Sunday, November 21, 2021

வெற்றிகளைக் குவிக்கும் ஓரை

 *ஓரைகள்*


ஒரு நாளில் பகல் பொழுது 12 மணி நேரம் ஆகும் .அதேபோல இரவு 12 மணி நேரம் ஆகும்.

ஓரை என்பது நவ கோள்களில் ராகு கேதுக்களைத் தவிர்த்து மீதமுள்ள ஏழு கிரகங்களை வைத்து வரிசைப்படுத்தி அந்தந்த கிழமைகளுக்கு ஏற்ப கிழமை நாதனை தலைமையாகக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஒரு கிரகம் ஓரையாக செயல்படும்.


ஓரைகள் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும். சூரியன் 

சுக்கிரன்

 புதன் 

சந்திரன் 

சனி 

குரு

 செவ்வாய்


உதாரணமாக திங்கட்கிழமை என்றால் காலை 6:00 மணிக்கு சந்திர ஓரை ஆரம்பிக்கும் அதன் பின் ஒரு மணி நேரம் கழித்து 7 மணிக்கு சனி ஓரை தொடங்கும்.

இவ்விதமாக அடுத்தடுத்து ஓரைகள் வரிசைக்கிரமமாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு கிரகம் ஓரையாக செயல்படும்.


 பஞ்சாங்கத்தில் பொதுவாக 6 மணியில் இருந்து ஓரை ஆரம்பித்திருப்பார்கள்....இது பொது....


ஆனால் ஒவ்வொரு ஊருக்கும் சூரிய உதயம் அஸ்தமனம் வேறு படும்..


சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை எவ்வளவு நேரம் இருக்கிறதோ அதை 12 ஆல் வகுத்து வருவதை ஒரு ஓரை எனக்கொள்ள வேண்டும்..


அதன்படியே 12 ஓரைகளும் பகல் பொழுதிற்கு கணக்கிடலாம்...துல்லியமாக ஓரையை கணக்கிட இம்முறையே கையாளப்படுகிறது...


இரவு பொழுதும் இப்படியே


 *ஓரைகளும்  செய்திகளும்* 


ஓரைகளுக்கும் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்கும் சம்பந்தம் உண்டு..ஏன்?....எப்படி?....


அது எப்படியெனில், ஓரைகள் 100 % பலம் வாய்ந்தவை..

நமக்கு நடக்கும் அல்லது நாம் கேட்கும் செய்திகள், பார்க்கும் காட்சிகள் ஓரை சார்ந்த கிரக காரகத்தன்மை பொருந்தியதாக இருக்கும்...


நீங்கள் திடீர் என்று ஒரு கோரமான செய்தி (விபத்து) போன்ற செய்திகள் கேட்டால் அது *செவ்வாய் ஓரையோ* அல்லது *செவ்வாய் அந்தர ஓரையாவது* இருக்கும்...


அது மட்டும் இல்லாமல் கிழமைகளுக்கு உரிய பகை ஓரைகளிலும் இது போன்ற கோர செய்திகள் கேட்பீர்கள்...


நீங்கள் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அப்போது ஒரு திருமண நிகழ்வு காட்சியாக தெரிகிறது என்றால் அந்த நேரத்தில் *குரு ஓரை* நடந்து கொண்டிருக்கும்.


 அதேபோல காதல் பாட்டுகள் காட்சிகள் வரும்போது *சுக்கிர ஓரை* நடந்துகொண்டிருக்கும்.


நீங்கள் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஜன்னல் ஓரத்தில் இருந்து வெளியே பார்க்கும் போது ஏதாவது நீர்நிலைகள் ஏரி குளம் கிணறு ஆறு போன்றவை தென்பட்டால் கண்டிப்பாக அந்த நேரத்தில் *சந்திரன் ஓரை* நடந்து கொண்டிருக்கும்.


நம்மை சுற்றி நடக்கும் அனைத்திற்கும் காரணம் உண்டு...

அவற்றில் இந்த ஓரையின் தாக்கம் இல்லாமல் இருக்காது.


முயன்றுதான் பாருங்களேன்...

No comments:

Post a Comment