Sunday, March 17, 2024

சிரார்த்தம் என்றால் என்ன?

 திதி என்பது இறந்தவர்களுக்கு வருடந்தோறும் செய்யக்கூடிய *சிரார்த்தம் என்று சொல்லக்கூடிய நிகழ்வாகும்.*



 இறந்தவர்களின் திதி அன்று இந்த சிரார்த்தத்தை செய்வது அவசியம். தந்தை இல்லாதவர்கள் மட்டுமே இந்த சிரார்த்தத்தை செய்ய வேண்டும்.

மாதந்தோறும் வருகின்ற அமாவாசை அன்று முன்னோர்களுக்கு எள்ளும் நீரும் கொண்டு செய்வது தர்ப்பணம் ஆகும்.

தர்ப்பணத்தை ஏதாவது கோவிலில் உள்ள அர்ச்சகர் மூலம் செய்யலாம்.


திவசம் என்று சொல்லக்கூடிய சிரார்த்தத்தை வேதம் அறிந்த சாஸ்திரிகள் மூலம் மந்திர உச்சாடனங்கள் செய்து உரிய செயல்பாடுகளை நடத்தி நடத்தி வீட்டில் முன்னோர்களுக்கு மதிய வேளையில் படையல் இட்டு அவர்களை வழிபாடு செய்து விட்டு படையலில் உள்ள பட்சணங்கள் மற்றும் பதார்த்தங்கள் ஆகாரங்கள் எல்லாம் எடுத்து காகத்திற்கு உணவளித்து முன்னோர்களைத் திருப்தி படுத்துவதாகும்.


Sunday, March 10, 2024

திருஷ்டி சுற்றி கழிப்பது ஏன்?

 திருஷ்டி சுற்றி கழிப்பது ஏன்?





பொதுவாக கல் உப்பு, வர மிளகாய் சேர்த்து வைத்து திருஷ்டி கழித்து வீட்டு தெருவில் முச்சந்தியில் சுற்றிப்போடுவார்கள். வீட்டு வாசலில் கற்பூரம் ஏற்றி வைப்பார்கள். இது பொதுவாக திருஷ்டி கழிக்கும் முறையாகும். கல் உப்பு, வர மிளகாய்க்கு திருஷ்டியை போக்கும் சக்தி உள்ளது.

*கண் திருஷ்டி *சம்பந்தமாக*
*திருஷ்டி சுத்தி* *போடுவதில் இத்தனை* *வகைகளா?*

*1. உப்பு சுற்றி போடுதல்:-*
கல் உப்பை சிறிது வலது கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நீரில் போட்டு கரைக்க அந்த உப்பு கரையும்போழுது நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையும் என்பதும் ஒரு நம்பிக்கை.




*2. சிகப்பு மிளகாய் சுற்றி போடுதல்:*🌶️

சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நெருப்பில் போட திருஷ்டி கழியும் என்பதும் ஒரு நம்பிக்கை. 
திருஷ்டி இருந்தால் மிளகாய் வெடிக்கும் ஆனால் நமக்கு கமறாது. திருஷ்டி இல்லையெனில் நமக்கு நெடி ஏற்பட்டு கமறும்.

*3. கற்பூரம் ஏற்றுதல்:-*🔥
கற்பூரத்தை ஏற்றி வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு, தரையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கற்பூரத்தை வாசலில் போட்டுவிடுவர். கற்பூரம் கரைய கரைய நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையுமாம்.

*4. படிகாரம் சுற்றுதல்:-*💎
மிளகாய் சுற்றி போடுவதுபோலவே படிகாரம் கொண்டும் திருஷ்டி சுற்றி போடலாம். திருஷ்டி இருந்தால் நெருப்பில் போடப்பட்ட படிகாரம் ஒரு பொம்மை மாதிரி மாறிவிடுமாம்.

*5. கருப்பு வளையல்:-*🧿
பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கு கருப்பு வளையலை ஆரத்தியுடன் சேர்த்து சுற்றிபோடும் வழக்கம் இன்றும் நாம் பல வீடுகளில் காண்கிறோம்.

*6.மண் 
சிறிது மண்ணை கையிலெடுத்து திருஷ்டி சுற்றிவிட்டு அதில் எச்சிலை 3 முறை துப்பச்செய்து அதை வெளியில் எறிந்தால் திருஷ்டி போய்விடும் என்பதும் இன்றும் நம்பப்படுகிறது.
இன்று பல கிராமங்களில் இது நடைமுறையில் உள்ளது!




*7. எலுமிச்சை🍋 குங்குமம்:-*

சில வியாபார ஸ்தலங்களுக்கும், வண்டி வாகனம் , வீடு முதலியவற்றுக்கும் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின்மேல் குங்குமத்தை நன்றாக தடவி திருஷ்டி சுற்றி விட்டு வாசல் வெளியிலோ அல்லது முச்சந்தியிலோ எறிவதையும் இன்றும் நாம் பின்பற்றுகிறோம்.






*8. தேங்காய்🥥
 உடைத்தல்:-*
ஒரு தேங்காயின்மேல் கற்பூரத்தை ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும் என்றும் பரவலாக நம்பப்பட்டு வருகிறது.




*9. பூசணிக்காய் உடைத்தல்:-*🍈
பூசணிக்காயில் குங்குமத்தையும் சிறிது சில்லறைகளையும் போட்டு அதன்மீது கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும் என்று பரவலாக நம்பப்பட்டு வருகிறது.

*10.  ஆரத்தி:-*
கல்யாணம் மற்றும் பூஜை முதலியன முடிந்தவுடனும் மற்றும் சில முக்கியமான சமயத்திலும் ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் வெகு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவும் ஒரு விதமான திருஷ்டி கழித்தலே ஆகும்.

*11. பட்சி திருஷ்டி:-*
குழந்தை பிறந்த வீடுகளில் மாடியில் குழந்தை துணியை உலர வைத்திருப்பார்கள். அவற்றை சூரியன் மறைவதற்குள் எடுத்துவிடுவார்கள். ஏனென்றால் சூரிய அஸ்தமன சமயத்தில்தான் பறவைகள் தமது கூட்டுக்கு திரும்புமாம். அப்பொழுது அவை இத்துணிகளைப்பார்த்து கண் வைக்குமாம். அது குழந்தைக்கு ஆகாது. ஆகவேதான் துணிகள் சூரியன் மறைவதற்குமுன் எடுக்கப்படுகின்றன.

பொதுவாக நீங்கள் திருஷ்டி சுற்றி போடும்பொழுது அனைவரும்  கையில் கருப்பு கயிறு அல்லது சிகப்பு கயிறு இருக்க வேண்டும்!  
நெற்றியில் பொட்டோ, குங்குமமோ அல்லது விபூதியோ இட்டுக்கொண்டிருக்க வேண்டும். கிழக்கு நோக்கி நிற்கச்சொல்லி திருஷ்டி சுற்றி போடவேண்டும்.

இப்படி சுற்றும்பொழுது திருஷ்டி மந்திரம் தெரிந்தவர்கள் அதை கூறி சுற்றுவர். பெரியவர்கள் 
"தன் திருஷ்டி, தாயார் திருஷ்டி, நாய் திருஷ்டி, நரி திருஷ்டி, உற்றார் திருஷ்டி... தீயசக்திகள் திருஷ்டி" என்று பலவிதமான திருஷ்டிகளை கூற கேட்டிருக்கிறேன். திருஷ்டி மந்திரத்தை மனதிற்குள்தான் கூறவேண்டுமாம். அதை ஒரு குருவின்மூலம் உபதேசம் பெற்றுதான் பிரயோகிக்க வேண்டும்.

பொதுவாக ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி மேலும் மிக முக்கியமான நாளான அமாவாசை தினங்கள் திருஷ்டி சுற்றி போடுவதற்கு ஏற்ற தினமாக கருதப்படுகிறது. 



அதுவும் அமாவாசையும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வந்தால் அது திருஷ்டி சுற்றி போடுவதற்கு மிகவும் ஏற்ற தினமாகும். சூரிய அஸ்தமன சமயம்தான் திருஷ்டி சுற்றி போடுவதற்கு ஏற்ற தருணமாக கருதப்படுகிறது.

இந்த பழக்கத்தையெல்லாம் எப்படி நம்புவது என்றும் சிலர் கேட்கிறார்கள்.

ஒரு மனிதனுக்கு எப்படிப்பட்ட பிரச்சினைகள் மனக்குழப்பங்கள் நஷ்டங்கள் தீராத வியாதிகள்...
வந்த வியாதி குணமடையாமல், 
வந்த தடைகள் விலகாமல் இருந்திருந்தால் யாராவது இன்று திருஷ்டி சுற்றி கொள்ள முன்வருவார்களா? 

பலன் கிடைப்பதனால்தானே இந்த பழக்கம் ஆயிரக்கணக்கான வருடங்களாக விட்டுப்போகாமல் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

*எண்ணம் போல் வாழ்க்கை*
*எண்ணம் போல் தான் வாழ்க்கை*

*எல்லாம் வல்ல இறைவனுடைய ஆசீர்வாதத்தில்தான் அனைவரும் வளமுடன் நலமுடன் வாழ வேண்டும்.!*

அமாவாசை திதி எதற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது?*

 *அமாவாசை திதி எதற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது?* 



நல்ல நாள் தானா? ? ? 


தமிழகத்தில் மட்டும் தான்  அமாவாசை  நல்ல நாள் என தவறாக எடுத்து கொள்ளபட்டு 

சுபகாரியங்கள் செய்யப்பட்டு 

வருகிறது.


 மற்ற மாநிலங்களில் 

இவ்வாறு இல்லை. 


 *இதற்கு என்ன காரணம்?* 

*ஏன்? எதற்கு தவிர்க்க வேண்டும்?என பார்ப்போம்* 


 *திதிகளை 

**நந்தா,* 

 *பத்ரா,* 

 *ரிக்தா,* 

 *ஜெயா,* 

 *பூர்ணா*


 என 5வகையாகப் பிரித்து இருக்கிறார்கள்.

 அதன் விவரம் என்ன என்று பார்ப்போம்.


 *பிரதமை,ஷஷ்டி, ஏகாதசி- நந்தா என்றும்,* 


 *துவிதியை , சப்தமி , துவாதசி பத்ரா என்றும்* 



 *திருதியை , அஷ்டமி , திரயோதசி - ஜெயா என்றும்* 


 *சதுர்த்தி, நவமி, சதுர்தசி - ரிக்தா - என்றும்*

 

 *பஞ்சமி, தசமி பௌர்ணமி*,

 *அமாவாசை - பூர்ணா என்றும்** 


பிரித்து இருக்கிறார்கள்.


அமாவாசை ஒரு பூர்ணதிதி என்பதால் அதை நல்லநாள் என பாவித்து கொண்டு சுபகாரியங்கள் செய்யலாம் 

என் கூறிவருகின்றனர்.


 மேலும் கூடுதலாக சகல சாஸ்திர வல்லுநர் சகாதேவன் நல்ல  நாள் என குறித்து கொடுத்தது என்றும் கூறிவருகின்றனர்.


 அவர் எதற்கு நாள் குறித்து கொடுத்தார்.?


 சண்டை போடுவதற்கு *யுத்தம் செய்வதற்கு* பேரழிவு ஏற்படுவதற்கு.... அதை மறந்து விட்டார்கள். 



திதிகளின் எண்ணிக்கை மொத்தம் 15 தான் என்றாலும் 

வளர்பிறை திதி 15 

தேய்பிறை திதி 15 என மாதத்தில் மொத்தம் 30 திதிகள் வரும்.


 *திதியில் பாதி கரணம் என்பர்.* 


அப்படி என்றால் ஒரு நாளில் 2 கரணங்கள் வரும். 

ஒரு மாதத்தில் 

60 கரணங்கள் வரும்.

 

கரணங்களின் எண்ணிக்கை 

மொத்தம் 11 மட்டுமே.


 *அவை சர கரணங்கள் ஸ்திர கரணங்கள் என இருவகைப்படும்.* 


 மொத்தமுள்ள 11 கரணங்களில் 7 கரணங்களில் ஒரு மாதத்தில் 8 முறை திரும்ப திரும்ப வருபவை.  அவைகளுக்கு சர கரணங்கள் என்று பெயர்.


 மிச்சமுள்ள 4 கரணங்கள் ஒரு மாதத்தில் ஒரு முறை மட்டுமே வருபவை அவைகளுக்கு ஸ்திர கரணங்கள் என்று பெயர்.


 *பவம், பாலவம், கௌலவம் , தைத்துலம், கரசை, வனசை, பத்திரை இவை ஏழும் சர கரணங்கள் ஆகும்.* 



 *கிம்ஸ்துக்னம், சகுனி, சதுஸ்பாதம், நாகவம் இந்த நான்கும் ஸ்திர கரணங்களாகும்.* 


 

கிம்ஸ்துக்னம் என்றால் புழு.


சகுனி என்றால் காகம்.


சதுஸ்பாதம் என்றால் நாய்.


நாகவம் என்றால் பாம்பு என்றும் பொருள்படும்.


 *எனவே இந்த நான்கு ஸ்திர கரணங்களும் அசுப கரணங்களாக கருதப்படும்.* 


தேய்பிறை சதுர்த்தசியின் பின் 

பகுதியில் சகுனியும் அமாவாசையன்று சதுஸ்பாதமும்

நாகவமும் வளர்பிறை பிரதமையின் முன் பகுதியில் 

கிம்ஸ்துக்னமும் வருகின்றன.


 எனவே வளர்பிறை பிரதமையின் முன் பகுதியும் 

அமாவாசை நாள் முழுவதும்  தேய்பிறை சதுர்த்தசியின் பின் 

பாகமும் சுப காரியங்களுக்கு 

சிறந்தது அல்ல. 


எனவே இனி 

இது போன்று அமாவாசை நல்ல நாள் என்று சுபகாரியங்கள் 

செய்ய வேண்டாம்.  


குருவே சரணம்!

திருவே சரணம்!

 *வாழ்க வளமுடன்*

அமாவாசை அன்று செய்ய கூடாதவை* செய்யக்கூடியவை

 *அமாவாசை அன்று செய்ய கூடாதவை* 



அ்மாவாசை அன்று இதை செய்யாமல் இருந்தால்,ஐஸ்வர்யம் பெருகும் என்று பணவளக்கலை சொல்கிறது..


 *அமாவாசை அன்று காற்று வெப்பம் என அனைத்திலும் ஏற்ற இறக்கம் காணப்படும்.* 


அந்த சமயத்தில், எதாவது அடிபட்டால் கூட அதிக ரத்தம் வர நேரிடும். அதுமட்டும் அல்லாமல், அன்றைய தினம் அடிபட்டால்,விரைவில் ஆறாது.


பொதுவாகவே அமாவசை பவுர்ணமி அன்று எந்த ஒரு சிறப்பு  நிகழ்ச்சியை செய்யவும் தயங்குவர். இந்த இரண்டு நாட்களில் நம் மனது ஒரு விதமான பட படப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இதன் காரணமாக அந்த படபடப்பு நேரத்தில்,வேறு எந்த செயலையும் செய்யாமல் இருந்தால் நல்லது என கூறுவதற்கு காரணம்,நாம் எதையாவது செய்து சிறிய அளவில் அடிபட்டாலும், அன்றைய தினம் பெரிய பிரச்சனையாக மாறும் என்பது ஐதீகம்.


அமாவாசை அன்று கடினமான வேலையை செய்ய கூடாது

பதற்றமாகவோ அல்லது கோபமாகவோ இருக்கக் கூடாது.

அமாவாசை அன்று எந்த ஒரு முடிவையும் எடுக்க கூடாது.


அமாவாசை அன்று கோலம் போடக் கூடாது..

அமாவாசை அன்று கோலம் போட்டால், இறந்து போன முன்னோர்கள்  பூமியை தேடி வருவார்கள் என்ற ஐதீகம் உண்டு...



 *கருட புராணத்தை* பொறுத்தவரையில்..

மேலும், நம் முன்னோர்கள்தானே வந்தால் என்ன? என்று கேள்வி  எழலாம்.

அவர் வந்தால்,நெகடிவ் வைப்ரேஷன் ஏற்பட்டு,ஏதோ ஒரு பிரச்சனையை  கொண்டு வரும் என்பது ஐதீகம்.



*அமாவாசை அன்று அமாவாசை அன்று செய்ய கூடாதவை* 


 அமாவாசை அன்று அமைதியாக, இறை வழிபாடு மேற்கொள்வது நல்லது.


பிதுர் காரியங்கள் செய்யலாம்.


நம் குடும்பத்தில் இறந்து போன முன்னோர்கள் நற்பேறு பெற வேண்டி தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பு.


குலதெய்வம் வழிபாடு செய்வது அவசியம்..


மதியம் முன்னோர்களை நினைத்து படையல் போட்டு வழிபாடு செய்ய வேண்டும்.


பின்னர் காகத்திற்கு படையலிலிருந்து உணவு எடுத்து வைக்கவும்.


பசுவிற்கு அகத்திக்கீரை கொடுக்க வேண்டும்.


வளர்ப்பு பிராணிகளான நாய் மற்றும் பூனை உணவு வைக்கலாம்.


 *அமாவாசை அன்று அன்னதானம் செய்து வந்தால், ஐஸ்வர்யம் பெருகுமாம்.* 


எனவே அமாவாசை அன்று எதை செய்ய வேண்டும்; எதை செய்ய  கூடாது; என்பதில் தனி கவனம் செலுத்துவது நல்லது.