தன்னை பாதுக்காக்க நடத்துற போராட்டம் தான் இந்த பேரழிவு,,. இருக்கும் மீதி வளங்களை நல்லவங்களுக்கு எடுத்து வெக்கிற வேலைய தான் இயற்கை இப்போது செய்யுது… இந்த பாடத்த இயற்கை அடிக்கடி நடத்த வேண்டிய சூழ்நிலை மனுஷனால தான் ஏற்படுது, 

எந்த விலங்கும் தனக்காக காற்றை மாசுப்படுத்தல.. காலாற நடந்து போகுது, தண்ணிக்காக சண்டை போடல, ஞாயித்து கிழமை பிரியாணி வேணும் னு அடம் பிடிச்சு கறிக்கடையில் நடக்கற புனித கொலைகளுக்கு முன்னால கூட்டம் போடல….”


“புரியுது சார்”


“சக மனுசனுக்கும், இயற்கைக்கும் எந்த விதமான கெடுதலும் செய்யாதவன் இதை பத்தி கவலை பட வேண்டியதில்லை…”


“நோய் வந்தவன் என்ன பண்றது சார்? வராம இருக்க என்ன பண்றது? அதுக்கு உங்க ஜோதிடத்துல ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க...”


“புரியுமா னு தெரியல, சொல்றேன்..

1, ஜாதகப்படி மிதுன துலா கும்ப லக்னமா இருந்தா ரொம்ப கவனமா இருக்கணும்.

2, 6ம், 8ம், 12ம் அதிபதி தசா நடந்தா, அல்லது அந்த அதிபதி கடக வீடு, விருச்சிக வீடு, மீன வீட்டில் இருந்து தசா நடந்தா கவனம் அதிகம்,

3, மிதுன லக்னமா இருந்தா பெற்றோர் உடல் நிலையிலும், கடக லக்னமா இருந்தா கணவன்/மனைவி உடல் நிலையிலும், சிம்ம லக்னமா இருந்தா, குழந்தைகள் உடல் நிலையிலும் ரொம்ப கவனம் வேணும்.

4, 6ம் அதிபதி புதனோடோ, கடகத்துல கன்னியில இருந்தா ரொம்ப கவனம்.

5, இன்னும் நிறைய விதிகள் இருக்கு, ஆனா நல்லா மருத்துவ ஜோதிடம் தெரிஞ்சவங்களுக்கு தான் அது புரியும்.. "


“கொஞ்சம் புரியுது சார்..”


“ கொரனோ எப்ப முடியும் சார்”


“சுயக்கட்டுபாடு அதிகம் இருக்கற நாடுகள் ல சீக்கிரம் முடிவுக்கு வந்துடுச்சி, இங்க என்னைக்கு அது வருதோ அன்னைக்கு தான் முடியும், , ஏன்னா வைரஸ்க்கு ஜாதகமும் கிடையாது.. பாகுபாடும் கிடையாது.. பரப்பறதும் நாம தான், பாதிக்கபடுறதும் நாம தான்.. தெரிஞ்சோ தெரியாமலும் செய்த எல்லா தப்புக்கும் மனப்பூர்வமாக சரி பண்ணனும், குறைந்த பட்சம் ஒரு மரமாவது வளர்க்கணும்”


அவர் வீட்டு தெருவில் ஆம்புலன்ஸ் நுழைந்த போது மனசு குழைந்தது..


இறங்கி இரண்டடி நடந்தவர், திரும்பி வந்தார்..

“நல்லா இரு,, முன்னாடி எல்லாம் வயசுல பெரியவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கினோம், நல்லா இருந்தோம், இன்னைக்கு பெரியவங்க எல்லாம் அனாதை ஆசிரமத்துல இருக்காங்க. அவங்க புண்ணியத்துல ஆசிரமங்கள் நல்லா வளருது போல…” சொல்லி விட்டு நிதானமாக நடந்து உள்ளே போய் விட்டார்..


மகன் வந்து 2500 ரூபாய் நீட்ட, 

“வேணா சார், எம் பேர சொல்லி 50 பேருக்கு சாப்பாடு வாங்கி கொடு சார்.. கணேசன் சார்”


ஆம்புலன்ஸ் அடுத்த நோயாளியை தேடி அதிகப்பட்ச கருணையோடு புறப்பட்டது……


வேறென்ன…


நல்ல மழை பொழியட்டும். கொடிய நோய் சீக்கிரம் விலக இறைவனை கூட்டாக பிரார்த்திப்போம்...


குறிப்பு: யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை, ஜோதிடம் உண்மையில் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று ஒரு சக மனிதனாகவும், ஜோதிடனாகவும் எழுதுகிறேன்..


உங்கள் feedback க்கிற்காக என் வாட்ஸ் அப்பின் வாசல் 9444860460 எப்போதும் திறந்தே இருக்கிறது..

நன்றி


ஹரிஹரன்

ஸ்ரீ ஆதிஷங்கரா ஜோதிட மையம்.

பெரம்பூர், சென்னை

9444860460

Tuesday, May 18, 2021

 சிதம்பர   ரகசியம் !!


பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன.. எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?


இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்.

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).

(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்

மானுடராக்கை வடிவு சிதம்பரம்

மானுடராக்கை வடிவு சதாசிவம்

மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே நிரூபித்துக்  காட்டிவிட்டது.

ஓம் நமசிவாய

*யார் தருவார் இந்த அரியாசனம்?*

 🌹 *சிம்மாசனம்* 

--------------------------

 *யார் தருவார் இந்த அரியாசனம்?* 


காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசமிருந்தது. பூஜை எதுவும் நடைபெறாது பூட்டிக் கிடந்தது. காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் போய் கோயிலை தம்மிடம் தரவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார் குமரகுருபரர்.


சிம்மாசனத்தில் இருந்த நவாப் அவருக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்துப் பேசினார். மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டார். புரிந்த பின்னும் அகம்பாவத்துடன் சிரித்தார்.


"கிழவரே... நீர் என்ன சொல்கிறீர் என்று எனக்கு விளங்கவில்லை. ஏதோ தானம் கேட்கிறீர் என்பது தெரிகிறது. ஆனால், என்ன தானம் என்பது தெரியவில்லை.


எனது மொழியில் கேட்டால் அல்லவா எனக்குப் புரியும். என் மொழியில் கேளுங்கள்... தருகிறேன்" சொல்லிவிட்டு எழுந்து போனார். அந்த நவாபின் சபை குமரகுருபரரைப் பார்த்துச் சிரித்தது. குமரகுருபரரும் சிரித்தார்.


ஞானிகள் என்போர் எளிமையானவர்கள். எல்லாவித அவமதிப்பையும் இன்முகத்துடன் ஏற்பவர்கள். கோபமில்லாதவர்கள். எதிரே இருப்பவன் அரசனோ, அசுரனோ, அறிவிலியோ, ஆராய்ந்து அறிந்த பண்டிதனோ யாராயினும் தரக்குறைவாகப் பேசமாட்டார்கள்.


எந்த ஞானியும் தனக்கென்று தானம் கேட்டதேயில்லை. ஞானியின் கைகள் எப்போதும் பிறருக்காகத்தான் தானம் கேட்கும். ஊருக்காகத்தான் அவர் மனம் யோசனை செய்யும்.


ஞானி எளிமையானவர். அந்த எளிமையைக் கண்டு அவரை இகழ்ச்சியாய் எடை போடக்கூடாது. பல செல்வந்தர்களுக்கு இந்த எளிமை புரியாத விஷயமாக இருக்கிறது.


சற்று உயரமாக மேடை போட்டு... உலகமே தன் கீழ் என்கிற மமதை வந்துவிடுகிறது. ஆட்சியாளர் பலருக்கு இதுவே வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது.


ஆட்சியில் அமர்வது என்பது இடையறாது தந்திரம், கணக்கில்லாத துரோகங்கள், கலவரம் ஊட்டும் வன்முறைகளால் நிகழ்வது. இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு இருந்தால்கூட அவனுக்கு நல்ல தூக்கம் என்பதில்லை. மூன்றையும் கொண்டவனுக்கு எவ்விதம் தூக்கம் வரும்.


ஆழ்ந்து தூங்காதவனிடம் அமைதி எப்படி குடிகொண்டு இருக்கும். அமைதியில்லாத எவனும் பிறரை எளிதில் அவமதிப்பான். ஆட்சியாளர்கள் சகலரையும் அவமானப்படுத்த இந்த அமைதியின்மையே காரணம்.


மறுநாள் விடிந்தது. காசி தேசத்துச் சான்றோர்கள் அவையில் கூடினார்கள். பாட்டுப் பாடுகிற வித்வான்களும், ஆடல் மகளிரும், அரபியில் கவிதை சொல்கிறவர்களும், அந்த மொழியில் இறைவன் பெருமை படிப்பவர்களும் ஒன்றுகூடினார்கள்.


"எங்கே அந்த மதுரைக் கிழவர்...?" நவாப் விசாரித்தார்.


"அவர் அரபி படிக்க போயிருக்கிறார்." யாரோ சொல்ல, சபை சிரித்தது.


"அப்படியா... ஆயுஸுக்கும் இந்த பக்கம் திரும்ப மாட்டார் என்று சொல்லுங்கள்..." மறுபடி சபை சிரித்தது.


"அவருக்கு வயது வேறு ஆகிவிட்டது. அரபி மொழியை இறைவனிடம் போய் படிக்க வேண்டும்." யாரோ சொல்ல, மீண்டும் சபை சிரித்தது.


"அடடா.. இது தெரிந்திருந்தால் வெறும் கையுடன் அனுப்பியிருக்க மாட்டேனே... வழிப்பயணத்திற்கு ஏதேனும் கொடுத்து அனுப்பியிருப்பேனே..."


"இறைவனை பார்க்கப்போகும் வழிப்பயணத்தில் நவாப் அவர்கள் என்ன கொடுத்துவிட முடியும்.." ஒரு பெரிய அரபிப் புலவர் சந்தேகம் எழுப்பினார்.


"சில சவுக்கடிகள்..." ஒரு உபதளபதி துள்ளிக்கொண்டு சொன்னான். மறுபடியும் அந்த நவாபின் சபை கைகொட்டிச் சிரித்தது.


"ஆக… அவர் வரவே மாட்டார் என்று சொல்கிறீர்களா..."


"வரலாம் மன்னா.. இந்துக்களுக்கு மறுபிறப்பில் நம்பிக்கை உண்டு. அந்த மதுரைக் கிழவர் இறந்து மறுபடி பிறந்து இதே காசியில் எருதாக வருவார். உம்முடைய அழுக்குத் துணிகளைச் சுமப்பார். அதுவரை பொறுத்திருங்கள்.


நவாபால் சிரிப்பை அடக்க முடியவில்லை. "மதுரைக் கிழவர் மிருகமாக வருவார் என்கிறீர்களா..."


"ஆமாம்... ஆமாம்..." என்று அந்த துதிபாடும் சபை சொல்லியது.


வாசலில் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். பிடரியும், கோரைப் பற்களும்.. சிவந்த கண்களுமாய் ஒரு முதிர்ந்த ஆண்சிங்கம் சபைக்குள் நுழைந்தது.


குமரகுருபரர் அந்த சிங்கத்தின் மீது இரண்டு கால்களையும் தொங்கவிட்டு அதன் பிடரியைப் பிடித்து அமர்ந்திருந்தார். ஆண் சிங்கத்தின் மேல் அமர்ந்த ஆண் சிங்கம் போல் காட்சியளித்தார்.


அவர் நரைத்த தலைமுடியும், தலைப்பாகையும், வெள்ளை வெளேர் என்று வயிறு வரை நீண்ட தாடியும், இறையை உணர்ந்த உறுதியான முகமும், போகமே அறியாது கடுமையான பிரும்மச்சரியத்தில் இருக்கும் கட்டுக்குலையாத உடலும் அவரை சிங்கம்போல் காட்டின.


அந்த ஆண்சிங்கத்தை தொடர்ந்து மூன்று பெண் சிங்கங்களும் அதன் குட்டிகளும் வந்தன. நவாபின் சபை கலைந்து, காலைத் தூக்கிக் கொண்டது. நவாப் வாளை உருவிக் கொண்டு பதட்டத்துடன் நின்றான்.


"என்ன இது..." கத்தினான்.


"நேற்று நீர் அமர ஆசனம் தரவில்லை. எனவே ஆசனத்தை கையோடு எடுத்து வந்தோம்."


"இதுவா ஆசனம்... இது சிங்கமல்லவா..."


"இது சிங்கம்தான். இதன் மீது நான் அமர்ந்திருப்பதால் இது என் ஆசனம். என் சிம்மாசனம். உன் ஆசனத்திலும் சிம்மம் இருக்கிறது. ஆனால், பொம்மைச் சிம்மம். பொம்மையில் அமர்ந்திருக்கிற பொம்மை நீ. உயிர் மீது அமர்ந்திருக்கிற உயிர் நான். உனக்கு நான் சொல்வது புரிகிறதா..."


காலியான ஒரு ஆசனத்தில் உட்காரும் பொருட்டு அந்தச் சிங்கம் பாய்ந்து நவாபுக்கு அருகே நின்றது. நவாப் கத்தியைக் கீழே போட்டுவிட்டு பயத்தில் அலறினான்.


ஒரு பெண்சிங்கம் அவன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டது. சிறுநீர் விட்டது. மற்ற சிங்கங்கள் சபையை சுற்றிவந்தன. சபை வெறிச்சோடிப் போயிற்று. துதிபாடுகிற கூட்டம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிற்று. உலகத்தில் எந்த துதிபாடியும் ஆபத்து காலத்தில் அருகே இருப்பதில்லை.


குமரகுருபரர், "இங்கே வா.." என்று சிங்கங்களைக் கூப்பிட்டார். சிங்கங்கள் அவர் காலடியில் அமர்ந்து கொண்டன. நவாப் சிம்மாசனத்தின் காலடியில் பொத்தென்று உட்கார்ந்தான்.


குமரகுருபரர் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் கண்கள் சிரித்தன. முகச் சுருக்கங்கள் சிரித்தன. இதழ்க் கடைகள் சிரித்தன. காது வளையங்கள் சிரித்தன. அவர் மாலையாய் அணிந்திருந்த உருத்திராட்சைகள் சிரித்தன.


நவாப் சலாம் செய்தான். உங்களை யாரென்று தெரியாமல் பேசியதற்கு என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். என் பொறுமையும், என் சபையின் திறமையின்மையும் உங்களைத் தவறாக எடை போட வைத்துவிட்டன. மறுபடி நான் மன்னிப்புக் கேட்கிறேன்..." மீண்டும் சலாம் செய்தான்.


"தயவு செய்து சொல்லுங்கள், உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?"


"காசி விசுவநாதர் ஆலயம் திறக்கப்பட வேண்டும். கங்கை நதிக்கரையில் மடம் கட்டிக் கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும்."


"நீங்கள் என் மொழியில் பேசினால் தருவதாகச் சொன்னேனே."


"நான் இப்போது உன் மொழியில்தானே பேசுகிறேன். எவர் துணையுமின்றி புரிந்துகொண்டு எனக்குப் பதில் சொல்கிறாயே..."


"ஆமாம். பாரசீகத்தில் பேசுகிறீர்கள். இலக்கண சுத்தமாக பேசுகிறீர்கள். எப்படி... எப்படி இது சாத்தியமாயிற்று?"


"இறையருள்."


"எந்த இறைவன்... உங்கள் இறைவனா..."


"உன்னுடையது, என்னுடையது என்று பொருட்கள் இருக்கலாம். இறை எல்லோருக்கும் பொது. எல்லா மொழியும் இறைவன் காலடியில் இருக்கும் தூசு."


"ஒரே இரவில் இறைவன் பயிற்சி கொடுத்தானா?"


"ஒரு நொடியில் கொடுத்தான்."


"நீங்கள் மண்டியிட்டு வேண்டினீர்களா..."


'சகலகலாவல்லி மாலை' என்றொரு கவிதை நூல் இயற்றினேன். அந்தக் கவிதை நூலில் இறைவனை வேண்டினேன்.


"மறுபடியும் உங்களுக்கு சலாம். காட்டுச் சிங்கங்களையே காலடியில் போட்டு வைத்திருக்கும் உங்களுக்கு இந்த நவாப் எம்மாத்திரம்? காசி விசுவநாதர் கோயில் உங்களுடையது. அது திறக்கப்பட்டு சாவி உங்களிடம் தரப்படும். நீங்கள் பூஜை செய்து கொள்ளலாம்.


கோவிலுக்குள்ளே ஒரு பள்ளிவாசல் கட்டியிருக்கிறோம், அந்தப் பள்ளிவாசல் எங்களுடையதாகவே இருக்க அனுமதி கேட்கிறோம்..." நவாப் பணிவாகப் பேசினார்.


(எழுத்துச்சித்தர் பாலகுமாரன்)


🙏நன்றி கு. பண்பரசு

Thursday, May 13, 2021

 ""'குலதெய்வமே உன்னை கொண்டாடுவோம்.”””


உந்தன் பெருமையை உலகுக்கு எடுத்து சொல்லாட்டா

எனக்கு இந்த ஜென்மம் எடுத்து என்ன பயன் சொல்லாத்தா


நாடும் பக்தர் இடர்களைந்து, இன்னல் நீக்கி, துயர் துடைத்து, துன்பம் போக்கி, மனத்தில் இன்பம் அளிப்பவராம் ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி மஹா பெரியuவா திவ்ய திருவடிச் சரண் வேண்டுவது அன்றி வேறு ஒன்றில்லையே


குலதெய்வம் குறித்து காஞ்சி மகாபெரியவா விளக்கியுள்ளர். மகா பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, விவசாயி ஒருவர், மகா பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது.


வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் மகா பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி, ‘‘சாமி. ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாமான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.

மகா பெரியவா அவரிடம், ‘‘குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார். குலதெய்வமா. அப்படின்னா?” திருப்பிக் கேட்டார் அவர். ‘‘சரிதான். உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?” என்றார்.

‘‘ஆமாம் சாமி. வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.

‘‘உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோட இருக்காங்களா?” என்று கேட்டார் பெரியவா.

‘‘ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழி பாட்டனார் அவர்.”

‘‘அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்தி கொஞ்சம் கேட்டுண்டு வா.”

‘‘ஏன் சாமி. அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாதான் என் பிரச்னை தீருமா?”

‘‘அப்படித்தான் வெச்சுக்கோயேன்” என்றார் பெரியவா.

‘‘என்ன சாமி நீங்க. ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?” என்றார் விவசாயி.

‘‘நான் அப்படிச் சொல்லவே இல்லையே!”

‘‘அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே!” என்று வெள்ளந்தியாய்க் கேட்டார்.

‘‘காரணமாத்தான் சொல்றேன். ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. நீ, என்னை மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான். எனக்கு, பாத்திரமே கூட தேவையில்லை. ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாத்தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா?”

‘‘அப்ப குலதெய்வம்தான் பாத்திரமா. அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?” என்று குழப்பத்துடன் கேட்டார் விவசாயி.

‘‘நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரைலபட நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார்.

அவரும் ஒரு பத்து நாள் கழித்து, ‘‘சாமி! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சுபோய் கிடந்துச்சு. யாருமே போகாம விட்டதால, கோயிலை புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க, ஒரு நடு கல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டுட்டு வரேன்” என்றார்.

‘‘சபாஷ். அந்தக் கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவா!

‘‘சாமி! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே. எதுவுமே சொல்லலியே?”

‘‘அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன். நான் சொன்னதை மறந்துடாதே. பேச்சாயியை விட்டுடாதே!” என அருளினார் பெரியவா.

அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காணத் திரும்ப வந்தார். இந்த முறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்று தான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.

‘‘சாமி. நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! ஆனா, எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க. இந்த அதிசயம் எப்படி நடந்தது?” என்று திரும்ப அவர் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார்.

ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்கார விவசாயியிடம் ‘குலதெய்வம்’ என்பது குறித்து மகா பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று!

நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வம். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ எனும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை

பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத் திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக, உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அதுதான் இயற்கையும்கூட!

ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் எனும் தெய்வ சாந்நித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள்.

காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்; போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சந்நிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?”

- மகா பெரியவர் சொல்லச் சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம்!

அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?

“ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வதுகூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்ஞ் நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.”

இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே. நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம்.

இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”

காஞ்சி- மகா பெரியவா விளக்கி முடிக்க, வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது

Wednesday, April 21, 2021

 21.04.2021 #ஸ்ரீ #ராம #நவமி.

****************************

ஜெகம் புகழும் புண்ணிய கதை இராமனின் கதையே..


மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவ தாரம் பரிபூரண அவதாரம் ஆகும். அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்ப தற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார்.


மனிதன் நீதிமுறைகள், ஒழுக்க நியதிகள் மற்றும் ஆன்மிக லட்சியங்கள் குறித்து உறுதி யான கொள்கையுடன் விளங்க வேண்டும். இப்படி தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியது ராமாவதாரம். ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்று வாழ்ந்தவர் அவர்.


அந்த ராமபிரான் அவதரித்த நாளே ‘ராமநவமி’ என்று கொண்டாடப்படுகிறது.


அயோத்தியை ஆண்ட தசரத சக்கரவர்த்திக்கு கோசலை, சுமித்ரா, கைகேயி ஆகிய மூன்று மனைவிகள் உண்டு. தனது புஜ, பல பராக்கி ரமத்தால் உலகெங்கும் வெற்றிக்கொடி நாட்டி புகழ்கொடியை பறக்கவிட்ட தசரதருக்கு நாட்டை ஆள ஆண் வாரிசு இல்லாதது பெரும் மனக்குறையாக இருந்தது. தனது மனக்குறை யை குலகுரு வசிஷ்ட மகரிஷியிடம் அவர் கூறினார்.


வசிஷ்டரின் ஆலோசனைப்படி மகரிஷி ருஷ்யஷ்ருங்கர் உதவியுடன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அந்த யாகத்தின் விளைவாக யக்னேஸ்வரர் தோன்றி பாயசம் நிறைந்த ஒரு கிண்ணத்தைக் கொடுத்து அதை மனைவிக ளிடம் கொடுக்கும்படி கூறினார். தசரதர் பாய சத்தை தனது மனைவிகளுக்கு கொடுத்தார். சில நாட்களுக்கு பிறகு கோசலை, கைகேயி, சுமித்ரா ஆகிய மூவரும் கர்ப்பமுற்றனர்.


பங்குனிமாதம் நவமியன்று கோசலை ஸ்ரீ ராம பிரானைப் பெற்றார். கைகேயிக்கு பரதனும், சுமித்ராவுக்கு லட்சுமணன், சத்ருக்னன் ஆகியோரும் பிறந்தனர்.


ராமன் அழகும், நல்ல தோற்றமும் அரச அம்சங் களுடனும் பிறந்தார். பூமியில் அவருக்கு நிகர் எவருமில்லை. மிகவும் பண்பானவர். அகில உலகமும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. தன்னை நம்பி வந்தவர்களை  கைவிட்டதே இல்லை.


மிதிலை மாநகரில் ஜனகன் அரண்மனையில் ராமபிரானின் கைப்பட்டு பரமேஸ்வரனின் வில் உடைப்பட்டது. கானகத்தில் பெருமாளின் கால்பட்டு கல் உருகப்பெற்றது. ராமபாணத் தால் தாடகையை வதம் செய்தார். ராமநாம மகிமையால் வேடன் வால்மீகியின் சாபம் நீங்கியது. ராமரின் திருநாம ஜெபத்தால் நமது பாவங்கள் எல்லாம் விலகும். புண்ணியங்கள் பெருகும்.


தசரதனுக்கு புத்திரனாக அவதரித்த ராமன் வசிஷ்டரிடம் வித்தைகளை கற்றார். விஸ்வா மித்திரருடன் சென்று தாடகையை வதம் செய்தார். மிதிலை அடைந்து வில்லை ஒடித்து ஜானகியை மணம் புரிந்தார். கூனியின் சூழ்ச்சியால் கைகேயி தசரதனிடம் பெற்ற வரத்தால் கானகம் சென்றார். சீதையை கவர்ந்து சென்ற ராவணனை தேடிச் செல்லும் வழியில் சுக்ரீவனுக்காக வாலியை வதம் செய்தார். அனுமன் உள்ளிட்ட வானரர்களின் உதவியுடன் கடலுக்கு நடுவில் பாலம் அமைத் து இலங்கைக்கு சென்று போரில் ராவணனை அழித்தார். விபீஷ்ணனை இலங்கையின் அரசனாக நியமித்தார்.


சீதையை தீக்குளிக்க செய்து புஷ்ப விமானத் தில் அழைத்து கொண்டு அயோத்தி சென்று முடிசூடி நல்லமுறையில் அரசாண்டார்.


ராமன் பிறந்தகாலத்தில் ஐந்து கிரகங்களும் மிகவும் உச்சநிலையில் இருந்தது. அதனால் ராமருடைய ஜாதகத்தை எழுதி, அதை பூஜை அறையில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு ஜாதக ரீதியாக ஏற்படக்கூடிய நவக்கிரக தோஷம் நீங்கும். வியாதிகள் குணமாகும். ஐஸ்வரியங்கள் பெருகும்.


விரதம் இருப்பது எப்படி?

**************************

ராமநவமி அயன்று அதிகாலையில் குளித்து விட்டு, வீட்டை தூய்மைப்படுத்தி விரதம் கடை பிடிக்க வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை நன்றாக சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவற்றால் பொட்டிட்டு, துளசி மாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.


சாதம், பாயசம், பானகம், வடை, நீர்மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெற் றிலை, பாக்கு இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். அன்றைய தினம் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், பாராயணம் செய்வது மாக இருக்க வேண்டும். அன்றைய தினம் ராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷே கத்தை கண்டுகளிக்கலாம். அர்ச்சனை முடிந்த பின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காலை யில் உணவு எதுவும் சாப்பிடாமல் ராமநவமி விரதம் இருந்து ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.


லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்கள் நண்பர்களாக மாறி வருவார்கள். வியாதிகள் நீங்கும். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குடும்பநலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும். நாடிய பொருட்கள் கைகூடும்.


‘ஸ்ரீராமஜெயம்’ என்ற எழுத்தை 108 முறை அல்லது 1008 முறை எழுதத் தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்த டுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.


விசிறி தானம்

****************

ராமநவமி அன்று சிலர் விசிறிகளை தானமாக வழங்குவார்கள். ஒரு சிலர் பானகம், நீர்மோர், வடை, பருப்பு போன்ற வற்றையும் கொடுப்பது உண்டு. ராமபிரான், மகரிஷி விஸ்வமித்திர ரோடு சென்றபோதும், 14 ஆண்டுகள் வனவா சம் செய்த காலத்திலும் வெயிலில் அலைந்து கஷ்டப்பட்டார். அவர் பிறந்ததும், சித்திரை மாதமான கோடை காலத்தில் தான். ராமர் பிறந்த போது அவரைப் பார்க்க வந்தவர்களு க்கு, தசரதர், நீர்மோரும், பானகமும் கொடுத்து உபசரித்தார். கூடவே விசிறியும் கொடுத்தார். இதனால் ராமநவமியன்று இவற்றை பிறருக்கு கொடுக்கும் வழக்கம் உருவானது


" ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே" ஜெய் ஸ்ரீ ராம்...


எல்லோரது வாழ்வும் ஸ்ரீஇராமரின்  அருளால் சிறந்து விளங்க பிரார்த்திக்கின்றேன்...


ஸ்ரீ ராம..  ஜெய ராம..  ஜெயஜெய ராமா...

 *நவ கிரக தோஷங்கள் நீக்கும் ஸ்ரீ ராமர் ஜனன ஜாதகம்.* இந்த ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து பூஜித்தால் கிரக தோஷ பீடைகள் நீங்கும் என்பது ஐதீகம். சகல ஐஸ்வரிய அபிவ்ருத்தியும் ஆயுள் அபிவிருத்தியும் ஸ்ரீராமரின் அருளால் கிடைக்கும். ஓர் இல், ஒரு சொல், ஒரு வில் என்று வாழ்ந்த ஸ்ரீ ராமர் ஜாதகத்தில் நவகிரகங்களில் முக்கிய கிரகங்கள் உச்சத்தில் அமர்ந்துள்ளன. மேஷத்தில் சூரியன் உச்சம், கடகத்தில் சந்திரன் ஆட்சி, குரு உச்சம், துலாம் ராசியில் சனி உச்சம், மகரத்தில் செவ்வாய் உச்சம், மீனம் ராசியில் சுக்கிரன் உச்சம் என மொத்தம் 5 கிரகங்கள் உச்சம் பெற்றும், மனோகாரகன் சந்திரன் ஆட்சி பெற்றும் அமர்ந்துள்ள அம்சமான ஜாதகம் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் ஜாதகம்.



நவமியில் பிறந்த ராமபிரான், இலங்கையை ஆட்சி செய்து வந்த ராவணனை வதம் செய்வதற்காகவே அவதரித்தவர். சிவபெருமானிடம் இருந்தும், பிரம்மதேவனிடம் இருந்தும் பல சக்திவாய்ந்த வரங்களைப் பெற்றிருந்த ராவணன், அந்த வரங்களைக் கொண்டு, முனிவர்களையும், தேவர்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் தயவு தாட்சன்யம் இன்றி துன்புறுத்தினான்.


ராவணன் என்ற அரக்கனை அழிக்கவே மகாவிஷ்ணு மனிதராக ராமராக அவதரித்தார். காரணம் மனிதர்களையும் குரங்குகளையும் ஏளனமாக நினைத்தே ராவணன் பிரம்மன் சாகா வரம் கேட்ட போது மனிதர்கள், குரங்குகளுக்கு தன்னை கொல்ல தகுதியில்லை என்று சொன்னார். எனவேதான் ஸ்ரீராமர் மனிதராக அவதாரம் எடுத்து குரங்குகளின் துணையோடு ராவணனை அழித்தார்.


ராம அவதாரம்

நவமியில் அவதரித்த ஸ்ரீராமர்

சித்திரை மாதம் வளர்பிறையான நவமி திதியில் பிறந்தவர் ஸ்ரீராமர் அதைத் தான் ராம நவமி என்ற பெரும் விழாவாக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். அயோத்தி மன்னர் தசரதருக்கும் கவுசல்யாவிற்கும் நவமி திதியில் மூத்த மகனாக ராமனாக அவதரித்தார் மகாவிஷ்ணு.


 ராமர் ஜாதகம்

யோக ஜாதகம்

ஸ்ரீராமர் கடக லக்னம், கடக ராசி அவர் பிறந்த போது, நவ கிரகங்கள் எங்கெங்கு இருந்தன என்று பார்த்தால் ஐந்து கோள்கள் உச்சத்தில் இருக்க கடக லக்னம் புனர்பூச நட்சத்திரத்தில் சந்திரனும் பிரகஸ்பதியும் இணைந்து குரு சந்திர யோகத்தில் இருக்கிறார்கள். குருவும் செவ்வாயும் நேருக்கு நேராக பார்த்து குரு மங்கள யோகத்தில் இருக்கிறார்கள். சந்திரனும், செவ்வாயும் நேருக்கு நேராக பார்ப்பதும் யோகம்தான்.



ராமரின் தாய்

தாயின் பங்கு

கடகத்தில் லக்னத்தில் சந்திரன், குரு. லக்னாதிபதி லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். ஆறு ஒன்பத்துக்கு உரிய குரு லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். கடகம் கால புருஷத்திற்கு நான்காவது வீடு. ராமர் ஜாதகத்தில் நான்காவது வீடான துலாமில் சனி உச்சமடைந்து வக்ரமடைந்திருக்கிறார். சனி ஏழு மற்றும் எட்டிற்கு உரியவர். ராமருக்கு அம்மாவும், வளர்ப்பு தாயான சித்தியும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.


 *வனவாசம் சென்ற ராமர்* 


ராமரின் அம்மா முக்கிய பங்காற்றியிருக்கிறார். நான்கில் சனி உச்சம். சனி ஆயுள் காரகன், வேலைக்காரன், தசரதனின் இன்னொரு மனைவி கையேயி ராமரின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றியவர் அவரால்தான் அவர் வனவாசம் சென்றார். ஏழாம் வீடான களத்திரம் சீதை, களத்திர காரகன் சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்துள்ளார்.



ராவணன்

போர் செய்த ராமர்

ராமர் ஜாதகத்தில் ஆறாம் வீட்டில் ராகு இருக்கிறார். நோய், கடன், எதிரி ஸ்தானம். ராகு அரக்கன். ராவணன் என்ற அரக்கனை கொல்ல வேண்டியதுதான் ராம அவதாரத்தின் நோக்கம். ராமரின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் செவ்வாய் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். தனது மனைவியை காப்பாற்ற அவர் போர் செய்தார். செவ்வாயின் ஏழாம் பார்வை லக்னத்தின் மீது விழுந்ததே வெற்றிக்கு காரணம்.


அவதார நோக்கம்

யுத்தம் செய்த ராமர்

கர்மவினையின் பயனாக, ராம அவதார நோக்கம் நிறைவேறுவதற்காக ராமபிரான் வனவாசம் செல்ல நேர்ந்தது. அவரோடு சீதையும், லட்சுமணரும் உடன் சென்றனர். வனத்தில் இருந்தபோது, சீதையின் அழகு பற்றி அறிந்த ராவணன், அவளைக் கடத்திச் சென்றான். இதனால் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் வந்தது. வானர வீரர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு, கடலில் பாலம் அமைத்து, இலங்கை சென்ற ராமர், ராவணனை அழித்து சீதையை மீட்டார். அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநாட்டப்பட்டது.


ராம நவமி விரதம்

விரதம் இருந்தால் பயன்

ராமபிரான் அவதரித்த நாளில் விரதம் இருப்பது மிகவும் நன்மை அளிக்கக்கூடியது. பிரதமை தொடங்கி நவமி வரை ஒன்பது நாட்களும் ராம நாமத்தை உச்சரித்தபடியே இருக்க வேண்டும். ஒன்பது நாட்களும் ராமபிரானுக்கு சர்க்கரைப் பொங்கல், பாயசம் என நைவேத்தியம் படைத்து வழிபடுவது சிறப்பு. ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்தி வணங்குங்கள். ஒன்பது நாட்களும் நைவேத்தியம், மாலை அணிவிக்க முடியாதவர்கள் நவமி அன்று மட்டுமாவது அதைச் செய்வது நல்லது. இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் நினைத்த காரியங்கள் கைகூடும். செல்வம், புகழ் உள்ளிட்ட எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்

ராமர்

ஜாதகத்தை பூஜை செய்யலாம்.

நவகிரக தோஷம் நீங்கும்

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணம் ராம அவதாரம். ராமன் தன் அவதாரம் மூலம், உலகுக்கு உணர்த்தாத பொருளே இல்லை, உரைக்காத உண்மையில்லை. தந்தை சொல் கேட்டல், உடன்பிறப்பு ஒற்றுமை, தாய்க்குச் சிறந்த மகனாக இருத்தல், வாக்குத் தவறாமை, ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஏகபத்தினி விரதம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஓர் இல், ஒரு சொல், ஒரு வில் என வாழ்ந்து வழிகாட்டியவர் ஸ்ரீராமர். அவரது ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து பூஜை செய்தால் ஜாதக ரீதியாக இருக்கும் நவகிரக தோஷங்களும் நீங்கும்.

Wednesday, April 14, 2021

 சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்..

தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!


பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம்

இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத்

தெரியாத உண்மைகள்.


சித்திரை 1

ஆடி 1

ஐப்பசி 1

தை 1


இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.


நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?


"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று  சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.


என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.


வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....


ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!


பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...


அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...


இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!


சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?


சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)


அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)


மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)


மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)


இந்த வானியல் மாற்றங்களையும்,  அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும்  நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...


#சித்திரை  (vernal equinox) - புத்தாண்டு.

#ஆடி 18 (summer solstice) - ஆடிப்பிறப்பு.

#ஐப்பசிஅமாவாசை(autumn equinox)- தீபாவளி.

#தை 1(winter solstice) - பொங்கல்.


இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...


#நமது #முன்னோர்கள்  "#தன்னிகரற்ற" #மாபெரும் #அறிவாளிகள் . #மிகவும் #மகத்தானவர்கள்.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Monday, April 5, 2021

 *தாமத திருமணம் ஏன்?*


கோள்களின் கோபமா? சமுதாயத்தின் எதிர்பார்ப்பு சாபமா?


*நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ?*


வாழ்க்கை வாழ்வதற்கே

தட்டி கழிப்பதற்கு அல்ல.


35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள் !...


30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 20க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர்.


இதற்கு சொத்து மதிப்பே காரணம். அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படைச் சொத்து, விவசாய தோட்டம் 5 அல்லது 10 ஏக்கருக்கு மேல் இருக்க வேண்டும். 


அவரே Post graduate degree முடித்து, சென்னை, பெங்களூர் IT கம்பெனியில் வேலையில் இருக்க வேண்டும் அல்லது வெளிநாட்டில் வேலையில் இருக்க வேண்டும்.


குறைந்தது 40,000க்கும் மேல் சம்பளம் வாங்க வேண்டும்.


பல இளைஞர்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற தகுதியான வேலை கிடைக்காததால், சுய தொழில் செய்து வருகின்றனர். 


சுய தொழில் செய்யும் ஆண்களை திருமணம் செய்து கொள்ள பெண்கள் விரும்புவது இல்லை.பெண் வீட்டாரும் விரும்புவது இல்லை.


வீட்டுக்கு ஒரே பையனா இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும் !!.


1995 வரை திருமணம் செய்தவர்கள் சொத்து, உத்தியோகம், தகுதி பார்த்துத் தான் திருமணம் செய்வேன் என்று சொல்லி இருந்தால் இந்த தலைமுறையே இருந்து இருக்காது.


இதில் இப்போ என்ன பிரச்சனை என்றால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதால் திருமண வயதை கடந்தும் ஆணும், பெண்ணும் அதிகமாக இருப்பது தான் !!


ஒரு கட்டத்தில் ஜாதக பொருத்தமும் திருமண தடங்கலாக இருந்து வருகிறது.


சரி, இதன் விளைவு என்ன என்று பார்ப்போமா ?!.


1947 ஆண்டுக்கு முன் 13 - 15 வயதுக்குள் திருமணம். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை. ஒரு டஜன் குழந்தைகள். ஒவ்வொருவரும் இந்த குழந்தைகளை பார்த்துக் கொள்வார்கள். பெண்ணின் வேலையே பெற்ற பிள்ளை, குடும்பத்தோடு கொஞ்சி மகிழ்வது தான். தவறான எண்ணம் ஏற்பட வாய்ப்பும் இல்லை. தேவையும் இல்லாத மன நிலை.


1960 ஆண்டுக்கு முன்பு வரை ஒவ்வொரு கிராமத்திலும் பலருக்கு 10 குழந்தைகள், 8 குழந்தைகள், குறைந்தது 5 குழந்தைகள் என சர்வ சாதாரணமாக பெற்றுக் கொண்டார்கள். நல்ல நிலை தொடர்ந்தது.


1980 ஆண்டுக்கு பின் 100ல் 80 குடும்பம் இரண்டு குழந்தைகள், எங்காவது ஒரு சில குடும்பத்தில் மூன்று குழந்தைகள் உண்டு. விளம்பரமும் நாம் இருவர், நமக்கு இருவர் என்று சாக்கிய சதி வெளிப்படையாக பிரச்சாரம் செய்தது.


2000 ஆண்டுக்கு பின் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைதான் என்பது எழுதப்படாத தீர்ப்பாக மாறி விட்டது. நாம் இருவர், நமக்கு ஒருவர் என்ற சதிப் பிரச்சாரம். பின்பு நாமே குழந்தை, நமக்கேன் குழந்தை என்று வேறு.


ஒற்றை குழந்தையின் வளரும் மன நிலை எப்படி இருக்கும் !!


ஆனால் 2010 ஆண்டுக்கு பின் ஒரு குழந்தை வேண்டுமே இறைவா!!! என்று போகாத கோவிலும் இல்லை, பார்க்காத மருத்துவமும் இல்லை என்ற நிலையில் உள்ளனர்.


இதற்கு அறிவியல் ஆயிரமாயிரம் காரணங்களை சொல்லலாம். ஆனால் முதல் காரணம் ஆரோக்கியம்.


1960 ஆண்டு வரை பெண்ணுக்கு 16, ஆணுக்கு 20ல் திருமணம்

உணவு: ராகி, கம்பு, சோளம், குதிரைவாலி, வரகு, கருப்புக் கொள்ளு, கருப்பட்டி...


1975 ஆண்டுக்கு மேல் பெண்ணுக்கு 18, ஆணுக்கு 22.

உணவு: ஐ.ஆர் அரிசி


1992 ஆண்டுக்கு மேல் பெண்ணுக்கு 20, ஆணுக்கு 25

உணவு: பட்டை தீட்டப்பட்ட டபுள் பாலீஷ் அரிசி.


2000 ஆண்டுக்கு மேல் பெண்ணுக்கு 25, ஆணுக்கு 30க்குள்..

உணவு: துரித உணவு.


2010க்கு மேல்

உணவு: மைதா மாவில் தயாரித்த கேவல உணவு, வெள்ளை சர்க்கரை பயன்பாடு அதிகம். தரம் குறைந்த எண்ணெய் என மனித இனம் நோய் மற்றும் மலட்டுத்தன்மை தாக்கத்தில் இருக்கிறோம்.


இந்நிலையில் 28க்கு மேல் 35 வயது வரையிலும் திருமணம் ஆகாமல் பெண்கள் அதிகளவில் இருக்கிறார்கள்.


ஆண்கள் 30 வயது முதல் 40 வயது வரை திருமணம் ஆகாமல் உள்ளார்கள்.


வசதிகள் வைத்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம்.


திருமணத்துக்கு முன் ஏழையாக இருந்து, பிற்காலத்தில் பணம், புகழ் பெற்ற மனிதர்கள் ஏராளம். முதலில் சொத்து, சுகம் என வாழ்ந்து திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் ஏழ்மைக்கு வந்தவர்கள் எத்தனையோ அதிகம் பேர்.


எனவே, வரும் காலம் இப்படித் தான் இருக்கும் என்று நீங்கள் தீர்மானம் செய்யாமல் இறைவனை முழு மனதாக வேண்டி, நல்லதை நினைத்து, திருமணங்கள் முடித்தால் பாசத்தோடு வளர்த்த பெற்றவர்களுக்கு துரோகம் செய்யாமல் இருக்கலாம்.


எல்லாவற்றுக்கும் மேலாக 

மாடு வளர்த்தால் கேவலம். 

பால் கறந்தால் கேவலம்.

மரம் வளர்த்தால் கேவலம்.

விவசாயம் செய்தால் கேவலம்.

இது நம் வாழ்வியல் என்பதை சுலபமாக மறந்து விடுகிறோம்.


ஐடி தொழில் போகிறோம்.

கலாச்சாரம் மாற்றப் படுகிறது.

செய்யாத தவறுக்கு சுய அறிவு இல்லாத இன்னொருவனிடம் கை கட்டி நிற்கிறோம்.

இஷ்டம் இல்லாத பல நிலையை கடந்து பணம் சம்பாதிக்கிறோம்.

ஒரு கட்டத்தில் வெளியே போகச் சொல்கிறான்.

வாழ்வை தொலைக்கிறோம்.


இது எல்லாமே நம் நிஜ வாழ்வியலை கேவலம் என்று நாம் தொலைத்ததால் வந்த வினை தானே!.


வெளி நாடு போகிறேன் என்பான்.அவன் என்ன வேலை செய்வான் என்று அவனே வெளியில் சொல்ல முடியாது.

ஆனால் தான் உபயோகிக்கும் பாத்ரூமை சுத்தப் படுத்த தயங்கியவனாகவே கடைசி வரை வாழ்ந்து சாகிறான்.


நம் வீடு, நம் குடும்பம், என் தோட்டம், என் மாடு, என் சாமி, என் கலாச்சாரம், என் தெய்வம், என் பண்பாடு, என் மண், என் ஊர், என் தேசம் என்று ஒற்றுமையில் துண்டாடப்பட்டு உடைகிறானோ அன்றே தொலைகிறான்.


ஆண் 23,24 தாண்டிய உடன், பெண்கள் 20,21 வயதில் திருமணம் செய்து விட வேண்டும்.


நான் சம்பாதித்தால் தான் திருமணம். எனக்கு வெள்ளை மாப்பிள்ளை வந்த பிறகு தான் திருமணம் என்று எதையாவது கற்பனை செய்து பொன்னான காலத்தை தொலைத்தால் பொன்னான குழந்தைச் செல்வம் இருக்காது.


கஷ்டம் என்பது தவறு அல்ல. அது வாழ்க்கைக்கு தேவை.


கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். குடும்பம் என்பது எவ்வளவு முக்கியம். அதற்கு பணம் தேவை தான். ஆனால், பணத்தால் வாழ்க்கையை இழந்து விடக் கூடாது.


சரியான கல்வி அறிவு, நல் ஒழுக்கம், நற்குணம், நல்ல சுறுசுறுப்பு, உழைக்கும் மனப்பான்மை உள்ள மாப்பிள்ளையா, பெண்ணா என கண்டறிந்து திருமணம் முடியுங்கள்.


அத்தனையும் ஒரு பெண்ணே வாழ்க்கையில் கொண்டு வந்து விட்டால் ஆணே உனக்கு என்ன வேலை!!.

அது ஆண் மகனுக்கும் அழகு அல்ல. அது அந்த பெண்ணுக்குமே சுவாரஸ்யம் இருக்காது.


பெண்களே, உங்களுக்கு தெய்வ நம்பிக்கையும், அன்பும், அறிவும் இருந்தால் கட்டாயமாக உங்கள் கணவனோடு சேர்ந்து முன்னேறி விடுவீர்கள். பல குழந்தை பெற்று சிறப்போடும் இருப்பீர்கள்.

ரொம்ப கணக்குப் போட்டாலும் ஆண்டவன் போடும் கணக்கு வேற மாதிரித் தான் இருக்கும். அப்பா சம்பாதித்து கொடுக்கும் பிள்ளைக்கு பெரிய அனுபவம், நம்பிக்கை இருக்காது. 


அதே நேரத்தில் அவள் வீட்டில் கார் கிடைக்குமா, பவுன் கிடைக்குமான்னு பேயா அலையாமல் நம்ம குணத்துக்கு ஒத்து வருவாளான்னு பார்க்கும் ஆம்பளையா ஆண் வாழ வேண்டும்.


வாழும் வாழ்க்கையில் மனது ஒத்து போகிறதா பாருங்கள். வாழும் சிறந்த வயதை தொலைக்காதீர்கள்.


தெய்வ நம்பிக்கை ஒன்றை மட்டும் அசைக்க முடியாத அளவு நிலையாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்க்கைக்கு இனிமை ஆகியே தீரும்.


வாழ்க்கையில் கடைசி வரை ஏதாவது கடன், ஏதாவது பிரச்சனை இருக்கும். எல்லாவற்றையும் முடித்து விட்டுத் தான் திருமணம் என்றால் வாழும் காலம் தொலைந்து போகும்.


ஜாதகத்தையும் சமுதாயத்தையும்

(பாதகத்தை) சாதகமாக்கி

நல்வாழ்வுக்கு வழி அமையுங்கள் இளைய சமுதாயமே!


 *ஸ்ரீமால் சிந்தைகூரியன்*


Saturday, April 3, 2021

 .அன்பார்ந்த அரசு ஊழியர் ஆசிரியர் பெருமக்களே உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்

தாங்கள் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தால் தயவுசெ ய்து இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி இதை வாசிக்கவும்.


தேர்தல் பணியை பற்றி எண்ணற்ற ஆலோசனைகள் காணொளி காட்சிகள் இணையத்தில் பரவிக்கிடக்கின்றன.


ஆனால் எனது ஒரே ஒரு அறிவுரை தேர்தல் முடிந்து 6ஆம் தேதி இரவு தேர்தல் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தையோ நான்கு சக்கர வாகனத்தையோ தாங்களே ஓட்டிவந்து தங்கள் வீடு நோக்கி பிரயாணம் செய்ய வேண்டாம் என்பதே எனது பணிவான வேண்டுகோள்.

 5 ஆம் தேதி இரவு   இடத்தில் உறக்கம் வராமல் சிரமப்பட்டு இருப்போம். தேர்தல் நாளன்று அதிகாலை 4 மணிக்கு எழுந்து மாதிரி வாக்கெடுப்புக்கு தயார் செய்து அதைத் தொடர்ந்து 11 மணி நேரம் இடைவிடாமல் வாக்கெடுப்பு நடத்தி பின்பு மேலும் அவற்றைப் தயார் செய்து மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் வரை இடைவிடாது உழைத்து இருப்போம்.


நமது உடலும் கண்களும் எவ்வளவு களைத்துப் போய் இருக்கும் என்பது நமக்கே தெரியாது.


இதன் பிறகு நாம் அவசரஅவசரமாக வீடு நோக்கி நமது வாகனத்தை நாமே ஓட்டிச் செல்லும்போது நாமோ அல்லது நம்மைப் போல் தேர்தல் பணி முடித்து எதிரில் வருபவரோ ஒரு நொடி கண்ணசந்தால் போதும் என்ன நடக்கும் என்பது தாங்கள் அறிந்ததே.


இதை தவிர்ப்பதற்கு ஒரே வழி வாக்குப்பதிவு எந்திரங்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைத்த பிறகு குறைந்தபட்சம் நான்கு மணி நேரமாவது வாக்குச்சாவடியில் தூங்கிவிட்டு ஓய்வெடுத்த பின் வாகனங்களை ஓட்டிச் செல்லலாம். மூட்டைப் பூச்சிக் கடிக்கும் கொசு கடிக்கும் பயந்து உயிரை பணயம் வைக்காமல் இருப்பது புத்திசாலித்தனம்.


நான்கு மணி நேரம் தாமதமாக வீட்டுக்கு செல்வதால் எதையும் நாம் பெரிதாக இழந்து விடப் போவதில்லை. 

இப்போதே இந்த மனநிலையை நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள். நாம் சிங்கம் புலி போன்ற கொடிய விலங்குகளுடன் தேர்தல் பணியாற்ற போவதில்லை நம்மை போல ஒரு ஆசிரியரிடம் அல்லது அரசு ஊழியர் உடன் தான் பணியாற்ற போகிறோம் என்பதை முதலில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


அரைமணி நேரத்தில் வீட்டுக்கு சென்றால் நிம்மதியாக உறங்கலாம் என்ற எண்ணமே பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது. அரை மணி நேர பயணத்தில் ஒரு நொடி தடுமாற்றம் அல்லது உறக்கம் நமது வாழ்வையே சிதைத்துவிடும். 


தேர்தல் பணி ஆற்றியவர் வாகனத்தை இயக்க 

ஒரே வாகனத்தில் வந்த நண்பர்கள் இரவிலேயே பயணம் செய்ய தயவுசெய்து ஊக்குவிக்க வேண்டாம்.


கடந்த தேர்தல்களில் நானும் அவசரப்பட்டு வாகனம் ஓட்டி வந்து எனக்கு முன்பு இருசக்கர வாகனங்களில் வந்த நண்பர்கள் விபத்தை சந்தித்து அதனால் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய முடியாமல் இன்று வரை அவர்களும் அவர் குடும்பத்தாரும் அனுபவித்து வருவதை கண்கூடாக பார்ப்பதனால் தான் இந்த பதிவு.


ரியல் வாழ்வில் ரீவைண்ட் கிடையாது ஊழியர்களே

என்றும் அரசு ஊழியர் நலனில்.                 நாளை அனைவரும் நம் நாட்டின் புனிதப் பணிக்குச் செல்கிறோம். எளிமையாகச் செல்லுங்கள். பொன் நகைகள் அதிகம் வேண்டாம். புன்னகைய மட்டுமே முகத்தில் கொண்டு செல்லுங்கள்.

செல்லும் இடம் புதிய இடம். தொடர்பில்லாத பேச்சைத் தவிருங்கள். உங்கள் மனதில் உள்ள விருப்பு, வெறுப்புகளை வீட்டில் விட்டுச் செல்லுங்கள். அரசியல் பேச வேண்டாம். நமக்குத் தரப்பட்ட புனிதப் பணியை மன விருப்போடு செய்வோம்.

செல்லும் இடம் குக்கிராமமாகவும் இருக்கலாம். எனவே பிரட் பாக்கெட், பேரீட்சை, உலர் பருப்புகள் போன்றவற்றை உடன் கொண்டு செல்லுங்கள். வாட்டர் பாட்டில் அவசியம். வாக்குச்சாவடிக்கு தண்ணீர் கேன் BLO மூலம் ஏற்பாடு செய்து கொள்ளவும். எளிய பருத்தி உடைகளை தேர்வு செய்யுங்கள். கோடை வெயிலை இதமாக எதிர்கொள்ள முன்வாருங்கள்.வாக்குப் பதிவு மையத்தில் அமைதியும், பொறுமையும் உங்களை வெற்றிகரமான தலைமையாளராக முன்னிறுத்தும்.

தேவையான மருந்து, மாத்திரைகள் எடுத்துச் செல்ல மறக்கவேண்டாம். மையத்தில் அலுவலர்கள் அனைவரும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள். பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கவும். பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்க. முடிந்த வரை வாக்குச்சாவடியிலேயே தங்குவது நலம்..

குக்கிராமப் பகுதிகளில் உணவினைப் பகிர்ந்து கொள்ளுங்கள். வாக்குப் பதிவின் போது தவறு நேரா வண்ணம் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். உள்ளூர் மக்களுடன் இணக்கமான நேர்மையுடன் நட்புப் பாராட்டுங்கள். இந்திய கிராமங்கள் உயிர்ப்பும், உணர்வும் உள்ளவை. அம்மக்கள் நமக்கு நிச்சயம் தேவையான உதவிகளை வழங்குவர்.

முதல் நாளே வாக்குச்சாவடி முகவர்களை அழைத்து ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பை நல்க கேட்டுக் கொள்வதோடு, mock poll நடத்த உரிய நேரத்தில் வரச் சொல்லுங்கள்.வயதான பெரியோர், உடல் ஊமுற்றோர், குழந்தைகளோடு வரும் தாய்மார்கள் மேல் பரிவு காட்டுங்கள்.2:1 என்ற விகிதத்தில் பெண்களுக்கு வரிசையில் உரிமை தாருங்கள். வீட்டிலேயே கடைசி நேர வரிசைடோக்கனை தயார் செய்து கொண்டு செல்க.17 - cபடிவம் தயார் செய்து வாய்ப்பிருந்தால் Xerox எடுத்து முகவர்களுக்கு தர முயற்சி செய்யவும்.

வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவு எந்திரங்களை zonal officers எடுக்கும் வரை பாதுகாக்கவும். பின் அனைவரும் சேர்ந்து ஊருக்குப் புறப்படவும். பெண் ஊழியர்களை தனிமையில் விட்டு விட்டு வர வேண்டாம். நாட்டிற்கு நாமாற்றும் கடமையோடு, நமது உடல் நலனும் அவசியம் காக்கப்பட வேண்டும். கவனமுடன் பணி செய்வீர். பணியில் வெற்றியுடன் தேர்தலுக்கு விடை தந்து வீடு வந்து சேர்ந்திடுவீர்.

அன்பு, கனிவு, வெற்றி இதுவே உமது தாரக மந்திரம். இடையூறு ஏதுமின்றி பணி முடித்து வீடு திரும்ப இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன். அன்பு நண்பர்களே

தேர்தல் பணி என்பது முக்கியமானதாக இருந்தாலும் 06.04.2021 இரவு தேர்தல் கருவிகளை ஒப்படைத்தப் பின்பு அனாதைகளாக நடுரோட்டில் விடப்படுவோம் என்பது தெரிந்த்துதான். வீட்டிற்கு விரைந்து செல்லலாம் என்ற நோக்கோடு அறிமுகமில்லாத நபர்களோடு வாகனங்களில் செல்வதை தவிருங்கள். வண்டிகளை வேகமாக ஓட்டுவதையும், ரயில் தண்டவாளங்களை கடப்பதையும் தவிர்த்து விடவும். இரவு நேரத்தில் சாலைகளை கவனமாக கடந்து உங்களை எதிர் நோக்கி காத்துக் கிடக்கும் குடும்பத்தாரை சென்று அடையுங்கள். 

நமக்கு எப்போதும் ஆதரவாக செயல்படும் கட்சி *நம் குடும்பம்* மட்டுமே .


 *உங்கள் பணி சிறக்க* *வாழ்த்துக்கள்!* 


💐🙏


Monday, March 29, 2021

 மந்திரங்களைக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கியவா்கள் ரிஷிகள். ஒவ்வொரு மந்திரமும் ரிஷி, தேவதை, சந்தஸ் என்ற மூன்றையும் கொண்டிருக்கும். மந்திரத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்த ரிஷி, அந்த மந்திரத்துக்குரிய தேவதை, அந்த மந்தரத்தின் சொல்லமைப்பு (சந்தஸ்),. எனவே மந்திர ஜெபம் செய்யும் போது, இம் மூன்றையும் போற்றித் துதிக்க வேண்டும் என்பது விதி.


மந்தரத்தை வெளியிட்ட ரிஷி ஆதி குரு, அம்மந்திரத்தை நமக்கு உபதேசித்த மானிட குரு ஆகியவா்களை வணங்குவதற்காக வலது கையால் சிரசைத் தொட்டு உரிய மந்திரம் சொல்ல வேண்டும். இதுவே ரிஷி நியாசம்.


நமக்குச் சமமானவரை வணங்கும் போது நமது கூப்பிய கைகளின் விரல்களை அவா்கட்கு எதிரே நீட்டி வணக்கத்தைத் தெரிவிக்கின்றோம். தேவதையை வணங்கும்போது இதயத்தில் வசிப்பவராகப் பாவனையோடு மார்புடன் ஒட்டி நிமிர்ந்த கைகளைக் கூப்பியும் குருவைச் சிரமேல் கைகூப்பியும் வணங்குவது முறை.


2. சந்தஸ்


சந்தஸ் என்பது மந்தரத்தின் சொல் அமைப்பு. அதற்கு வணக்கம் தெரிவிக்கும் முறையில் உதட்டின் வெளியே வலது கையால் தொடுவது சந்தஸ் நியாசம் எனப்படும்.


3. தேவதை


தேவதையை இதயத்தில் அமா்ந்திருப்பதாகப் பாவனையுடன் அதயஸ்தானத்தைத் தொடுவது தேவதா

நியாசம்.


4. பீஜம்


மிகச் சிறிய ஆலம்விதையிலிருந்து மிகப் பெரிய ஆலமரம் வளா்ந்தோங்கிப் பயன் தருகிறது. மாபெரும் மரம் வளா்வதற்கான சக்தி அனைத்தும் அந்தச் சிறிய விதையிலே அடங்கிக் கிடக்கிறது. அந்த வித்துக்குப் பீஜம் என்பா்.


இந்தப் பிரபஞ்சமும் பஞ்ச பூதங்களும் சூக்கும நிலையிலிருந்தே தூலமான நிலைக்கு வந்தன. அந்தச் சூக்கும நிலைக்கு முன்பாக அதி சூக்கும நிலையிலிருந்தே வந்தன. ஒவ்வொரு சூக்கும ஒலியிலிருந்தே வெளிப்பட்டன. அந்த நுண் ஒலியை பீஜம் என்பா். பஞ்ச பூதங்கட்கும், ஒவ்வொரு தேவதைக்கும் பீஜ மந்திரம் உண்டு.


5. சக்தி


அந்த விதையில் அடங்கிக்கிடக்கிற வீரியம் சக்தி எனப்படும். வீரியம் தேஜஸ், பலம் என்பன சக்தியின் வெளிப்பாடுகள்.


6. கீலகம்


சக்தி தேவையின்றி வேறிடத்துக்குச் செல்லமுடியாதபடி கட்டி வைக்கும் முளைக்குச்சி போன்றது கீலகம். ஒரு தேரின் சக்கரத்திற்கு அச்சாணி போல மந்திரத்துக்குக் கீலகம் ஒரு முக்கியமான அங்கம்.


மந்திரங்களின் ஆற்றல்


மந்திரங்கள் என்பவை சில எழுத்துக்களின் சோ்க்கை. பல மந்திரங்களுக்குப் பொருள் இல்லை. ஆயினும் அந்த மந்திரங்களின் சப்தங்கட்குச் சக்தி அதிகம். பீஜ மந்திரங்கட்கு என்ன பொருள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவற்றில் அளப்பரிய சக்தி அடங்கிக்கிடக்கிறது.


இந்த மந்திரங்களை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு உருப்போட்டால் அதற்கு உகந்த ஓா் உருவம் உண்டாகி அவ்வுருவம் ஜெபிப்பவனுடைய கண்ணுக்குத் தோற்றம் அளிக்கும் என்றும், அந்த உருவத்திற்குச் சில காரியங்களைச் செய்யக் கூடிய வலிமை உண்டாகும் என்றும் சொல்வா். இந்த உருவங்களைப் படைக்கக்கூடிய எழுத்துக்களை எவ்வாறு கண்டு பிடித்து இணைத்தனா் என்பது வியப்பான ஒன்று. இந்த எழுத்துக்களையே ஆரம்ப காலத்தில் பீஜ அட்சரம்

என்று குறிப்பிட்டனா்.


மேலே குறிப்பிட்ட பீஜாட்சரங்களின் மூலமாக மந்திரங்களை அமைத்து, ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு தேவதையின் பெயரை இட்டு, அவ்வகைத் தேவதைகளின் சக்தியை உணரச் செய்துள்ளனா்.


இத் தேவதைகளில் சிறு தேவதைகள், தேவதைகள், அதிதேவதைகள் என்ற மூன்று பிரிவுகள் உண்டு. குட்டிச் சாத்தான், யட்சிணி போன்ற தேவதைகள் சிறு தெய்வங்கள்: காளி, துா்க்கை, ஆஞ்சநேயா், நவக்கிரகங்கள் என்பன தேவதைகள்: சிவன், விஷ்ணு, பார்வதி, முருகன், கணபதி என்போர் அதிதேவதைகள்.


ஒவ்வொரு தெய்வத்தின் உருவத்தையும் நேரடியாகப் பார்த்துத் தரிசிக்க வேண்டுமானால் அதற்கு உபாயமாக ஒவ்வொரு மந்திரம் உள்ளது.


மந்திரம் என்பது ஒரு ஒலிக்கோவை. எழுத்துக்களின் கூட்டம்தான். ஒலி வடிவான எழுத்துக்களும் ஒளி வடிவான உருவங்களும் ஒரே உருவத்திலிருந்து வந்தவையே. அவை ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடா்பு உடையவை. விஞ்ஞானிகள் ஒரு குளக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்தார்கள். அப்போது அவற்றின் அதிர்வுகள் (Vibrations) நீரின் மேலே மிதக்கின்ற இலேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்ததைக் கண்டு நாதத்துக்கே உருவம் கொடுக்கிற சக்தி உண்டு என்பதைக் கண்டறிந்தார்கள்.


ஒவ்வொரு ராகத்துக்கும் ராக தேவதைகள் உண்டு என்று இசை நூல்கள் கூறுகின்றன.


அக்பரின் சபையில் தான்சேன் என்ற இசைமேதை இருந்தார். இரவு நேரத்திற்குரிய ஒரு ராகத்தைப் பாடுமாறு அரசா் கட்டளை இட்டாராம். அப்போது தான்சேன் ஒரு மந்திரத்தை உச்சரித்தவுடன் அரண்மனையின் எல்லாப் பக்கங்களிலும் இருள் கவ்வியதாம். சில மந்திர உச்சாடனங்களின் மூலம் இயற்கையையே வசப்படுத்தலாம் என்று தந்திர சாத்திரங்கள் கூறுகின்றன.


இறையருளைப் பெற


இறையருளைப் பெறுவதற்கு மந்திர உபாசனை சிறந்த சாதனம். மந்திர ஜெபத்துக்குரிய

வழி முறைகளையும் நுட்பங்களையும் தந்திர சாத்திரங்கள் கூறுகின்றன.


மந்திரம் என்றால் தன்னை நினைப்பவரைக் காப்பது என்று பொருள். எல்லாம் வல்ல கடவுளுக்கு வடிவம் மூன்று. அவை 1. தூல வடிவம் 2. சூக்கும வடிவம் 3. அதி சூக்கும வடிவம். அவற்றுள் தூல வடிவம் என்பது மந்திர வடிவம் ஆகும். சூக்கும வடிவம் என்பது உயிருக்குயிராய் நமக்குள்ளே இருக்கிற வடிவம். அதி சூக்கும வடிவம் என்பது உண்மை அறிவாக, ஆனந்த மயமாக உள்ள சிற் சக்தி வடிவம். முன்னைய இரண்டும் பொது இயல்பு. பின்னையது சிறப்பு இயல்பு.


எல்லாவற்றையும் அறியச் செய்யும் ஆற்றல், உயிர்கட்கு அருள் புரியும் ஆற்றல் என்னும் இரண்டு ஆற்றல்களைக் கொண்டவை மந்திரங்கள்.


மந்திரங்கள் – அதி தேவதைகள்


உலகில் உள்ள பொருள்களை இருவகை 1. அசையும் பொருள் 2. அசையாப்பொருள். அசைபவை உயிர்கள். அசையாதவை ஜடப் பொருள்கள். இவ்வாறுள்ள எல்லாப் பொருள்களையும் இடமாகக் கொண்டு அவற்றை இயக்கி வைக்கிற அதி தேவதைகள் உண்டு. அந்த அதிதேவதைக்கு மந்திரங்கள் உண்டு. மந்திரங்களால் ஆகாத காரியம் இல்லை. இம்மந்திரங்கள் எல்லாவற்றிலும் சிறந்தது ஸ்ரீ வித்யை என்கிறது லலிதா சகஸ்ர நாமம். பெண் தெய்வங்கட்குரிய மந்தரங்களை ஸ்ரீ வித்யை என்பா். ஆண் தெய்வங்கட்குரிய மந்திரங்களை மந்திரம் என்றே குறிப்பிடுவா்.


மந்திரமும் விதையும்


ஒவ்வொரு மந்திரமும் ஒவ்வொரு தெய்வத்தின் சொரூபம் ஆகும். ஒவ்வொரு மந்திரத்திலும் உயிர்ச் சக்தி உறங்கிக் கிடக்கின்றது. அவை விதைகளைப் போன்றவை. விதை முளைத்துப் பலன் தர வேண்டுமானால் அதற்கான சூழ்நிலைகள் தேவையல்லவா?


ஒரு விதை முளைத்துப் பலன் கொடுக்க வேண்டுமானால் 1. உரிய காலம் வேண்டும். 2. உரிய நிலம் வேண்டும். 3. பக்குவப்பட்ட விதையாக இருக்க வேண்டும். 4. பழக்கப்பட்டவன் விதைக்க வேண்டும். 5. நல்ல கைராசி

வேண்டும். 6. விதை முளைக்கும் போது கூடவே களைகள் தோன்றும். அவற்றைக் களைய வேண்டும். 7. ஆடு மாடுகள் மனிதா்கள் போன்ற உயிர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும். 8. நீா் பாய்ச்சி உரம் போட வேண்டும். 9. நன்கு விளைந்ததும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு வந்து சோ்க்க வேண்டும்.


அதுபோலவே மந்திரங்களையும் உரிய காலத்தில் ஜெபிக்க வேண்டும். அவை மனத்தில் பதியும்படி மனநிலை அமைய வேண்டும். ஒரு குருவின் மூலமாகப் பெற வேண்டும். சந்தேகம் போக வேண்டும். அவ்வப்போது குருவைத் தரிசித்து மந்திர ஜெபத்துக்கு வலுவை ஊட்டிக் கொள்ள வேண்டும். மந்திரம் பலன்தர ஆரம்பிக்கும்போது அகங்காரம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


மந்திர உபாசனை


எவன் ஒருவன் 14 வருடம் ஒரு குறிப்பிட்ட தெய்வ மந்திரத்தை இடைவிடாமல் ஜெபித்து வருகிறானோ அவனுக்கு அந்த மந்திரம் நிச்சயமாகப் பலன் கொடுக்கும். எனக்கு மந்திரம் பலிக்கவில்லை, பலன் தரவில்லை என்று மந்திர ஜெபத்தை விட்டு விடுபவா்கள் பாவிகள். மந்திரம் பலிப்பதுபோலப் பலித்து ஆளையும் கீழே தள்ளிவிடும்.


இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு நம்பிக்கையோடும், முயற்சியோடும் பக்தியோடும் உபாசிக்கிறவனே நல்ல உபாசகன்.


பலவகை மந்திரங்கள்


சில மந்திரங்கள் காய்களாக இருக்கிற நிலையில் பலன் தரும். சில பழுத்த பின் பலன் தரும். சில விதையாக இருக்கிற நிலையில் பலன் தரும். முட்செடி போன்ற மந்திரங்கள் உண்டு. தீமை தரும் மந்திரங்கள் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலான மந்திரம் ஸ்ரீ வித்யை மந்திரம். அது ஏகாட்சரி, திரியட்சரி, நவாட்சரி, பஞ்சதசாட்சரி, ஸ்ரீவித்யை மந்திரம். அது ஏகாட்சரி, திரியட்சரி, நவாட்சரி, பஞ்சதசாட்சரி, ஸ்ரீவித்யை என் ஆறு வகைப்படும். ஓா் எழுத்துக் கொண்ட புவனேஸ்வரியின் பீஜ மந்திரம் உடையது ஏகாட்சரி, மூன்று பீஜ

மந்திரங்கள் கொண்ட வாலையின் மந்திரம் திரியட்சரி. சித்தா்கள் உபாசித்து உயா்வடையக் காரணமான மந்திரம் இது.


ஒன்பதாவது எழுத்துடைய அந்தரியின் மந்திரம் நவாட்சரி


15 பீஜங்கள் உடைய புவனாபதியின் மந்திரம் பஞ்சதசாட்சரி. ஸ்ரீம் என்னும் பீஜத்தை முதலில் கொண்ட 16 எழுத்து மந்திரம் சோடசி. 28 பீஜம் கொண்ட மந்திரம் மகா சோடசாட்சரி. 27 பீஜம் உள்ள மந்திரம் ஸ்ரீ பராவித்தை எனப்படும். சோடசி மந்திர உபாசனை செய்தவா் பகவான் இராமகிருஷ்ணா்.


ஸ்ரீவித்யை உபாசகா்கள்


சக்தியின் ஸ்ரீவித்யை மந்திரங்களை உபாசித்து அருள் பெற்றவா்கள் உண்டு. இராமன், பலராமன், இலக்குவன், பரதன், சூரியன், அக்கினி, குபேரன், இந்திரன், பிரமன், திருமால், சிவன், கணபதி, கந்தன், மன்மதன், நந்தி, மனு, உலோபா முத்திரை, அகத்தியா், துா்வாசா், சநகாதி முனிவா்கள், திருமூலா் இவா்களெல்லாம் ஸ்ரீவித்யை மந்திரம் ஜெபித்து உயா்நிலை அடைந்தவா்களே ஆதிபராசக்தியின் அருள்பெற்று உயா்ந்தவா்களே!


தாடகையைக் கொல்ல இராமனுக்கு விசுவாமித்திரா் உபதேசம் கொடுத்த மந்திரம் பாலா மந்திரம். அதனை “வாலை மந்திரம்” என்பா். சித்தா்களின் உபாசனைத் தெய்வம் வாலையே ஆவாள்.


ஸ்ரீவித்யை போல சிறந்த இன்னொரு மந்திரம் உண்டு. அசபா காயத்ரி என்று பெயா். அது ஹம்சம், ஸோஹம் என்று இரண்டு வகை.


அசபை, அசபா, காயத்ரி, அம்ச மந்திரம், அங்குச மந்திரம், ஜீவ மந்திரம் எனப் பலபெயா் இதற்குண்டு.


இதனைப் பயபக்தியுடன் ஜெபித்தால் இறந்தவா்களை எழுப்பலாம். நினைத்த எல்லாம் கைகூடும். முத்தி கிடைக்கும் கரநியாசம் அங்க நியாசம், அதற்கான முத்திரைகள் என விதிமுறைகளோடு ஜெபித்தால் பலன் உண்டு.


தெய்வமாகலாம்


ஒரு நிலைக்கண்ணாடியின் முன்பு நின்று கொண்டு எந்தக் கோலத்தில் நிற்கிறோமோ அந்தக் கோலத்தையே கண்ணாடி காட்டும். அதுபோல

ஒருவன் எந்தத் தேவதைக்குரிய மந்திரத்தை ஜெபம் செய்கிறானோ அந்த மந்திரத்திற்குரிய அதி தேவதையாகவே அவன் ஆகிவிடுகிறான். என்பது மந்திர சாத்திர விதி. அந்நிலையில் அவன் மந்திர ஆன்மாவாகி விடுகிறான் என்பது விதி. “மன ஒருமையோடு என் மந்திரங்களைப் படிக்கிறபோது நீயும் சக்தி மயமாய் ஆகிறாய் மகனே!” – என்பது நம் அன்னையின் அருள்வாக்கு. பறவை, விலங்கு, மரம் முதலிய அசையும் பொருள், அசையாப் பொருள் ஆகிய அனைத்துக்கும் மந்திரம் உண்டு. அதி தேவதைகள் உண்டு.


மந்திரங்களும் – பலன்களும்


மந்திரங்களின் துணையால் உலகியல் இன்பங்களிலிருந்தும், உலகக் கவா்ச்சியிலிருந்தும் விடுபட்டு முக்தியையும் பெறலாம். உலகியல் பொருள்களையும், இன்பங்களையும் அடையலாம்.


மந்திரத்தால் இங்கிருந்தபடியே தேவா்களையும் அழைக்கலாம். வசீகரம் முதலிய சக்திகளையும் பெறலாம். மந்திரத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். உடம்பிலே பஞ்ச பூதங்களை வெல்லும் ஆற்றல் வாய்ந்த மையங்கள் உண்டு. மந்திர சித்தி பெற்றவன் கூடுவிட்டுக் கூடு பாயலாம். தண்ணீரில் மூழ்கிக் கிடக்கலாம். நினைத்த இடத்திற்குப் போகலாம். வரலாம். மற்றவா்கள் கண்ணுக்குத் தெரியாமலே உலாவலாம். தேவா் உலகமும் சென்று வரலாம். ஏன்? ஒருவா்க்கு மரணத்தையும் உண்டாக்கலாம்.


மகாலட்சுமி மந்திரம் என ஒன்று உண்டு. இம்மந்திரம் செல்வத்தை அள்ளிக் கொடுப்பது. ஆனால் எல்லோர்க்கும் பலன் தருவது இல்லை.


வறுமையில் வாடிய வித்யாரண்யா் இம்மந்திர ஜெபத்தால் வறுமையைப் போக்கிக் கொள்ள மகாலட்சுமி உபாசனையை மேற்கொண்டார். இறுதியில் மகாலட்சுமி அவருக்குக் காட்சி கொடுத்தாள். இந்தப் பிறவியில் உனக்குச் செல்வம் அளிக்க முடியாது. உன் பிராரத்துவ வினை இது. என்றாளாம். உடனே வித்யாரண்யா், பிறவியிலிருந்து தப்பிக்கக் குறுக்கு வழி

ஒன்றை மேற்கொண்டார். சந்நியாசம் வாங்கிக் கொண்டால் புதுப்பிறவி எடுப்பதற்குச் சமம். ஆகவே சந்நியாசம் பெற்றுக் கொண்டார்.


மந்திர ஜெபத்துக்கான பலனை மகாலட்சுமி கொடுத்தாக வேண்டும் அல்லவா? உடனே அளவற்ற செல்வத்தை அள்ளிக் கொடுத்துவிட்டாள்.


வித்யாரண்யருக்கு இப்போது புதிய தரும சங்கடம் வந்து விட்டது.


சந்நியாசியாகி விட்டபிறகு பணத்தைத் தொடக்கூடாது. அடி தாயே! இந்தச் செல்வத்தை வைத்து சந்நியாசியாகிவிட்ட நான் என்ன செய்யப்போகிறேன் என்றாராம். என்ன செய்வாயோ…… தெரியாது. உனக்குக் கொடுத்து கொடுத்ததுதான் என்றாளாம் மகாலட்சுமி.


வேறுவழியின்றி இந்து சாம்ராஜ்யத்தை – விஜய நகரப் பேரரசை நிறுவுவதற்காக அரிகரா் என்ற அரசா்கட்கு அந்தச் செல்வத்தை அப்படியே கொடுத்து விட்டாராம்.


நினைத்த காரியத்தில் வெற்றியைக் கொடுப்பது வராகி மந்திரம். ஏவல், பில்லி, சூன்யம் போன்ற தீமைகளை வலுவிழக்கச் செய்வது அஸ்வாரூடா மந்திரம்.


கா்ண பிசாசினி என்ற தேவதைக்குதிய மந்திரம் உண்டு. இம்மந்திர ஜெபம் சித்தியானால் அந்த உபாசகன் மற்றவா்கள் வாழ்வில் நடந்தவை நடக்க இருப்பவை, ஆகிய சம்பவங்களைத் தெரிந்து சொல்ல முடியும்.


ஆவஹந்தி தேவதை என்ற ஒரு தேவதை உண்டு. அவள் மந்திரததை உள்ளன்போடு ஜெபித்து வந்தால் ஒரு குடும்பத்தைப் பசியில்லாமல் காப்பாற்றும். “ஆவஹந்தியும் அடுப்பிலே நெருப்பும் இருந்தால் சாப்பாட்டுக்குப் பஞ்சமில்லை” என்பது கேரள நாட்டுப் பழமொழி.


தேள்கடி, பாம்புக்கடி, விஷம் இறக்க மந்திரம் உண்டு. எதிரிகளின் சதித்திட்டங்களை முறியடிக்க மந்திரம் உண்டு. வீட்டில் உள்ள கெட்ட தேவதைகளை விரட்ட மந்திரம் உண்டு. வீடு, தோட்டங்களில் திருடுகள் நடக்காமல் தடுக்க மந்திரம் உண்டு. நல்லது செய்யவும் மந்திரம் உண்டு. கெட்டது செய்யவும் மந்திரம் உண்டு.


எல்லா

மந்திரமும் எல்லோர்க்கும் பலித்து விடுவதில்லை. ஏன்?


தாமிரப் பாத்திரத்தில் தயிரை எடுத்துச் சென்றால் தயிர் கெட்டுப் போகும். சாக்கு மூட்டையில் தண்ணீரை முகா்ந்து கொண்டு செல்ல முடியாது. அது போலத்தான் மந்திரங்களும்!


அதன் குணத்துக்கேற்ற தன்மை படைத்தவா்கள் யாரோ அவா்களால் தான் பலன் பெற முடியும். இது தெரியாமால் தன் விருப்பப்படி மந்திரததைத் தேர்ந்தெடுத்து்ப பலன் காணாமல் பலா் தோற்று விடுகிறார்கள்.


உண்மையான உபாசகன் தன் உள்ளத்துக்கும் உடல் அமைப்புக்கும் மன நிலைக்கும் தக்கபடி ஒரு குருவிடமிருந்தே மந்திர உபதேசம் பெற வேண்டும்.


சிலருக்கு ஆண் தெய்வ மந்திரங்கள் பலிக்கும். சிலருக்குப் பெண் தெய்வ மந்திரங்கள் பலிக்கும். இவற்றையெல்லாம் தக்க குருமார்களிடமிருந்து கேட்டறிந்து பயன்பெற வேண்டும். இந்த மந்திரம் இவனுக்குப் பலன் தருமா என்று பார்த்தே குரு மந்திரம் சொல்வார். “சித்தாரி கோஷ்டம்” என்று அதற்குப் பெயா்.


குரு – மந்திரம் – இஷ்ட தெய்வம்


ஆன்ம முன்னேற்றம் பெற விரும்பும் ஒருவனுக்கு வலுவான அடித்தளம் மூன்று தேவை. 1. இஷ்ட தெய்வம் 2. மந்திரம் 3. குரு


ஒருவனது மனப்பக்குவத்துக்கு ஏற்ப ஒரு இஷ்ட தெய்வத்தைத் தோ்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தத் தெய்வத்திற்குதிய மந்திரங்களைத் தேர்ந்தெடுத்து உரிய முறையில் பூசை செய்து வர வேண்டும். ஒரு குருவின் தயவு வேண்டும். விவரம் தெரிந்தவா்கள் ஒரு குருவின் மூலம் இஷ்ட தெய்வம், அதற்கான மந்திரம் கேட்டறிந்து பூசை செய்து பலன் அடைவார்கள்.


இதுபோன்ற நுட்பமெல்லாம் தெரியாமல் நாம் கிடப்பதால்தான் அன்னை “நீங்களெல்லாம் ஆன்மித்தில் அனாதைகள்” என்கிறாள். தன் பக்தனுக்கு வலுவான அடித்தளங்களைப் போட்டுக் கொடுத்திருக்கிறாள். ஆதிபராசக்தியை இஷ்ட தெய்வமாகக் கொண்ட தன்

பக்தனுக்கு அடிகளார் என்கிற குருவைக் காட்டிக் கொடுத்திருக்கிறாள். 108, 1008 மந்திரங்களை வழங்கியிருக்கிறாள். இந்த மூன்றையும் வலுவாகப் பற்றிக் கொண்டு முன்னுக்கு வர வேண்டும். அது அவரவா் பக்தி சிரத்தையைப் பொறுத்தது. முயற்சியைப் பொறுத்தது.


தெய்வம்: குரு: மந்திரம்:


உன் இஷ்ட தெய்வத்தை வெறும் கல்லாகப் பார்க்காதே! உன் குருவைச் சாதாரண மனிதனாக எண்ணாதே! மந்திரங்களை வெறும் வார்த்தைகள் தானே என்று நினைக்காதே! என்று தந்திர சாத்திரங்கள் அறிவுரை கூறி எச்சரிக்கின்றன.


மந்திரங்கள் நால்வகை


1) ஒரு அட்சரம் உள்ள மந்திரம் பிண்டம் எனப்படும். அட்சரம் என்பது எழுத்து. 2) இரண்டு அட்சரம் கொண்டவை கர்தரீ. கத்திரி போன்ற இருமுனை உள்ளவை கர்தரீ. 3) மூன்று முதல் ஒன்பது வரை அட்சரங்கள் கொண்டவை பீஜம் எனப்படும். 4) 10 முதல் 20 வரை அட்சரங்கள் கொண்டவை மந்திரங்கள். 5) 20 க்கும் மேற்பட்ட அட்சரங்களை உடையவை மாலா மந்திரம். லலிதா சகஸ்ரநாமம் 1008 மந்திரங்கள் கொண்டது. விஷ்ணு சகஸ்ரநாமம் 1008 மந்திரங்கள் கொண்டது. இவை மாலா மந்திரம் என்ற பிரிவில் அடங்கும்.


புரச் சரணம்


பெண் தெய்வங்கட்குரிய மந்திரங்கள் வித்யை எனப்படும். அது பலன் கொடுப்பதற்குப் புரச்சரணம் முதலிய வழிபாட்டு முறைகளைக் கையாள வேண்டும். புர – என்றால் முன்னதாக என்று பொருள். சரணம் என்றால் செய்ய வேண்டியவை என்று பொருள். ஒரு குருவிடமிருந்து மந்திர உபதேசம் பெற்றதும், உபாசகன் தான் தனித்து வழிபாடு செய்வதற்கு முன் மந்திர சித்தி பெறச் செய்யும் சடங்குகள் புரச்சரணம் எனப்படும். புரச்சரணம் என்றால் லட்சம் தடவை, கோடி தடவை உச்சரித்து உரு ஏற்றுதல் என்றும் கூறப்படுகிறது. மந்திரங்கள் சித்தி பெற விரும்புகிறவன் மந்திரத்தில் உள்ள அட்சரங்களைக் கணக்கிட்டு அவ்வளவு லட்சம் மந்திர ஜபம் புரிய

வேண்டும்.


பாலா மந்திரம் 3 அட்சரங்களைக் கொண்டது. இந்த மந்திர உபதேசம் பெற்றவன் மந்திர சித்தி பெற 3 லட்சம் தடவை மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். சிவ பஞ்சாட்சரி என்று ஒரு மந்திரம். அது ஐந்து அட்சரங்கள் கொண்டது. மந்திர சித்தி பெற விரும்புகிறவன் ஐந்து லட்சம் வரை ஜபம் செய்ய வேண்டும். மந்திர ஜப எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஓமம், ஏழை பிராமணா்க்கு அன்னதானம், தா்ப்பணம், மார்ஜனம் என்ற நான்கும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது புரச்சரணம் எனப்படும்.


நான்கு வகை மந்திரங்கள்


பலன் தருவதை ஒட்டி மந்திரங்கள் நால்வகைப்படும். அவை 1. சித்த மந்திரங்கள் 2. சுத்த மந்திரங்கள் 3. சாத்திய மந்திரங்கள் 4. சத்துரு மந்திரங்கள். புரச்சரணம் செய்வதால் அந்த மந்திரம் நினைத்த பலனைக் கொடுக்கும் அளவிற்குச் சித்தியாகிவிடும். குறிப்பிட்ட அளவு ஜபம் முதலியவற்றைச் செய்தால் சித்தியளிப்பவை உண்டு. அத்தகையவை சித்த மந்திரங்கள் எனப்படும்.


குறிப்பிட்ட அளவு ஜபம் செய்யாமலேயே குருவிடமிருந்து உபதேசம் பெற்றதும், ஜெபம் செய்ததும் சித்தி தரவல்ல மந்திரங்கள் உண்டு. அத்தகையவை சுரித்தம் எனப்படும்.


முன்பிறவிகளில் ஒருவன் மந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கலாம். மந்திர தேவதையிடம் தவறாக நடந்து கொண்டு அதற்கு எதிரியாகி இருக்கலாம். அத்தகையவன் இப்பிறவியில் மந்திர ஜபம் செய்யும்போது காப்பாற்ற வேண்டிய மந்திரம் அவனையும், அவன் குடும்பத்தையும் தண்டிக்கும். அத்தகைய மந்திரங்கட்கு அரிமந்திரம் அல்லது சத்துரு மந்திரம் என்று பெயா்.


மேற்கண்ட நான்கு வகை மந்திரங்களை அறிந்து கொள்ள வேண்டி ஜாதகம் பார்ப்பது போல கட்டகங்கள் போட்டு விடை காண்பது சித்தாரி கோஷ்டம் எனப்படும். அவ்வாறு சோதித்துப் பார்த்த பிறகே குரு சீடனுக்கு மந்திர உபதேசம் செய்வார். திருமணம்

நடப்பதற்கு முன்பு பெண்ணுக்கும் பிள்ளைக்கும் பொருத்தம் பார்ப்பதே சித்தாரி கோஷ்டம்.


சில மந்திரங்களுக்கு இவ்வாறு கோஷ்டம் பார்ப்பது இல்லை. ஓா் எழுத்து கொண்டவை, மூன்று எழுத்து கொண்டவை, மிருத்தியுஞ்சயம், காளி, சியாமளா, சண்டிகை, இராமன், ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, ராஜசியாமளா முதலிய மந்திரங்கட்கு இவ்விதி இல்லை. எப்போதும் யாவருக்கும் சித்தமான மந்திரங்கள் இவை.


பீஜ மந்திரங்கள்


மந்திரங்கள் என்பவை வெறும் சப்தங்கள் அல்ல. அந்தச் சப்தங்களிலிருந்துதான் படைப்பே தொடங்கியது என்கிறார்கள் ஞானிகள். ஓம் என்ற மந்திரத்திலிருந்தே பஞ்ச பூதங்கள் தோன்றின என்கிறார் திருமூலா்.


பிரபஞ்சம் தோன்றியது எப்படி?


ஆதிக்கும் ஆதியிலே வெட்ட வெளிகிய சூன்யம் பரவெளியெங்கும் பரமாத்மா அணுவுக்குள் அணுவாக இரண்டறக் கலந்து நீக்கமற நிறைந்து பரிபூரணமாக நின்றது.


அத்தகைய கோடானுகோடி அணுக் கூட்டங்கள் – இயற்கைச் சக்திகள் தன்னைத் தானே அதிவேகமாய்ச் சுழன்று ஓடியாடி இயங்கிக் கொண்டிருந்தன. அத்தகைய சுழற்சியின் அதிவேகத்தால் அணுக்கூட்டங்கள் ஒன்றை ஒன்று உராய்ந்த காரண காரியத்தினால் முதன் முதலாக ஓசை (நாதம்) உண்டாயிற்று. அதைத் தொடா்ந்து ஒளி (விந்து) உண்டாயிற்று. இதனையே பௌதிக விஞ்ஞானம் ஒலி (Sound) ஒளி (light) என்று பிரித்து ஆராய்ந்து கூறுகிறது.


இந்த நாத விந்து என்பனவற்றைச் சிவம் என்றும் சக்தி என்றும் கூறுவா். “நாத விந்து கலாதி நமோ! நம! என்று பாடுகிறார் அருணகிரிநாதர்.


இப்படி உண்டான நாத விந்துவிலிருந்து “அ” – “உ” – “ம” என்ற மூன்று மந்திர எழுத்து உண்டாகி ஓம் என்ற பிரணவம் ஆயிற்று. இந்தப் பிரணவத்திலிருந்தே நிலம், நீா், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்கள் தோன்றின. இப்பஞ்ச பூதக் கூட்டுறவிலிருந்து அந்தச் சக்தியிலிருந்து அண்ட – பகிரண்ட

சராசரங்களும், நவக்கிரகங்களும், கோடானுகோடி நட்சத்திரங்களும் மற்றும் சகலமும் தோன்றின.


இவைகளை அடக்கி, ஒழுக்கி, நடுநிலையிலிருந்து ஆட்சிபுரிய வேண்டிப் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல் என்ற காரியங்களைப் பரமாத்மா மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்கிறார்கள் தத்துவ ஞானிகள்.


ஒலியும் – ஒளியும்


எனவே பிரபஞ்சத் தோற்றத்துக்கு மூலகாரணம் ஒலியும் ஒளியுமே என்று தெரிகிறது. ஓங்கார நாதமும் ஓங்கார ஒளியும் என்று தெரிகிறது. அந்த ஓங்கார நாதமும் ஓங்கார ஒளியும் நம் உடம்புக்குள்ளேயே இருக்கின்றன. இந்த ஒளி மூலமாகவும ஒலி மூலமாகவும் கடவுளை எட்டிப்பிடிக்க வேண்டும். அதற்காகவே மந்திர உபாசனை! நாக உபாசனை! அந்த ஒலியின் மூலமாக அந்த அருள் ஒளியைத் தரிசித்து ஆனந்தமாகக் கிடக்கலாம். வள்ளலார் அப்படி ஒளியை அனுபவித்தவா்.


உலகப் பொருள் அனைத்திலும் ஒலியும் உண்டு, ஒளியும் உண்டு. ஒவ்வொரு பொருளும் மூலமான ஓா் ஒலியிலிருந்தே உற்பத்தியாயிற்று. அந்த மூல ஒலியை நுண் ஒலியை பீஜ மந்திரம் என்பார்கள். “முளை” மந்திரம் என்பார்கள்.


பஞ்ச பூதங்கள்


பஞ்ச பூதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றுக்கும் பீஜ மந்திரம் உண்டு. அதற்கென்று ஒளிதரும் நிறம் உண்டு. வடிவம் உண்டு. அவை வருமாறு


நிலம்: லம் (Lam) பீஜ மந்திரம். சதுர வடிவம். பொன் அல்லது மஞ்சள் நிறம்.


நீா்: வம் (Vam) என்பது பீஜ மந்திரம். பிறை வடிவம். வெண்மை நிறம்


நெருப்பு: ரம் (Ram) என்பது பீஜ மந்திரம். முக்கோண வடிவம். சிவந்த நிறம்


காற்று: யம் (Yam) என்பது பீஜ மந்திரம். அறுகோண வடிவம். கருமை நிறம்


ஆகாயம்: ஹம் (Hum) என்பது பீஜ மந்திரம். வட்ட வடிவம். கருமை நிறம்


உலகில் உள்ள சப்தங்களையெல்லாம் நுணுகி ஆராய்ந்து அந்த சப்தங்களையே 51 எழுத்துக்களாக சமஸ்கிருத மொழியில் வைத்துக்

கொண்டார்கள். அந்த 51 எழுத்து சப்தங்களும் நம் உடம்பின் பல பகுதிகளில் உண்டு. எல்லாச் சப்தங்களுமே ஓங்காரத்திலிருந்து பிறந்தவையே. ஆனாலும் குறிப்பிட்ட சில சப்தங்களுக்குரிய தேவதைகள் உண்டு. அவை அந்தந்தத் தேவதைக்குரிய பீஜ மந்திரம் எனப்படும். உதாரணமாக ஸ் ரீம் (Srim) என்பது லட்சுமிக்குரிய பீஜ மந்திரம் க்ரீம் (Krim) என்பது காளிக்குரிய பீஜ மந்திரம். ஜம் (Aim) என்பது சரஸ்வதிக்குரிய பீஜ மந்திரம்.


நவக்கிரகங்கள் – பீஜ மந்திரங்கள்


நவக்கிரகங்கட்கும் பீஜ மந்திரங்கள் உண்டு. அவை வருமாறு


சூரியன் க்ரீம் (Krim)


சந்திரன் ரீம் (Rim)


செவ்வாய் ஹ்ரீம் (Hrim)


புதன் ஸ் ரீம் (Srim)


வியாழன் ஔம் (Houm)


வெள்ளி கிலீம் (Klim)


சனி ஐம் (Aim)


ராகு ஹ்ரௌம் (Hraum)


கேது சௌம் (Soum)


வடமொழி எழுத்துக்களில் ஒவ்வொரு உயிரெழுத்தும் தனித்தனியே எல்லா மெய்யெழுத்துக்களுடன் கூடினால் எத்தனை சப்தங்கள் உண்டோ அத்தனை பீஜ மந்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு எழுத்தை உச்சரிப்பதால் ஒரு குறிப்பிட்ட வேகமுள்ள சலனம் உண்டாகி உடலின் பாகங்களில் ஒரு குறிப்பிட்ட பாகத்தைப் பாதிக்கின்றது. எடுத்துக்காட்டாக, ஓம், ஹ்ராம் (Hram) ஹ்ரீம் (Hrim) ஹ்ரூம் (Hrum) ஹ்ரைம் (Hraim) ஹ்ரௌம் (Hraum) ஹ்ர (Hra) என்ற பீஜ மந்திரங்களைப் பார்ப்போம்.


“ஓம்” வெட்ட வெளியில் பிறந்த முதல் ஒலி. இதுவே மற்ற சப்தங்கள் அனைத்துக்கும் தாய் – ஒலியின் பிறப்பிடம் இதுவே. இப்பிரணவம் உலகத்தின் உள் தத்துவத்தைத் தன்னுள்ளே அடக்கியிருக்கிறது.


“ஹ” (Rha) என்ற ஒலி இருதயப் பகுதியில் ஏற்படும் சலனத்தால் உண்டாவதால் இருதயத்திற்குப் பலத்தைக் கொடுத்து அதிக ரத்த ஓட்டத்தை உண்டாக்குகிறது.


“ர” (Ra) என்ற ஒலி நாக்கின் நுனியால் நாக்கின் மேல் அண்ணத்தின் முன் பாகத்தைத்

தொடுவதால்தான் ஏற்படுகின்றது. இந்த “ர்” சப்தத்தினால் நாக்கு நுனியில் உள்ள நரம்பு முனைகள் மூலமாய் மூளையில் சலனத்தை ஏற்படுத்துகின்றன.


“ம்” – வாயை மூடிக் காற்றை வயிற்றிலிருந்து மூக்கு வழியாக வெளியிடுவதால் உண்டாகும் சப்தம். இது மூச்சுக் குழாயையும் மூக்குத் துவாரங்களையும் சுத்தப்படுத்துகிறது.


ஹ்ராம் (Hram) – இதிலுள்ள “ஆ” என்னும் உயிரெழுத்து விலா எலும்புகளை எழுப்பி உணவுக் குழாயைச் சுத்தப்படுத்துகிறது. இதன் சலனம் அனாகத சக்கரமாகிய இருதயத்தின் அருகிலிருந்து எழும்புகிறது.


ஹ்ரீம் (Hrim) – ஈ என்ற உயிரெழுத்தை உச்சரிப்பதால் கழுத்துப் பகுதியில் உள்ள சக்தி கேந்திரமான விசுத்தி சக்கரத்தில் சலனம் உண்டாகிறது. ஆதலால் இது தொண்டை, மூக்கு, வாய் முதலிய அவயவங்களுக்கு நன்மை பயக்கிறது. இதன் சக்தி கீழேயும் பரவி சுவாச உறுப்புக்களையும் ஜீரண உறுப்புக்களையும் சுத்தப்படுத்துகிறது.


ஹ்ரூம் (Hrum) – “ஊ” வின் சலனம் நாபிப் பகுதியில் உள்ள மணிபூரகச் சக்கரத்தில் எழும்புவதால் ஈரல், குலை முதலிய உறுப்புக்களை ஊக்குவித்து சரிகின்ற தொந்தியையும் கரைக்க உதவுகிறது.


ஹ்ரைம் (Hraim) – “ஐ” சப்தம் தொப்புளுக்குக் கீழேயுள்ள சுவாதிட்டான சக்கரத்தில் சலன அலைகளை எழுப்புகிறது. இச் சலனம் சிறுநீரக உறுப்புகட்குப் புத்துணா்ச்சி அளித்து சிறுநீா் சுரப்பதை ஒழுங்கானதாகவும் சரியானதாகவும் செய்கிறது.


ஹ்ரௌம் (Hraum) – “ஒலி” – மூலாதார சக்தியால் எழுப்பப்படும் சலன அலைகளால் ஆனது. ஆதலால் அச்சக்கரத்திலிருந்து பிரியும் நரம்புகளால் வியாபிக்கப்பட்டிருக்கும் ஆசனம் முதலிய கீழ் உறுப்புக்களை வலுப்படுத்துகிறது.


ஹ்ர (Hra) – இதில் “அ” இருப்பதால் ஹ்ராம் என்ற பீஜத்தை ஒத்திருக்கின்றது. ஆதலால் இது இதயப் பகுதியான அனாகத சக்கரத்தைச் சலனப்படுத்துவதுடன் இல்லாமல் அடியில்

மூலாதாரத்திலிருந்து உச்சியிலுள்ள சகஸ்ராரம் வரை ஏழு கேந்திரங்களிலும் சரியான சலனத்தை எழுப்பி உடலின் எல்லா அவயவங்களையும் ஊக்குவிக்கிறது.


அஜபா மந்திரம்


இதற்கு ஹம்ஸ மந்திரம் என்ற பெயரும் உண்டு. மூக்கிலிருந்து செல்லும் காற்று “ஹம்” என்ற ஒலியோடு வெளியே செல்கிறது. அதே காற்று ஸம் என்ற ஒலியோடு உள் நுழைகிறது. நமது முயற்சி எதுவும் இல்லாமலேயே மூச்சு வாங்கும்போதும், மூச்சு விடும்போதும் இடைவிடாமல் இம் மந்திரம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஹம்ஸம் – ஸோஹம் என்ற மந்திரங்கள் உண்டாகின்றன. இதற்கு அஜபா காயத்திரி என்று பெயா்.


மந்திர யோகம்


மந்திர ஜெபத்தின் மூலம் கடவுளை அடைவது மந்திர யோகம் எனப்படும். எப்போதும் அலை பாய்கின்ற மனத்தை அலையாமல் கொண்டு வந்து நிறுத்திப் பழகுவதற்கு மந்திர ஜபம் உதவுகின்றது. மனத்தை ஒருமுகப்படுத்தி மந்திர ஜெபம் செய்வதால் நம் மனம் என்கிற பாத்திரம் சுத்தமாகிக்கொண்டே வரும்.


மந்திர ஜெபம் செய்வதால் பூா்வ ஜென்ம வாசனைகள் என்ற எண்ணப் பதிவுகள் தேய்கின்றன. அதனால் பாவங்கள் குறைகின்றன. மனம் ஒன்றிய மந்திர ஜெபத்தால் அந்த மந்திரத்துக்குரிய தெய்வங்களின் காட்சியும் கிடைக்கலாம். மந்திர ஒலி அதிர்வுகள் நம் உடம்பில் உள்ள 72000 நாடி நரம்புகளில் சில சலனங்களை உண்டாக்குகின்றன.


மந்திரத்திற்குரிய தேவதையின் உதவி சாதகனுக்குக் கிடைக்கிறது. அவன் உடம்பில் குண்டலினி சக்தி கிளா்ந்து எழுகிறது. அதன் மூலம் சில சக்திகள் அவனுக்குக் கிடைக்கின்றன.


பூா்வ ஜென்ம வாசனையால் அழுக்குப்படிந்த ஒருவன் உடம்பும், மனமும், ஆத்மாவும் சுத்தமாகி வருகின்றன. முதலில் உள்ளுடம்பில் சில மாற்றங்கள் நமக்குத் தெரியாமலேயே உண்டாகின்றன. பின் உள்ளுடம்பு மந்திர உடம்பாக மாறுகிறது.


நன்றி ; குருமுனி