*அமாவாசை அன்று செய்ய கூடாதவை*
அ்மாவாசை அன்று இதை செய்யாமல் இருந்தால்,ஐஸ்வர்யம் பெருகும் என்று பணவளக்கலை சொல்கிறது..
*அமாவாசை அன்று காற்று வெப்பம் என அனைத்திலும் ஏற்ற இறக்கம் காணப்படும்.*
அந்த சமயத்தில், எதாவது அடிபட்டால் கூட அதிக ரத்தம் வர நேரிடும். அதுமட்டும் அல்லாமல், அன்றைய தினம் அடிபட்டால்,விரைவில் ஆறாது.
பொதுவாகவே அமாவசை பவுர்ணமி அன்று எந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியை செய்யவும் தயங்குவர். இந்த இரண்டு நாட்களில் நம் மனது ஒரு விதமான பட படப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக அந்த படபடப்பு நேரத்தில்,வேறு எந்த செயலையும் செய்யாமல் இருந்தால் நல்லது என கூறுவதற்கு காரணம்,நாம் எதையாவது செய்து சிறிய அளவில் அடிபட்டாலும், அன்றைய தினம் பெரிய பிரச்சனையாக மாறும் என்பது ஐதீகம்.
அமாவாசை அன்று கடினமான வேலையை செய்ய கூடாது
பதற்றமாகவோ அல்லது கோபமாகவோ இருக்கக் கூடாது.
அமாவாசை அன்று எந்த ஒரு முடிவையும் எடுக்க கூடாது.
அமாவாசை அன்று கோலம் போடக் கூடாது..
அமாவாசை அன்று கோலம் போட்டால், இறந்து போன முன்னோர்கள் பூமியை தேடி வருவார்கள் என்ற ஐதீகம் உண்டு...
*கருட புராணத்தை* பொறுத்தவரையில்..
மேலும், நம் முன்னோர்கள்தானே வந்தால் என்ன? என்று கேள்வி எழலாம்.
அவர் வந்தால்,நெகடிவ் வைப்ரேஷன் ஏற்பட்டு,ஏதோ ஒரு பிரச்சனையை கொண்டு வரும் என்பது ஐதீகம்.
*அமாவாசை அன்று அமாவாசை அன்று செய்ய கூடாதவை*
அமாவாசை அன்று அமைதியாக, இறை வழிபாடு மேற்கொள்வது நல்லது.
பிதுர் காரியங்கள் செய்யலாம்.
நம் குடும்பத்தில் இறந்து போன முன்னோர்கள் நற்பேறு பெற வேண்டி தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பு.
குலதெய்வம் வழிபாடு செய்வது அவசியம்..
மதியம் முன்னோர்களை நினைத்து படையல் போட்டு வழிபாடு செய்ய வேண்டும்.
பின்னர் காகத்திற்கு படையலிலிருந்து உணவு எடுத்து வைக்கவும்.
பசுவிற்கு அகத்திக்கீரை கொடுக்க வேண்டும்.
வளர்ப்பு பிராணிகளான நாய் மற்றும் பூனை உணவு வைக்கலாம்.
*அமாவாசை அன்று அன்னதானம் செய்து வந்தால், ஐஸ்வர்யம் பெருகுமாம்.*
எனவே அமாவாசை அன்று எதை செய்ய வேண்டும்; எதை செய்ய கூடாது; என்பதில் தனி கவனம் செலுத்துவது நல்லது.
No comments:
Post a Comment