ராகு திசை என்ன செய்யும்?
நவகிரகங்களில் ராகு கேது பருப்பொருள் அற்ற ஒரு கிரகம்.
இந்த ராகு எதையும் பிரமாண்டமாக யோசிக்க வைக்கும். செய்யவும் வைக்கும்.சாதுரியமாக ஏமாற்றக் கூடிய திறன் படைத்தவர் ராகு ஆவார்.
சூது நிறைந்தவர். மயக்க நிலைக்கு ஆளாக்குபவர்.
சூதாட்டம், கேம்பிளிங், குதிரை பந்தயம், ஆட்கடத்தல், மது கஞ்சா அபின் போன்ற போதை வஸ்துக்களுக்கு காரகமானவர் இந்த ராகு.
ஒருவரின் ஜாதகத்தில் ராகு திசை 18 ஆண்டு காலம் நடைமுறையில் இருக்கும்.
இந்த காலகட்டத்தில் ராகு நம்மை எப்படி மாற்றி வைப்பார் என்பதே இந்த பதிவு.
ராகு திசை என்ன செய்யும்?
ராகு தசையில் கிடைக்கும் பொருள் காரகம்/உயிர்காரகம் அல்லது இரண்டுமே முடிவில் இழக்கவேண்டி வரும்.
அல்லது இருந்தும் பயனற்ற நிலையில் இருக்கும்., ராகு தசையில் அறிமுகமாகும் நட்பு/உறவுகள் அனைத்துமே தசையின் முடிவினில் ஒரு கசப்புடனே நீடிக்கும் அல்லது முறிந்துவிடும்.
ராகு தசையில் அமையும் ஜீவனமானது மறைவில் எந்த விளம்பரமும் இல்லாமல் நடைபெறும் வரை நீடிக்கும், அதுவே விளம்பரம்/ஆடம்பரம் என்று ஜீவனத்தை வெளிப்படுத்தினால் தசை முடிவில் ஒன்று இழக்கவேண்டி வரும் அல்லது முடக்கத்தில் சிக்கி தவிக்கும்,
ராகு தசையில் ஏற்படும் நோய் கர்ம பலனாகும், இதனை அனுபவித்து கழிக்கும் பொழுது குரு தசையில் இன்னல்கள் குறையும், ராகு தசையில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் அவர் தரும் காரகங்களை அனுபவிப்பவர்கள் மட்டுமே ஓரளவுக்கு தசையின் முடிவில் தாக்குப்பிடிக்கிறார்கள்.
இக்காலகட்டத்தில் ராகுவின் அதிதேவதையான பத்ரகாளியை வழிபட நமக்கு நேரவிருக்கும் இன்னல்கள் துன்பங்கள் குறையும்.
ராகு காயத்ரி
நாகத் வஜாய வித்மஹே!
பத்ம ஹஸ்தாய தீமஹி!
தந்நோ ராகு பிரசோத
No comments:
Post a Comment