Sunday, March 17, 2024

சிரார்த்தம் என்றால் என்ன?

 திதி என்பது இறந்தவர்களுக்கு வருடந்தோறும் செய்யக்கூடிய *சிரார்த்தம் என்று சொல்லக்கூடிய நிகழ்வாகும்.*



 இறந்தவர்களின் திதி அன்று இந்த சிரார்த்தத்தை செய்வது அவசியம். தந்தை இல்லாதவர்கள் மட்டுமே இந்த சிரார்த்தத்தை செய்ய வேண்டும்.

மாதந்தோறும் வருகின்ற அமாவாசை அன்று முன்னோர்களுக்கு எள்ளும் நீரும் கொண்டு செய்வது தர்ப்பணம் ஆகும்.

தர்ப்பணத்தை ஏதாவது கோவிலில் உள்ள அர்ச்சகர் மூலம் செய்யலாம்.


திவசம் என்று சொல்லக்கூடிய சிரார்த்தத்தை வேதம் அறிந்த சாஸ்திரிகள் மூலம் மந்திர உச்சாடனங்கள் செய்து உரிய செயல்பாடுகளை நடத்தி நடத்தி வீட்டில் முன்னோர்களுக்கு மதிய வேளையில் படையல் இட்டு அவர்களை வழிபாடு செய்து விட்டு படையலில் உள்ள பட்சணங்கள் மற்றும் பதார்த்தங்கள் ஆகாரங்கள் எல்லாம் எடுத்து காகத்திற்கு உணவளித்து முன்னோர்களைத் திருப்தி படுத்துவதாகும்.


No comments:

Post a Comment