Sunday, March 10, 2024

அமாவாசை திதி எதற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது?*

 *அமாவாசை திதி எதற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது?* 



நல்ல நாள் தானா? ? ? 


தமிழகத்தில் மட்டும் தான்  அமாவாசை  நல்ல நாள் என தவறாக எடுத்து கொள்ளபட்டு 

சுபகாரியங்கள் செய்யப்பட்டு 

வருகிறது.


 மற்ற மாநிலங்களில் 

இவ்வாறு இல்லை. 


 *இதற்கு என்ன காரணம்?* 

*ஏன்? எதற்கு தவிர்க்க வேண்டும்?என பார்ப்போம்* 


 *திதிகளை 

**நந்தா,* 

 *பத்ரா,* 

 *ரிக்தா,* 

 *ஜெயா,* 

 *பூர்ணா*


 என 5வகையாகப் பிரித்து இருக்கிறார்கள்.

 அதன் விவரம் என்ன என்று பார்ப்போம்.


 *பிரதமை,ஷஷ்டி, ஏகாதசி- நந்தா என்றும்,* 


 *துவிதியை , சப்தமி , துவாதசி பத்ரா என்றும்* 



 *திருதியை , அஷ்டமி , திரயோதசி - ஜெயா என்றும்* 


 *சதுர்த்தி, நவமி, சதுர்தசி - ரிக்தா - என்றும்*

 

 *பஞ்சமி, தசமி பௌர்ணமி*,

 *அமாவாசை - பூர்ணா என்றும்** 


பிரித்து இருக்கிறார்கள்.


அமாவாசை ஒரு பூர்ணதிதி என்பதால் அதை நல்லநாள் என பாவித்து கொண்டு சுபகாரியங்கள் செய்யலாம் 

என் கூறிவருகின்றனர்.


 மேலும் கூடுதலாக சகல சாஸ்திர வல்லுநர் சகாதேவன் நல்ல  நாள் என குறித்து கொடுத்தது என்றும் கூறிவருகின்றனர்.


 அவர் எதற்கு நாள் குறித்து கொடுத்தார்.?


 சண்டை போடுவதற்கு *யுத்தம் செய்வதற்கு* பேரழிவு ஏற்படுவதற்கு.... அதை மறந்து விட்டார்கள். 



திதிகளின் எண்ணிக்கை மொத்தம் 15 தான் என்றாலும் 

வளர்பிறை திதி 15 

தேய்பிறை திதி 15 என மாதத்தில் மொத்தம் 30 திதிகள் வரும்.


 *திதியில் பாதி கரணம் என்பர்.* 


அப்படி என்றால் ஒரு நாளில் 2 கரணங்கள் வரும். 

ஒரு மாதத்தில் 

60 கரணங்கள் வரும்.

 

கரணங்களின் எண்ணிக்கை 

மொத்தம் 11 மட்டுமே.


 *அவை சர கரணங்கள் ஸ்திர கரணங்கள் என இருவகைப்படும்.* 


 மொத்தமுள்ள 11 கரணங்களில் 7 கரணங்களில் ஒரு மாதத்தில் 8 முறை திரும்ப திரும்ப வருபவை.  அவைகளுக்கு சர கரணங்கள் என்று பெயர்.


 மிச்சமுள்ள 4 கரணங்கள் ஒரு மாதத்தில் ஒரு முறை மட்டுமே வருபவை அவைகளுக்கு ஸ்திர கரணங்கள் என்று பெயர்.


 *பவம், பாலவம், கௌலவம் , தைத்துலம், கரசை, வனசை, பத்திரை இவை ஏழும் சர கரணங்கள் ஆகும்.* 



 *கிம்ஸ்துக்னம், சகுனி, சதுஸ்பாதம், நாகவம் இந்த நான்கும் ஸ்திர கரணங்களாகும்.* 


 

கிம்ஸ்துக்னம் என்றால் புழு.


சகுனி என்றால் காகம்.


சதுஸ்பாதம் என்றால் நாய்.


நாகவம் என்றால் பாம்பு என்றும் பொருள்படும்.


 *எனவே இந்த நான்கு ஸ்திர கரணங்களும் அசுப கரணங்களாக கருதப்படும்.* 


தேய்பிறை சதுர்த்தசியின் பின் 

பகுதியில் சகுனியும் அமாவாசையன்று சதுஸ்பாதமும்

நாகவமும் வளர்பிறை பிரதமையின் முன் பகுதியில் 

கிம்ஸ்துக்னமும் வருகின்றன.


 எனவே வளர்பிறை பிரதமையின் முன் பகுதியும் 

அமாவாசை நாள் முழுவதும்  தேய்பிறை சதுர்த்தசியின் பின் 

பாகமும் சுப காரியங்களுக்கு 

சிறந்தது அல்ல. 


எனவே இனி 

இது போன்று அமாவாசை நல்ல நாள் என்று சுபகாரியங்கள் 

செய்ய வேண்டாம்.  


குருவே சரணம்!

திருவே சரணம்!

 *வாழ்க வளமுடன்*

No comments:

Post a Comment