தனிஷ்டா என்பது ஜோதிடத்தில் "அவிட்டம்" நட்சத்திரத்தைக் குறிக்கிறது,
மேலும் 'தனிஷ்டா பஞ்சமி' என்பது அவிட்டம், சதயம், பூராட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நட்சத்திரங்களில் ஏற்படும் மரணத்தைக் குறிக்கிறது. இந்த ஐந்து நட்சத்திரங்களையும் 'தனிஷ்டா பஞ்சமி' என்று குறிப்பிடுகிறார்கள். இந்த நட்சத்திரங்களில் ஒரு மரணம் நிகழ்ந்தால், அது இறந்த ஆன்மா மேலுலகம் செல்வதற்கான தடையை ஏற்படுத்தும் 'அடைப்பு' எனும் தோஷத்தை உண்டாக்குவதாக நம்பப்படுகிறது.
தனிஷ்டா: "அவிட்டம்" நட்சத்திரத்தைக் குறிக்கும்.
தனிஷ்டா பஞ்சமி: தனிஷ்டாவுடன் மற்ற நான்கு நட்சத்திரங்களான சதயம், பூராட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகியவற்றையும் சேர்த்து குறிப்பிடுவது.
அடைப்பு (தனிஷ்டா பஞ்சமி): இந்த நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில் மரணம் ஏற்பட்டால், அது இறந்த ஆன்மா சொர்க்கம் அல்லது நரகத்திற்குச் செல்லும் வழியை அடைத்துவிடும் என்று நம்பப்படுகிறது.
விளைவுகள்: இந்த அடைப்பு தோஷம், அந்த வீட்டில் அடுத்த ஒரு வருடத்திற்குள் தொடர் மரணங்களையோ அல்லது மரணத்திற்கு சமமான கண்டங்களையோ ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.
பரிகாரங்கள்: இந்த தோஷத்திற்கான பரிகாரங்கள் செய்யப்படுவது வழக்கம்.
*தனிஷ்டா பஞ்சமி*
*தனிஷ்டா பஞ்சமி என்றால்* 13நட்சத்திரத்தில் ஒருவர் இறந்தால் மேலுலகம் செல்ல ஏற்படும் தடை ஆகும்.
அதற்காக முன்பு வீட்டை பூட்டி வைப்பார்கள்.சிலர் உடலை பின்புறம் வழியே எடுத்து செல்வார்கள்.சிலர் கூறையை பிரித்து எடுத்து செல்வார்கள்.
இப்போது அது அவ்வளவாக நடைமுறையில் இல்லை
அவிட்டம்,சத்யம்,பூரட்டாதி,உத்திரட்டாதி---6மாதம்
ரோகிணி,4மாதம்
கார்த்திகை,உத்திரம். 3மாதம்
மிருகசீரிஷம்,புனர்பூசம்,சித்திரை,விசாகம்,உத்ராடம். 2மாதம்
மேற்கூறிய நட்சத்திரத்தில் இறந்தால் அடைப்பு(தடை) அதன்படி இருக்கும்.
அதற்கு பரிகாரம் வெங்கலகிண்ணத்தில் நல்லெண்ணெய் தானம் செய்து அந்த அடைப்பு காலம் வரை தினமும் இறைவனுக்கு தீபம் காட் டி நிவேதனம் செய்யவேண்டும்.
சில சமயங்களில் ஆவிஉருவில் பயம் காட்டுவார்கள்.என கூறப்படுகிறது.
கருடபுராணத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது.
சூரியன் 3 நட்சத்திரங்கள்
செவ்வாயின் 3 நட்சத்திரங்கள்
குருவின் 3 நட்சத்திரங்கள்
சத்யம் உத்ரட்டாதி ரேவதி ரோகிணி ஆகியன
ஆக 13 நட்சத்திரங்கள் இதில் சேரும்.
மேலும் அடைப்பு நட்சத்திரத்தில் ஒருவர் இறந்தால் அந்த ஆத்மாக்கு நிறைவேறா ஆசை ஒன்று இருக்கும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை...


No comments:
Post a Comment