*மேஷ லக்கனச் சிறப்பு*
மேஷ லக்கனம் சர லக்கனம்.
இதன் லக்கனாதிபதி செவ்வாய். அவரே அட்டமாதிபதியும் ஆகிறார். செவ்வாயும் ஒரு சரக்கிரகமே. செவ்வாய்க்கு அட்டமாதிபத்தியம் உண்டு. அது அசுபஸ்தானமாகும்.
லக்கனாதிபதியே ஆயுள் ஸ்தானாதிபதியாவதால் தீர்க்க ஆயுள் கொடுக்கிறார். அதனால் அட்டமாதிபத்தியம் பின் தள்ளப்பட்டு சுபக்கிரகமாகிறார் செவ்வாய்.
இந்த லக்கனத்திற்கு பஞ்சமாதிபதியான சூரியன் நட்பு கிரகம் முதல் திரிகோணமான பூர்வபுண்ணியஸ்தானம் மட்டும் பெற்று சுபகிரகமாகிறார். சூரியனுக்கு வேறு ஆதிபத்தியம் இல்லை
அடுத்த பலமிக்க திரிகோணமான பாக்கியஸ்தானத்தின் ஆதிபத்தியம் பெற்றவர் குரு , விரயமாகிய 12 - ம் ராசிக்கும் ஆதிபத்தியம் பெறுகிறார்.
இதனால் விரயத்தையும் கலந்து கொடுக்கக் கடமைப் படுகிறார் என்றாலும் இயற்கையில் சுபக்கிரகமான குரு, செவ்வாய்க்கும் சூரியனுக்கும் நட்பு கிரகமானதாலும் பலத்த திரிகோணம் பெற்றுள்ளாதாலும் ஒரு விஷேச. சலுகைமூலம் துர்ஸ்தானாதிபத்தியம் பின் தள்ளப்பட்டு, முழுச் சுபராக யோகாதிபதியாகிறார்.
சூரியனும் குருவும் பரிவர்த்தனை பெற்றாலோ அல்லது 1, 5 ,9 - ம் ராசிகளில் சேர்ந்து நின்று, லக்கனாதிபதி செவ்வாய் பார்வை ஏற்பட்டாலோ பலத்த யோகத்தை செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
சூரியன் 7 ,10, ராசிகளில் சஞ்சரித்தால் களத்திர வழியிலும், ஜீவன வழியிலும் நல்ல சிறப்பான பலனைக் கொடுப்பார்.
சூரியனோடு, செவ்வாய், குரு சேர்ந்து 7 ,9 ,10 ராசிகளில் இருப்பது ராஜயோகமாகும். புதன் - சனியோடு மட்டும் எவ்விதத் தொடர்பும் இல்லாமலிருக்க வேண்டும்
3 , 6 - ம் ராசிகளான துர்ஸ்தானங்களுக்கு அதிபதியாகிய *புதனும்* சரலக்கனத்திற்கு 11- ம் ராசிக்குடைய. *சனியும்* , இந்த லக்கனத்திற்கு *மாரகாதிபதிகளாவார்கள்* . சனிக்கு 11 -ம் ராசி பாதகாதிபத்தியமாகும்.
இவ்விருவரும் மறைந்து பலம் குன்றுவதே நலமாகும்.
சுக்கிரன் 2 , 7 ம் ராசிகளுக்கு குடும்பம், களத்திரம், என இரு ஆதிபத்தியம் பெறுவதாலும். களத்திரகாரகரே களத்திரஸ்தானாதிபத்தியம் பெற்றதாலும். குடும்பம், தனம், திருமணம் போன்ற வற்றிக்குச் சிறப்பான பலனைக் கொடுக்கிறார்.
மேஷ லக்கனகாரர்களின் திருமண வாழ்க்கை பெரும்பாலானோருக்கு காதல் வயப்பட்டு விடுகிறது. இதனால் பலர் தோல்வியைத் தழுவுகின்றனர் எனலாம். இவர்களால் காதலில் வெற்றி பெற பல நிலையான நண்பர்கள் இருப்பார்கள்.
சுக்கிரன் + சந்திரன் 4,7,10 ராசிகளின் ஆதிபத்திய பலமும் பெற்று இருந்து குருவின் பார்வை பெறுவது நல்லதாகும்.
செவ்வாய், சனி, சூரியன் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமல் இருப்பது விஷேமாகும்.
லக்கன கேந்திரமாகிய கடகத்தில் குரு உச்சம் பெறுவது தவறில்லை. அதனால் ஹம்சயோகம் ஏற்படும். அதனால் குரு பலத்த யோககாரகராகி விடுவார்
புதனும் , சனியும் பலம் குறைந்திருப்து லக்கனத்திற்கு நலம்
தேய்பிறை சந்திரன் சுபப்பலன்களை கொடுப்பார்.
லக்கனத்திற்கு ராகு கேது பகைவர்கள்.
நாளை ரிஷப லக்னத்தை பார்போம்
No comments:
Post a Comment